Posts

Showing posts from March, 2023

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…., மார்கழி மாதம் பிறந்திருச்சி… மாதங்களில் நான் ‘மார்கழி’ என்று நீ சொன்னாயா… இந்த மார்கழிக் குளிர் என்னை இதமாக வருடும் போது, கிருஷ்ணா…., உன் புன்னகை என்னை இதமாக வருடுவதாக உணர்கிறேன்.   ஆண்டு முழுவதும் மார்கழி மாதமே தொடரக் கூடாதா என்று ஏக்கமாக இருக்கிறது.  காரில் பயணம் செய்யும் பொழுது, சாலை இருமருங்கிலும், பச்சைப் பசேலென பயிர் பச்சைகள் செழித்திருப்பதைப் பார்க்கும் போது, உலகமெங்கும் கிருஷ்ணா, உன் அழகே படர்ந்திருப்பதாய் உணர்கிறேன். ஆங்காங்கே சின்னச் சின்ன குளங்களும், அதில் தெளிவாய்த் தேங்கி நிற்கும் நீர்த்தேக்கமும்…., குளங்களைத் தொடர்ந்து ஓடும் சின்னச் சின்ன ஓடைகளும், கார்த்திகை, மார்கழி மாதங்களுக்கென்றே பிரத்யேகமாக சிருஷ்டிக்கப்பட்டதோ என்று வியக்க வைக்கிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Good morning மேகலா…. என்ன வரும் போதே பீடிகை பலமாக இருக்கிறது… இன்று என்ன…., மார்கழி மாத திருப்பாவை பற்றி பேசப் போகிறாயா…. மேகலா  : Oh! அது கூட பேசலாமோ…. இருந்தாலும், நான் பேச வந்தது…. “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ – என்ற தலைப்பில் தான்…. கிருஷ்ணர்  : வாவ

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 11 (நிறைவுப் பகுதி)

மேகலா   : வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்க்கும் bachelors, சமையல் செய்யத் தெரியாத, புதுசா கல்யாணம் பண்ணிய சின்னப்பொண்ணுங்கள் என்று இவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பித்தோம் கிருஷ்ணா…. இன்று பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh….! முதலில், பத்து ஆண்டுகளாகும் இந்த service-க்கு வாழ்த்துக்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னயே, அதுவும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த நீ, online மூலமாக சமையல் கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டாய். பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று ஒரு சாரார் online shopping-ஐயும், online teaching-ஐயும் பாராட்டிக் கொண்டிருக்கும் போது உனக்கு மட்டும் குற்றமாகத் தெரிகிறதா…. ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ….  மக்கள் தொகை பெருகி வரும் இந்தக் காலத்தில், traffic நெருக்கடி’…., இல்லையில்லை jam ஆகி, இன்னும் மோசமாகி விடுமோ என்ற சூழ்நிலையில், அதற்கான ஒரு சின்ன solution தான் இந்த வசதி…. Online வசதிகளெல்லாம் காலத்தின் கட்டாயம்…. மேகலா  : ஏன் கிருஷ்ணா…. அந்தக் காலங்களில் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தோம்…. அதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா…. கிருஷ்ணர்  : இப்போ matt

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 10

மேகலா  : அந்தக் காலங்களில், நாங்க எல்லாம் எங்காவது வெளியூருக்குச் செல்லணும் என்றால், அதாவது, எங்க அப்பா எங்களை மதுரைக்குக் கூட்டிச் செல்வார்….. விருதுநகர் கூட்டிச் செல்வார்…. மொத்தப் பேரும் எங்க ‘அம்பாசிடர்’ காரில்தான் செல்வோம்… அம்பாசிடர் கார் ஏழெட்டுப் பிள்ளைகளைச் சுமந்து செல்லும்படிக்கு வடிவமைக்கப்பட்ட கார்…… கார் வைத்திருப்பவர்கள் அனைவரும், 90% அம்பாசிடர் கார் தான் வைத்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் உண்டோ, …, அனைவரும் ஒரே காரில் தான் செல்வார்கள்.. உறவுகளோடு ஒரே வண்டியில் பயணம் செய்வது செம ஜாலியாக இருக்கும்…. ஆனால், இந்தக் காலங்களில், மாருதி 800-லிலிருந்து……, Innova car வரைக்கும், 4 seater car, 7 seater car என்று சொல்லித்தான் விற்பனையே செய்கிறார்கள். கார் என்னவோ பார்ப்பதற்கு ‘லாரி’ மாதிரி இருந்தாலும், 4 seater car-னா, அதுக்கு மேல ஒரு பச்சப்புள்ளையக் கூட காரில் உட்கார வைக்க முடியாதபடிதான் காரை வடிவமைக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 2 பையன், மருமகள் இருந்தால், ஆளுக்கொரு காரில் செல்வதுதான் இன்றைய நடைமுறையாக இருக்கிறது. உறவுகள் எல்லோரும் ஒரே காரில் travel செய்து குதூகலமாய

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 9

கிருஷ்ணர்   : உன் அம்மாவும், அப்பாவும், பொங்கல் பானையை எடுத்து, அடுப்பில் வைப்பதிலிருந்து, உறவுகளோடு நீங்கள் கொண்டாடிய தைப்பொங்கலை, அந்தக் காலத்துக் குதூகலத்தோடு நீ சொன்ன போது, நீ எவ்வளவு அனுபவித்திருக்கிறாய் என்பது புரிகிறது. இந்தக் காலத்தில் நம்ம பாரதம், பலவித தொழில்களில் சாதனை புரிந்து வருகிறது என்றும் சொல்லியிருக்கிறாய். இன்றைய மக்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்…. ஆனால், தமிழர் திருநாளாக என்று அடையாளப்படுத்துகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறாய். ஒன்று நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயம் சார்ந்த பண்டிகையோ, தொழில் சார்ந்த, அதாவது, ‘ஆயுத பூஜை’ பண்டிகையோ, எல்லா தரப்பு மக்களும் அதைக் கொண்டாடி மகிழவே விரும்புகிறார்கள். நீ பல உறவுகளோடு கொண்டாடிய தைப்பொங்கல்…., இன்று, தங்கள் தங்கள் உறவுகளோடு கொண்டாடுகிறார்கள்…. ‘நாங்களெல்லாம் சூரியப் பொங்கல் வைத்தோம்’ என்கிறாய்… Apartment-ல் வசிக்கும் ஹரி என்ன செய்வான்…. மதனாவோடு தானும் கரண்டி பிடித்து, குக்கரில் பொங்கல் வைத்து, குடும்பமாய் அமர்ந்து உண்பதை ‘மகிழ்ச்சி’ என்கிறான்….   பண்டிகைக் காலத்தில், ‘மகிழ்ச்சி’தானே முக்கியம்…  சில வருடங்களுக்கு

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 8

கிருஷ்ணர்   : ‘கிராம ராஜ்ஜியம்’ என்றால் எப்படி….? இப்ப இருக்கிற சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூர், மும்பை, டெல்லி என்ற நகர்ப்புறங்களை கிராமமாக மாற்றணும் என்கிறாயா… மகாத்மா காந்தி, ‘கிராம ராஜ்ஜியம்’ தான் ‘ராம ராஜ்ஜியம்’ என்று சொன்னார் என்றால், அது அவருடைய கற்பனை…. கற்பனையெல்லாம் நிஜமாக முடியாது.   முதலில் விவசாயி, எளிமையாகத்தான் இருக்கணும் என்ற உன் வாதமே தப்பு…. விவசாயியை சுதந்திரமாக இருக்க விடுங்கள்.  இன்றைய விவசாயிகள், தங்கள் விவசாயத்தை உற்சாகத்துடன் செய்ய வேண்டும்…. இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும், விவசாயிகள் நின்று ஜெயிக்க வேண்டும்…. விளைய வைப்பதற்கு விவசாயி முன்வந்தால்தானே, விளைச்சலைப் பார்க்க முடியும்… Artificial உணவையா சாப்பிட முடியும்….? விவசாயத்தில், அந்தக் காலம் பொன் மயமானதா…, இல்லை, இந்தக் காலமா என்றால்…, நான் சொல்லுவேன்….,   இந்தக் காலம் புத்திசாலித்தனமானது என்று… மேகலா  : நீ ஏதோ என்னை வெறுப்பேற்றுவதற்காக பேசுவது போல இருக்கு கிருஷ்ணா… கிருஷ்ணர்  : உண்மை நிலவரத்தைச் சொல்லுகிறேன்…, நீ வெறுப்பேற்றுவதாகச் சொல்லுகிறாய்… சரி…, நீ சந்தோஷமாய் அனுபவித்த பண்டிகைகளைப் பற்றிச