Posts

Showing posts from June, 2021

வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 9 (நிறைவுப் பகுதி)

மேகலா  : மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு, திருவாதவூராரிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை என்பதில் மிகுந்த கவலை உண்டானது. காவலாளிகளை அனுப்பி, ‘திருவாதவூரார் குதிரை வாங்கினாரா; வாங்கியிருந்தால் அழைத்து வருமாறு’ கூறியனுப்பினான். காவலாளிகளும், மன்னனின் செய்தியை சுமந்து கொண்டு, வழியில் திருப்பெருந்துறையில் இறங்கி, கோயிலுக்குள் நுழைந்தனர். அங்கு, தற்செயலாக திருவாதவூராரை சந்தித்தனர். மன்னன், அவர் மீது கோபம் கொண்டுள்ளதாக தெரிவித்து, குதிரைகளை எங்கே என்று கேட்டனர். அச்சமயத்தில், இறையனார் அசரீரியாகக் குரல் கொடுத்தார். ‘ஆவணி மாதம் மூலநட்சத்திரத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லியனுப்பு’ என்றார். கிருஷ்ணர்  : பொய்யி…. மேகலா  : அப்பச் சொன்னது…, தன்னுடைய பக்தனுக்காக ஆறுதல் பொய்… திருவாதவூராரும், நம்மைக் காப்பாற்றும் இறையனாரே பார்த்துக் கொள்வார் என்று நிம்மதியானார். காவலாளிகளிடம், ‘இன்னும் மூன்று நாட்களில் குதிரைகள் மதுரை வந்து சேரும் என்று மன்னனிடம் சொல்லுங்கள்’ என்றார். காவலாளிகளும் மதுரை சென்று மன்னனிடம் அப்படிக் கூற, மன்னனும் நிம்மதியானான். அந்த சமயத்தில் இறையனாரும், ‘நீ முன்னாடி போ; நான் குதிரைய

வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 8

மேகலா   : யப்பா…. நான் பயந்தே போயிட்டேன்…. கிருஷ்ணர்  : என்ன நடிப்புடா சாமி…. மேகலா  : கிருஷ்ணா….. ஒருவர் தன் ‘bio-data’-வை சொல்லுவார். ’தான் ஒழுக்கமானவன்; சிகரெட் பிடிக்க மாட்டேன்; மது அருந்த மாட்டேன்; பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்….. ஆனால், ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான் என்னிடம் உண்டு…..  ‘பொய்’ மட்டும் தான் பேசுவேன்’ என்றானாம்…. கிருஷ்ணர்  : வாவ்….. வாவ்….. அட்டகாசம்…. மேகலா  : இன்னொரு character-அ கேளு கிருஷ்ணா….. ஒரு படத்துல M. R. ராதா, radio repair கடை வைத்திருப்பார். அவர் தன்னோட customer கிட்ட பொய்யா பேசி பல பிரச்னைகளை இழுத்துட்டு வருவார். அந்த பிரச்னையெல்லாம் அவரோட மனைவியான மனோரமாவை ரொம்பவே சங்கடப்படுத்தும். அவர் தன்னோட புருஷங்கிட்ட பேசி,  ‘தினமும் 1 மணி நேரம் மட்டும் உண்மையைப் பேசு; உனக்கு புண்ணியமாப் போகும்’  என்று மனம் வருந்தி வற்புறுத்துவார். அவரும், போனாப் போகுதுண்ணு, ‘சரி…., உனக்காக தினமும் ஒரு மணி நேரம் மட்டும் உண்மையே பேசுகிறேன்’ என்று சத்தியம் செய்து கொடுப்பார்…. கிருஷ்ணர்  : உண்மை பேசியதால் என்ன ஆயிற்று….? மேகலா  : M. G. R. தான் ஹீரோ…. அவர் ஒரு case-ல் மாட்டி விடுவ

வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 7

மேகலா   : என்ன கிருஷ்ணா…? நீயே இதற்கான காரணமாக இருந்து விட்டு, நீயே என்னிடம் கேட்கிறாயா…?   நீ சொல்லிக் கொடுத்த பொய்யைச் சொல்லியதால் தானே, துரோணர் யுத்தத்தில் தன் ஆயுதங்களைத் துறந்தார்.   அவர் ஆயுதங்களைத் துறந்து, தன் உயிரை விட்டு விடத் துணிந்தது, கௌரவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தது….. அன்றைய யுத்தத்தில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. கிருஷ்ணர்  : உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று test பண்ணினேன். சரி…., துரோணாச்சாரியாரிடம் என்ன பொய்யைச் சொன்னார்கள்; யார் சொன்னார்கள்? அந்தக் கதையைச் சொல்லேன்…. மேகலா  : கிருஷ்ணா! பாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. யுத்த களத்தில் பீஷ்மர் சாய்ந்த பின்பு, துரோணர் தலைமையில், கௌரவர் படை, பாண்டவர்களை எதிர்த்துப் போரிட்டது. அன்றைய யுத்தத்தில் துரோணருடைய வீரம், அர்ஜுனனால் வெல்ல முடியாததாகவே இருந்தது. துரோணரை வென்றால் மட்டுமே, பாண்டவர்கள் படை சிதறாமல் இருக்கும் என்ற நிலை இருந்தது. இது வேலைக்காகாது என்று யோசித்த ஸ்ரீ கிருஷ்ணர், துரோணரை மனதளவில் கலங்கச் செய்தால் மட்டுமே, அவர் வேகம் குறையும் என்று யோசித்து, தருமரிடம், துரோணரின் நம்பிக்கைக்கு உரிய ஒருவர், ஒரு பொய்யை

வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 6

மேகலா   : அவர் மட்டும் போனாப் பரவாயில்லை கிருஷ்ணா…. பாராட்டு விழா என்னவோ…, நிஜ எழுத்தாளருக்கு… இவர் தான் போலி எழுத்தாளரல்லவா…, ‘நானும் கூட வருவேன்…, உங்களை எல்லோரும் பாராட்டுவதை பார்ப்பதற்காக நானும் கூட வருவேன்’ என்று சின்னப்புள்ளையாட்டம் அடம் பிடிக்கும். அதற்கு ஏதேதோ காரணங்களை சொல்லி வீட்டிலேயே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் கிளம்பிப் போவார். கிருஷ்ணர்  : பின்னாடியே அந்த அம்மாவும் விழாவுக்குக் கிளம்பிப் போகுமா…. அங்கு நிஜ எழுத்தாளருக்கு பாராட்டு விழா நடக்கும். மேடையிலேயே நம்ம டூப்மாஸ்டர் இருக்க மாட்டார்; அப்படித்தானே….. அப்புறம் அந்த அம்மா என்ன பண்ணினாங்க….. அழுதாங்களா…? மேகலா  : அழுதாங்களா….. அதுக்கெல்லாம் வேற ஆளப் பார்க்கணும் கிருஷ்ணா! அடேயப்பா…. ருத்ர தாண்டவமே ஆடி முடிச்சிருவாங்க. பொண்ணுன்னா…, அவதான் பொண்ணு. உடம்பெல்லாம் பொய்யாகவே நடமாடிக் கொண்டிருந்த அந்த மனுஷனத் திருத்தியே ஆகணும் என்பது மாதிரி ஒரு ஆட்டம்… கிருஷ்ணர்  : அவர் திருந்திட்டாரா மேகலா…? மேகலா  : திருந்திட்டா…..ராவா….? கிருஷ்ணா…. பொண்ணுங்க பல சமயங்களில் வெள்ளந்தியாவும் இருப்பாங்க…. புருஷனத் திருத்தணும் என்று களத்தில