Posts

Showing posts from September, 2021

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 12

மேகலா   : ஏன் கிருஷ்ணா…. அப்படிச் சொல்லிட்ட….. இயற்கையோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை வாழும் கிராமத்தானுக்கு இயற்கை சம்பந்தப்பட்ட அறிவும், இயற்கையை அனுசரிச்சுப் போகும் திறனும், இயற்கையாக இருப்பது இயல்புதானே கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இயற்கை சம்பந்தப்பட்ட அறிவா…? எப்படிச் சொல்ற…? மேகலா  : கிருஷ்ணா, ஒரு விவசாயி, பள்ளிக்கூடம் சென்று பாடம் படிக்காமலேயே, கரிசல் மண்ணில் இது விளையும், செவக்காட்டு மண்ணில் இது நல்லா விளையும் என்று மண்ணைக் கையில் அள்ளிப் பார்த்தே, அதன் ஈரத்தன்மையை வைத்தே கண்டு பிடித்து விடுவான். மண்ணை ‘லேப்’ பரிசோதனை செய்துதான், இத்தனை சதவீதம் மக்னீஷியம், இவ்வளவு பொட்டாசியம் என்று சொல்லணும்னு அவசியமில்லை…  மண்ணைக் கையில் எடுத்து, அதன் பிசுபிசுப்புத் தன்மை, வாசனையை வைத்தே, இதில் என்னென்ன மணிச்சத்துக்கள் இருக்குன்னு கண்டுபிடிச்சிடுவாங்க.  நிலத்தடியில் நீரோட்டம், எவ்வளவு ஆழத்தில், எவ்வளவு density-யில் இருக்கு என்பதை, நிலத்தில் எழும் அதிர்வைக் கேட்டே கண்டுபிடித்து விடுவார்கள் கிருஷ்ணா… அதிசயமில்லையா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இதிலென்ன அதிசயம் மேகலா….  மனுஷன் பிறக்கும் போதே, ஒவ்வொரு அதிசயத்தையும

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 11

மேகலா   : கிருஷ்ணா…. வயல்வெளிகளில் உழுவதற்கு ‘டிராக்டர்’ வருவதற்கு முன்பெல்லாம்… நுகத்தடியால் இணைக்கப்பட்ட, காளை மாடுகளைப் பூட்டிதான் உழுவார்கள் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : Oh! ’நுகத்தடி’ன்னா… மேகலா  : தெரியாத மாதிரி நடிக்காத கிருஷ்ணா… இரண்டு காளை மாடுகளை இணைப்பது ‘நுகத்தடி’. இந்த நுகத்தடியில், ‘கலப்பை’, அல்லது ‘ஏர்’ இதைச் சேர்த்துக் கட்டி, வயக்காட்டில் உழுவார்கள். நிலத்தை உழும் உழவன், மாடுகளை ஓட்டிக் கொண்டே செல்வான். இங்கு கலப்பை, நிலத்தில் கோடு இழுத்துக் கொண்டே செல்லும்; கீழிருக்கும் மண்ணு மேலே வரும், மேலிருப்பது கீழே சென்று, நிலத்தைப் புரட்டிப் போட்டு பதப்படுத்தும்; அவ்வப்போது, மாட்டின் கோமியமும் (சிறுநீர்), சாணமும், நிலத்திற்கு உரமாகப் பயன்படும். ஈர நிலமாக இருக்கும் பட்சத்தில், நிலத்தைக் கிழித்துச் செல்லும் கலப்பை மீது உழவர்கள் நின்று கொண்டும், ஒரு காலை, வயலில் புதைய விட்டுச் சென்று, விதை விதைக்க தயார்படுத்துவார்கள்.  அப்பொழுது, பாடத் தெரிந்தவர்கள் பாடிக் கொண்டே வேலை செய்வார்கள்….. இந்தப் பாட்டுக்கு ‘ஓதப்பாட்டு’ என்று பெயர் கிருஷ்ணா.  தயார் நிலையில் வைத்திருக்கும் நிலத்தில் மறுநாள், வித

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 10

மேகலா   : இயற்கைக்கும், இசைக்கும் சம்பந்தம் இருக்கும் போல கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : எப்படிச் சொல்ற….. மேகலா  : ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் கூட, மேய்ச்சலுக்கிடையில், புல்வெளியைப் பார்த்தவுடன், புல்லாங்குழல் வாசிப்பதில்லையா…  இயற்கையை ஒட்டிய வேலையைப் பார்ப்பவர்கள், தங்கள் வேலைக்குத் துணையாக, இசையை அழைத்துக் கொள்வார்கள் போல… கிருஷ்ணர்  : சமயம் பார்த்து என்னையவே கலாய்க்கிறாயா… மேகலா  : நான் கலாய்க்கல கிருஷ்ணா… நெசம்மாதான் சொல்றேன் கிருஷ்ணா… கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்பவர்கள், ‘ஏலேலோ’, ‘ஐலசா’ என்று வார்த்தைகளைப் போட்டு, ‘ஏல ஏலோ ஏலேலேலோ’ – என்று பாடித் தங்கள் களைப்பை நீக்கிக் கொள்வதில்லையா… இந்த வார்த்தைகளைப் பார்த்தாலே, இது மீனவர் பாடியது; இது ஏற்றம் இறைக்கும் போது பாடியது என்று தெரிந்து கொள்ளுமளவுக்கு, அதன் இசையும் நம் மனதைக் கொள்ளை கொண்டு விடும். நாம் ஏற்கனவே ஒரு பாடல் பார்த்திருக்கோம்ல கிருஷ்ணா….. ‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்….’  என்று பெண் அலுப்பாய் பாட, உடனே அவன் பாடுகிறான்… ‘ காடு விளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே, காலமிருக்குது பின்னே’  –

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 9

மேகலா   : ‘இசை’, கிருஷ்ணா…. நாட்டுப்புறப் பாடல்கள்… இதை entertainment-ஆக கிராமத்து மக்கள் பார்க்கவில்லை… தங்களோட வாழ்க்கையின் ஜீவநாடியாகவே பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்… கிருஷ்ணர்  : ஆமாம்ல…. ‘ஆமாம்’…. எங்கே, அதைச் சொல்லு மேகலா… மேகலா  :  ஒரு மனிதன் பிறந்த போது, ‘தாலாட்டு’ என்ற பாடலில் ஆரம்பித்து, அவன் இறக்கும் போது, ‘ஒப்பாரி’ என்ற பாடல் வரைக்கும் மனிதனோடு இசைந்து வருவது தான் நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பம்சம் கிருஷ்ணா….  இந்தப் பாடல்கள் பாடுவதற்கு மனிதன் படித்திருக்க வேண்டாம்…, பட்டம் பெற்றிருக்க வேண்டாம். வாழ்க்கையோடு ஒன்றி வாழும் பொழுது பாட்டு தானாக வந்து விடுகிறது கிருஷ்ணா….  இப்பல்லாம் தாலாட்டுப் பாட்டு கூட, கண்ணதாசன் பாடலை மக்கள் பாடி விடுகிறார்கள் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : சரி…, உனக்குத் தெரிந்த பாடலைத்தான் பாடிக் காட்டேன்…. மேகலா  : ’என் கண்ணே, கண்ணே நீ கானமயில் கண்ணுறங்கு என் பொன்னே….. பூமரத்து கிளியுறங்கு… உன் மாமன் அடிச்சானோ உன்ன மல்லிகப் பூ செண்டாலே யாரடிச்சா சொல்லி அழு’ என்ற இந்தப் பாட்டை என் அம்மாவோட அம்மா…, அதாவது என் ‘மாம்மை’ பாடி கேட்டிருக்கிறேன் கிருஷ்ணா. இதெல்லாம் அன

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 8

மேகலா   : Yes boss…. கிருஷ்ணா, இன்று தேசிய அளவில் அந்தஸ்து பெற்ற ஒரு விளையாட்டு, ‘கபடி’… இந்தக் கபடி, கிராமத்து மக்களால் விளையாடப் பெற்ற விளையாட்டுதான் கிருஷ்ணா….. எதிராளியைத் தொட்டு, out ஆக்கும் வரை, மூச்சைப் பிடித்துக் கொண்டு, ‘கபடி, கபடி’ என்று சொல்ல வேண்டும். அதற்கு, பழங்காலத்தில் ஒரு பாட்டு உண்டு. ‘நாந்தாண்டா உங்கப்பன் நல்லமுத்து பேரன் தங்கச் சிலம்பெடுத்து தாலி கட்ட வாரேன்’ ‘வாரேன்’ என்று ‘தம்’ பிடிச்சிக்கிட்டே வருவாங்க…. வரும் வீரரை, எதிர்த்திசையில் இருக்கும் வீரர் மடக்கி, கீழே விழச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து விட்டால், வந்தவர் out…. அவர்கள் மடக்கிப் பிடிக்கும் போது, ‘தம்’ பிடித்தவர், மடக்கியவர்களை கீழே தள்ளி விட்டு, அவர் இருப்பிடத்திற்குச் சென்று விட்டால், அவரைத் தொட்டவர்கள் அனைவரும் out…. கிருஷ்ணர்  : சூப்பர்…. சூப்பர்…. மேகலா…. நல்லாயிருக்கே game…. ஏன் மேகலா…. மேகலா  : கிருஷ்ணா, இந்தக் கபடி விளையாட்டுப் பாட்டு இருக்குல்ல; இதை கண்ணதாசன் கூட ஒரு படத்துல எழுதியிருக்காரு கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படியா…. நாமளா பாடலாமா…. மேகலா  : விளையாட்டுல வீரர்கள் நாட்டுப் பாடலைப் பாடினாலு