Posts

Showing posts from December, 2023

Motivation - பகுதி 8

கிருஷ்ணர்   : …… சிவாஜி, அவருடைய தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர் அம்மா, ’ஜிஜாபாய்’, சிவாஜிக்கு, சிறு வயதிலேயே ராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறி, பாரத நாட்டின் பெருமைகளை, கலாச்சாரத்தை, வீரத்தை எடுத்துச் சொல்லி, சிறு வயது சிவாஜிக்கு தேசப் பற்றினைத் தூண்டி விட்டார். அது அவருடைய மனசுக்குள் ஆழமாகப் பதிந்தது. அவருடைய பயமறியாத் தன்மையை, வீரமாக மாற்றிய பெருமை, அவருடைய அம்மாவைச் சேரும். அதன் பிறகு, அவருடைய ஆசிரியரான தாதாபாய் கொண்டதேவ் அவர்களிடம், குதிரையேற்றம், போர்முறை, அரசு நிர்வாகம் முதலியவற்றில் பயிற்சி எடுத்தார். அம்மா வளர்த்த வளர்ப்பு, பயமறியாதது. ஆசிரியர் அளித்த பயிற்சி, பேரரசராக்கியது.   இங்கு, ஒரு வீரன் உருவாவதற்கு, மனதில் ஆழமாகப் பதியும்படிக்கு, கதையைச் சொல்லும் அன்பும், அரவணைப்பும் மிக்க அம்மா இருந்திருக்காங்க பார்…..   சொல்லப் போனால்…., கதை சொல்லத் தெரிந்த அம்மாக்கள்…., தான் அறியாமலேயே, ஒரு சத்ரபதி சிவாஜியையோ…, விண்வெளியில் சாகசம் புரியும் அப்துல் கலாமையோ உருவாக்கலாம் இல்லையா….. மேகலா  : Yes…., boss…. கிருஷ்ணா, நான் கூட கதை சொல்லும் அம்மாவாக, ஆச்சியாக, ஐயாமாவாக இருந்தும்…, பிள

Motivation - பகுதி 7

மேகலா   : கிருஷ்ணா…, நீயே ஜராசந்தனின் கதையைச் சொல்லச் சொல்லி விட்டாய்… எனக்கு ‘நுங்கு பதநீர்’ குடிச்ச மாதிரி சில்லுனு ஆயிருச்சி கிருஷ்ணா…. ஜராசந்தனுடைய பெற்றோருக்கு, ஆரம்பத்தில் குழந்தைப்பேறு இல்லாமல், பிள்ளை வரம் வேண்டி, ஒரு மாமுனிவரிடம் வரம் கேட்டனர். அவரும், மன்னனை ஆசிர்வதித்து, ஒரு கனியைக் கொடுத்து, அவனுடைய மனைவிக்கு கொடுக்கச் சொன்னார். மன்னனுக்கு இரண்டு மனைவிகள். அதனால், அந்தக் கனியை இரண்டாக அறுத்து, இருவருக்கும் சமமாகக் கொடுத்தான். அவர்கள் கர்ப்பமுற்றார்கள். குழந்தை பிறக்கும் காலம் வந்தது. இருவருக்கும் ஒரே நாளில் குழந்தை பிறந்தது. என்ன ஆச்சர்யம்…., ஒரே குழந்தை இருவருக்கும், இரு கூறாகப் பிறந்தது…. உயிரற்ற பிண்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, அந்தப் பிண்டங்களை குப்பைத் தொட்டியில் வீசினர். அப்பொழுது அங்கு சுற்றித் திரிந்த ‘ஜரை’ என்னும் அரக்கி, அந்த இரு பிண்டங்களையும் கையிலெடுத்து ஒட்ட வைக்க முயற்சிக்க…, என்ன அதிசயம்…, அந்தப் பிண்டங்கள் ஒன்று சேர்ந்து குழந்தையாக உயிர் கொண்டது. அதிசயத்துடனும், ஆச்சர்யத்துடனும், ஜரை, அந்தக் குழந்தையை மன்னனிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அரண்மனையே குதூகலமா

Motivation - பகுதி 6

கிருஷ்ணர்  : தவறு செய்யும் போது மட்டும் தான் தட்டிக் கேட்பானா…. செய்ய முடிந்த வேலையை பயத்தினால், செய்வதற்கு பின்வாங்குவான் பாரு…, அவன் மீது பயங்கரமாய் கோபம் வரும்… ஆனால், அந்த நேரத்தில், கோபத்தைக் காட்டிலும், வேலையின் தன்மையை எடுத்துச் சொல்லணும். அதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் மீது அக்கறை மட்டுமல்ல…, அதனால் வரப் போகும் நன்மைகள் முழுவதும் அறிந்த அனுபவசாலிகளாகவும் இருக்க வேண்டும்… அப்பேற்பட்டவர்கள், பயத்தைப் போக்க முற்படும் போது, strong-ஆகப் பேசினால் தான் வேலையைச் செய்ய வைக்கவே முடியும் மேகலா…. மேகலா  : கிருஷ்ணா…., நீ சொல்லும் போது தான் தெரியுது….  motivation பண்ணுபவர்கள், சாதாரணமாக, ‘எடுத்தோம், கவுத்தோம்னும்’ பேசக் கூடாது; கோபத்தால் எகிறவும் கூடாது… உக்கார்ந்து class – உம் எடுக்கக் கூடாது… என்ன மாதிரி வார்த்தைகளைப் போட்டால், கேட்பவன் மனம் உடன்படும் நிலைக்கு வரும் என்பதை உணர்ந்து technique-ஆகப் பேச வேண்டும்….  ஸ்ரீகிருஷ்ணர், வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவதில் படு சமர்த்தர் என்பதற்கு, மகாபாரதத்தில் வரும் இந்தக் காட்சி மிகச் சிறந்த உதாரணம்… கிருஷ்ணர்  : ’ராஜசூய யாகம்’ செய்வதற்காக தருமரி

Motivation - பகுதி 5

மேகலா  : நீ சொல்லியது மாதிரி என்று simple ஆகச் சொல்லலாம் கிருஷ்ணா…. அர்ஜுனனுக்கு நீ எடுத்த சுளுக்கு…, அதுதான் உலகின் best சுளுக்கு எடுத்தல் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படியா…., அப்படி என்ன பிரமாதம்… சுளுக்கு தான எடுத்தோம்… மேகலா  : சுளுக்கு…, தானவா…, என்ன கிருஷ்ணா, லேசா சொல்லிட்ட…. அர்ஜுனன் வாழ்ந்த காலம் என்ன…, நாங்க வாழுற காலம் இன்று வரையிலும், எங்கள் பிரச்னை எங்களை அழுத்தும் போது…, கிருஷ்ணா, உன் வார்த்தை எங்களை உசுப்பேத்துவது போல, வேறு ஒருவருடைய motivation…, எங்களுக்கு அத்தனை தைரியத்தைக் கொடுக்க முடியாது….. அர்ஜுனன், துரோணாச்சாரியாருடைய நம்பிக்கைக்குகந்த மாணவன்…. எம்பெருமான் சிவபெருமானிடமே, பாசுபதா அஸ்திரத்தினை ஏவும் பயிற்சி பெற்றவன். அர்ஜுனனின் வில் திறமையின் மீது கொண்ட பயத்தினால் தான் துரியோதனன், பரசுராமருடைய மாணவன் கர்ணனை அங்க தேசத்து மன்னனாக்கி தன் நண்பனாக்கினான்… எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அர்ஜுனன், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், ஸ்ரீகிருஷ்ணரே அர்ஜுனனுக்கு தேரோட்டியாக வந்திருந்தும் கூட, எதிரில் நிற்பவர், தன் உறவினர்கள்…, இவர்களை எப்படி கொல்வது என்று மனத்தளர்ச்சி அடைந்த