Posts

Showing posts from January, 2024

Maturity - பாகம் 2

கிருஷ்ணர்  : ஒரு சம்பவத்தில், தன்னுடைய அறியாமையை விலக்கிய ஒருவரைச் சொல்ல முடியுமா…? மேகலா  : ஒரே சம்பவத்தின் மூலம், சாதாரண மக்களுக்கு ‘அறியாமை’ விலகும் என்பது ரொம்ப கஷ்டம் கிருஷ்ணா….  பணப் பிரச்னையில், நம்முடைய இயலாமை, நமக்கு பொறுமையைக் கற்றுக் கொடுக்கும். ஒரு செயல், தோல்வியில் முடியும் போது, அது தரும் வலி, அந்த தோல்வியை முறியடிக்கக் கற்றுக் கொடுக்கும்… இப்படி ஒவ்வொரு சம்பவமும், மெள்ள மெள்ள ஒரு மனிதனை, வாழ்க்கையை அறிந்து கொள்ளக் கற்றுக் கொடுக்கும்….. ஒரே சம்பவம், மனிதனை புரட்டிப் போடுமா…. ஹாங்…! எனக்கு வால்மீகி முனிவர் கதை ஞாபகம் வந்து விட்டது கிருஷ்ணா…. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, மஹரிஷியாவதற்கு முன்னாடி, ‘ரத்னாகர்’ என்னும் வழிப்பறிக் கொள்ளைக்காரர். காட்டு வழியே செல்லும் வழிப்போக்கர்களை வழிமறித்து, அவர்களிடமிருக்கும் பொருட்களை அபகரிக்கும் கொடுந்தொழில் செய்து வந்தார். சில சமயங்களில் கொலை கூட செய்து விடுவதுண்டு… இப்படியான காலகட்டத்தில், அந்தக் காட்டு வழியில், வேத விற்பன்னர்கள் கூட்டமாக வந்தார்கள். பார்ப்பதற்கு செல்வச் செழிப்பாக இருந்தவர்களிடம் கொள்ளையடிக்க, கொள்ளைக்காரர் அவர்களை வழிமறித

Maturity - பாகம் 1

மேகலா  : யாரோ, யாரையோ தேடுவது போல இருக்குது…. யாருன்னு பார்ப்போம்…. கிருஷ்ணர்  : நீலப்புடவை கட்டிய பெண் யாராவது இங்கு வந்தாளா…. நீங்க பார்த்தீங்களா…, சொல்லுங்களேன்…. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள்… மேகலா  : கிருஷ்ணா…., யாரைத் தேடுகிறாய்…. கிருஷ்ணர்  : ஓ…! மேகலா…., வந்துட்டயா…., ‘வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள்’’ என்ற வார்த்தையை முடிக்கும் முன்னேயே வந்து விட்டாயா…. யப்பா…., இப்பத்தான் நிம்மதி…. கடந்த ஒரு வாரமாக உன் குரலே கேட்கவில்லையா…, காதே இருண்டது போல இருக்கு…. இனி பரவாயில்லை…. காதுக்கு கொஞ்சம் ‘சளசள’வென்று பேச்சு சப்தம் கேட்கும்…. மேகலா  : என்ன கிருஷ்ணா…., என்னைத் தேடியது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், ‘சளசளன்னு’ பேசுவேன்னு சொல்லி, என்னை ‘வாயாடி’ ஆக்கி விட்டாயே…. என்னை எதற்கு தேடினாய் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : நீ ரிஷிகேஷ் சென்று வந்ததைப் பற்றிப் பேசிப்….., பேசி…., பக்கங்களையெல்லாம் நிறைத்து விட்டாயா…. இனி அடுத்த subject பேசுவதற்கு கொஞ்ச காலம் ஆகுமோ என்று நானும் சும்மா இருந்தேன். ஆனாலும், ஏதாவது topic எடுத்து வருவாயோ…, என்று இன்று வாசலைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். சரியாக

Motivation - பகுதி 9 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : கனவுகளை விதைப்பதும் motivation தான். நியாயமான கனவுகளை, சம்பந்தப்பட்டவரை, ‘இது தான் என் கனவு’ என்று நம்புமளவுக்கு உருவாக்குபவர்களை, அதிலும், அப்துல் கலாம் மாதிரி வரணும்; பெரிய scientist ஆக வரணும், doctor ஆக வரணும் என்று சொல்லிச் சொல்லி செதுக்கும் சிற்பிகளை, உருவாகிய பின், கோயில் கட்டி கும்பிடணும்…. motivation-ல் உன்னதமான motivation இது தான் என்று நான் சொல்லுவேன்….. மேகலா  : இக்கட்டான சூழலில், சிக்கலில் மாட்டியிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதுதானே தலை சிறந்த motivation….. கிருஷ்ணர்  :  Motivation என்றாலே, தன்னம்பிக்கை கொடுப்பதுதானே…. தன் திறமையை அறிய வைப்பதுதானே….,  கதை சொல்லி விளங்க வைத்தாலும், இடித்துரைத்து எடுத்துச் சொன்னாலும், சிக்கலில் மாட்டிய பின், வழி சொல்லி ஊக்குவித்தாலும், எல்லாமே தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுப்பதுதான்…. இதில் எது சிறந்தது என்று ஆராய்வதை விட, நம்முடைய அக்கறை, ஆறுதல் இன்னொருவரை முன்னேறச் செய்ய வேண்டும்…. மேகலா  : You are correct கிருஷ்ணா…. நான் ஒரு சம்பவத்தை உன்னிடம் சொல்கிறேன்… நம்மிடம் வந்து ஒருவர் தங்கள் மன அழுத்தத்தை பகிர்கிறார்கள். நாம