Posts

Showing posts from January, 2021

ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 1

கிருஷ்ணர்   : என்னம்மா….. இந்தப் பக்கம் உன்னைக் காணவேயில்லையே…. எங்க போன….. நவராத்திரி கொலு முடிஞ்சி கூட, 2 நாள் ஆகி விட்டது. நீ ‘கொலு’ வச்சயா….. ரொம்ப tired-ஓ….?! மேகலா  : கிண்டல் பண்றயா கிருஷ்ணா…. நவராத்திரி கொலு என்று வைக்காவிட்டாலும், எங்க வீட்டில் இருக்கும் அம்மன்…. கிருஷ்ணர்  :  ’கோலாகலமாய்’ கொலு இருந்தார்கள் என்று தானே சொல்லப் போகிறாய்.  அதைத்தான் நானும் பார்த்தேனே…., அதற்காக அரட்டையைக் கூட மறந்துட்டயா….? மேகலா  : கிருஷ்ணா! கொஞ்சம் tired-ஆகத்தான் இருந்தது கிருஷ்ணா….. என்னால, புதுசா ஒரு subject-அ கூட யோசிக்க முடியல கிருஷ்ணா…! கிருஷ்ணர்  : புது….சா…வா….! நாம தான் நல்லவங்கள எப்படி அடையாளம் பார்ப்பது என்று பார்த்துக் கொண்டிருந்தோமே…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா! ‘நல்லவங்க’ subject-அ மட்டும் யோசிக்கும் போது, நம்மைக் கடந்து செல்லும் நிறைய சம்பவங்களை விட்டு விடுகிறோமோ என்று தோணுது கிருஷ்ணா… மேற்படி சமாச்சாரத்தை ஆராயும் போது, நம்மருகில் இருக்கும் நல்லவங்களைக் காட்டிலும், தேசத்திற்காகப் பாடுபடும் நல்லவங்களைப் பற்றியே யோசிக்கத் தோன்றுகிறது.  இன்னும் சொல்லப் போனால், ‘கெட்டவர்கள்’ என்ற தலைப்பில

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 119

                                                        பீஷ்மரின் உபதேசம் மேகலா  : அடுத்த தினம் பீஷ்மரைக் காணச் செல்வதற்காக தருமபுத்திரர், அர்ஜுனன், பீமன், கிருஷ்ணர், சாத்யகி, நகுலன், சகாதேவன் ஆகியோர் தங்கள் ரதங்களில் ஏறிச் சென்றார்கள். பல மஹரிஷிகளும் கூட, பீஷ்மரின் உபதேசங்களைக் கேட்கும் ஆவலுடன், பாண்டவ சகோதரர்களோடு சேர்ந்து பீஷ்மரைக் காணப் புறப்பட்டார்கள். சூரியன் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்த பீஷ்மரை அடைந்து அனைவரும் தங்களுடைய வணக்கங்களைத் தெரிவித்தார்கள். நாரதர், அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து, ‘பீஷ்மரிடம் இப்போதே, தெரிந்து கொள்ள வேண்டிய தத்துவங்களை எல்லாம் அறிந்து கொள்ளுங்கள். இவர், இந்த பூத உடலை விட்டு மேலுலகை அடைவதற்கு முன்பாக, அவரிடமிருந்து அறிய வேண்டிய எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். இவ்வாறு நாரதர் கூறிய பின்பும் கூட, பீஷ்மரிடம் கேள்விகளைக் கேட்க எல்லோரும் தயங்கினார்கள். யுதிஷ்டிரர், கிருஷ்ணரைப் பார்த்துச் சொன்னார்,  ‘இங்கே பீஷ்மரிடம் கேள்விகள் கேட்க அருகதை உள்ளவர் உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. பீஷ்மரிடம் முதலில் நீங்கள் பேசுங்கள்’. கிருஷ்ணர், ம

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 5 (நிறைவு)

மேகலா   : நான் ‘குடுகுடு’வென ஓட நினைத்து, மெதுவாக நடந்து, தாயார் சன்னதிக்குள் நுழைந்தேன் கிருஷ்ணா…. கூட்டத்துக்குள் முண்டியடிச்சு முன்னாலே போய் நின்று கொண்டேன் கிருஷ்ணா.   பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் இறைவன் என்பது நம்முடைய நம்பிக்கை…. இங்கு திரை விலகிய நேரம் தொட்டு, பார்க்கும் கண்களை விலக்காமல், இமைக்காமல் பார்க்கச் செய்வதுதான் அன்னையின் பேரழகு போல கிருஷ்ணா….  அத்தனை அழகு…. நீண்ட நெடும் கண்களில் ஒளி தெறித்தது. மூக்குத்தி மின்னிய நாசியில் காற்று புகுந்து, உலகத்துக்கே உயிர் கொடுத்தது. வெண் பட்டாடையின் அலங்காரத்தில், மொத்தக் கூட்டமும் சிலிர்த்துப் போய் நின்றது கிருஷ்ணா…. அப்போது பூசாரி, தீபக் கரண்டியை ஜோதி மயமாக்கி, உலகத்துக்கே வெளிச்சத்தைக் கொடுக்கும் தாயாரின் முகத்தில் காட்டி, விளக்கின் ஒளியில், தங்கத் தாரகை அன்னையின் அழகைப் பேரழகாக்கினார் கிருஷ்ணா…. தீபாராதனை காட்டும் போது, பூசாரி பேசியதுதான் highlight கிருஷ்ணா. இந்தக் கோயிலுக்குப் போவதற்கே பிராப்தம் இருக்கணும் என்று ராணிமா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை கிருஷ்ணா! கிருஷ்ணர்  : சில நேரங்களில், பூசாரி பேசுவது கூட, கடவுள

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 118

மேகலா  : குருக்ஷேத்திரம் செல்லும் வழியில் கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு, பரசுராமர், 21 முறை க்ஷத்திரியர்களைக் கொன்று தீர்த்த கதையை சொல்லிக் கொண்டே வந்தார். தருமபுத்திரர், மிகவும் வியப்படைந்து  ’21 முறை பரசுராமரால் அழிக்கப்பட்ட க்ஷத்திரிய குலம், மீண்டும் எப்படி வளர்ச்சி அடைந்தது’  என்று கேட்டார். பரசுராமரின் சரித்திரத்தைத் தருமபுத்திரருக்கு கிருஷ்ணர் விவரித்தார். ‘ஜமதக்கினி என்ற மஹரிஷியின் புதல்வராகிய பரசுராமர், தன்னுடைய தவத்தினால் பரமசிவனை மகிழச் செய்து, அவரிடமிருந்து ஒளி வீசும் கோடரி ஒன்றையும், பல அஸ்திரங்களையும் பெற்றார். ‘கார்த்தவீர்யார்ஜுனன்’ என்ற மன்னனின் மகன்கள், பரசுராமரின் தந்தையாகிய ஜமதக்கினியைக் கொன்று விட்டார்கள். இதனால் பெரும் கோபம் கொண்ட பரசுராமர்,  ‘இந்தப் பூமியை க்ஷத்திரிய குலம் இல்லாததாகச் செய்து காட்டுகிறேன்’  என்று சபதம் செய்து, கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள் மீது போர் தொடுத்தார். போரில் அவர்கள் எல்லோரும் அழிந்தார்கள். அதன் பின்னர், அந்த ராஜ்ஜியத்திலேயே க்ஷத்திரிய இனத்தைச் சார்ந்தவர்களை எல்லாம் அவர் அழித்தார். சபதத்தை நிறைவேற்றிய திருப்தியோடு, கோபம் தணிந்தவராகிப் பரசுராம

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 4

கிருஷ்ணர்   : என்ன சொன்ன….. என்ன சொன்ன….? காலையில் பிள்ளையார்பட்டி தரிசனம், சாயந்திரம் சௌந்திரராஜப் பெருமான் தரிசனம் என்றாயா….? பிள்ளையார்பட்டிக்குச் சென்றதை என்னிடம் சொல்லவேயில்லை. திருக்கோஷ்டியூர் பக்கம் வரவேயில்லையே….? மேகலா  : ஆமாம் கிருஷ்ணா, சொல்ல மறந்தே விட்டேன். எப்பவுமே, ‘அ’னால ஆரம்பிச்சி, ’ஃ’ – ன்னா வரைக்கும் வரிசையாகப் பேசுவேன்.  இந்த முறை, சௌந்திரராஜப் பெருமான் கோயிலுக்குச் சென்று வந்த உற்சாகம் என்னைத் தலைகீழா ஆட வச்சிருச்சி போல;  பிள்ளையார் கூட மகாபாரதம் எழுத ஆரம்பிக்கும் முன், பிள்ளையார் பிடித்து பூஜை பண்ணி விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறார். நான், முதலில் பிள்ளையார்பட்டிக்குப் போய் சாமி கும்பிட்டு வந்தும் கூட, திண்டுக்கல் புராணம் பாட வந்துட்டேன். கிருஷ்ணர்  : நீ திண்டுக்கல்லுக்குத் தாவி செல்லும் போதே உன்னைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். நீ Temple City-யில் tiffin சாப்பிட்டது; பிள்ளையார்பட்டியில் பிள்ளையாரை கண்ணு வாங்காம பார்த்தது; வரிசையிலிருந்து வெளியேறி, மறுபடியும், மறுபடியும் பிள்ளையாரை உற்று உற்றுப் பார்த்து பரவசப்பட்டது; உக்கி போட்டு நேர்ச்சையை செலுத்தியது; மருத

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 117

                                          யுதிஷ்டிரருக்கு பட்டாபிஷேகம் மேகலா  : ராஜ நீதியையும், மற்ற தர்மங்களையும் விவரித்துச் சொல்லுமாறு கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரரைப் பார்த்து, வியாசர் சொன்னார், ‘எல்லா தர்மங்களையும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உனக்கு இருந்தால், எல்லோருக்கும் மூத்தவரான பாட்டனார் பீஷ்மரிடம் போய்க் கேள். பீஷ்மர், இந்திரன் முதலிய தேவர்களை எல்லாம் நேரில் கண்டவர். பிரகஸ்பதியிடமிருந்தே ராஜ நீதியை அறிந்து கொண்டவர். சுக்ராச்சாரியார் அறிந்த நீதி சாத்திரத்தை பீஷ்மரும் முழுமையாக அறிந்திருக்கிறார். வசிஷ்டரிடமிருந்தே வேதங்களையெல்லாம் கற்றவர் அவர். மார்க்கண்டேயரிடமிருந்து சந்நியாச தர்மத்தை அறிந்து கொண்டவர் அவர். பரசுராமரிடமிருந்தும், இந்திரனிடமிருந்தும் ஆயுதக் கலையை அறிந்தவர்.  தான் விரும்பிய போது மரணம் தன்னை வந்து சேரும் என்ற நிலையைப் பெற்றவர், மனிதர்களுள் பீஷ்மர் ஒருவரே!  அவர் உயிரை விடுவதற்கு முன் அவரை அணுகி உனது சந்தேகங்களைக் கேட்டால், அவர் அவற்றைத் தெளிவிப்பார். இப்படி வியாசர் கூறிய போது தருமபுத்திரர்,  ‘நேர்மையாக யுத்தம் புரிந்த பீஷ்மரை, தந்திரமாக வெல்லும் வழி

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 3

மேகலா   : கிருஷ்ணா…. சென்னப்பட்டணத்தில் நான் தவழும் கண்ணன் பார்த்து மெய் சிலிர்த்திருக்கிறேன்….ஓவியங்களில், வெண்ணெய் உண்ணும் கண்ணனைப் பார்த்து குழைந்து போயிருக்கிறேன்.   ‘மாடு மேய்க்கும் கண்ணே’ என்ற பாடலைக் கேட்டு, யசோதையாய் மாறி, குறும்புக் கண்ணனை பாசத்தோடு அனுபவித்திருக்கிறேன்.   கண்ணன் மீது ராதை கொண்ட காதலைக் கேட்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். பலகணி வழியாக, கையில் மத்துடன் நிற்கும் கண்ணனை உடுப்பியில் பார்த்து, கண்களில் நீர் மல்கப் பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருக்கிறேன். இவ்வளவு ஏன்…, மகாபாரதம் வாசிக்கும் போது, கண்ணனுக்கும் அர்ஜுனனுக்குமிடையே உண்டான நட்பை அறிந்து பொறாமை கூடப் பட்டிருக்கிறேன். நீ நம்பினாலும் நம்பு, நம்பலேனாலும் பரவாயில்லை. இங்கு புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணனின் அழகைக் கண்டு வாய் பிளந்து பார்த்துக் கொண்டேயிருந்தது தவிர, வேறொன்றும் தோன்றவில்லை கிருஷ்ணா….!   கண்ணழகைக் காண்பேனா…., தன் காதல் மனைவியுடன் சேர்ந்து நிற்கும் பூரிப்பை ரசிப்பேனா…., அழகாய் செதுக்கி கீழ் நோக்கி நிற்கும் நாசியை ரசிப்பேனா…, அந்த விரல்கள் புல்லாங்குழலின் துவாரத்தில் அழுத்தி நிற்கும் அழகைக் காண்ப