Posts

Showing posts from April, 2024

பெண்களால் முடியும் - பாகம் 3

மேகலா   : கிருஷ்ணா…., நிறுவனங்கள் அடையாளம் காட்டும் பெண்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை கிருஷ்ணா… நல்ல மனமுடையவர்களைக் கூட, அடையாளம் காட்டியிருக்கிறார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படியா…. நல்ல மனமுடைய யாரை, எந்த நிறுவனம் அடையாளம் காட்டியிருக்கிறது…. மேகலா  : ISKCON மாதிரி வழிபாடு செய்யும் இடங்களில், தினந்தோறும் மக்களுக்கு பசி தீர்ப்பதற்காக அன்னதானம் போடுகிறார்கள். சிலர், ஆத்மதிருப்திக்காக, குறைந்த விலையில் சாப்பாடு கொடுப்பதுண்டு… இதெல்லாம் சிலர் குழுவாகச் சேர்ந்து செய்கிறார்கள்… செய்ய முடியும்…. ஆனால், ஒரு பெண், இப்போ அவங்களுக்கு, 60, 65 வயது இருக்கும். அவர்கள் பசித்து வருபவர்களுக்கு, சும்மா கொடுப்பது போல, 1 ரூபாய்க்கு இட்லி, சட்னி வைத்து கொடுக்கிறார்கள் கிருஷ்ணா… அதிலும், யாருடைய உதவியும் இல்லாமல், அந்த இட்லி விற்கும் காசை வைத்தே, பசித்து வருபவர்களுக்கு, அன்னபூரணியாக, 1 ரூபாய்க்கு இட்லி விற்கிறார்கள். ‘கொரோனா’ காலத்தில் கூட, அவர் தன்னுடைய பணியை விடவில்லை. இதைக் கேள்விப்பட்ட ‘மஹிந்திரா க்ரூப்’ M. D., ஆச்சர்யப்பட்டு, அந்த அம்மாவை நேரில் சந்தித்து, அவர்களுக்கு, குடியிருக

பெண்களால் முடியும் - பாகம் 2

மேகலா   : கிருஷ்ணா…., பாரதியாரின் கவிதையைச் சொல்லிட்டயா… எனக்கு, விண்ணிலே பறக்கும் பெண்கள் ஞாபகம் வருது கிருஷ்ணா… ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் வரைக்கும் பெண்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பதை நாம் பார்த்து விட்டோம்ல…. Space-ல் பறந்த பெண்ணை, சில காலத்திற்கு முன்னால் எல்லோரும் பார்த்தோமே…, நினைவிருக்கிறதா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : OH! ஆமாம்… ‘நாசா’ அனுப்பிய விண்கலத்தில், space-க்குப் பறந்து சென்றவர்களில் ஒருவர் தான் ‘கல்பனா சாவ்லா’. விண்ணில் பறந்தவர்… விண் வெளியிலேயே காற்றோடு கரைந்து போனவள்…  இப்படிப் பேசப் பேசத்தான், ‘பெண்களால் முடியும்’ என்ற வார்த்தையை, பெருமையாய் சொல்ல முடிகிறது….. மேகலா  : கிருஷ்ணா…, ‘கல்பனா சாவ்லா’ ஒருவர் தான்…. இன்று, அவர் காற்றோடு கலந்து…, நூற்றுக்கும் மேலான கல்பனா சாவ்லாக்களை, விண்வெளியில் தூவி விட்டார் போலும்… ஆகாய விமானத்தை ஓட்டும் விமானிகளில் எத்தனை பேர் பெண்கள் தெரியுமா கிருஷ்ணா…. நான் முதன் முதலில் துபாய்க்குச் செல்லும் போது, அந்த விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவர், பெண்… இப்போ, ஹரித்துவார் சென்ற போது…, அங்கிருந்து Bangalore-க்குத் திரும்பிய விமானத்தை ஓட்டிய

பெண்களால் முடியும் - பாகம் 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…., புத்தம் புது தலைப்புடன் நானும் வந்திட்டேன்… என்ன தலைப்பு என்று சொல் பார்க்கலாம்… கிருஷ்ணர்  : தலைப்பு நான் சொல்லணும் என்று இங்கு வந்தேன். நீ ஏற்கனவே decide பண்ணிட்டயா…. சரி, என்ன தலைப்பு….? மேகலா  : கிருஷ்ணா! நீ என்ன தலைப்பை select பண்ணியிருக்கிறாய்…., அதச் சொல்லு முதலில்…. நான் பிறகு சொல்கிறேன்… கிருஷ்ணர்  : ‘பெண்களால் முடியும்’ – என்ற தலைப்பில், ‘உன் கருத்து’…, ‘உன் பார்வை’…, இவையெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்னு நினைத்தேன்…. அதையே, கட்டுரையின் தலைப்பாகச் சொல்லலாம் என்று நினைத்தேன்… மேகலா  : வாவ்! Great கிருஷ்ணா…, இதே தலைப்பைத்தான் நானும் decide பண்ணியிருந்தேன்… நம்ம ரெண்டு பேர் மனசும் ஒண்ணு போல நினைக்குது கிருஷ்ணா.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கிருஷ்ணா… கிருஷ்ணர்  : நெசம்மாவா…. ஏய் லூசு…! உனக்குள்ளே இருப்பவன் நான்… உன்னோடவே சுற்றித் திரிபவன் நான்…. நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிய மாட்டேனா…. மேகலா  : ஓ….! ஆமாம்ல….. ஆனா, நீ நினைப்பதை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியலையே…, அது ஏன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அவ்வளவுதான் உன் ‘matu