Posts

Showing posts from October, 2023

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 16

கிருஷ்ணர்   : நான், ‘இன்னும் ஒரு முறை நீ இமயமலையின் அடிவாரத்திற்கு சென்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் சொன்னேன். நீ, உன் மனதில் உள்ளதையும், அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதையும் சொல்லி, என்னையும் அங்கேயே அழைத்துச் சென்று விட்டாயே…. கொஞ்சம் இரு… இதோ, காற்றாக விரைந்து ‘ரிஷிகேஷ்’ சென்று, கங்கையைப் பார்த்து வருகிறேன்…. மேகலா  : கிருஷ்ணா…, ராமர் கடந்து சென்ற கங்கையை நீயும் கடக்கப் போகிறாயா… நீ செல்லலாம்…  காற்றிலே மிதந்து செல்லுவாய்…. flight ticket கிடையாது… நினைத்த மாத்திரத்தில், மலையின் வளைவுகளில் நடந்து கூடச் செல்லுவாய்…. கிருஷ்ணர்  : நான் நடக்கிறேனோ…. மிதந்து செல்லுகிறேனோ… நீ உன் உணர்வுகளைக் கொட்டும் போது…, ’அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்னும் போது…, நாமும், வெக்கையான இந்தப் பிரதேசத்தை விட்டு, கங்கையின் அருகில் சென்று விடலாமோ என்று தோன்றுகிறது…. மேகலா  :  தூணிலும், துரும்பிலும், உயிர்களின் ஒவ்வொரு அணுக்களிலும் குடியிருக்கும் பரம்பொருள் ஸ்ரீகிருஷ்ணரா…,  இந்தப் பிரதேசத்தை விட்டு போகிறேன் என்று சொல்வது… முடியுமா…, சரி…, எங்களை விடு…. ஆண்டாளம்மாவை விட்டு சென்று விடுவாயா…. கிருஷ்ணர்  : அடா…

வாழ்க்கையில் ஒருமுறையாவது... பகுதி 15

கிருஷ்ணர்   : ஆமாம்…., நீ ஏன் ‘rafting’ செல்லவில்லை…   நிமிர்ந்து நிற்கும் இமயமலையின் அடிவாரத்தைத் தொட்டு ஓடும் கங்கையைக் காணும் போது, ஆதிபகவனும், மகாசக்தியும் இணைந்து நிற்பது மாதிரி உனக்குத் தோணியது என்று சொன்னாயே…  அந்த தரிசனத்தைப் பார்க்க செல்லவில்லையா…. போகாமலிருக்க உனக்கு எப்படி மனசு வந்தது…. மேகலா  : கிருஷ்ணா…., பலூன் boat, shake ஆகிக் கொண்டே இருக்கும் போல…. இவங்க கூடயே, அழைத்துச் செல்பவரும், பாதுகாப்புக்காக செல்லப் போகிறார்கள்.  பயப்படாதவர்களுக்கே, security தேவைப்படுகிறது.  அதிலும், rules படி, வயதானவர்களும், குழந்தைகளும் rafting செல்லக் கூடாதாம் கிருஷ்ணா…. அவர்கள் சொன்னதை வைத்துப் பார்த்தால், கங்கையின் ஆழமான பகுதிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று, அங்கும்…., முங்கச் சொல்வார்கள் போல… லேசான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கூட, rafting பயணத்தை நிறுத்தி விடுவார்களாம்.  அமைதியான நீரோட்டம் கூட, வளைந்தும் நெளிந்தும், பாய்ந்தும் செல்வதாகத்தான் இருக்கிறது.  அதனால்தான், நானும் போகணும்னு நினைக்கவில்லை…. கிருஷ்ணர்  : அட…, என்னம்மா இது, படகு சவாரி போகாவிட்டால் என்ன…,  கரையில் நின்று கொண்டு, இமயமலைய

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 14

மேகலா   : எங்களின் தளர்ச்சியைப் பார்த்து, ஒருவர் ஹரியிடம் ஏதோ விசாரித்தார். அவன் கூட, ‘auto’ கிடைக்குமோ என்று எதிர்பார்த்தான். ஆனால், அவர், ‘ஒரு நபரை’ சுமந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டி போல… கிருஷ்ணர்  : Oh! ’ஜானகி ஜூலா’ சமீபத்தில் நிற்கிறீர்கள்… மேகலா  : எங்களுக்கிருந்த மனக்குழப்பத்தில், விசாரித்தவரைத் தவிர்த்து விட்டு, ‘அம்மா, ஜானகி ஜூலா சென்று நடந்து, அக்கரைக்குச் செல்லணும். அங்குதான் taxi இருக்கிறது. நடப்போமா…’ என்றான். மிகவும் மெலிந்த குரலில், ‘ஹும்’ என்று முனகினேன்…. கிருஷ்ணர்  : ஐயோ பாவம்…. இன்னும் கொஞ்ச தூரம் தான்… நடந்து விடலாம்…. மேகலா  : நடக்க பயப்படலாம் இல்ல கிருஷ்ணா… ஆனா, tired ஆக இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் நடந்து, ‘ஜானகி ஜூலா’வுக்கு வந்து விட்டோம் கிருஷ்ணா. ..  நம்முடைய தொழில்நுட்ப வல்லுனர்கள், அந்தரத்தில் பந்தல் கட்டி, அதில் நின்று, ஆகாய கங்கையை, பூலோக கங்கையாகப் பார்க்க வழி செய்திருக்கிறார்கள்.  இதில் என்ன ஒரு கஷ்டம் என்றால், ‘இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல 2 கி. மீ தூரம் நடக்கணும்… ஷீத்தல் அப்பாவோட phone, எச்சரிக்க ஆரம்பித்து விட்டது… கிருஷ்ணர்

வாழ்க்கையில் ஒருமுறையாவது - பகுதி 13

மேகலா   : நாங்கள் கங்கையில் குளிப்பதற்காக வந்த நேரத்தில் கூட்டம் ஒன்றும் பெரிதாக இல்லை கிருஷ்ணா… ஹரித்துவாரில், மக்கள் குடும்பம் குடும்பமாக ஆங்காங்கே தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டிருந்தனர்…. ரிஷிகேஷிலோ, எங்களைச் சேர்த்து மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் இருந்திருக்கலாம்…. ‘ நதியில் நீராடி, கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றல்’ எங்களையும் தழுவிச் சென்றது… வளையோசை குலுங்க, கங்கையும் பதினாறு வயது பாவையாக சிணுங்கிச் சென்றாள்…  கரையில் கட்டிய படியினில், எல்லோரும் அமர்ந்து, யார் முதலில் கால் நனைப்பது என்று எங்களுக்குள் ஒரு தயக்கமும், பரபரப்பும் ஊடுருவி நிற்க…, ஹரியும், கார்த்தியும் மேலாடையைக் கழற்றி சட்டென்று கங்கையில் இறங்கினார்கள்….   ‘இங்கு ஒர் படி இருக்கிறது. அம்மா, மெள்ள இறங்குங்கள்’ என்று ஹரி சொல்ல…., கண்டிப்பான அம்மாவை நெருங்கத் தயங்கும் சின்னப் பிள்ளை போல, நானும் பயந்தேன்.  அதற்குள் ராணிமாவும், மதனாவும், நன்றாக இறங்கி, ஒரு முறை முழுகி எழுந்தார்கள். ஆதிக்கு, அம்மா இறங்கியதும் பயம் கொஞ்சம் விலகியது. பாதம் நனையுமளவுக்கு இறங்கினான். நான் இரண்டாம் படியில் இறங்கி உட்கார்ந்து கொண்டேன். ர