Posts

Showing posts from January, 2022

அழகு - பகுதி 5

மேகலா   : ஆம்மாம் கிருஷ்ணா….! ஆனாலும், சில இடங்களில், சில தருணங்களில் அழகின் ஆக்ரமிப்பு நம்மை, மெய் சிலிர்க்கச் செய்து விடும். இருள் விலகாத வைகறைப் பொழுதில்…., பறவைகளின் ‘கிரீச், கிரீச்’ என்ற சப்தத்தின் பின்னணியில், சூரியன் மெதுவாய், மிக மெதுவாய் தன் கதிர்களால் நம்மை வருடிக் கொடுக்கும் தருணம்…. தோட்டத்தின் இலைகள் நீர் ஊற்றாமலேயே சில்லென்று இதமாய் வீசும் காற்றில் அசைந்து கொடுக்கும்…   இந்த காலைப் பொழுதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூக்கும் சின்னப்பூ கூட, தோட்டத்தின் அழகை தூக்கிக் காட்டும்.   குளிர் காலத்துக்கென்றே ஊர்ந்து வரும் ‘ரயில் பூச்சி’ கூட, வீட்டின் இயக்கத்தை சுறுசுறுப்பாக்கும்…. செடிக்குச் செடி மகரந்தத்தைப் பரப்பும் பட்டாம்பூச்சி என் வீட்டையே வண்ணமயமாக்கும் அழகு…, காலையின் அழகு.   தினந்தோறும் வேலையின் பரபரப்பில் கூட என்னை வருட வைக்கும் அழகு…. கிருஷ்ணர்  : தினந்தோறும் நடக்கிற காலை நேரத்து நிகழ்ச்சி…. இதை நீ ரசிச்சி சொல்லும் போது, உன் வீடே அழகாய் இருக்கு மேகலா…. இதே போல, வெகு சாதாரணமான நிகழ்வினை அழகாய்ச் சொல்லு மேகலா…, கேட்கிறேன்…. மேகலா  : நான் எங்க கிருஷ்ணா…, அழகாய்ச் சொல்லுகிறே

அழகு - பகுதி 4

மேகலா   : ஐயோ…. ஆமாம் கிருஷ்ணா… உனக்கும் பாப்பையா பிடிக்குமா கிருஷ்ணா….   ‘கருப்பு தான் அழகு, காந்தலே ருசி’  – என்ற பழமொழியை நான் சொன்னேன்ல… பாப்பையா ஐயா அவர்களை கருப்புன்னு யாராவது சொல்வாங்களா கிருஷ்ணா… அவரை நெனச்சவுடனே எனக்குத் தமிழும், தமிழின் அழகும், தெளிவும், தங்கு தடையில்லாத தகவல்களும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவரோட நகைச்சுவை கலந்த பேச்சு, இவைதானே ஞாபகத்துக்கு வரும்…, ரொம்பப் பிடிக்கவும் செய்யும்.   பட்டிமன்ற நிகழ்ச்சியே, பேச்சாளர்களின் பொடி வச்சுப் பேசுவதையும்…, ஒருவர் பேச்சுக்கு மற்றொருவர் எதிர்வாதம் செய்வதையும் கேட்பதற்குத்தானே கிருஷ்ணா…  பேச்சாளர்கள் பொடி வச்சுப் பேசும் போது, அரங்கமே அதிரும் கிருஷ்ணா…. அப்போ யாராவது, அழகுன்னா என்ன என்று கேட்டால்…, எல்லோரும் சொல்லி விடுவார்கள்… ‘வாதமும்’, ‘எதிர்வாதமும்’ காமெடியாகப் பேசப்படுமானால், அதுதான் அழகு’ என்று… கிருஷ்ணர்  :  சாதனையாளர்களுக்கு, அழகு என்பது, அவர்கள் திறமை மட்டும் தான் மேகலா… மேகலா  : ஐயோ.., கிருஷ்ணா, இன்னைக்குப் பூரா எனக்குப் பிடிச்ச மாதிரியே பேசுற கிருஷ்ணா… ‘சாதனையாளர்’, ‘திறமை’ என்று சொல்லிட்டயா…. எனக்கு, ஏவுகணைகளின் தந

அழகு - பகுதி 3

மேகலா   : கிருஷ்ணா…, நீ என்ன சொன்ன…. ‘அழகு’, தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் போது, மேலும் அழகாகி விடும்’ என்றாயல்லவா… ‘correct’ கிருஷ்ணா… அழகிப் போட்டியில் கலந்து கொள்பவர்கள், தங்களை எவ்வளவு அழகுபடுத்திக் கொள்கிறார்கள் தெரியுமா கிருஷ்ணா… ‘fitness’, ‘dressing’, ‘cat walking’…. சிரிப்பைக் கூட, கண்ணாடியைப் பார்த்து சிரிக்கக் கற்றுக் கொள்வது…,   தலைமுடியை சிலுப்பிக் கொள்வது என்று பார்த்துப் பார்த்துத் தயாராகித்தான் உலக அழகியாகிறார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு இத்தனை தயாராகணுமா…. நான் நெனச்சேன், கண்ணாடியைப் பார்த்து அழகாயிருப்பவர்கள், போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று… மேகலா  : நாம நினைக்கிற பேரழகிகளெல்லாம் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது கிருஷ்ணா… என்னைப் பொறுத்த வரை…,  கொஞ்சம் பூசின மாதிரி உடல்வாகு இருக்கணும்…, கணகள் நட்சத்திரமாய் மின்னணும்…. எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும்…. தலைமுடி அடர்த்தியாகவும், கொஞ்சம் சுருளாகவும், கொஞ்சம் நீளமாகவும் இருக்கணும்.  இப்படி இருந்தாலே அழகுதான்…. இங்கு அழகுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஒவ்வொருவரும் 40 kg கூட இருக

அழகு - பகுதி 2

மேகலா   : நீ சொல்லும் போது தான் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது கிருஷ்ணா. குற்றாலத்தின் அழகே, அங்கு குதித்து ஓடும் அருவியும்…, நம் முகத்தில் தெறித்து வழியும் சாரலும் தானே…. அதை அனுபவிக்க ஒரு முறை தீபாவளியன்று குற்றாலம் சென்றிருந்தோம் கிருஷ்ணா. அது மழை பெய்யும் காலம். சும்மாவே குற்றாலம் ஊர் முழுவதும் சாரலால் நனைந்து காலுக்குள்ளும் ஈரம் நனைத்துக் கொண்டே இருக்கும். அன்று என்னவோ…, குற்றாலத்தின் சாரலா…, மழையின் சாரலா என்று தெரியாமல் தொடர்ந்து வானம் பொழிந்து கொண்டே இருந்தது. இந்தச் சாரலில் நனைந்து கொண்டே ஐந்தருவிக்குக் குளிக்கச் சென்றோம். எப்பவுமே ஐந்து அருவிகளாக பிரிந்து கொள்ளை அழகில் குதித்து கும்மாளமிடுமல்லவா…. அன்று…., அப்படியொரு நீர்வீழ்ச்சியை நீ பார்த்திருக்கவே மாட்டாய் கிருஷ்ணா.   புதுப்புனலாய் பொங்கி வரும் நீர்வீழ்ச்சி ஓடி வரும் வேகத்தில், செம்மண் நிலப்பரப்பையும் கலந்து இழுத்து வந்து குழம்பாக்கி செம்புலனாய் குதித்து வந்தது….   அவ்வப்போது, சிறு சிறு கற்களும் தெறித்து விழுந்தது. ஐந்தருவி ஓரருவியாய் அடர்ந்து நின்று ஆக்ரோஷமாய், பெருத்த இரைச்சலோடு ஓடி வந்தது. கீழே நிற்பவர்களையெல்