Posts

Showing posts from February, 2020

வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா....? ஒரு வாரம் ஆயிருச்சி.... வள்ளுவர் சிலையை சேதப்படுத்துகிறார்கள்.., உன்னைக் காணோம்....! வள்ளுவர் படத்துக்கு ‘காவி’ dress போட்டு, ருத்ராட்சம் அணிவித்து வேடிக்கை பார்க்கிறார்கள்: உன்னை ஆளையே காணோம். தாய்லாந்தில், உன் மனம் கவர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறள் புத்தகத்தை வெளியிடுகிறார். ‘ கிருஷ்ணா....கிருஷ்ணா.... என்று திரும்பத் திரும்ப சொல்லிச் சொல்லிக் கூத்தாடுவியே...., எங்கு சென்றாய்....? மேகலா : என்ன கிருஷ்ணா.....? ரொம்ப கோபமா இருக்கிறியா....? கிருஷ்ணர் : நாட்டுல என்னவெல்லாமோ நடக்குது... இதெல்லாம் பத்தாது என்று...., நம்ம திருவள்ளுவரையும் பந்தாடத் துணிஞ்சிட்டாங்களே என்று நானே கடுப்புல இருக்கேன்....., சரி, இதன் விவரங்கள் என்னண்ணு நீ சொல்லுவியே என்று பார்த்தால், உன்னை ஆளையே காணோம்.... மேகலா : திருவள்ளுவர் என்ன எழுதியிருக்காரு, குறளின் மேன்மை என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம், ‘வள்ளுவருக்கு விபூதி பூசி சாமியாராக ஆக்குறாங்க’ என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறாங்க, கிருஷ்ணா.... இதன் உச்சக் கட்டம் என்ன தெரியுமா, கிருஷ்ணா? B. J. P - யின் official twitter

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 71

மேகலா : பதினான்காம் நாள் யுத்தம் தொடர்ந்து இரவிலும் நடந்து கொண்டிருந்தது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். ஒரு பகுதியில், பீமன் கௌரவ சேனைக்குப் பெரும் நாசத்தை விளைவித்துக் கொண்டிருந்தான். சாத்யகியினால் கொல்லப்பட்ட பூரிசிரவஸின் தந்தையாகிய சோமதத்தன், ’சாத்யகியின் தலையை இப்போது நான் அறுக்கப் போகிறேன் என்று கூறி, சாத்யகியுடன் போர் புரிந்தான். சாத்யகி, ‘பூரிசிரவஸ் மட்டுமல்ல, அவன் தந்தையாகிய நீயும், கர்ணன், சகுனி போன்ற எல்லோரும் என் கையால் மரணமடையப் போகிறீர்கள்” என்று கூறி, சோமதத்தனை எதிர்ப்பதில் முனைந்தான். சோமதத்தனுக்கு ஆதரவாக துரோணர் சேர்ந்து கொண்டு, சாத்யகியை எதிர்த்தார். இதைப் பார்த்த அர்ஜுனனும், பீமனும் துரோணரைத் தாக்க, அவரை நெருங்கினார்கள். அவர்களோடு பல வீரர்களும் சேர்ந்து கொண்டார்கள். மிகக் கோரமான யுத்தம் தொடங்கியது. இதற்கிடையில், அஸ்வத்தாமா கடோத்கஜனை வீழ்த்தி விடுவது என்ற வைராக்கியத்துடன், அவனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தான். கடோத்கஜன், மாயாஜாலம் நிறைந்த யுத்தத்தை நடத்தினான். அதை எதிர்க்க, கௌரவப் படையில், அஸ்வத்தாமாவைத் தவிர வேறு யாரும் துணியவில்லை. கடோத்கஜனின் அரக்கர்

மேல் துண்டு படும் பாடு - பகுதி 3 (நிறைவு)

மேகலா : கிருஷ்ணா! மேல் துண்டின் வேறு பல பயன்பாடுகளையும் இப்போது பார்ப்போமா.....? நீ கேட்டா ஆச்சர்யப்படுவ கிருஷ்ணா.... வாங்குன கடனைத் திருப்பிக் கொடுக்காம ‘டிமிக்கி’ கொடுக்குறவங்களை வழியில் பார்த்தா, பணம் கொடுத்தவன், கழுத்துல துண்டைப் போட்டு முறுக்கித்தான் நிப்பாட்டி விசாரிப்பான், கிருஷ்ணா....! கிருஷ்ணர் : இல்லாட்டி, கடன் வாங்கியவன் ஓடிப் போயிருவான், இல்லையா... கழுத்துல துண்டைப் போட்டு முறுக்கி, அதன் ஒரு முனையைக் கையில் பிடிக்கும் போது, எவ்வளவு திடகாத்திரமான ஆளாக இருந்தாலும் ஓட முடியாது. முகம் தெரியாம பொத்தி வச்சு அடிக்கணும் என்றாலும், துண்டால் முகத்தை மூடி, முறுக்கி, சாத்துவார்கள். நான் ஒரு திரைப்படத்தில் இந்த மாதிரி ஒரு scene-ஐப் பார்த்திருக்கிறேன். மேகலா : ‘Friends' படத்துல, கிருஷ்ணா! அடி வாங்கியவன், யார் அடித்தது என்று பிரச்னையைக் கிளப்பும் போது, அடித்தவன், ‘நான் அடிக்கல; வேணும்னா துண்டப் போட்டுத் தாண்டட்டுமா’ என்று சொல்வான். ஏன்னா, துண்டப் போட்டுத் தாண்டுனா, இதை விட powerful-ஆன சத்தியம் வேறு கிடையாது. கிருஷ்ணர் : பார்த்தியா, மேகலா...? இந்த மேல் துண்டு எப்படியெல்லாம

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 70

ஜயத்ரதனின் வதம், ஸ்ரீ கிருஷ்ணரின் தயவால் எப்படி நிகழ்ந்தது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். மேகலா : ஒரு வேலையை, சொன்னபடி முடிப்பதற்கு நமது திறமை மட்டும் பத்தாது; தெய்வத்தின் அருளும் இருக்க வேண்டும் என்று strong-ஆக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே மெய் சிலிர்க்குது, கிருஷ்ணா.....! ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்ற இப்போதைய பழமொழி, என் கிருஷ்ணன் சொல்லும் போது, எத்தனை உற்சாகமாக இருக்கிறது, கிருஷ்ணா! எல்லாமே technical movement தான். அர்ஜுனன், நீ சொன்னபடியெல்லாம் கேட்கிறான்; எதிர்த்துப் பேசுவதேயில்லை. Technical யோசனையும் கூட ரொம்ப இல்லை. இல்லையா, கிருஷ்ணா...? கிருஷ்ணர் : முனைப்பாக யுத்தம் செய்யும் வேளையில், யுத்தத்தின் விதிதான் ஞாபகம் இருக்கும். ஒரு easy-யான சந்தர்ப்பத்தை உருவாக்குவது, gap பார்த்து அடிப்பது, இது எல்லாம், பார்ப்பவருக்குத்தான் சட்டுனு தோணும். Match விளையாடுபவரைக் காட்டிலும், அதைப் பார்ப்பவருக்குத்தானே, ‘இப்படிச் செய்யலாம்’, ‘அப்படிச் செய்யலாம்’ என்று தோன்றும். அர்ஜுனனோட திறமை, என்னைச் சாரதியாக்கி அருகில் வைத்துக் கொண்டது. எப்படியாவது துரியோதனன் தோற்க வேண்டும் என்று

மேல் துண்டு படும் பாடு - பகுதி 2

மேகலா : கிருஷ்ணர் கூறியவாறு, மேல் துண்டு 'all-purpose costume' ஆக பயன்படுகிறது. எங்க அப்பா கூட, தோளில் துண்டு போடுவார். ஆனால், அது office செல்லும் போது கிடையாது. கதர் வேஷ்டி, கதரில் full-hand shirt, அதன் மேலே மடித்து வைத்த அங்கவஸ்திரம் (முகம் துடைத்துக் கொள்ள)! அதே மாதிரி, எங்க மாமனார் costume கூட இப்படித்தான், கிருஷ்ணா! ஒரு வேஷ்டி, மேலே கை வைத்த ‘பனியன்’, அதற்கு மேலே உதறிப் போட்ட மேல் துண்டு. இதுதான் நித்திய costume. என்றாவது ஒரு நாள், சட்டை போட்டு, மேலே துண்டு! கிருஷ்ணா! அந்தக் காலத்தில், எங்க வீட்டுக்கு, காலையில் பத்து மணியளவில் ஒரு பாட்டி கத்தரிக்காய் வியாபாரம் செய்ய வரும். இப்ப மாதிரி எல்லாக் காய்கறியும் சுமந்து கொண்டு, தள்ளுவண்டியோ, சைக்கிள்காரனோ வருவதில்லை. கத்தரிக்காயோ, பாகற்காயோ, விளைந்த இடத்திலிருந்தே, பறித்து, அங்கிருந்து தலைச் சுமையாய் சுமந்து வந்து தான் வியாபாரம் செய்வார்கள். எங்க அம்மாவும், அந்தப் பாட்டியின் குரலைக் கேட்டவுடன், கதவைத் திறந்து வாங்குவதற்கு வருவார்களா; பாட்டியும், எங்க அம்மா முகத்தைப் பார்த்ததுமே, ‘பாப்பா, கத்தரிக்காய் வாங்கப் போகுது’ என்று பு

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 69

ஜயத்ரதன் வதம் மேகலா : பூரிசிரவஸ் இறந்த பிறகு, அர்ஜுனன், கிருஷ்ணரைப் பார்த்து, ‘ஜயத்ரதன், மிகப் பெரிய வீரர்களால் காக்கப்பட்டு நிற்கிறான். சூரியன் அஸ்தமனத்திற்குள் அவனை வீழ்த்திக் கொல்வேன் என்ற என் சபதத்தை நிறைவேற்றும் வகையில் தேரை நீர் செலுத்த வேண்டும்.  நான் தொடங்கியிருக்கும் பெரிய காரியத்தை, நீர்தான் முடித்துத் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான். குதிரைகளைச் செலுத்துவதில் நிபுணராகிய கிருஷ்ணர், மிக விரைவாக ஜயத்ரதன் இருக்குமிடம் நோக்கித் தேரைச் செலுத்தினார். துரியோதனன், கர்ணன், அஸ்வத்தாமா, கிருபர் போன்ற பல வீரர்கள் அர்ஜுனனை எதிர்த்து வந்தார்கள். கர்ணன், சாத்யகியை எதிர்ப்பதில் முனைந்தான். அதைக் கண்ட அர்ஜுனன், ‘கிருஷ்ணா! கர்ணன் சாத்யகியுடன் போர் புரிய நினைக்கிறான். பூரிசிரவஸ் சென்ற இடத்திற்கு சாத்யகியும் சென்று விடக் கூடாது. நான் இப்பொழுது, ஜயத்ரதனை எதிர்ப்பதற்கு முன்பாக, கர்ணனை எதிர்ப்பது அவசியமாகிறது’ என்று கிருஷ்ணரிடம் கூறினான். ஆனால், கிருஷ்ணர், ‘இந்த நேரத்தில் நீ கர்ணனை எதிர்த்துப் போரிடுவது நல்லதல்ல. கர்ணனுக்கு எப்பொழுது முடிவு நெருங்கப் போகிறது என்று எனக்குத் தெரியும்

மேல் துண்டு படும் பாடு - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா? யோசனை பலமாக இருக்கிறது! விரலிடுக்கில் பேனாவை சுழல விட்டுக் கொண்டு, T. V. பார்த்துக் கொண்டிருக்கிறாய். உன் கண்ணு தான் T. V. பார்க்கிறதே தவிர, உன் நெனப்பு எங்கோ மேயுது.... என்ன யோசிக்கிறாய்? ஏதாவது தலைப்பு கிடைச்சிருச்சா....? மேகலா : ம்......ம்..... என்ன கிருஷ்ணா....., ஏதாவது பேசுனயா....? கிருஷ்ணர் : சரியாப் போச்சு.... போ....! சரி, சும்மா கலகலப்பாப் பேசுவோமா? காலை நேரத்தில் ஒரேயடியாக வீட்டையே தலைகீழாகக் கவுத்தப் போவது போல, cleaning வேலை பார்க்கிறாய். என்ன, தீபாவளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறாயா? (இதை எழுதியது சென்ற தீபாவளி நேரம்). அதான், ‘போண்டா முழி’ முழித்துக் கொண்டிருக்கிறாயா.....? மேகலா : ஏன் கிருஷ்ணா, மோடி தமிழகம் வந்திருந்த போது, அவரைப் பார்த்தாயா...? அவர் dress எப்படி இருந்தது...? கிருஷ்ணர் : ஏன்..., தமிழ்நாட்டுக்கு வந்திருந்த சீன அதிபரை வரவேற்கச் செல்லும் போது, ‘வேஷ்டி சட்டையில்’ செல்வதுதானே முறை; அதான் வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். அதற்கென்ன....? மேகலா : வெறும் வேஷ்டி, சட்டை மட்டும் தானா....? கிருஷ்ணர் : வேறென்ன அணிந்திருந்தார்....

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 68

சாத்யகியின் இழிசெயல் மேகலா : அர்ஜுனனுக்குத் துணையாக நிற்பதற்காக பீமனும், சாத்யகியும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். பீமனைக் கர்ணன் எதிர்த்தான். இருவருக்கும் இடையே பயங்கரமான யுத்தம் ஏற்பட்டது. பீமன், துரியோதனனின் சகோதரன் துச்சலனைக் கொன்றான். துரியோதனன், துரோணரிடம் நெருங்கித் தன் கவலையைத் தெரிவித்தான். ‘உம்மைக் கடந்து பீமனும், சாத்யகியும் எப்படி அர்ஜுனனை நெருங்கினார்கள்’ என்றவுடன், துரோணர், ’இப்பொழுது இதைப் பேசிப் பயனில்லை. ஜயத்ரதனைக் காப்பாற்றுவதுதான் நம் கடமை. அன்று சூதாட்டத்தில் சகுனி உருட்டிய காய்கள் இப்பொழுது அம்புகளாக மாறி நம்மை எதிர்க்கின்றன. இன்று பந்தயப் பொருளாக ஜயத்ரதன் வைக்கப்பட்டிருக்கிறான். அவனை நாம் காப்பாற்றி விட்டால், அர்ஜுனன் தீயில் விழுவான். நாம் எல்லோரும் ஜயத்ரதனைக் காப்போம்’ என்று சொன்னார். மீண்டும் பீமனைத் தடுப்பதில் கர்ணன் முனைந்தான். பீமன் அர்ஜுனனை நோக்கிச் செல்லவே விரும்பியதால், கர்ணன் பீமனைப் பரிகசித்தான். தன்னைப் பழித்துப் பேசிய கர்ணனை, பீமன் நெருங்கி வந்து எதிர்த்தான். கர்ணனுக்கு உதவியாக வந்த துரியோதனன் சகோதரர்கள் மேலும் 30 பேர் பீமனால் கொல்லப்பட்டனர்