Posts

கதை கதையாம் காரணமாம் - பாகம் 18

மேகலா : கிருஷ்ணா…, பதிவிரதை, மிதிலாபுரியில் வாழும் தர்மவியாதரைச் சென்று பார்க்கச் சொன்னவுடன், ஒரு எதிர்பார்ப்புடன் தானே, மிதிலாபுரிக்கு வருகிறார். வந்த இடத்தில், தர்மவியாதர் முனிவரை வரவேற்று, ’நீங்கள் பார்த்த பார்வையில் கொக்கு எரிந்து போனதால், அந்தப் பெண்மணி, என்னையும் கொக்கென்று நினத்தாயா என்று கேட்டு, என்னிடம் அனுப்பினாரா’ என்று கேட்டதும்…, ஏன் திகைத்துப் போகணும்…. கிருஷ்ணர் : இதெல்லாம் ஒரு சந்தேகமா… கௌசிகர் ஒரு முனிவர். இயல்பு வாழ்க்கையில் வாழும் பெண்மணிகளிடத்தும், ஒரு கசாப்புக்கடைக்காரரிடமும் தர்மசிந்தனை உண்டு என்பதை அறியாதவர். ஒரு எதிர்பார்ப்புடன் தான் வருகிறார் என்றாலும்…, ஒரு கசாப்புக்கடைக்காரர், இவ்வளவு துல்லியமாக, எந்த நிகழ்ச்சியையும் பார்க்காமல், யாரிடமும் கேட்காமல், கொக்கு எரிந்ததையும், அதை நேரில் பார்த்த மாதிரி சொன்ன பதிவிரதையையும் சுட்டிக் காட்டும் போது, கசப்புக்கடைக்காரருக்கு இத்தனை தவவலிமையா என்ற வியப்பு வருவது இயற்கைதான்… அவர் இடத்தில் யார் இருந்தாலும் திகைக்கத்தான் செய்வார்கள்…. மேகலா : கிருஷ்ணா…, முதலில் கௌசிக முனிவருக்கு ஒன்றும் புரியவில்லை… தர்மவியாதரின் ஆழ்ந்த ஞ...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 17

மேகலா : கௌசிகனுக்கு தர்மவியாதர் கூறிய விளக்கங்கள் தொடர்ந்தன…கெட்ட காரியம் செய்வதில் விருப்பமுடைய ஒருவரை, அவர் கல்வி அறிவு கூட சரி செய்வதில்லை. எல்லா தர்மங்களையும், correct-ஆக அனுசரிப்பவருக்குக் கூட, அவருடைய முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பதில்லை… கெட்ட வழியில் செல்பவர்கள், சுகத்தை அனுபவிக்கிறார்கள். ஒருவர் எந்தவித முயற்சியும் எடுக்காமலேயே, அவர்களுக்கு பணம் வந்து சேரலாம். ஒருவர், எவ்வளவு உழைத்தும், உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை…. தவமிருந்து பெற்ற பிள்ளை, நம்முடைய பெயரைக் கெடுக்கும்படி இருக்கலாம்… செல்வம் நிறைய இருப்பவனுக்கு, நோய் வந்து வாட்டலாம். அவனால் நல்ல உணவை சாப்பிட முடியாமல் போய் விடும். ஆரோக்யமாக இருப்பவனுக்கு, நல்ல உணவு கிடைக்காமல் போகலாம்… இவையனைத்துக்கும் ஒரே காரணம்…, முன்வினைப்பயன் தான். முன்பிறவியில் நாம் செய்த வினைகளின் பலனை, இந்தப் பிறவியில் நாம் அனுபவித்தே தீர வேண்டும். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. அதனால் இந்தப் பிறவியில் நன்மைகளை மட்டுமே செய்ய வேண்டும். இந்த நன்மைகள் அடுத்த பிறவியில், நமக்கு நல்ல வாழ்வைக் கொடுக்கும். இப்பிறவியில், முன்வினைப்பயன் காரணமாக வரும் துன்பங்...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 16

கிருஷ்ணர் : சரி..., அடுத்த கதையைப் பார்க்கலாம். கதையென்ன யோசித்திருக்கிறாய்... மேகலா : ‘தர்மவியாதர்’ கதை கிருஷ்ணா... கிருஷ்ணர் : Oh! Super... மேகலா : கௌசிகன் என்ற உத்தம பிராமணன் ஒருவன் இருந்தான். அவன் வேதங்களைக் கரைத்துக் குடித்தவன். நாள்தோறும் வேதங்களை ஓதுவதில் தவறவே மாட்டான். அன்று ஒரு நாள் வேதம் ஓதிக் கொண்டிருந்த போது, மேலே பறந்த கொக்கு ஒன்று எச்சமிட்டது. எச்சம் மேலே பட்டதும், கோபம் கொண்டு கொக்கைப் பார்க்க, அது கோபத்தின் கனல் தாங்க முடியாமல் எரிந்து கீழே விழுந்தது. அதைக் கண்டதும், அவசரப்பட்டு கோபப்பட்டு விட்டோம் என்று வருந்தினான். அன்றைய தின உணவுக்காக, கௌசிகன் பிச்சை வேண்டி, ஒரு பதிவிரதையின் வீட்டின் முன்பு பிச்சை கேட்டு நின்றான். அந்த வீட்டின் தலைவன் அப்பொழுதான் வேலை முடித்து வீட்டிற்கு வந்திருந்தார். அதனால் அந்தப் பெண்மணி,’பிராமணரே, சற்று பொறுங்கள். என் கணவருக்கு பணிவிடை செய்து விட்டு இதோ வருகிறேன்’ என்று சொன்னாள்.... அந்தப் பெண்மணி, கணவனுக்கு பணிவிடை செய்வதுதான் சிறந்த தர்மமாகும்... இதுவே, தெய்வத்திற்கு வழிபாடு செய்வதைக் காட்டிலும் உத்தமமான காரியம் என்ற உறுதி உடை...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 15

கிருஷ்ணர் : சரி…, ‘ஓம்’ என்ற மந்திரத்தின் அர்த்தத்தைப் பார்க்கலாம்… நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன்… மனிதன், பேச முயற்சி செய்யும் போது எழுந்த ஒலி என்னவாக இருக்கும்…. மேகலா : கிருஷ்ணா…, மனிதன், குழந்தையாக பிறந்தவுடன்…, ‘ங்கா’, ‘ங்கா’ என்றுதானே ஒலி எழுப்பி அழுவான்… கிருஷ்ணர் : நான் கேட்டது, குழந்தையின் முதல் சப்தம் என்ன என்று அல்ல… மனிதனாக வளர்ந்த பின்னே, ஏதாவது ஒரு உணர்வை வெளிப்படுத்த முயற்சி செய்வான் இல்லையா… அப்படி முயற்சி செய்யும் போது, எழுப்பும் முதல் ஒலி…, ஓ…, ஓம் என்றுதான் இருக்கும்… இது மனிதனின் உயிர் எழுப்பும் ஒலி… இதை படைத்தல் என்று வைத்துக் கொள்ளலாம்… அடுத்து, ‘ஓம்’ என்ற ஒலி வடிவத்தை, உன் மூச்சை நிறுத்தி ஒழுங்குபடுத்தி சொல்லிப்பார். அது உன் உயிரையும் ஒழுங்குபடுத்தும்… உன் மூச்சை நிறுத்தி சுத்தப்படுத்தவும் செய்யும். அதனால்தான், எந்த மந்திரம் சொல்லும் போதும், ‘ஓம்’ என்ற ஒலியை ஒலிக்கிறோம்… ‘ஓம் நமச்சிவாய’ என்னும் போது, ‘ஓம்’ என்ற மந்திரம், உன் மனதை சுத்தப்படுத்தி, சமநிலையில் வைத்து, ‘நமச்சிவாயம்’ என்று கணீரென்று ஒலிக்க உதவுகிறது… அது இறைவனின் காதில் விழுகிறது… ‘ஓம் நாராயண நமஹ!’,...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 14

கிருஷ்ணர் : என்ன கதை….? மேகலா : ஒரு முறை…, பிரம்மாவுக்கு, தன் படைப்புத் தொழில் மீது, மிகுந்த கர்வம் ஏற்பட்டது. அதனால் எதிரில் வருவது யார் என்பது கூட தெரியாமல், அலட்சியமாக நடந்து கொண்டார். அந்த வழியே, முருகப் பெருமான் வந்தார். பிரம்மாவும், முருகனைக் கண்டு கொள்ளாமல் சென்றார். படைப்புத் தொழிலைச் செய்யும், படைப்புக் கடவுள் பிரம்மா, இப்படி அலட்சியமாகச் செல்கிறாரே என்று கோபமடைந்த முருகன் அவரைத் தடுத்து நிறுத்தினார். பிரம்மாவும், ஒன்றும் புரியாமல், என்ன என்பது மாதிரி ஏறெடுத்துப் பார்த்தார். முருகனும், ‘எதிரில் வருவது யார் என்று கூட கவனிக்காமல் இத்தனை வேகமாக எங்கு செல்கிறீர்கள்? உலகத்தின் மீது உங்கள் பார்வை கொஞ்சம் கூட இல்லாமல், படைப்புத் தொழிலை எப்படிச் செய்வீர்கள்…? மனிதர்களுக்கு, வேதத்தையும், ஞானத்தையும் அறிந்து கொள்ளும் அறிவை எப்படிக் கொடுப்பீர்கள்…? சரி, அதுதான் போகட்டும்…. முதலில், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? தெரிந்தால், அதை விளக்கிச் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று கேட்டார்…. பிரம்மாவோ, ஒரு சிறுவன் நம்மை கேள்வி மேல் கேள்வி கேட்கிறானே என்ற கோபத்தில், சற்று...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 13

மேகலா : அழுக்கேறிய பல் தெரிய சிரித்துக் கொண்டே கேட்ட சண்டாளனின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்த உத்தங்கர் அதிர்ந்து போனார்…. இப்படி ஒரு தோற்றத்தில் ஒரு சண்டாளன் தண்ணீர் கொண்டு வருவான் என்றூ எதிர்பார்க்கவேயில்லை. இது கிருஷ்ணனின் சாகசமேயன்றி வேறு யாரால் இப்படிச் செய்ய முடியும் என்று கோபம் கொண்டார்…. ‘நான் தண்ணீர் கேட்டால்…, இப்படி ஒருவனை நீ அனுப்பலாமா கிருஷ்ணா… தவம் செய்யும் நான், இவனிடம் எப்படி தண்ணீர் வாங்கிக் குடிப்பேன்’ – என்று புலம்பினார்…. அந்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அங்கு வந்து, ‘என்ன உத்தங்கரே! தண்ணீர் வந்ததா…’ – என்று இங்குமங்கும் தேடிப் பார்த்தார்… உத்தங்கர், ‘உனக்கு இது நல்லா இருக்கா கிருஷ்ணா. நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீயோ…, துர்நாற்றம் வீசும், மாமிசத்தைக் கையில் ஏந்திய சண்டாளனையா அனுப்பி வைப்பாய். தவம் புரியும் நான், சண்டாளனிடம் தண்ணீர் எப்படி வாங்கிக் குடிப்பேன்’ – என்று கோபமும், ஆயாசமும் ஒரு சேரப் புலம்பினார்…. ‘என்னது, சண்டாளனா… உம்மிடம் தண்ணீர் தருகிறேன் என்றதும், சாட்சாத் இந்திரனிடம் தான் நான் சொன்னேன்… பாலைவன சஞ்சாரி உத்தங்கர் தண்ணீர் கேட்டால்…, அமிர்தத்தை அவருக்கு...