பேச்சுத்தமிழ் - பாகம் 15
மேகலா : இது ஒட்டுவாரொட்டி கிருஷ்ணா… கிருஷ்ணா…, மேய்ச்சலில் மட்டும் தமிழ் விளையாடல… நீ…, ‘ஏர்தழுவுதல்’ விளையாட்ட விளையாடி இருக்கியா… கிருஷ்ணர் : ஆமாம்…, ‘ஏழு எருதுகளை’ அடக்கிய பின் தான், நப்பின்னய கல்யாணமே செய்திருக்கேன்… மேகலா : எத்தனை வீரச் செயல் இது… எங்க பக்கத்துல, காளையடக்குதல், ஏரு தழுவுதல் என்று தூய தமிழில் பேசுபவர்கள் பக்கத்தில் ‘மாடுபிடி விளையாட்டு’ என்று எங்களைப் போல மக்கள் பேசும் மொழியும் உண்டு. அதிலும், அலங்காநல்லூரில் வீரவிளையாட்டு பார்த்து running commentary சொல்பவர்கள்…, ‘இதோ வாடிப்பட்டி கருப்பன் வந்துட்டான். வாடிவாசல் திறந்ததும், சீறிப் பாஞ்சு வந்துட்டான்… தில்லு இருக்கும் மாடுபிடி இளைஞர்கள்…, கருப்பன் கொம்பைத் தொட்டுப் பாரு… தொட்டுப் பார்ப்பவனுக்கு 500 ரூபா… திமிலைப் பிடித்தால், 1000 ரூபாய்… திமிலைப் பிடித்து கருப்பனை அடக்கிப் பாரு’ என்று சொல்லும் போதே…, இங்கே மாடுபிடி வீரர்களுக்கு…, ‘சும்மா ஜிவ்…வுனு’ ஏறும். கொம்பைப் பிடிச்சி, ‘உருமால’ உருவிட்டா, நண்பர்கள், அவனைத் தூக்கிச் சுமந்து கொண்டாடிருவாங்க… தங்கச் சங்கிலி கழுத்தில் மின்ன, தோளில் வழியும் இரத்தத்த...