கதை கதையாம் காரணமாம் - பாகம் 5
மேகலா : அப்படி நம்பித்தான் கிருஷ்ணா…, மறுபடியும் மறுபடியும் தப்பு செய்து விட்டு, மறுபடியும் கங்கையில் குளிக்க வருகிறார்கள். ’நீ’ கங்கையைப் பார்த்தாயா கிருஷ்ணா… எங்கள் பாவக் கறைகள் சேர்ந்து dark கலராய் இருக்கிறது… அம்மாவின் ஆதங்கமும் அதுதானே.. ’கங்கையில் குளித்து விட்டோம்…, பாவங்கள் தொலைந்தன; இனி பாவம் செய்யாமல் இருப்போம்’ என்று யாரும் நினைப்பதில்லை… குற்றமும் நடக்கும், கங்கையில் குளியலும் நடக்கும்.. இது எப்படித்தான் தீரும் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : மேகலா…., இறையனார் உணர்த்த வருவது இது இல்லை… கங்கையில் குளிப்பதால், பாவம் தொலைந்து விடும் என்பதை நீ நம்ப வேண்டும் என்று…, உனக்குள் இருக்கும் நம்பிக்கையைத் தூண்டுகிறார். நீ ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் போது, என்ன நினைப்பாய்… இந்தக் காரியம் நல்லபடியாய்…, நமக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் சொல்லியபடி செய்து முடிக்க வேண்டும்…, என்று வேண்டிக் கொண்டு…, ‘நம்மால் அது முடியும்’ என்று நம்பிக்கை கொண்டு இறங்குகிறாய். ஒரு பாடத்தைப் படிக்கும் போது, நம் அறிவைத் திறந்து வைத்து, அது நம் மனதில் பதியும் என்று நம்பித்தானே படிக்கிறோம்… ஆறு மாதத்திற்கு முன்புதான் ந...