பேச்சுத்தமிழ் - பாகம் 18 (நிறைவுப் பகுதி)
கிருஷ்ணர் : வாவ்! உங்க அம்மா எவ்வளவு அழகா உங்கள கணிச்சி வச்சிருக்காங்க… Correct-ஆ சொல்லியிருக்காங்களே…. மேகலா : நீ என்னை எப்படினாலும் கலாய்க்கலாம் கிருஷ்ணா… உனக்கு என் மேல் எத்தனை பிரியம் இருந்தா இப்படிச் சொல்லுவ… எங்க அம்மாவுக்கும் எங்க மேல ரொம்பப் பாசம் உண்டு… அவங்க மாதிரிதான் நீயும்… கிருஷ்ணர் : என்னைய உங்க அம்மா மாதிரினு சொல்றயா… சொல்லிட்டுப் போ… ஆனா, பழமொழி ரொம்பப் பொருத்தமானது…. மேகலா : உன்னோட அன்பால், என்னை திக்குமுக்காடச் செய்து விட்டாய் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ‘திக்குமுக்காட’ன்னா என்ன…? மேகலா : சந்தோஷத்துல, திகைப்படையச் செய்தல் கிருஷ்ணா…. சந்தோஷத்தை எப்படிச் சொல்லுவோம் தெரியுமா கிருஷ்ணா… ஆனா, இது பேச்சுத்தமிழ் கிடையாது… ‘திக்குமுக்காட’ன்னு சொன்னதால, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் கிருஷ்ணா… கிருஷ்ணர் : என்னம்மா இது… திடீரென்று சுத்தத்தமிழில் பேசி, என்னை திக்குமுக்காடச் செய்கிறாயா… இந்த சந்தோஷம், கோபம், திட்டு, வாழ்த்து, பெருமை, பாராட்டு…, என்ற ஒவ்வொரு உணர்வுக்கும்…, ‘இயல் தமிழை’ விட…, பேச்சுத்தமிழ், அதன் ...