கதை கதையாம் காரணமாம் - பாகம் 10
மேகலா : அவ்வளவுதான்…. நந்தினி, வலிமையாக நிமிர்ந்து நின்று உறுமியது. ஆயிரக்கணக்கான படை வீரர்களை ஆயுதங்களுடன் உற்பத்தி செய்தது… அந்த வீரர்கள், மன்னனுடனும், அவர் பரிவாரங்களுடனும் போர் செய்யத் தொடங்கினர்…. மன்னனுக்கு எதுவும் தெரியாமல் திகைத்துப் போனான்… பசுவோ, அத்தனை பேரையும் காட்டை விட்டே விரட்டியடித்தது…. அவமானம் தாங்காத கௌசிக மன்னன், இந்த நிகழ்ச்சியை மறக்க முடியாமல், வசிஷ்டரை வென்றே தீருவது…, ’ஒரு காட்டில் வசிக்கும் சன்னியாசிக்கு இத்தனை உறுதியா… வசிஷ்டரும் தவம் செய்து பெற்றதுதான் இந்த வலிமையா… இதை எப்படி முறியடிப்பது…. நாமும் காட்டிற்குச் சென்று தவமிருந்து கடவுளிடம் வரம் பெறுவோம்… அப்புறம் ஒரு கை பார்க்கலாம்…, இந்த வசிஷ்டரை…’ என்று முடிவு செய்து, தன் நாட்டை பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, காட்டிற்குச் சென்று தவம் செய்யப் புறப்பட்டார்…. மன்னன், தன் மனதை ஒருமுகப்படுத்தி, பரம்பொருள் பரமசிவனாரை நினைத்து கடுமையான தவம் மேற்கொண்டார்…. மன்னனுடைய தவத்தால் மனம் மகிழ்ந்த பரமசிவனாரும், மன்னனிடம், ‘கௌசிகா, உன் தவத்தால் மனம் மகிழ்ந்தோம்… நீ வேண்டும் வரம் கேள்’ என்று கேட்டார். மன்னனும், ‘இறைவா, ...