Posts

கதை கதையாம் காரணமாம் - பாகம் 10

மேகலா : அவ்வளவுதான்…. நந்தினி, வலிமையாக நிமிர்ந்து நின்று உறுமியது. ஆயிரக்கணக்கான படை வீரர்களை ஆயுதங்களுடன் உற்பத்தி செய்தது… அந்த வீரர்கள், மன்னனுடனும், அவர் பரிவாரங்களுடனும் போர் செய்யத் தொடங்கினர்…. மன்னனுக்கு எதுவும் தெரியாமல் திகைத்துப் போனான்… பசுவோ, அத்தனை பேரையும் காட்டை விட்டே விரட்டியடித்தது…. அவமானம் தாங்காத கௌசிக மன்னன், இந்த நிகழ்ச்சியை மறக்க முடியாமல், வசிஷ்டரை வென்றே தீருவது…, ’ஒரு காட்டில் வசிக்கும் சன்னியாசிக்கு இத்தனை உறுதியா… வசிஷ்டரும் தவம் செய்து பெற்றதுதான் இந்த வலிமையா… இதை எப்படி முறியடிப்பது…. நாமும் காட்டிற்குச் சென்று தவமிருந்து கடவுளிடம் வரம் பெறுவோம்… அப்புறம் ஒரு கை பார்க்கலாம்…, இந்த வசிஷ்டரை…’ என்று முடிவு செய்து, தன் நாட்டை பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, காட்டிற்குச் சென்று தவம் செய்யப் புறப்பட்டார்…. மன்னன், தன் மனதை ஒருமுகப்படுத்தி, பரம்பொருள் பரமசிவனாரை நினைத்து கடுமையான தவம் மேற்கொண்டார்…. மன்னனுடைய தவத்தால் மனம் மகிழ்ந்த பரமசிவனாரும், மன்னனிடம், ‘கௌசிகா, உன் தவத்தால் மனம் மகிழ்ந்தோம்… நீ வேண்டும் வரம் கேள்’ என்று கேட்டார். மன்னனும், ‘இறைவா, ...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 9

  கிருஷ்ணர் : சரி…., அடுத்த கதை….? மேகலா : ‘பிரம்ம ரிஷி’ என்றால் என்ன கிருஷ்ணா….? ஏதாவது பதவியா கிருஷ்ணா….? கிருஷ்ணர் : யார் சொன்னது? ஒருவர்…, தன் முயற்சியினாலும், தவத்தாலும், தன் மனதை ஒருமுகப்படுத்தி, புலன்களை அடக்கி…, உணவு, உடை, உறவு என்ற எந்த ஆசையும் இல்லாமல், இறைவனின் நாமத்தை ஜெபித்துக் கொண்டு, தன் குணங்களை மென்மையாக்கி…, எல்லா மக்களையும், உயிர்களையும் ஒரே சமமாகப் பாவித்து, பிறர் நன்மையையே, தன் கருத்தாகக் கொண்டு, தன் வாழ்க்கையை பிறருக்காகவே வாழ்வது…, என்று தன்னை உயர்ந்த தகுதியுடையவராக்கியவர்தான் ‘பிரம்ம ரிஷி’… உலகப் பற்றைத் துறந்த மகரிஷி, மூன்று காலங்களையும் அறிந்தவர்கள் ஆவார்கள். தெய்வ குணங்கள் நிறைந்த இவர்கள் நினைத்தாலே போதும், கடவுள் இறங்கி வருவார்… ஆமாம்…, ஏன் இந்தக் கேள்வி…? விசுவாமித்திரர் கதையைச் சொல்லப் போகிறாயா….? மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. விசுவாமித்திரர், பிரம்ம ரிஷி ஆன கதையைச் சொல்லப் போகிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : Very good… சொல்…, கேட்க ஆவலாக இருக்கிறேன்…. மேகலா : கௌசிக நாட்டின் மன்னன், ‘கௌசிகன்’… தன் நாட்டை நீதிநெறி தவறாமல் ஆண்டு வந்தான்… ஒரு முறை…, மன்னன் த...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 8

மேகலா : கிருஷ்ணா…, மனிதன் பிறந்த நாளிலிருந்து, above the power ஆகத்தான் கடவுளைப் பார்ப்பதாக நான் நினைக்கிறேன். இந்தக் கதையில், பஸ்மாசுரன், ‘கடவுள்’ என்பதை ஒரு பதவியாகப் பார்க்கிறான்… எப்படி அவனால் இப்படி பார்க்க முடிகிறது… கிருஷ்ணர் : நீ வேற…, இப்போ…, இங்க உங்களில் நிறையப் பேர்…, ஏன் 95% மக்கள், கடவுளை வியாபாரியாகப் பார்க்கவில்லையா… அவர்கள் தெரிந்தா பேசுகிறார்கள்… முழுக்க முழுக்க கடவுளிடம், ‘நாம் கேட்டால் கொடுப்பார்…, பதிலுக்கு நாம கடவுளுக்கு ஏதாவது கொடுத்திரலாம்’ என்றுதானே நினைக்கிறார்கள்… அந்த ரகம் தான் பஸ்மாசுரனும்… இங்கு இருப்பவர்கள் நினைக்கவில்லையா… கொஞ்சம் அசந்தால், கடவுளையே உண்டு இல்லை என்று பார்ப்பதில்லையா… கடவுளிடம் challenge விடுவதென்றால், மனுஷர்களுக்கு ரொம்ப பிடிக்கும். எப்போ கடவுள் ’அசருவார்’ என்று காத்திருப்பார்கள்…. கடவுளின் பதவியை காலி பண்ண நினைத்த பஸ்மாசுரனின் ‘mind voice’, அவனுக்கே கேட்குமோ என்னவோ தெரியாது… கடவுளுக்கு துல்லியமாகக் கேட்டு விடும்… அவன் பாட்டுக்கு அடுத்தடுத்த வேலைகளில் இறங்க வேண்டியதுதான். ஆனால் கடவுளோ, ஆரம்பம் முதலே வலையை விரிக்கத் தயாராகி விடுவார். அத...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 7

கிருஷ்ணர் : சரி…., அடுத்த கதை என்ன….? மேகலா : ‘பஸ்மாசுரன்’ கதை கிருஷ்ணா… கிருஷ்ணர் : சரி…, சொல்லு… மேகலா : பஸ்மாசுரனுக்கு ஒரு விபரீத ஆசை வருகிறது… ‘கடவுள்’ என்பது ஒரு பதவி என்று நினைத்து விட்டான் போல… அதற்கு, எம்பெருமானைக் காலி பண்ணி விட்டால், தான் கடவுளாகி விடலாம் என்று கணக்குப் போடுகிறான்… ஆனால், அதற்கு நாம் எப்படி கடவுளாவது… கடவுளை எப்படி வரவழைப்பது… தன் மனதில் ஒளிந்திருக்கும் வக்கிரமத்தை வெளிக்காட்டாமல், எப்படி கடவுளைப் போட்டுத் தள்ளுவது என்று பலவாறாக யோசிக்கிறான்… அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது…. முனிவர்களும், மகரிஷிகளும் தவம் செய்து கடவுளிடம் வரம் பெறுகிறார்கள் என்பதை நினைத்தவுடன், தானும் தவமிருந்து கடவுளை வரவழைப்போம் என்று யோசிக்கிறான். அதற்காக, தன்னைச் சுற்றி நெருப்பை உண்டாக்கி, நெருப்பு வளையத்திற்குள் நின்று கடுமையாக தவம் செய்யத் தொடங்கினான். வெய்யில் என்று பார்க்கவில்லை…; அடாத மழையென்றும் துவளவில்லை… கடும் குளிரையும் பொருட்படுத்தவில்லை. தன் மனதை ஒருமுகப்படுத்தி, எம்பெருமானை நோக்கி, கடுமையாக தவம் புரிந்தான். எம்பெருமானும் பஸ்மாசுரனின் தவத்தில் மகிழ்ந்து, அவன் எதிரில் தோன்றின...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 6

மேகலா : கிருஷ்ணா…, முதலில், மகாபாரதம் எழுத ஆரம்பிக்கும் முன்…, இதை இப்படித்தான் எழுத வேண்டும்…, அதுவும் இன்ன காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று வியாசர் நினைத்தாரே…, அதுவே மிகப் பெரிய செயலாக நினைக்கிறேன் கிருஷ்ணா… ஒரு இதிகாசத்தை எழுத ஆரம்பிக்கும் முன்…, அத்தனை சம்பவங்களையும் மனசுக்குள் வரிசைப்படுத்தி யோசிக்கும் போது…, எத்தனை நாளில் முடியும் என்பதை கணிக்க முடியாதில்லையா… அப்படிப்பட்ட இதிகாசத்தை உரிய காலத்துக்குள் முடிக்கணும் என்று நினைப்பதே, அவருடைய ’கர்ம யோகத்திற்கு’, அடிப்படை சாட்சியாகும்… பின்ன எதற்கு தயக்கமும், குழப்பமும்… கிருஷ்ணர் : மேகலா…, உனக்கு நல்லா தெரியும்… வியாசர், மகாபாரதத்தில், ஒரு கதாபாத்திரமுமாக உலா வருவார்… ஆரம்பத்தில் இருந்து, குருக்ஷேத்திரப் போர் முடிந்த பின்னும் கூட, அங்கு நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவர். ஒரு காட்சியும் தப்பாது… இண்டு இடுக்கு கூட விடாமல் எழுதத் தயாராகி விட்டார். நேரில் கண்ட சம்பவங்கள் என்பதால், காட்சிகள் அவருக்குள் பாடல்களாக ஊற்றெடுக்கிறது… என்ன செய்வார்…. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும், ஒவ்வொரு தர்மத்தை எடுத்துரைக்கிறது…, எதையும் விட முடியாது… அனைத்த...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 5

மேகலா : அப்படி நம்பித்தான் கிருஷ்ணா…, மறுபடியும் மறுபடியும் தப்பு செய்து விட்டு, மறுபடியும் கங்கையில் குளிக்க வருகிறார்கள். ’நீ’ கங்கையைப் பார்த்தாயா கிருஷ்ணா… எங்கள் பாவக் கறைகள் சேர்ந்து dark கலராய் இருக்கிறது… அம்மாவின் ஆதங்கமும் அதுதானே.. ’கங்கையில் குளித்து விட்டோம்…, பாவங்கள் தொலைந்தன; இனி பாவம் செய்யாமல் இருப்போம்’ என்று யாரும் நினைப்பதில்லை… குற்றமும் நடக்கும், கங்கையில் குளியலும் நடக்கும்.. இது எப்படித்தான் தீரும் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : மேகலா…., இறையனார் உணர்த்த வருவது இது இல்லை… கங்கையில் குளிப்பதால், பாவம் தொலைந்து விடும் என்பதை நீ நம்ப வேண்டும் என்று…, உனக்குள் இருக்கும் நம்பிக்கையைத் தூண்டுகிறார். நீ ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் போது, என்ன நினைப்பாய்… இந்தக் காரியம் நல்லபடியாய்…, நமக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் சொல்லியபடி செய்து முடிக்க வேண்டும்…, என்று வேண்டிக் கொண்டு…, ‘நம்மால் அது முடியும்’ என்று நம்பிக்கை கொண்டு இறங்குகிறாய். ஒரு பாடத்தைப் படிக்கும் போது, நம் அறிவைத் திறந்து வைத்து, அது நம் மனதில் பதியும் என்று நம்பித்தானே படிக்கிறோம்… ஆறு மாதத்திற்கு முன்புதான் ந...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 4

மேகலா   : கிருஷ்ணா…, இதுவும், பார்வதி பரமேசுவரனார், உலகிற்கு ‘நம்பிக்கை’ எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நடத்திய நாடகம் தான் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! இந்தக் கதையா…, அற்புதம்…; சொல்லு… மேகலா  : ஒரு முறை, பார்வதி தேவி, பரமேசுவரனாரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்கிறார். ‘ஐயனே, மக்கள், கங்கையில் குளித்தால், தங்கள் பாவத்தைத் தொலைத்து புண்ணியம் அடைவார்கள் என்று ஒரு நம்பிக்கையை சொல்கிறார்கள்… நானும் பார்க்கிறேன்…, தினந்தோறும், கங்கையில் நீராட வருபவர்கள் ஏராளம் பேர்… வருகிறார்கள், குளிக்கிறார்கள், செல்கிறார்கள். ஆனால், பாவங்கள் தொலைந்ததாகத் தெரியவில்லையே…  ஒரு பக்கம் கங்கையில் குளிக்கிறார்கள்…, மறு பக்கம் குற்றங்களும் பெருகிக் கொண்டே போகின்றன…  மக்களுக்கு கங்கையின் மேல் நம்பிக்கையில்லையா…, இல்லை…, கங்கைக்கு புண்ணியம் வற்றிப் போய் விட்டதா…’ என்று ஆதங்கத்துடன் கேட்கிறார். சர்வேஸ்வரனும், ‘உமாதேவி, இந்தக் கேள்விக்கு பதிலை, நாம் உலகுக்குச் சொல்லியே ஆக வேண்டும்… நாமும் நாடகம் நடித்து பல நாட்கள் ஆகி விட்டதல்லவா… கங்கை நதி தீரத்துக்கே செல்வோம்… நான் வயதானவனாக, பேரழகியான உன் கையை...