கதை கதையாம் காரணமாம் - பாகம் 11
கிருஷ்ணர் : விசுவாமித்திரரின் கதையில் இருந்து நீ என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறாய்? மேகலா : கிருஷ்ணா…, புனிதமான வேதங்களை உச்சரிக்கும் முனிவர்களைக் கண்டு, ஒரு மன்னனுக்கு பக்தியும், பணிவும் வருமென்றுதான் நாம் படித்திருக்கிறோம். தெய்வீக தேஜஸுடன் விளங்கும் வசிஷ்டரைப் பார்த்து, கௌசிக மன்னனுக்கு பொறாமை வருவதாகக் கூறப்பட்டிருக்கிறதே…. இது எப்படி கிருஷ்ணா…. கிருஷ்ணர் : இது…, பொறாமை என்று சொல்ல முடியாது… கேட்பதையெல்லாம் கொடுக்கும் காமதேனுப்பசு…, ஒரு சன்யாசிக்கு எதற்கு? நம் நாட்டிற்கு அழைத்துச் சென்றால், நாட்டு மக்களுக்கு பசுவிடமிருந்தே கேட்டுப் பெற்றுக் கொடுக்கலாமே…, என்று யோசிக்கிறான். எந்த மதிப்பு வாய்ந்த பொருட்களும்…, அரசனுக்குத்தான் சொந்தம் என்ற கர்வத்தினாலும்…, ‘முனிவர்’தானே…, அவரிடம் என்ன பலம் இருக்க முடியும் என்ற அலட்சியத்தினாலும் வந்த விளைவு…. என்ன இருந்தாலும்…., அவன் ஒரு நாட்டின் மன்னன் தானே… அவனுக்கு மஹரிஷிகளின் ‘வலிமை’ பற்றித் தெரியாது… சாபம் கொடுத்து விடுவாரோ என்ற பயமாவது இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் மீறி…, தன் பலத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை…. மேகலா : கிருஷ்ணா…., ஒரு மன்னன...