Posts

பேச்சுத்தமிழ் - பாகம் 16

கிருஷ்ணர்  : அப்படியென்ன அந்த பால்காரர் சொன்னார்… மேகலா  : ‘பால்கோவா கிண்டப் போறேன்னு நேத்தே சொல்லியிருக்கலாம்ல; நான் வேற பால் கொண்டு வந்திருப்பேன்ல’ – என்று சொன்னாரே பார்க்கலாம்… கிருஷ்ணர்  : ஏன்? பாலில் வேற வேற quality இருக்கா… மேகலா  : அதுதான் எனக்கும் ஆச்சர்யமாப் போச்சு… ஒரு லிட்டர் பாலுக்கு 200 gm பால்கோவா வரணும்… நான் வாங்குன பாலுக்கு 300 gm பால்கோவா வந்தே தீரணும். அது அவர் கொண்டு வரும் special பால்லதான் 300 gm பால்கோவா… நான் வாங்கினது, தண்ணி கலந்த பால்… 150 gm பால்கோவாதான் கிடைத்தது…. கிருஷ்ணர்  : ஹேங்! தண்ணி கலந்த பாலா…. இப்படீலாமா குடுப்பாங்க…  நாங்கல்லாம், மாட்டுக் காம்புலயிருந்து, எங்க வாயில அப்படியே பீச்சிக் குடிப்போம்.. . சரி…, இதுல எங்க எச்சரிக்கையா நடந்த…. மேகலா  : அவர் சொன்னத வச்சி கண்டுபிடிச்சிட்டேன்ல…. அதற்கு அடுத்த வருஷத்துல இருந்து, ஆரோக்யா பால் மட்டும் தான், பால்கோவா கிண்ட வாங்குவேன்… கிருஷ்ணர்  : அப்போ, ஒரு தடவை ஏமாந்துருவீங்க… மேகலா  : ஆம், அது அப்படித்தான்…  Customers-ம், வியாபாரிகளும், ‘Tom & Jerry’ மாதிரி தா...

பேச்சுத்தமிழ் - பாகம் 15

மேகலா  : இது ஒட்டுவாரொட்டி கிருஷ்ணா… கிருஷ்ணா…, மேய்ச்சலில் மட்டும் தமிழ் விளையாடல… நீ…, ‘ஏர்தழுவுதல்’ விளையாட்ட விளையாடி இருக்கியா… கிருஷ்ணர்  : ஆமாம்…, ‘ஏழு எருதுகளை’ அடக்கிய பின் தான், நப்பின்னய கல்யாணமே செய்திருக்கேன்… மேகலா  : எத்தனை வீரச் செயல் இது… எங்க பக்கத்துல, காளையடக்குதல், ஏரு தழுவுதல் என்று தூய தமிழில் பேசுபவர்கள் பக்கத்தில் ‘மாடுபிடி விளையாட்டு’ என்று எங்களைப் போல மக்கள் பேசும் மொழியும் உண்டு. அதிலும், அலங்காநல்லூரில் வீரவிளையாட்டு பார்த்து running commentary சொல்பவர்கள்…, ‘இதோ வாடிப்பட்டி கருப்பன் வந்துட்டான். வாடிவாசல் திறந்ததும், சீறிப் பாஞ்சு வந்துட்டான்… தில்லு இருக்கும் மாடுபிடி இளைஞர்கள்…, கருப்பன் கொம்பைத் தொட்டுப் பாரு… தொட்டுப் பார்ப்பவனுக்கு 500 ரூபா… திமிலைப் பிடித்தால், 1000 ரூபாய்… திமிலைப் பிடித்து கருப்பனை அடக்கிப் பாரு’ என்று சொல்லும் போதே…, இங்கே மாடுபிடி வீரர்களுக்கு…, ‘சும்மா ஜிவ்…வுனு’ ஏறும். கொம்பைப் பிடிச்சி, ‘உருமால’ உருவிட்டா, நண்பர்கள், அவனைத் தூக்கிச் சுமந்து கொண்டாடிருவாங்க… தங்கச் சங்கிலி கழுத்தில் மின்ன, தோளில் வழியும் இரத்தத்த...

பேச்சுத்தமிழ் - பாகம் 14

கிருஷ்ணர்  : கடைகளில், எல்லாப் பொருட்களுமே, மொத்தமாய் குவிக்கப்பட்டுத்தானே இருக்கும்… ’மொத்தக்கடை’னா என்ன….? மேகலா  : சாதாரண பலசரக்குக் கடைகளில், 1 கிலோ அரிசி, 2 கிலோ அரிசி அப்படீன்னு ‘loose’-ல நாம வாங்குறோம்… இதுக்குத் தனி rate… மொத்தக்கடைங்கிறது, wholesale’ வியாபாரம். அதில் குறைந்தபட்சம் 10 kg bag அரிசியாவது வாங்கணும்… இது கட்டாயம் rate கம்மியாக இருக்கும்…. நிறையப் பேரு, அரிசி, உளுந்து, துவரம்பருப்பு முதலான அன்றாடத் தேவைப் பொருட்களை மொத்தக்கடையில்தான் வாங்குவாங்க.., சேமிப்புக்காக. ‘அரிசிமண்டி’யில, பல ஊரு, பல brand அரிசி பார்த்து வாங்கலாம். இப்படி, ‘மண்டி’ அப்படீங்கிற மொத்தக்கடைகள் எல்லா ஊருலயும், குறிப்பிட்ட இடங்களில் இருக்கும். இதுக்கு எப்பவும் நம்பிக்கையான வாடிக்கையாளர்கள்…, முக்கியமா, சில்லறை வியாபாரிகள் கூட, customers ஆக உண்டு… எண்ணெய், வெள்ளைப்பூண்டு, இப்படி regular ஆக பயன்படும் பொருட்கள், மலிவு விலை brand-லிருந்து, first quality brand வரைக்கும், இந்த மண்டியில் கிடைக்கும்… சந்தைகளில் இருக்கும் கடைகளில் நடப்பது, ‘சில்லறை வியாபாரம்’… Wholesale-க்கும் சில்லறைக்கும் rate-ல்...

பேச்சுத்தமிழ் - பாகம் 13

மேகலா   : கிருஷ்ணா…., இன்னைக்கு நீ கொடுக்கும் பதிலெல்லாம் சூப்பர் counter கிருஷ்ணா…. ச்சும்மா இடது கையால மலையப் புரட்டுற வேலையைச் செய்திருக்கிற கிருஷ்ணா… இதப் பார்ரா…, கோவர்த்தனமலையைச் சுண்டு விரலால தாங்கிப் புடிச்சவன் நீ… இந்த மலையப் புரட்டுற வேலையெல்லாம் உனக்கு ஜுஜுபி… உனக்குப் போயி உதாரணம் காட்டுறேனே… உதாரணத்தையும், உதாரணம் காட்டுறவங்களையும் jolly-யா deal பண்ற ஆளு நீ… கிருஷ்ணர்  : ‘ கடப்பாரையவே தூக்க முடியாதவன், மலையப் புரட்ட முடியுமா ’… போங்க boss…, என்னைக் கலாய்க்காதீங்க… மேகலா  : ஐயோ…, உன் கன்னத்தைக் கிள்ளி திருஷ்டி கழிக்கணும் கிருஷ்ணா… நீ பேசும் பேச்செல்லாம் ‘பன்ச் டயலாக்’… ஆஹா…. கிருஷ்ணா…,  நாங்கெல்லாம் ‘குண்டக்க மண்டக்கன்னு பேசுவோம்’…, குத்து மதிப்பா அர்த்தம் புரிஞ்சிக்குவோம்… தத்துப்பித்துன்னு உளறுவோம்… சம்பந்தப்பட்டவங்க வந்து ரெண்டு வப்பு வச்சா, ‘குய்யோ முறையோன்னு’ புலம்புவோம்…. கிருஷ்ணர்  : ஆமா…, நீ என்ன…, ஆசிரியப்பா…, வெண்பா என்ற இலக்கணங்களை வைத்து செய்யுளா எழுதுற… குத்து மதிப்பு, குண்டக்க மண்டக்க, தத்து பித்துன்னு rhiming-ஆ பேசுற… மேகலா  : இல்...

பேச்சுத்தமிழ் - பாகம் 12

மேகலா  :  ‘எலி ஏன் அம்மணமா ஓடுது’…. கிருஷ்ணர்  : ‘ஹேங்’…. என்கிட்ட கேட்டால்…. ஓ! இது பழமொழியா… மேகலா  : கிருஷ்ணா…, யாராவது நம்மகிட்ட வந்து தேவையில்லாம ‘காகா’ பிடிக்கிறாங்கன்னு வச்சிக்கோ… கிருஷ்ணர்  : அதுக்கு…. மேகலா  : எலி வீட்டுக்குள்ள, நமக்குத் தெரியுற மாதிரி ஓடுமா…. விளக்கு அணைஞ்சா பிறகு, திருட்டுத்தனமா ஓடுமா… எலி, open statement மாதிரி கண்ணு முன்னே ஓடுனா… கிருஷ்ணர்  : ஓ! அதுதான் அம்மணமா ஓடுறதா…. மேகலா  : ‘ நுணலும் தன் வாயால் கெட்டுப் போகும் ’… கிருஷ்ணர்  : இதுக்கும் பழமொழியா… மேகலா  : இங்கு எல்லா உணர்வுகளுக்கும் பழமொழி உண்டு… வேண்டுபவர்கள் வந்து அள்ளிக் கொள்ளலாம்… கிருஷ்ணர்  : மக்களே! வாங்க! வாங்க! வந்து எங்கள் தமிழைப் பேசுங்க…, பேசுங்க… ஆமாம், போகிற போக்கில, ஏதோ ‘காகா’ பிடிக்கும் வேலைன்னு சொன்னாயே…, அது என்ன…? மேகலா  : ஒரு ஆளிடம் காரியம் சாதிக்கணும்னு காலைப் பிடிக்கும் போது போடும் build-up…., அதைத்தான்…, என்னமா ‘மஸ்கா’ அடிக்கிறான்…, ‘காகா பிடிக்கிறான்’பாங்க… கிருஷ்ணர் :  புதுப்புது மொழியா பேசுறயோ… மேகலா  : புதுமொ...

பேச்சுத்தமிழ் - பாகம் 11

கிருஷ்ணர்   : பன்னிரு மாதங்களில், இது (தை மாதம்) பொற்காலம் மேகலா… வாழ்க்கையை நாமும் வாழ்கிறோம்…, என்று ஏதோ போற போக்குல சொல்லிட்டுப் போகல… அத்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தவன் கூறிய அர்த்தமுள்ள ஆழமான பழமொழி மேகலா…   சாதாரணமான மனுஷன் பேச்சுத் தமிழிலேயே, தர்ம சாஸ்திரமே படைச்சிட்டாங்க… மேகலா  : கிருஷ்ணா…, உன்னிடம் ஒரு ‘மூன்று முடிச்சு’ வசனம் சொல்லணும் கிருஷ்ணா கிருஷ்ணர்  : அதுக்கு எதுக்கு இத்தனை பம்முற…. மேகலா :  இல்ல கிருஷ்ணா…, பழமொழி பேசும் போது, புதுமொழி சொல்லலாமா என்று யோசித்தேன்… கிருஷ்ணர்  : என்ன புதுமொழி…. மேகலா  : Heroine ரொம்ப கஷ்டப்படுறா… அவ கஷ்டத்தை, hero, friend கிட்ட சொல்றான். சொல்லிட்டு…, ‘இந்தப் பொண்ணு என் கிட்ட, பிரச்னையை சொல்ல மாட்டேங்கிறா…, ஏன்னு தெரியல’ – அப்படீங்கிறான். அதுக்கு அவன் friend சொல்றதுதான் புதுமொழி…  ‘கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருந்தா,  எதன்னு இவ சொல்லுவா- அப்படீன்னு வசனம் வருது கிருஷ்ணா… நான், அலுத்துப் போய் படுத்திருந்தவா…, அசந்து போனேன். உடனே எந்திரிச்சி, உன் கிட்ட சொல்றதுக்காக…, நோட்டுல குறிச்சி வச்சேன் க...