பேச்சுத்தமிழ் - பாகம் 11
கிருஷ்ணர் : பன்னிரு மாதங்களில், இது (தை மாதம்) பொற்காலம் மேகலா… வாழ்க்கையை நாமும் வாழ்கிறோம்…, என்று ஏதோ போற போக்குல சொல்லிட்டுப் போகல… அத்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தவன் கூறிய அர்த்தமுள்ள ஆழமான பழமொழி மேகலா… சாதாரணமான மனுஷன் பேச்சுத் தமிழிலேயே, தர்ம சாஸ்திரமே படைச்சிட்டாங்க… மேகலா : கிருஷ்ணா…, உன்னிடம் ஒரு ‘மூன்று முடிச்சு’ வசனம் சொல்லணும் கிருஷ்ணா கிருஷ்ணர் : அதுக்கு எதுக்கு இத்தனை பம்முற…. மேகலா : இல்ல கிருஷ்ணா…, பழமொழி பேசும் போது, புதுமொழி சொல்லலாமா என்று யோசித்தேன்… கிருஷ்ணர் : என்ன புதுமொழி…. மேகலா : Heroine ரொம்ப கஷ்டப்படுறா… அவ கஷ்டத்தை, hero, friend கிட்ட சொல்றான். சொல்லிட்டு…, ‘இந்தப் பொண்ணு என் கிட்ட, பிரச்னையை சொல்ல மாட்டேங்கிறா…, ஏன்னு தெரியல’ – அப்படீங்கிறான். அதுக்கு அவன் friend சொல்றதுதான் புதுமொழி… ‘கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருந்தா, எதன்னு இவ சொல்லுவா- அப்படீன்னு வசனம் வருது கிருஷ்ணா… நான், அலுத்துப் போய் படுத்திருந்தவா…, அசந்து போனேன். உடனே எந்திரிச்சி, உன் கிட்ட சொல்றதுக்காக…, நோட்டுல குறிச்சி வச்சேன் க...