கதை கதையாம் காரணமாம் - பாகம் 14
கிருஷ்ணர் : என்ன கதை….? மேகலா : ஒரு முறை…, பிரம்மாவுக்கு, தன் படைப்புத் தொழில் மீது, மிகுந்த கர்வம் ஏற்பட்டது. அதனால் எதிரில் வருவது யார் என்பது கூட தெரியாமல், அலட்சியமாக நடந்து கொண்டார். அந்த வழியே, முருகப் பெருமான் வந்தார். பிரம்மாவும், முருகனைக் கண்டு கொள்ளாமல் சென்றார். படைப்புத் தொழிலைச் செய்யும், படைப்புக் கடவுள் பிரம்மா, இப்படி அலட்சியமாகச் செல்கிறாரே என்று கோபமடைந்த முருகன் அவரைத் தடுத்து நிறுத்தினார். பிரம்மாவும், ஒன்றும் புரியாமல், என்ன என்பது மாதிரி ஏறெடுத்துப் பார்த்தார். முருகனும், ‘எதிரில் வருவது யார் என்று கூட கவனிக்காமல் இத்தனை வேகமாக எங்கு செல்கிறீர்கள்? உலகத்தின் மீது உங்கள் பார்வை கொஞ்சம் கூட இல்லாமல், படைப்புத் தொழிலை எப்படிச் செய்வீர்கள்…? மனிதர்களுக்கு, வேதத்தையும், ஞானத்தையும் அறிந்து கொள்ளும் அறிவை எப்படிக் கொடுப்பீர்கள்…? சரி, அதுதான் போகட்டும்…. முதலில், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? தெரிந்தால், அதை விளக்கிச் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று கேட்டார்…. பிரம்மாவோ, ஒரு சிறுவன் நம்மை கேள்வி மேல் கேள்வி கேட்கிறானே என்ற கோபத்தில், சற்று...