கதை கதையாம் காரணமாம் - பாகம் 9
கிருஷ்ணர் : சரி…., அடுத்த கதை….? மேகலா : ‘பிரம்ம ரிஷி’ என்றால் என்ன கிருஷ்ணா….? ஏதாவது பதவியா கிருஷ்ணா….? கிருஷ்ணர் : யார் சொன்னது? ஒருவர்…, தன் முயற்சியினாலும், தவத்தாலும், தன் மனதை ஒருமுகப்படுத்தி, புலன்களை அடக்கி…, உணவு, உடை, உறவு என்ற எந்த ஆசையும் இல்லாமல், இறைவனின் நாமத்தை ஜெபித்துக் கொண்டு, தன் குணங்களை மென்மையாக்கி…, எல்லா மக்களையும், உயிர்களையும் ஒரே சமமாகப் பாவித்து, பிறர் நன்மையையே, தன் கருத்தாகக் கொண்டு, தன் வாழ்க்கையை பிறருக்காகவே வாழ்வது…, என்று தன்னை உயர்ந்த தகுதியுடையவராக்கியவர்தான் ‘பிரம்ம ரிஷி’… உலகப் பற்றைத் துறந்த மகரிஷி, மூன்று காலங்களையும் அறிந்தவர்கள் ஆவார்கள். தெய்வ குணங்கள் நிறைந்த இவர்கள் நினைத்தாலே போதும், கடவுள் இறங்கி வருவார்… ஆமாம்…, ஏன் இந்தக் கேள்வி…? விசுவாமித்திரர் கதையைச் சொல்லப் போகிறாயா….? மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. விசுவாமித்திரர், பிரம்ம ரிஷி ஆன கதையைச் சொல்லப் போகிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : Very good… சொல்…, கேட்க ஆவலாக இருக்கிறேன்…. மேகலா : கௌசிக நாட்டின் மன்னன், ‘கௌசிகன்’… தன் நாட்டை நீதிநெறி தவறாமல் ஆண்டு வந்தான்… ஒரு முறை…, மன்னன் த...