பேச்சுத்தமிழ் - பாகம் 9
மேகலா : இன்னொரு குசும்பு கிருஷ்ணா…. பெரிய தப்பு பண்ணிட்டு வந்திருப்பான். வீட்டுல enquiry நடக்கும். கையும் களவுமா பிடிபட்டு, என்ன செய்யிறதுன்னு தெரியாம முழிப்பான். அப்போ அம்மா சொல்லுவாங்க, ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு திருதிருன்னு முழிக்கிறான் பாரு’ … அப்படீன்னு அடிக்க கைய ஓங்குவாங்க… கிருஷ்ணர் : அடேங்கப்பா…, எனக்கு எதுவுமே தெரியாதுங்கிற மாதிரி முழிக்கிறதுல, ‘டாக்டரேட்’டே வாங்கிருவோம்ல… மேகலா : அதான…, நீயும் அப்படித்தானா கிருஷ்ணா… தயிர்ப்பானையை உருட்டி, வெண்ணெய் தாழிய உடைச்சி…, அம்மாகிட்ட பிடிபட்டவுடன், ‘இந்தப்பூனையும் பால் குடிக்குமான்னு’ முழிச்சிக்கிட்டு நிக்குறுதுல…, கிருஷ்ணனுக்கு ‘டாக்டர்’ பட்டமே கொடுக்கலாம்… கிருஷ்ணா…, கிருஷ்ணர் : சரி.., சரி…, அடுத்த point-க்குப் போகலாம்… மேகலா : இன்னொரு அப்ராணியான கூக்குரல் நீ கேட்டிருக்கயா கிருஷ்ணா… கிருஷ்ணர் : அதென்ன ‘அப்ராணி’… மேகலா : குரங்கு மாதிரி சேட்டை பண்ணினா…, ‘பிராணி மாதிரி’… சேட்டை செய்யத் தெரியாம சாதுவா இருப்பவன், ‘அப்ராணி’ கிருஷ்ணர் : Oh! சரி.., சரி…, அப்ராணியின் கூக...