கதை கதையாம் காரணமாம் - பாகம் 3
கிருஷ்ணர் : அறிவு என்பது இருவகைப்படும் என்பதை நீ நம்புகிறாயா…. மேகலா : இருவகையா… எனக்குப் புரியல கிருஷ்ணா…. கல்வியின் மூலம் பெறப்படுவதுதானே அறிவு…, கிருஷ்ணா…. கிருஷ்ணர் : அப்போ…, உன் தாய் தந்தை மூலம் கற்றுக் கொண்டது அறிவு இல்லையா… மேகலா : ஓ…, ஆமாம்… குழந்தையின் முதல் teacher-ஏ அம்மாதான்… இப்ப புரியுது கிருஷ்ணா… அம்மா, அப்பா கற்றுக் கொடுக்கும் அறிவு ஒன்று… அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ளும் அறிவு இன்னொண்ணு…. கிருஷ்ணர் : இதை விளக்கத்தான் அம்மையப்பன் நாடகமே நடத்துகிறார்…. இடையிடையே தத்துவங்களையும் அள்ளி வீசுகிறார்… பிள்ளையார் என்ன கேட்கிறார்… ‘உலகம் என்றால் என்ன…, அம்மையப்பன் என்றால் என்ன’ – முதன்முதலில் குழந்தையின் கண்ணுக்கு அம்மாதான் எல்லாமாகத் தெரியும். அவள் ’பந்தை’க் காட்டி…, ‘பந்தைப் பிடி’…, ‘ஓடுது பார்’ – என்று சொல்லுவாள். குழந்தை ஓடிப் போய் பிடிக்கும்… ‘காகா கத்துது’, ‘குருவி பறக்குது’, ‘நாய் வாலை ஆட்டுது’ – என்று சொல்லச் சொல்ல, ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாய் கவனிக்கிறது…; பாடம் கற்றுக் கொள்கிறது… அம்மாவும், அப்பாவும் தான், குழந்தையின்...