பேச்சுத்தமிழ் - பாகம் 10
மேகலா : நீ சொல்றது ரொம்ப correct கிருஷ்ணா… ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்துல ஏறி வைகுந்தம் காட்டினானாம்’ – அப்படீங்கிற பழமொழிய, சர்வ சாதாரணமா…, பள்ளிக்கூடம் போய் பட்டம் வாங்காதவன் கூட சொல்லுவான்… ஆனா, இதில் special என்னன்னா, ’யாரை’ எப்படி எடக்கா பேசுறாங்கன்னு, கேக்குறவன் கப்புனு புரிஞ்சிக்குவான்… ‘யாரு’…, ‘இவனா’…, இவனுக்கு அடுத்த தெரு கூட தெரியாதே. இவன் ‘காசி’க்குப் போனானாமா … யார் காதுல பூ சுத்துறாங்க…. கிருஷ்ணர் : காதுல பூ சுத்துறதுனா என்ன…? மேகலா : ஒரு ஆளு காது குடுத்து கேட்டா, இஷ்டத்துகு reel வுடுறது… நான் அங்க போனேன்…, இங்க போனேன்…, இதை சாதிச்சேன்…, அதப் புடிச்சேன் – அப்படீன்னு…, காதுல ரத்தம் வர்ற அளவுக்கு…, முழம் முழமா அளந்து விடுறது…. கிருஷ்ணர் : முழம் முழமா அளக்கிறதா…. யப்பா…, வுட்டா, இதுக்கு தனி இலக்கியமே போடுவ போலயே… ஏன் மேகலா…., இந்த மாதிரி பழமொழியாகட்டும்.., நடைமுறை மொழியாகட்டும்…, எப்படி உருவாகுது…. மேகலா : கிருஷ்ணா…, இப்போ, நம்ம ரெண்டு பேரும் பேசும் போது…, கிண்டலாகப் பேசுவது, ரொம்ப பிடித்தமான இயல்பான...