கதை கதையாம் காரணமாம் - பாகம் 8
மேகலா : கிருஷ்ணா…, மனிதன் பிறந்த நாளிலிருந்து, above the power ஆகத்தான் கடவுளைப் பார்ப்பதாக நான் நினைக்கிறேன். இந்தக் கதையில், பஸ்மாசுரன், ‘கடவுள்’ என்பதை ஒரு பதவியாகப் பார்க்கிறான்… எப்படி அவனால் இப்படி பார்க்க முடிகிறது… கிருஷ்ணர் : நீ வேற…, இப்போ…, இங்க உங்களில் நிறையப் பேர்…, ஏன் 95% மக்கள், கடவுளை வியாபாரியாகப் பார்க்கவில்லையா… அவர்கள் தெரிந்தா பேசுகிறார்கள்… முழுக்க முழுக்க கடவுளிடம், ‘நாம் கேட்டால் கொடுப்பார்…, பதிலுக்கு நாம கடவுளுக்கு ஏதாவது கொடுத்திரலாம்’ என்றுதானே நினைக்கிறார்கள்… அந்த ரகம் தான் பஸ்மாசுரனும்… இங்கு இருப்பவர்கள் நினைக்கவில்லையா… கொஞ்சம் அசந்தால், கடவுளையே உண்டு இல்லை என்று பார்ப்பதில்லையா… கடவுளிடம் challenge விடுவதென்றால், மனுஷர்களுக்கு ரொம்ப பிடிக்கும். எப்போ கடவுள் ’அசருவார்’ என்று காத்திருப்பார்கள்…. கடவுளின் பதவியை காலி பண்ண நினைத்த பஸ்மாசுரனின் ‘mind voice’, அவனுக்கே கேட்குமோ என்னவோ தெரியாது… கடவுளுக்கு துல்லியமாகக் கேட்டு விடும்… அவன் பாட்டுக்கு அடுத்தடுத்த வேலைகளில் இறங்க வேண்டியதுதான். ஆனால் கடவுளோ, ஆரம்பம் முதலே வலையை விரிக்கத் தயாராகி விடுவார். அத...