பேச்சுத்தமிழ் - பாகம் 12
மேகலா : ‘எலி ஏன் அம்மணமா ஓடுது’…. கிருஷ்ணர் : ‘ஹேங்’…. என்கிட்ட கேட்டால்…. ஓ! இது பழமொழியா… மேகலா : கிருஷ்ணா…, யாராவது நம்மகிட்ட வந்து தேவையில்லாம ‘காகா’ பிடிக்கிறாங்கன்னு வச்சிக்கோ… கிருஷ்ணர் : அதுக்கு…. மேகலா : எலி வீட்டுக்குள்ள, நமக்குத் தெரியுற மாதிரி ஓடுமா…. விளக்கு அணைஞ்சா பிறகு, திருட்டுத்தனமா ஓடுமா… எலி, open statement மாதிரி கண்ணு முன்னே ஓடுனா… கிருஷ்ணர் : ஓ! அதுதான் அம்மணமா ஓடுறதா…. மேகலா : ‘ நுணலும் தன் வாயால் கெட்டுப் போகும் ’… கிருஷ்ணர் : இதுக்கும் பழமொழியா… மேகலா : இங்கு எல்லா உணர்வுகளுக்கும் பழமொழி உண்டு… வேண்டுபவர்கள் வந்து அள்ளிக் கொள்ளலாம்… கிருஷ்ணர் : மக்களே! வாங்க! வாங்க! வந்து எங்கள் தமிழைப் பேசுங்க…, பேசுங்க… ஆமாம், போகிற போக்கில, ஏதோ ‘காகா’ பிடிக்கும் வேலைன்னு சொன்னாயே…, அது என்ன…? மேகலா : ஒரு ஆளிடம் காரியம் சாதிக்கணும்னு காலைப் பிடிக்கும் போது போடும் build-up…., அதைத்தான்…, என்னமா ‘மஸ்கா’ அடிக்கிறான்…, ‘காகா பிடிக்கிறான்’பாங்க… கிருஷ்ணர் : புதுப்புது மொழியா பேசுறயோ… மேகலா : புதுமொ...