Posts

பேச்சுத்தமிழ் - பாகம் 8

மேகலா   : சொக்கிப் போனாயா… பேச்சுத் தமிழின் சுகம் அப்படிப்பட்டது கிருஷ்ணா… நாம, வேற State-க்கோ, வேற Country-க்கோ வேலை நிமித்தமாக போகிறோம் என்று வைத்துக் கொள்… லீவுக்கு ஊருக்குத் திரும்புவோம்ல…, அப்ப, நம்ம அம்மா மடியில படுத்து, அம்மா தலை கோதி தடவுவதற்கு முன்பாக…, ஊரின் எல்லைக்குள் நுழைந்ததுமே, நம்ம பேசும் தமிழைக் கேட்டு, நம்ம மனசு கூத்தாட ஆரம்பிக்கும் கிருஷ்ணா… அதுக்கப்புறம் தான்…, அம்மா மடியில படுக்கிறது…, அம்மா கைச்சோறு…, அப்பா…, உறவு எல்லாம்… ஊருக்குள்ளே நுழைஞ்சவுடனே…, எதிர்ப்பட்டவரிடம், அண்ணே, இங்க ஒரு சோடாக்கடை இருந்துச்சே…, அதக் காணோம்’ என்று கேட்டால், ‘அதுவா தம்பி.., அத செட்டியார் வாங்கி ரொம்ப நாள் ஆச்சே. என்னவோ பெருசா கட்டடம் கட்டப் போறாங்கண்ணு சொன்னாங்க… நீங்க பெரிய வீட்டுத் தம்பிதான… அமெரிக்காவுக்குப் போயிருக்கிறதா சொன்னாங்க… நல்லா இருக்கீங்களாய்யா’ என்று பதில் வரும்… காதுல, குற்றாலச்சாரல் விழுந்த மாதிரி இருக்கும்… ‘அங்க வெள்ளக்காரப் பொண்ண கல்யாணம் பண்ணீட்டீங்களாமே…’ என்று வெள்ளந்தியா கேக்கும் போது…, ஒரு கல்யாணக் கச்சேரியே நடந்த மாதிரி இருக்கும் கிருஷ்ணா… கிருஷ்ணர்  :...

பேச்சுத்தமிழ் - பாகம் 7

மேகலா   : கிருஷ்ணா…, பேச்சுத் தமிழில், ஒரு சொல்லு, situation-க்குத் தகுந்த மாதிரி அர்த்தத்தைக் கொடுக்கும் கிருஷ்ணா… இப்போ, ‘அரம்படாமன்னு’ பார்த்தோமா… ‘அரைவேக்காடு’ – அப்படீன்னு ஒரு சொல்லு… அரைகுறையா அறிவுள்ளவங்களையும் குறிக்கும்… அரைவேக்காடு பண்டங்களையும் குறிக்கும்… அப்பா சொல்லுவாரு…, ‘இந்த காய்கறிய அரைவேக்காடா வேக வச்சா போதும்…, அதுதான் ருசி…’ அப்படீன்னு சொல்லுவாரு… சமயத்துக்குத் தகுந்த மாதிரி, இந்த ‘அரைவேக்காடு’ நல்லதாகவும் கூட அர்த்தப்படுத்தலாம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! ரொம்ப interesting ஆக இருக்கே…. மேகலா  : கிருஷ்ணா…, சின்னப்புள்ளைங்க, தன் வயசுக்கு மீறி பேசும் போது…,  ‘உழக்கு மாதிரி இருந்துக்கிட்டு, என்ன பேச்சு பேசுது பாரு…’  அப்படீம்பாங்க… கிருஷ்ணர்  : ஏன் ‘நாழி’ மாதிரின்னு சொல்லக் கூடாதா…. மேகலா  : அளவைகளில் நாழி பெருசு.., ‘உழக்கு’ சின்னதுல்ல கிருஷ்ணா… அதான் அப்படி சொல்றாங்க… அதே மாதிரி, ஒல்லியா இருக்கவங்கள, ‘ஈர்க்குச்சி’ மாதிரி இருக்கான்னும்…, குண்டா இருக்கவங்கள, ‘கத்தரிக்காய்க்கு கை, காலு முளைச்ச மாதிரி’ இருந்துக்கிட்டு, இந்தப் போடு போடுறா...

பேச்சுத்தமிழ் - பாகம் 6

மேகலா   : சும்மா…, விவரமான ஆளுக மட்டுமில்ல கிருஷ்ணா…   அவங்களோட மொழிய, எப்படி ஆயுதமாகவும், மக்களை வளர்ச்சிக்குக் கொண்டு செல்வதற்காகவும்…, ஆலோசனை சொல்வதற்காகவும் பயன்படுத்தியிருக்கிறாங்க…  சும்மா, ‘வளவளன்னு’ சொல்ற பேச்செல்லாம் கிடையாது… ‘வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுதான்’…. சும்மா மணியடிச்ச மாதிரி, டங்கு…, டங்குனு போட்டு ஒடச்சிருவாங்க. அர்த்தம் தேட, dictionary – யெல்லாம் தேவையில்ல… அத்தனையும் வெட்ட வெளிச்சமாகப் புரியும். எளிமையான வார்த்தைகளும்…, சொல்லும் ஒவ்வொரு சொல்லும், waste-ஏ ஆகுறது கிடையாது. அவ்வளவு sharp…. எப்பப் பார்த்தாலும், ஊர் சுத்திக்கிட்டே இருக்கிறவங்கள…,   ‘கால்ல சக்கரம் மாட்டியிருக்கியா…, ஒரு இடத்தில இருக்க மாட்டேங்கிற’   என்று சொல்லும் போது…, ஊர் சுத்துறவரோட character, தெளிவா தெரிஞ்சிரும் கிருஷ்ணா… இந்தப் பாட்டை நீ கேளு… ‘குத்தடி குத்தடி சைனக்கா குனிஞ்சி குத்தடி சைனக்கா பந்தலிலே பாவக்கா… தொங்குதடி லோலாக்கு’ – மேலோட்டமா பார்த்தா, சின்னக்குழந்தைய விளையாட்டுக் காட்ட பாடும் பாடல்னு தெரியும்… கிருஷ்ணர்  : ஆம்மாம்…, அப்படித்தான் தெரியுது… ஆனா, ‘குனிஞ்...

பேச்சுத்தமிழ் - பாகம் 5

மேகலா   : கிருஷ்ணா…, எங்க ஐயாப்பா, எங்க உறவுக்காரர் ஒருத்தர…, அவ…, சரியான மாங்கொட்டக்கல்லு என்று நக்கலா சிரிச்சிக்கிட்டே சொன்னாரு… நான் எங்க அப்பாட்ட, ‘ஐயாப்பா, மாங்கொட்டக்கல்லுனு சொல்றாரு… ஏன் இப்படி சொல்றாருப்பா’ என்று கேட்கவும், எங்க அப்பா, முதலில் பயங்கரமாகச் சிரித்து விட்டார்… பிறகு எனக்கு விளக்கினார்… கிணறு தோண்டும் போது, மாங்கொட்டக்கல்லு தட்டுப்பட்டால், கடப்பாரை, ‘ணங்குனு’ சப்தம் போட்டு எகிறி, கடப்பாரை போட்டவர் முகத்திலேயே எதிர்த்து அடிக்கும்… கல்லு உடையாது…, நம்ம மூஞ்சி பேந்துரும்… நம்ம உறவுக்காரரும் அப்படித்தான்… ’நம்ம பாத்து கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தால், நம்மையே திருப்பி அடிச்சிருவாங்க’ என்ற அர்த்தத்தில், மாங்கொட்டைக்கல்லை உதாரணம் சொல்லி உனக்கு விளக்கியிருக்கிறார்’ என்று சொல்லி, எங்க ஐயாப்பாவோட அறிவியல் அறிவையும், நக்கலையும் நினைச்சி சந்தோஷப்பட்டார் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! ஆமாம்ல…  மாங்கொட்டை கல்லோட தன்மையே அதுதானே. கடப்பாரையைப் போட்டா, போட்டவன் முகத்துல தான் திரும்பி அடிக்கும்…  மனுஷங்க எப்படி இயற்கையின் செய்கையை பொருத்தமாக யோசிக்கிறாங்க பாரு… மேக...

பேச்சுத்தமிழ் - பாகம் 4

கிருஷ்ணர்   : நீ பாடிய ‘சத்தியவான் சாவித்திரி’ கூத்துப் பாட்டு நவராத்திரி படத்தில் இடம் பெற்றதுதானே… ரொம்ப நல்ல பாட்டு மேகலா…   இந்த கூத்து நாடகத்தை, ஏன் இந்தப் படத்தில் வைத்தார்கள் என்பதை விட…, நல்ல வேளை, இப்படி அழிந்து கொண்டிருக்கும் ஒரு கலையை பதிவு பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.  தெருக்கூத்தின் வழிமுறையை அப்படியே பதிவு பண்ணியிருக்கிறார்கள். நடிகர் திலகமும், சாவித்திரியம்மாவும் கொஞ்சம் கூட மிகைப்பட்ட நடிப்பு இல்லாமல், கூத்துக் கலைஞர்களாக அப்படியே நடித்திருக்கிறார்கள். அவர்கள் கண் அசைவும், விரலசைவும் நீ சொன்ன மாதிரி நின்றபடிக்கே நடனமாடுவதும், பேச்சுத் தமிழை, கிராமியத் தமிழை இலக்கியமாக்குவதுமாக…, ஏ…, யப்பா, இதனாலேயே நவராத்திரி படம்…, ஒரே ஷாட்டில் பல sixerகளை விளாசித் தள்ளி விட்டது… மண் மணக்கும் தமிழில் ரசிகர்களிடம், சத்தியவான் சாவித்திரி கதையை விருந்தாகவே கொடுத்து விட்டார்கள் மேகலா… சூப்பர்… பேச்சுத் தமிழை பேச ஆரம்பித்ததும்…, அது, கொஞ்சும் தமிழாகி விட்டது… எப்படி மேகலா…, பேச்சுத் தமிழை, ஒரு மாதிரி இழுத்து இழுத்து, புது மாதிரி பேசுகிறார்கள்… அதிலும், தத்தத்தோம்...

பேச்சுத்தமிழ் - பாகம் 3

கிருஷ்ணர்   : வாவ்! இவ்வளவுதான் பாடலா… ‘திருக்குறள்’ மாதிரி சின்னப் பாட்டு… கண்ணு முன்னே துள்ளிக் குதிக்கும் கன்னுக்குட்டியும், குட்டியை நக்கிக் கொடுக்கும் பசுமாடும், எவ்வளவு அழகாக கண்ணு முன்னே flash ஆகுது… ஆஹா…,   இது பசுஞ்சாணத்தை விட தூய்மையானது…. மாட்டுத் தொழுவத்தை விட அழகாக இருக்கு மேகலா…. மேகலா  : மாடு மேய்க்கும் கண்ணனுக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் கிருஷ்ணா… இன்னும் ஒண்ணு…  நாட்டுப்புறப் பாடல்கள்…, பேச்சுத் தமிழில், அதுவும் வட்டார வழக்குகளில் பேசப்படும் அழகான தமிழ் இலக்கியங்கள் தானே கிருஷ்ணா…  நாட்டுப் புறப் பாடல்களில், ராமாயணம், மகாபாரதம் கூட பாடப் பட்டிருக்கிறது கிருஷ்ணா… அந்தக் காலங்களில் தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, இவை மூலமாக பாடப்படும் பாடல்கள் அநேகமாக பேச்சுத்தமிழாகத்தான் இருக்கும் கிருஷ்ணா… அதிலும், வில்லுப்பாட்டு…, ஒருவர் கதையையோ, சம்பவத்தையோ விளக்கிச் சொல்லுவார். பின்னாடி ஒருவர் ஒத்து ஊதுவது மாதிரி…, ஆமாம்…, ஆஹா…, என்று சொல்லுவார். விளக்கிய பின்பு, அதையே எல்லோருமாக, வில்லின் இசையோடு சேர்ந்து பாட்டாகப் பாடுவ...