கதை கதையாம் காரணமாம் - பாகம் 7
கிருஷ்ணர் : சரி…., அடுத்த கதை என்ன….? மேகலா : ‘பஸ்மாசுரன்’ கதை கிருஷ்ணா… கிருஷ்ணர் : சரி…, சொல்லு… மேகலா : பஸ்மாசுரனுக்கு ஒரு விபரீத ஆசை வருகிறது… ‘கடவுள்’ என்பது ஒரு பதவி என்று நினைத்து விட்டான் போல… அதற்கு, எம்பெருமானைக் காலி பண்ணி விட்டால், தான் கடவுளாகி விடலாம் என்று கணக்குப் போடுகிறான்… ஆனால், அதற்கு நாம் எப்படி கடவுளாவது… கடவுளை எப்படி வரவழைப்பது… தன் மனதில் ஒளிந்திருக்கும் வக்கிரமத்தை வெளிக்காட்டாமல், எப்படி கடவுளைப் போட்டுத் தள்ளுவது என்று பலவாறாக யோசிக்கிறான்… அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது…. முனிவர்களும், மகரிஷிகளும் தவம் செய்து கடவுளிடம் வரம் பெறுகிறார்கள் என்பதை நினைத்தவுடன், தானும் தவமிருந்து கடவுளை வரவழைப்போம் என்று யோசிக்கிறான். அதற்காக, தன்னைச் சுற்றி நெருப்பை உண்டாக்கி, நெருப்பு வளையத்திற்குள் நின்று கடுமையாக தவம் செய்யத் தொடங்கினான். வெய்யில் என்று பார்க்கவில்லை…; அடாத மழையென்றும் துவளவில்லை… கடும் குளிரையும் பொருட்படுத்தவில்லை. தன் மனதை ஒருமுகப்படுத்தி, எம்பெருமானை நோக்கி, கடுமையாக தவம் புரிந்தான். எம்பெருமானும் பஸ்மாசுரனின் தவத்தில் மகிழ்ந்து, அவன் எதிரில் தோன்றின...