கதை கதையாம் காரணமாம் - பாகம் 2
மேகலா : கிருஷ்ணா…, கதையை…, அப்படியே தமிழ் மக்கள் மனசுல பதிந்த படியே, திருவிளையாடல் படத்தில் சொல்லப்பட்டது போலவே சொல்லுகிறேன் கிருஷ்ணா…. அம்மையப்பன் கைலாயத்தில், சிவகணங்கள் புடைசூழ அமர்ந்திருக்கிறார்,… நாரதர் அப்போது அங்கே வருகிறார். மரியாதை நிமித்தமாக, ஐயனைக் காண பழத்துடன் வருகிறார்…. அந்தப் பழத்தை, ‘எவருக்குமே கிடைக்காத ஞானப்பழம் ஒன்று எனக்குக் கிட்டியது…. எம்பெருமானே, முழுமுதற்கடவுளான உங்களுக்குத் தர வேண்டும் என்று கொண்டு வந்தேன்’ என்று பழத்தைக் கொடுக்கிறார்…. ஐயனோ, ‘என்னில் சரிபாதி நீயே… ஆகையால், இந்தக் கனியை நான் அருந்துவதை விட, நீ அருந்துவதுதான் சிறந்தது’ என்று அந்தக் கனியை, அம்மையிடம் தருகிறார்… அம்மையோ, ‘இனி வருங்காலம் பிள்ளைகள் கையில்; அவர்களுக்கே இந்தக் கனியைக் கொடுக்கலாம்’ என்று சொல்கிறார்…. அப்பொழுது, கணபதியும், முருகனும் அங்கு வருகின்றனர். கனியைப் பார்த்த கணபதி, ‘அம்மா, நான் தான் மூத்த பிள்ளை; எனக்குத் தான் பழம்’ என்கிறார். முருகனோ, ‘இல்லையம்மா, நான் தான் செல்லப்பிள்ளை; எனக்குத்தான் பழம்’ என்கிறார்…. அப்பொழுது பார்வதிதேவியோ, ‘இருவரும் கேட்கிறார்களே…., ஆளுக்குப் பாதி ச...