திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 1
மேகலா : கிருஷ்ணா…, கிருஷ்ணா… கிருஷ்ணர் : என்னம்மா மேகலா…, உங்க ஊருல திருவிழாலாம் முடிஞ்சிருச்சா… இப்பத்தான் எழுதணும்னு நெனப்பு வந்துச்சாக்கும்… ராமாயணமாவது படிச்சியா… ராமநவமி கூட இப்பத்தான் முடிஞ்சிது… மேகலா : கிருஷ்ணா…, ராமநவமி ஆரம்பிக்கும் போது, விசுவாமித்திரர் கதை படிச்சேன்… நவமி நிறைவு நேரத்தில், பரசுராமரிடம் இருந்த விஷ்ணு வில்லை ராமர் முறித்த கதையைப் படித்து சந்தோஷமடைந்தேன் கிருஷ்ணா… அப்பப்ப சோர்வாயிருந்தாலும், திருக்குறள் எழுதுவதையும்…, ராமாயணம் படிப்பதையும் விடல கிருஷ்ணா…. கிருஷ்ணர் : சரி…, இப்ப இங்க என்ன வந்திருக்கிற… ஏதாவது அரட்டையா… மேகலா : ஆமாம் கிருஷ்ணா… ‘வாழ்வியலும் வள்ளுவரும்’ என்ற தலைப்பைக் கூட யோசிச்சிட்டேன் கிருஷ்ணா… கிருஷ்ணர் : ஓ! தலைப்பே அமர்க்களமாயிருக்கே… 1330 குறளிலும் வாழ்வியல் பாடம் எடுத்திருக்காரு…. அத்தனையுமா சொல்லப் போற…. மேகலா : இல்ல கிருஷ்ணா… ஒரு 5 அல்லது 10 குறளை மட்டும் எடுத்து எழுதப் போகிறேன்… கிருஷ்ணர் : ஓ! அப்படியா… சிறப்பா எழுது… உனக்கு எப்படி, திருக்குறளில் வாழ்வியல் எழுதணும்னு தோணுச்சி… மேகலா : அதுவா கிருஷ்ணா… இப்போ தினமும் திருக்குறள் விளக்...