கதை கதையாம் காரணமாம் - பாகம் 6
மேகலா : கிருஷ்ணா…, முதலில், மகாபாரதம் எழுத ஆரம்பிக்கும் முன்…, இதை இப்படித்தான் எழுத வேண்டும்…, அதுவும் இன்ன காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று வியாசர் நினைத்தாரே…, அதுவே மிகப் பெரிய செயலாக நினைக்கிறேன் கிருஷ்ணா… ஒரு இதிகாசத்தை எழுத ஆரம்பிக்கும் முன்…, அத்தனை சம்பவங்களையும் மனசுக்குள் வரிசைப்படுத்தி யோசிக்கும் போது…, எத்தனை நாளில் முடியும் என்பதை கணிக்க முடியாதில்லையா… அப்படிப்பட்ட இதிகாசத்தை உரிய காலத்துக்குள் முடிக்கணும் என்று நினைப்பதே, அவருடைய ’கர்ம யோகத்திற்கு’, அடிப்படை சாட்சியாகும்… பின்ன எதற்கு தயக்கமும், குழப்பமும்… கிருஷ்ணர் : மேகலா…, உனக்கு நல்லா தெரியும்… வியாசர், மகாபாரதத்தில், ஒரு கதாபாத்திரமுமாக உலா வருவார்… ஆரம்பத்தில் இருந்து, குருக்ஷேத்திரப் போர் முடிந்த பின்னும் கூட, அங்கு நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவர். ஒரு காட்சியும் தப்பாது… இண்டு இடுக்கு கூட விடாமல் எழுதத் தயாராகி விட்டார். நேரில் கண்ட சம்பவங்கள் என்பதால், காட்சிகள் அவருக்குள் பாடல்களாக ஊற்றெடுக்கிறது… என்ன செய்வார்…. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும், ஒவ்வொரு தர்மத்தை எடுத்துரைக்கிறது…, எதையும் விட முடியாது… அனைத்த...