கதை கதையாம் காரணமாம் - பாகம் 15
கிருஷ்ணர் : சரி…, ‘ஓம்’ என்ற மந்திரத்தின் அர்த்தத்தைப் பார்க்கலாம்… நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன்… மனிதன், பேச முயற்சி செய்யும் போது எழுந்த ஒலி என்னவாக இருக்கும்…. மேகலா : கிருஷ்ணா…, மனிதன், குழந்தையாக பிறந்தவுடன்…, ‘ங்கா’, ‘ங்கா’ என்றுதானே ஒலி எழுப்பி அழுவான்… கிருஷ்ணர் : நான் கேட்டது, குழந்தையின் முதல் சப்தம் என்ன என்று அல்ல… மனிதனாக வளர்ந்த பின்னே, ஏதாவது ஒரு உணர்வை வெளிப்படுத்த முயற்சி செய்வான் இல்லையா… அப்படி முயற்சி செய்யும் போது, எழுப்பும் முதல் ஒலி…, ஓ…, ஓம் என்றுதான் இருக்கும்… இது மனிதனின் உயிர் எழுப்பும் ஒலி… இதை படைத்தல் என்று வைத்துக் கொள்ளலாம்… அடுத்து, ‘ஓம்’ என்ற ஒலி வடிவத்தை, உன் மூச்சை நிறுத்தி ஒழுங்குபடுத்தி சொல்லிப்பார். அது உன் உயிரையும் ஒழுங்குபடுத்தும்… உன் மூச்சை நிறுத்தி சுத்தப்படுத்தவும் செய்யும். அதனால்தான், எந்த மந்திரம் சொல்லும் போதும், ‘ஓம்’ என்ற ஒலியை ஒலிக்கிறோம்… ‘ஓம் நமச்சிவாய’ என்னும் போது, ‘ஓம்’ என்ற மந்திரம், உன் மனதை சுத்தப்படுத்தி, சமநிலையில் வைத்து, ‘நமச்சிவாயம்’ என்று கணீரென்று ஒலிக்க உதவுகிறது… அது இறைவனின் காதில் விழுகிறது… ‘ஓம் நாராயண நமஹ!’,...