கதை கதையாம் காரணமாம் - பாகம் 13
மேகலா : அழுக்கேறிய பல் தெரிய சிரித்துக் கொண்டே கேட்ட சண்டாளனின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்த உத்தங்கர் அதிர்ந்து போனார்…. இப்படி ஒரு தோற்றத்தில் ஒரு சண்டாளன் தண்ணீர் கொண்டு வருவான் என்றூ எதிர்பார்க்கவேயில்லை. இது கிருஷ்ணனின் சாகசமேயன்றி வேறு யாரால் இப்படிச் செய்ய முடியும் என்று கோபம் கொண்டார்…. ‘நான் தண்ணீர் கேட்டால்…, இப்படி ஒருவனை நீ அனுப்பலாமா கிருஷ்ணா… தவம் செய்யும் நான், இவனிடம் எப்படி தண்ணீர் வாங்கிக் குடிப்பேன்’ – என்று புலம்பினார்…. அந்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அங்கு வந்து, ‘என்ன உத்தங்கரே! தண்ணீர் வந்ததா…’ – என்று இங்குமங்கும் தேடிப் பார்த்தார்… உத்தங்கர், ‘உனக்கு இது நல்லா இருக்கா கிருஷ்ணா. நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீயோ…, துர்நாற்றம் வீசும், மாமிசத்தைக் கையில் ஏந்திய சண்டாளனையா அனுப்பி வைப்பாய். தவம் புரியும் நான், சண்டாளனிடம் தண்ணீர் எப்படி வாங்கிக் குடிப்பேன்’ – என்று கோபமும், ஆயாசமும் ஒரு சேரப் புலம்பினார்…. ‘என்னது, சண்டாளனா… உம்மிடம் தண்ணீர் தருகிறேன் என்றதும், சாட்சாத் இந்திரனிடம் தான் நான் சொன்னேன்… பாலைவன சஞ்சாரி உத்தங்கர் தண்ணீர் கேட்டால்…, அமிர்தத்தை அவருக்கு...