Posts

பெண்களால் முடியும் - பாகம் 4

மேகலா   : கிருஷ்ணா…, ‘தகடூர்’ அதியமான், அரசனாகப் பொறுப்பேற்று ஆண்ட ஒரு குறுநிலநாடு என்று சொல்லலாம். இப்போ இருக்கும், ‘தர்மபுரி’யும் அதைச் சுற்றியுள்ள நகரமும்…., இப்பவும் பச்சைப் பசேலென்று செழித்து நிற்கும் பூமிதான் ‘தகடூர்’… அதியமான், கற்றவர்களை மிகவும் மதிப்பவன்…. அவர்கள் நாட்டிற்கு, ஔவையார் வருகை புரிந்திருந்தார். ஔவையாரின், ‘நன்னெறி’, ‘மூதுரை’…, போன்ற இலக்கியங்களை வாசித்திருந்த அதியமான், அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, தங்கள் நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு வேண்டிக் கொண்டான்… ஔவையாரும், மன்னனின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, அங்கேயே சில காலம் தங்கி விட்டார். ஒரு முறை அதியமான், ஔவையாரை, தன் நாட்டின் செழிப்பான பகுதிகளைக் காண அழைத்துச் சென்றான். அப்போ, ஒரு காயலான் கடையில், முனை மழுங்கிய வாள், இரண்டாக உடைந்த வேல்…, என்று போர்க்கருவிகள் குவிந்து கிடந்தன. ஔவையாருக்கு ஒரே மனக்குழப்பம்… மண்வளம் செழிப்பாக இருக்கும் இந்த விவசாய பூமியில், படைக்கருவிகள் ஏன் இத்தனை குவிந்து கிடக்கின்றன…, என்ற வேதனை, அவர் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தன…. இதனை குறிப்பாகப் புரிந்து கொண்ட அதியமான்…, தன்

பெண்களால் முடியும் - பாகம் 3

மேகலா   : கிருஷ்ணா…., நிறுவனங்கள் அடையாளம் காட்டும் பெண்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை கிருஷ்ணா… நல்ல மனமுடையவர்களைக் கூட, அடையாளம் காட்டியிருக்கிறார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படியா…. நல்ல மனமுடைய யாரை, எந்த நிறுவனம் அடையாளம் காட்டியிருக்கிறது…. மேகலா  : ISKCON மாதிரி வழிபாடு செய்யும் இடங்களில், தினந்தோறும் மக்களுக்கு பசி தீர்ப்பதற்காக அன்னதானம் போடுகிறார்கள். சிலர், ஆத்மதிருப்திக்காக, குறைந்த விலையில் சாப்பாடு கொடுப்பதுண்டு… இதெல்லாம் சிலர் குழுவாகச் சேர்ந்து செய்கிறார்கள்… செய்ய முடியும்…. ஆனால், ஒரு பெண், இப்போ அவங்களுக்கு, 60, 65 வயது இருக்கும். அவர்கள் பசித்து வருபவர்களுக்கு, சும்மா கொடுப்பது போல, 1 ரூபாய்க்கு இட்லி, சட்னி வைத்து கொடுக்கிறார்கள் கிருஷ்ணா… அதிலும், யாருடைய உதவியும் இல்லாமல், அந்த இட்லி விற்கும் காசை வைத்தே, பசித்து வருபவர்களுக்கு, அன்னபூரணியாக, 1 ரூபாய்க்கு இட்லி விற்கிறார்கள். ‘கொரோனா’ காலத்தில் கூட, அவர் தன்னுடைய பணியை விடவில்லை. இதைக் கேள்விப்பட்ட ‘மஹிந்திரா க்ரூப்’ M. D., ஆச்சர்யப்பட்டு, அந்த அம்மாவை நேரில் சந்தித்து, அவர்களுக்கு, குடியிருக

பெண்களால் முடியும் - பாகம் 2

மேகலா   : கிருஷ்ணா…., பாரதியாரின் கவிதையைச் சொல்லிட்டயா… எனக்கு, விண்ணிலே பறக்கும் பெண்கள் ஞாபகம் வருது கிருஷ்ணா… ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் வரைக்கும் பெண்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பதை நாம் பார்த்து விட்டோம்ல…. Space-ல் பறந்த பெண்ணை, சில காலத்திற்கு முன்னால் எல்லோரும் பார்த்தோமே…, நினைவிருக்கிறதா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : OH! ஆமாம்… ‘நாசா’ அனுப்பிய விண்கலத்தில், space-க்குப் பறந்து சென்றவர்களில் ஒருவர் தான் ‘கல்பனா சாவ்லா’. விண்ணில் பறந்தவர்… விண் வெளியிலேயே காற்றோடு கரைந்து போனவள்…  இப்படிப் பேசப் பேசத்தான், ‘பெண்களால் முடியும்’ என்ற வார்த்தையை, பெருமையாய் சொல்ல முடிகிறது….. மேகலா  : கிருஷ்ணா…, ‘கல்பனா சாவ்லா’ ஒருவர் தான்…. இன்று, அவர் காற்றோடு கலந்து…, நூற்றுக்கும் மேலான கல்பனா சாவ்லாக்களை, விண்வெளியில் தூவி விட்டார் போலும்… ஆகாய விமானத்தை ஓட்டும் விமானிகளில் எத்தனை பேர் பெண்கள் தெரியுமா கிருஷ்ணா…. நான் முதன் முதலில் துபாய்க்குச் செல்லும் போது, அந்த விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவர், பெண்… இப்போ, ஹரித்துவார் சென்ற போது…, அங்கிருந்து Bangalore-க்குத் திரும்பிய விமானத்தை ஓட்டிய

பெண்களால் முடியும் - பாகம் 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…., புத்தம் புது தலைப்புடன் நானும் வந்திட்டேன்… என்ன தலைப்பு என்று சொல் பார்க்கலாம்… கிருஷ்ணர்  : தலைப்பு நான் சொல்லணும் என்று இங்கு வந்தேன். நீ ஏற்கனவே decide பண்ணிட்டயா…. சரி, என்ன தலைப்பு….? மேகலா  : கிருஷ்ணா! நீ என்ன தலைப்பை select பண்ணியிருக்கிறாய்…., அதச் சொல்லு முதலில்…. நான் பிறகு சொல்கிறேன்… கிருஷ்ணர்  : ‘பெண்களால் முடியும்’ – என்ற தலைப்பில், ‘உன் கருத்து’…, ‘உன் பார்வை’…, இவையெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்னு நினைத்தேன்…. அதையே, கட்டுரையின் தலைப்பாகச் சொல்லலாம் என்று நினைத்தேன்… மேகலா  : வாவ்! Great கிருஷ்ணா…, இதே தலைப்பைத்தான் நானும் decide பண்ணியிருந்தேன்… நம்ம ரெண்டு பேர் மனசும் ஒண்ணு போல நினைக்குது கிருஷ்ணா.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கிருஷ்ணா… கிருஷ்ணர்  : நெசம்மாவா…. ஏய் லூசு…! உனக்குள்ளே இருப்பவன் நான்… உன்னோடவே சுற்றித் திரிபவன் நான்…. நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிய மாட்டேனா…. மேகலா  : ஓ….! ஆமாம்ல….. ஆனா, நீ நினைப்பதை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியலையே…, அது ஏன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அவ்வளவுதான் உன் ‘matu

Maturity - பாகம் 11 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : அனுபவங்களைக் கடப்பது, மனிதனுக்கு அன்றாட நிகழ்ச்சிதானே… ஆனால், ஒவ்வொரு நாளும், தான் கடந்த அனுபவத்தை recall பண்ணி, எது நல்லது…, எது கெட்டது…, எதைச் செய்யலாம்…, எதைச் செய்யக் கூடாது…, எதனால் இது நடந்தது…, இது பாவமா…, புண்ணியமா…, என்று ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்க வேண்டும்… இன்று நடந்த விஷயத்தில், எத்தனை பேர் பயனடைந்தார்கள்…, எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள்…, என்று ஒளிவு மறைவு இல்லாமல் யோசிக்க வேண்டும்….   உன் மனசாட்சி வலியுறுத்துவதை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்….  திறமையாளர்கள், அவமானத்தைத் தடுக்க…, கர்வப் பட்டுக் கொண்டு, தன்னைத் தானே உற்சாகப் படுத்துவதெல்லாம் சரி…. ஆனால், அந்தக் கர்வம் அவனுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் வரைக்கும் தான்… அதையே தன் அடையாளமாக மனுஷன் பின்பற்றினால்.., அந்தக் கர்வமே, அவனை அழித்து விடும்…   கர்வம், maturity-யை promote பண்ணணுமே தவிர, மனுஷனை அழிச்சிடக் கூடாது…   அதற்காகத்தான் சொல்லுகிறேன்… மனசாட்சி எச்சரிப்பதை, காது கொடுத்துக் கேட்கணும்… அதே மாதிரி, ஒரு அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடத்தை மனிதன் நன்றாக மனதில் நிலை நிறுத்தணும். நல்ல செயல் என்றால

Maturity - பாகம் 10

மேகலா   : உண்மைதான் கிருஷ்ணா…   அதிலும், வயசான பிறகு புலம்புபவர்களாக இருந்தால், அவர்கள் புலம்புவதைக் கேட்கக் கூட யாரும் வர மாட்டார்கள் கிருஷ்ணா…  அப்படிப்பட்டவர்கள் புலம்புவதை நிறுத்துவதுதான் சிறந்த வழி… கிருஷ்ணர்  :  Matured person புலம்ப மாட்டார்கள்… ரொம்ப பேசவும் மாட்டார்கள்… யாருக்கும் தெரியாமல், மனசுக்குள் புழுங்கி வேகவும் மாட்டார்கள்…. தேவையில்லாத கற்பனை பண்ணவும் மாட்டார்கள்.  கண்ணெதிரில் தெரியும் காட்சியில் கூட, உண்மை நிலை எதுவாக இருக்கும் என்று கண்டுபிடித்து விடுவார்கள். உண்மையானவர்களைப் பற்றி பொய்யாக யாராவது செய்தி பரப்பினால், இவர்கள், அப்படிச் செய்திருக்கவே மாட்டார்கள் என்று தீர்க்கமாகச் சொல்லுவார்கள். அதனால்தான் அவர்களால் நிதானமாக யோசிக்க முடிகிறது… மேகலா  : Great கிருஷ்ணா… ‘எங்கயோ தப்பு நடந்திருக்கு’ என்று திரைமறைவு செயலைக் கூட யூகிச்சிருவாங்க கிருஷ்ணா… நீ சொல்லச் சொல்லத்தான்…, ஒண்ணு தெளிவாப் புரியுது கிருஷ்ணா… Matured person, நிதானமாகவும், தெளிவானவர்களாகவும் இருப்பாங்க என்பது மட்டும் கிடையாது கிருஷ்ணா…. ‘யார் யார் எப்படிப்பட்டவங்க…, அவர்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்…’ என

Maturity - பாகம் 9

மேகலா  : So, சின்ன வயசுலேயே சாதிப்பவர்கள், வேலையில் தெளிவாக இருக்கணும். அதே சமயத்தில், வெற்றியை எட்டிப் பிடிக்க தன்னைத்தானே, திறமையைப் பாராட்டி உசுப்பேத்திக் கொள்வதில் தப்பு கிடையாது…. ஆமாம் கிருஷ்ணா…, நீ சொல்வது சரிதான். Tennis விளையாடும் போது, rally பண்ணிக் கொண்டே இருப்பவர்கள், ஒரு சமயத்தில், எதிராளி தொடவே முடியாதபடிக்கு ஒரு smash அடித்து, கையை பலம் காட்டி கத்துவார்கள். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா….   ‘யார்ட்ட…, யார்ட்ட வந்து மோதுற…, சிங்கம்டா’ – என்று சொல்வது போல இருக்கும்…   ஒரு ace போட்டாலும், காலை உதைத்து, racket-ஐத் தட்டி, ஜாலியாகக் குதித்து, தன் பலத்தை ரசித்து, தங்களைத் தாங்களே குஷியாக உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். கிருஷ்ணா…, தன்னுடைய திறமையினால் தானே final வரைக்கும் வருகிறார்கள். ஆனாலும், விளையாடும் போது, தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்துதல், தற்பெருமையல்ல…; வெற்றியை எட்டிப் பிடிக்கும் உற்சாகம்…. கிருஷ்ணர்  : Yes…, very true…. மகாபாரதத்திலும் ஒரு காட்சி வருமே…. குருக்ஷேத்திரப் போருக்கு, இரு பக்கத்தாரும் தயாராகும் போது…, படைத் தளபதியாக பீஷ்மர் பொறுப்பேற்பார். துரியோதனன், எல்ல