கதை கதையாம் காரணமாம் - பாகம் 19 (நிறைவுப்பகுதி)
கிருஷ்ணர் : இதில் கிருஷ்ணர்…, கொலை செய்யத் தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்லுகிறேன்… அடுத்த நாட்டைக் கைப்பற்றத் தூண்டுவது மகாபாவம்…. ஆனால், தன்னை அழிப்பதற்கு ஒருவன் புறப்பட்டால், அவனுடன் சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அதில் தப்பேயில்லை… தமிழில் ஒரு பழமொழி உண்டே…. ‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்…, வந்த சண்டையை விட மாட்டேன்’ – என்று சொல்வதில் தவறு கிடையாது. அந்த சண்டையில் தர்மம் ஜெயிக்க வேண்டும். நல்லவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது பொது விதி. உரிமைக்கான போர் என்று வந்தவுடன், பின் வாங்குவது, தன்னை நம்பிய மக்களை நட்டாற்றில் விடுவதற்குச் சமம்…. உன்னை ஒன்று கேட்கிறேன்… தீவிரவாதிகள், பாரத மக்களை, வரைமுறையில்லாமல் தாக்கும் போது, நம் அரசாங்கம், ‘போர்’, அதனால் ‘விளைகிற இறப்பு’…, சனாதன தர்மத்திற்கு எதிரானது…, அதனால் விட்டுக் கொடுக்கிறோம் என்று சொல்லி, போர் புரியாமல் இருந்திருந்தால், நாட்டு மக்கள் அரசாங்கத்தை போற்றவா செய்வார்கள்… திருப்பி அடித்ததனால், மக்கள் அரசாங்கத்தை வெறுக்கவா செய்தார்கள். இதில் தர்மம் என்னவென்றால், தீவிரவாதம் செய்தவர்களு...