திருக்குறளில் வாழ்வியல் - பாகம் 3
மேகலா : அன்புடையவர்களின் அன்புக்கு, அர்த்தம் சொன்ன வள்ளுவர், ‘அறம்’ என்பதற்கு விளக்கம் எப்படிக் கொடுக்கிறார் தெரியுமா…. ‘அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ கிருஷ்ணர் : இதன் ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் என்ன மேகலா… மேகலா : கிருஷ்ணா…., அழுக்காறுன்னா, பொறாமை…, அவா – பேராசை, வெகுளி – கோபம், இன்னாச்சொல் – கெட்ட வார்த்தை…, கொடுமையான வார்த்தை பேசுதல்… – இந்த நான்கையும், நமக்குத் தேவையில்லை என்று ஒருவர் ஒதுக்கி வைத்து வாழ்ந்தால், அதுவே சிறந்த அறமாகும்… வேதம் கற்பதை விட…, கடவுள் மேல் பக்தி செலுத்துவதை விட…, பெரும் செல்வம் தேடுவதை விட, ஒரு மனிதன், பொறாமை, பேராசை, கோபம், கெட்ட வார்த்தையை விட்டொழித்தலே சிறந்த தர்மமாகும் என்கிறார் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ஒரு நல்ல மனுஷன், அன்புடையவனாக, சிறந்த வாழ்க்கைத்துணை கொண்டவனாக, செயற்கரிய செயலைச் செய்பனாக இருந்து விட்டால்…, யப்பா…, அப்படிப்பட்ட மனிதர்கள்…, தெய்வத்திறகு சமமானவர்கள் ஆகிறார்கள் இல்லையா… குறள், வாழ்வியலை மிக எளிமையாக நமக்குக் கற்றுக் கொடுக்கிறது மேகலா… மேகலா : ஆமாம் கிருஷ்ணா… குறளைப் படிக்கப் படிக்கத்தான்…, வாழ்...