கதை கதையாம் காரணமாம் - பாகம் 18
மேகலா : கிருஷ்ணா…, பதிவிரதை, மிதிலாபுரியில் வாழும் தர்மவியாதரைச் சென்று பார்க்கச் சொன்னவுடன், ஒரு எதிர்பார்ப்புடன் தானே, மிதிலாபுரிக்கு வருகிறார். வந்த இடத்தில், தர்மவியாதர் முனிவரை வரவேற்று, ’நீங்கள் பார்த்த பார்வையில் கொக்கு எரிந்து போனதால், அந்தப் பெண்மணி, என்னையும் கொக்கென்று நினத்தாயா என்று கேட்டு, என்னிடம் அனுப்பினாரா’ என்று கேட்டதும்…, ஏன் திகைத்துப் போகணும்…. கிருஷ்ணர் : இதெல்லாம் ஒரு சந்தேகமா… கௌசிகர் ஒரு முனிவர். இயல்பு வாழ்க்கையில் வாழும் பெண்மணிகளிடத்தும், ஒரு கசாப்புக்கடைக்காரரிடமும் தர்மசிந்தனை உண்டு என்பதை அறியாதவர். ஒரு எதிர்பார்ப்புடன் தான் வருகிறார் என்றாலும்…, ஒரு கசாப்புக்கடைக்காரர், இவ்வளவு துல்லியமாக, எந்த நிகழ்ச்சியையும் பார்க்காமல், யாரிடமும் கேட்காமல், கொக்கு எரிந்ததையும், அதை நேரில் பார்த்த மாதிரி சொன்ன பதிவிரதையையும் சுட்டிக் காட்டும் போது, கசப்புக்கடைக்காரருக்கு இத்தனை தவவலிமையா என்ற வியப்பு வருவது இயற்கைதான்… அவர் இடத்தில் யார் இருந்தாலும் திகைக்கத்தான் செய்வார்கள்…. மேகலா : கிருஷ்ணா…, முதலில் கௌசிக முனிவருக்கு ஒன்றும் புரியவில்லை… தர்மவியாதரின் ஆழ்ந்த ஞ...