கதை கதையாம் காரணமாம் - பாகம் 16
கிருஷ்ணர் : சரி..., அடுத்த கதையைப் பார்க்கலாம். கதையென்ன யோசித்திருக்கிறாய்... மேகலா : ‘தர்மவியாதர்’ கதை கிருஷ்ணா... கிருஷ்ணர் : Oh! Super... மேகலா : கௌசிகன் என்ற உத்தம பிராமணன் ஒருவன் இருந்தான். அவன் வேதங்களைக் கரைத்துக் குடித்தவன். நாள்தோறும் வேதங்களை ஓதுவதில் தவறவே மாட்டான். அன்று ஒரு நாள் வேதம் ஓதிக் கொண்டிருந்த போது, மேலே பறந்த கொக்கு ஒன்று எச்சமிட்டது. எச்சம் மேலே பட்டதும், கோபம் கொண்டு கொக்கைப் பார்க்க, அது கோபத்தின் கனல் தாங்க முடியாமல் எரிந்து கீழே விழுந்தது. அதைக் கண்டதும், அவசரப்பட்டு கோபப்பட்டு விட்டோம் என்று வருந்தினான். அன்றைய தின உணவுக்காக, கௌசிகன் பிச்சை வேண்டி, ஒரு பதிவிரதையின் வீட்டின் முன்பு பிச்சை கேட்டு நின்றான். அந்த வீட்டின் தலைவன் அப்பொழுதான் வேலை முடித்து வீட்டிற்கு வந்திருந்தார். அதனால் அந்தப் பெண்மணி,’பிராமணரே, சற்று பொறுங்கள். என் கணவருக்கு பணிவிடை செய்து விட்டு இதோ வருகிறேன்’ என்று சொன்னாள்.... அந்தப் பெண்மணி, கணவனுக்கு பணிவிடை செய்வதுதான் சிறந்த தர்மமாகும்... இதுவே, தெய்வத்திற்கு வழிபாடு செய்வதைக் காட்டிலும் உத்தமமான காரியம் என்ற உறுதி உடை...