கதை கதையாம் காரணமாம் - பாகம் 1
மேகலா : கிருஷ்ணா…, என்னைப் பார்க்க வர மாட்டியா கிருஷ்ணா… எனக்கு உங்கிட்ட பேசணும் கிருஷ்ணா… கிருஷ்ணர் : அப்படியா…, என்ன பேசப் போற… வேற யாராவது, ஏதாவது தலைப்பு கொடுத்து, உன்னை கிறுகிறுக்க வச்சாங்களா…. மேகலா : ஐயோ கிருஷ்ணா…, அதெல்லாம் ஒண்ணுமில்ல… எனக்கு ஒரு ஆசை இருக்கு கிருஷ்ணா… கிருஷ்ணர் : ஆசையா…; ஏதாவது சேலைக்கடைக்குப் போயி, சேலை எடுக்கணுமா… இல்லை…, பரோட்டா சாப்பிடணுமா…, இல்லை…, எங்காவது இமயமலையிலிருக்கும் கோயிலுக்குப் போகணுமா… என்ன ஆசை…. மேகலா : ஏன் கிருஷ்ணா…, பரோட்டா சாப்பிடுவதெற்கெல்லாம் உன்னைக் கூப்பிடுவனா… நானே செஞ்சு சாப்பிட்டுப் போறேன்… இமயமலையிலிருக்கும் கோயிலுக்குச் செல்ல நான் ஆசைப்பட்டாலும், என் வயது ஒத்துழைக்காது போல கிருஷ்ணா… இது, அதெல்லாம் இல்ல… இது வேற… எங்க…, நீ என் மனசுக்குள் குடியிருப்பவன்… என் ஆசை என்னன்னு சொல்லு பார்ப்போம்… கிருஷ்ணர் : பேனாவும், diary-யுமாக வந்து உட்கார்ந்து, அசட்டுச் சிரிப்போட சொல்ற…, அதுவும் ஆசைப்பட்டது என்னன்னு கேக்குற… ஏதாவது exclusive topic-ல எழுதணும்னு ஆசைப்படுறியா…. மேகலா : ரொம்ப கிட்ட வந்துட்ட கிருஷ்ணா...