பேச்சுத்தமிழ் - பாகம் 16
கிருஷ்ணர் : அப்படியென்ன அந்த பால்காரர் சொன்னார்… மேகலா : ‘பால்கோவா கிண்டப் போறேன்னு நேத்தே சொல்லியிருக்கலாம்ல; நான் வேற பால் கொண்டு வந்திருப்பேன்ல’ – என்று சொன்னாரே பார்க்கலாம்… கிருஷ்ணர் : ஏன்? பாலில் வேற வேற quality இருக்கா… மேகலா : அதுதான் எனக்கும் ஆச்சர்யமாப் போச்சு… ஒரு லிட்டர் பாலுக்கு 200 gm பால்கோவா வரணும்… நான் வாங்குன பாலுக்கு 300 gm பால்கோவா வந்தே தீரணும். அது அவர் கொண்டு வரும் special பால்லதான் 300 gm பால்கோவா… நான் வாங்கினது, தண்ணி கலந்த பால்… 150 gm பால்கோவாதான் கிடைத்தது…. கிருஷ்ணர் : ஹேங்! தண்ணி கலந்த பாலா…. இப்படீலாமா குடுப்பாங்க… நாங்கல்லாம், மாட்டுக் காம்புலயிருந்து, எங்க வாயில அப்படியே பீச்சிக் குடிப்போம்.. . சரி…, இதுல எங்க எச்சரிக்கையா நடந்த…. மேகலா : அவர் சொன்னத வச்சி கண்டுபிடிச்சிட்டேன்ல…. அதற்கு அடுத்த வருஷத்துல இருந்து, ஆரோக்யா பால் மட்டும் தான், பால்கோவா கிண்ட வாங்குவேன்… கிருஷ்ணர் : அப்போ, ஒரு தடவை ஏமாந்துருவீங்க… மேகலா : ஆம், அது அப்படித்தான்… Customers-ம், வியாபாரிகளும், ‘Tom & Jerry’ மாதிரி தா...