Posts

பேச்சுத்தமிழ் - பாகம் 11

கிருஷ்ணர்   : பன்னிரு மாதங்களில், இது (தை மாதம்) பொற்காலம் மேகலா… வாழ்க்கையை நாமும் வாழ்கிறோம்…, என்று ஏதோ போற போக்குல சொல்லிட்டுப் போகல… அத்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தவன் கூறிய அர்த்தமுள்ள ஆழமான பழமொழி மேகலா…   சாதாரணமான மனுஷன் பேச்சுத் தமிழிலேயே, தர்ம சாஸ்திரமே படைச்சிட்டாங்க… மேகலா  : கிருஷ்ணா…, உன்னிடம் ஒரு ‘மூன்று முடிச்சு’ வசனம் சொல்லணும் கிருஷ்ணா கிருஷ்ணர்  : அதுக்கு எதுக்கு இத்தனை பம்முற…. மேகலா :  இல்ல கிருஷ்ணா…, பழமொழி பேசும் போது, புதுமொழி சொல்லலாமா என்று யோசித்தேன்… கிருஷ்ணர்  : என்ன புதுமொழி…. மேகலா  : Heroine ரொம்ப கஷ்டப்படுறா… அவ கஷ்டத்தை, hero, friend கிட்ட சொல்றான். சொல்லிட்டு…, ‘இந்தப் பொண்ணு என் கிட்ட, பிரச்னையை சொல்ல மாட்டேங்கிறா…, ஏன்னு தெரியல’ – அப்படீங்கிறான். அதுக்கு அவன் friend சொல்றதுதான் புதுமொழி…  ‘கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருந்தா,  எதன்னு இவ சொல்லுவா- அப்படீன்னு வசனம் வருது கிருஷ்ணா… நான், அலுத்துப் போய் படுத்திருந்தவா…, அசந்து போனேன். உடனே எந்திரிச்சி, உன் கிட்ட சொல்றதுக்காக…, நோட்டுல குறிச்சி வச்சேன் க...

பேச்சுத்தமிழ் - பாகம் 10

மேகலா   : நீ சொல்றது ரொம்ப correct கிருஷ்ணா…   ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்துல ஏறி வைகுந்தம் காட்டினானாம்’   – அப்படீங்கிற பழமொழிய, சர்வ சாதாரணமா…, பள்ளிக்கூடம் போய் பட்டம் வாங்காதவன் கூட சொல்லுவான்… ஆனா, இதில் special என்னன்னா, ’யாரை’ எப்படி எடக்கா பேசுறாங்கன்னு, கேக்குறவன் கப்புனு புரிஞ்சிக்குவான்… ‘யாரு’…, ‘இவனா’…,   இவனுக்கு அடுத்த தெரு கூட தெரியாதே. இவன் ‘காசி’க்குப் போனானாமா … யார் காதுல பூ சுத்துறாங்க…. கிருஷ்ணர்  : காதுல பூ சுத்துறதுனா என்ன…? மேகலா  : ஒரு ஆளு காது குடுத்து கேட்டா, இஷ்டத்துகு reel வுடுறது… நான் அங்க போனேன்…, இங்க போனேன்…, இதை சாதிச்சேன்…, அதப் புடிச்சேன் – அப்படீன்னு…, காதுல ரத்தம் வர்ற அளவுக்கு…, முழம் முழமா அளந்து விடுறது…. கிருஷ்ணர்  : முழம் முழமா அளக்கிறதா…. யப்பா…, வுட்டா,  இதுக்கு தனி இலக்கியமே போடுவ போலயே…  ஏன் மேகலா…., இந்த மாதிரி பழமொழியாகட்டும்.., நடைமுறை மொழியாகட்டும்…, எப்படி உருவாகுது…. மேகலா  : கிருஷ்ணா…, இப்போ, நம்ம ரெண்டு பேரும் பேசும் போது…, கிண்டலாகப் பேசுவது, ரொம்ப பிடித்தமான இயல்பான...

பேச்சுத்தமிழ் - பாகம் 9

மேகலா   : இன்னொரு குசும்பு கிருஷ்ணா…. பெரிய தப்பு பண்ணிட்டு வந்திருப்பான். வீட்டுல enquiry நடக்கும். கையும் களவுமா பிடிபட்டு, என்ன செய்யிறதுன்னு தெரியாம முழிப்பான். அப்போ அம்மா சொல்லுவாங்க,   ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு திருதிருன்னு முழிக்கிறான் பாரு’ … அப்படீன்னு அடிக்க கைய ஓங்குவாங்க… கிருஷ்ணர்  : அடேங்கப்பா…, எனக்கு எதுவுமே தெரியாதுங்கிற மாதிரி முழிக்கிறதுல, ‘டாக்டரேட்’டே வாங்கிருவோம்ல… மேகலா  : அதான…, நீயும் அப்படித்தானா கிருஷ்ணா… தயிர்ப்பானையை உருட்டி, வெண்ணெய் தாழிய உடைச்சி…, அம்மாகிட்ட பிடிபட்டவுடன், ‘இந்தப்பூனையும் பால் குடிக்குமான்னு’ முழிச்சிக்கிட்டு நிக்குறுதுல…, கிருஷ்ணனுக்கு ‘டாக்டர்’ பட்டமே கொடுக்கலாம்… கிருஷ்ணா…, கிருஷ்ணர்  : சரி.., சரி…, அடுத்த point-க்குப் போகலாம்… மேகலா  : இன்னொரு அப்ராணியான கூக்குரல் நீ கேட்டிருக்கயா கிருஷ்ணா… கிருஷ்ணர்  : அதென்ன ‘அப்ராணி’… மேகலா  :  குரங்கு மாதிரி சேட்டை பண்ணினா…, ‘பிராணி மாதிரி’… சேட்டை செய்யத் தெரியாம சாதுவா இருப்பவன், ‘அப்ராணி’ கிருஷ்ணர்  : Oh! சரி.., சரி…, அப்ராணியின் கூக...

பேச்சுத்தமிழ் - பாகம் 8

மேகலா   : சொக்கிப் போனாயா… பேச்சுத் தமிழின் சுகம் அப்படிப்பட்டது கிருஷ்ணா… நாம, வேற State-க்கோ, வேற Country-க்கோ வேலை நிமித்தமாக போகிறோம் என்று வைத்துக் கொள்… லீவுக்கு ஊருக்குத் திரும்புவோம்ல…, அப்ப, நம்ம அம்மா மடியில படுத்து, அம்மா தலை கோதி தடவுவதற்கு முன்பாக…, ஊரின் எல்லைக்குள் நுழைந்ததுமே, நம்ம பேசும் தமிழைக் கேட்டு, நம்ம மனசு கூத்தாட ஆரம்பிக்கும் கிருஷ்ணா… அதுக்கப்புறம் தான்…, அம்மா மடியில படுக்கிறது…, அம்மா கைச்சோறு…, அப்பா…, உறவு எல்லாம்… ஊருக்குள்ளே நுழைஞ்சவுடனே…, எதிர்ப்பட்டவரிடம், அண்ணே, இங்க ஒரு சோடாக்கடை இருந்துச்சே…, அதக் காணோம்’ என்று கேட்டால், ‘அதுவா தம்பி.., அத செட்டியார் வாங்கி ரொம்ப நாள் ஆச்சே. என்னவோ பெருசா கட்டடம் கட்டப் போறாங்கண்ணு சொன்னாங்க… நீங்க பெரிய வீட்டுத் தம்பிதான… அமெரிக்காவுக்குப் போயிருக்கிறதா சொன்னாங்க… நல்லா இருக்கீங்களாய்யா’ என்று பதில் வரும்… காதுல, குற்றாலச்சாரல் விழுந்த மாதிரி இருக்கும்… ‘அங்க வெள்ளக்காரப் பொண்ண கல்யாணம் பண்ணீட்டீங்களாமே…’ என்று வெள்ளந்தியா கேக்கும் போது…, ஒரு கல்யாணக் கச்சேரியே நடந்த மாதிரி இருக்கும் கிருஷ்ணா… கிருஷ்ணர்  :...

பேச்சுத்தமிழ் - பாகம் 7

மேகலா   : கிருஷ்ணா…, பேச்சுத் தமிழில், ஒரு சொல்லு, situation-க்குத் தகுந்த மாதிரி அர்த்தத்தைக் கொடுக்கும் கிருஷ்ணா… இப்போ, ‘அரம்படாமன்னு’ பார்த்தோமா… ‘அரைவேக்காடு’ – அப்படீன்னு ஒரு சொல்லு… அரைகுறையா அறிவுள்ளவங்களையும் குறிக்கும்… அரைவேக்காடு பண்டங்களையும் குறிக்கும்… அப்பா சொல்லுவாரு…, ‘இந்த காய்கறிய அரைவேக்காடா வேக வச்சா போதும்…, அதுதான் ருசி…’ அப்படீன்னு சொல்லுவாரு… சமயத்துக்குத் தகுந்த மாதிரி, இந்த ‘அரைவேக்காடு’ நல்லதாகவும் கூட அர்த்தப்படுத்தலாம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! ரொம்ப interesting ஆக இருக்கே…. மேகலா  : கிருஷ்ணா…, சின்னப்புள்ளைங்க, தன் வயசுக்கு மீறி பேசும் போது…,  ‘உழக்கு மாதிரி இருந்துக்கிட்டு, என்ன பேச்சு பேசுது பாரு…’  அப்படீம்பாங்க… கிருஷ்ணர்  : ஏன் ‘நாழி’ மாதிரின்னு சொல்லக் கூடாதா…. மேகலா  : அளவைகளில் நாழி பெருசு.., ‘உழக்கு’ சின்னதுல்ல கிருஷ்ணா… அதான் அப்படி சொல்றாங்க… அதே மாதிரி, ஒல்லியா இருக்கவங்கள, ‘ஈர்க்குச்சி’ மாதிரி இருக்கான்னும்…, குண்டா இருக்கவங்கள, ‘கத்தரிக்காய்க்கு கை, காலு முளைச்ச மாதிரி’ இருந்துக்கிட்டு, இந்தப் போடு போடுறா...