Posts

Showing posts from December, 2019

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 63

மேகலா : யுத்த களத்தில், துரோணர், பாண்டவ சேனையைப் பொசுக்கித் தள்ளியதைப் பார்த்து, துரியோதனன் வெற்றிக் களிப்பில் மூழ்கினான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். பின்னர், துரியோதனனுக்கும், பீமனுக்குமிடையே பெரும் யுத்தம் நடந்தது. துரியோதனன் படை ஒரு நிலையில் சிதறவே, துரியோதனனுக்கு உதவியாக, பகதத்தனும் வந்து சேர்ந்தான்; அவன் பெரும் போர் செய்தான். பகதத்தனின் யானை மிகவும் விசேஷமானது. இந்திரனுடைய ஐராவதத்திற்கு நிகரான அந்த யானையை போர்க்களத்தில் பகதத்தன் அற்புதமாகச் செலுத்தத் தெரிந்தவன். அவன் பாண்டவ சேனையை மீண்டும் மீண்டும் விரட்டிக் கொண்டிருந்தான். அர்ஜுனன், ஸம்சப்தர்களுடன் போர் புரிந்து கொண்டிருந்த வேளையில், பகதத்தனின் யானை பிளிறும் சப்தத்தை அர்ஜுனன் கேட்டான். பயங்கரமான அந்த ஒலியைக் கேட்ட அர்ஜுனன், கிருஷ்ணரிடம், ‘கிருஷ்ணா, இந்த ஒலி பகதத்தனின் யானை எழுப்பும் ஒலிதான். அவனுடைய யானைக்குச் சமமான யானையை நான் எந்த யுத்தத்திலும் பார்த்தது கிடையாது. அந்த யானை, ஆயுதங்களின் கூர்மையையும், நெருப்பின் உஷ்ணத்தையும், சர்வ சாதாரணமாகத் தாங்கிக் கொண்டு, சண்டையிடக் கூடியது'. இவர்களால் பாண்டவ சேனைய

மனிதர்கள் பலவிதம் - பகுதி 3

மேகலா : அஜித் தோவல், பொற்கோவிலுக்குள் எந்த வேஷத்தில் நுழைந்தார் என்று உன்னை guess பண்ணச் சொல்லியிருந்தேனே, கிருஷ்ணா! உன்னால் யூகிக்க முடிந்ததா....? சரி.....! பரவாயில்லை, நானே சொல்கிறேன். ‘ரிக்‌ஷாக்காரன்’ மாதிரி சென்றாராம், கிருஷ்ணா! நீ நம்புகிறாயா....? கிருஷ்ணர் : அஜித் தோவல், இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம் மேகலா! மேகலா : நானும் அப்படித்தான் நினைக்கிறேன், கிருஷ்ணா. ஒரு ரிக்‌ஷாக்காரன், சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த தீவிரவாதிகள், அவரைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அதற்கு அவர், ’நான் ஒரு பாகிஸ்தானி உளவாளி; உங்களுக்கு உதவுவதற்காகவே வந்திருக்கிறேன்’ என்று சொல்லி நோட்டம் விட்டிருக்கிறார், கிருஷ்ணா! கிருஷ்ணர் : விசாரணை என்றால், சும்மாவா விசாரித்திருப்பார்கள்?! ...... ’தீவிரவாத விசாரணை’...... சும்மா சொல்லக் கூடாது; மனுஷன் நாட்டுக்காக உயிரையே கொடுப்பார் போலிருக்கிறது..... மேகலா : ராணுவத்திற்கு அவர் அனுப்பிய தகவல் இதுதான்; ‘பொற்கோவிலுக்குள் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அரசாங்கம், கோவிலுக்குள் மின்சாரம், தண்ணீர் இரண்டையும் தடை செய்த

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - பகுதி 62

மேகலா : பீஷ்மர் வீழ்ந்த பிறகு, துரோணர், கௌரவப் படைக்கு சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். துரோணர், துரியோதனனைப் பார்த்து, ‘துரியோதனா, நீ என்ன விரும்புகிறாயோ, அதை நான் செய்கிறேன்’. இவ்வாறு கூறிய துரோணரிடம், துரியோதனன், ‘தருமபுத்திரனை உயிருடன் பிடித்து, என்னிடம் நீங்கள் கொண்டு வந்து சேர்த்தால், நான் மகிழ்ச்சியடைவேன்’ என்று கேட்டுக் கொண்டான். துரோணர், ‘அரசனே! தருமபுத்திரனைக் கொன்று விடாமல் உயிருடன் பிடித்துத் தர வேண்டும் என்று கேட்கிறாய். இது என்னை மகிழ்விக்கிறது. இந்த உலகில் பகைவர்களே கிடையாது என்று அர்த்தமாகிறது’ என்று மகிழ்ச்சியடைந்தார். துரியோதனன், ‘தர்மனை நீங்கள் கொன்றாலும், பாண்டவர்கள் அந்தக் கோபத்தின் காரணமாக, நம்மைக் கொல்லத்தான் போகிறார்கள். உயிருடன் தர்மன் பிடிபட்டால், அவனுடன் சூது ஆடி, மறுபடியும் அவனை வென்று, பாண்டவர்களை நிரந்தரமாகக் காட்டிற்கு அனுப்புவேன். அப்படி ஏற்படும் வெற்றி, நீடித்து நிலைக்கும். தர்மன் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை’ என்று கூறினான். துரியோதனன் சொன்னதைக் கேட்ட துரோணர், ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும், தர்மனை உயிருடன் பிடித்துத் தருவதாக வாக்களித்தார

மனிதர்கள் பலவிதம் - பகுதி 2

மேகலா : எனது அடுத்த சுவாரஸ்யமான விஷயம் பற்றி இந்த வாரம் சொல்லுவதாகக் கூறியிருந்தேனல்லவா....? இந்திய பாதுகாப்புத் துறையின் ஆலோசகர்..... கிருஷ்ணர் : யாரு..., நம் அஜித் தோவலா....? இவரைப் பற்றி நானே உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன், மேகலா..... ஏதோ, கதை சொல்கிறாயே கேட்போம் என்றிருந்தேன். சொல்லு..... அஜித் தோவலைப் பற்றி நீ என்ன அறிந்து கொண்டாய்; அதைச் சொல்லு முதலில்..... மேகலா : கிருஷ்ணா! முதலில் இந்த மாதிரியான ஒரு ஆலோசகரைத் தேடிப் பிடித்து, நம் ராணுவத்தை உன்னதமான நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்; தீவிரவாதத்தைக் கட்டோடு ஒழிக்க வேண்டும்; அதற்குப் பயமறியாத, தேசப்பற்றுள்ள ஒருவரைத்தான், இந்தத் துறைக்கு ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று நினைத்து, அஜித் தோவல் என்ற இந்த பாதுகாப்பாளரிடம், தைரியமாக, நம் ராணுவத்தைக் காப்பதற்கான பொறுப்பைக் கொடுத்திருக்கிறாரே நம் பாரதப் பிரதமர்; அவருக்கு ஒரு 'salute'. கிருஷ்ணர் : ’இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து                           அதனை அவன் கண் விடல்’    -   என்ற குறளுக்கு விளக்கமே பிரதமரின் இந்த செயல் தான். சரி, அவரைப் பற்றி நீ

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 61

குருக்ஷேத்திரத்தில் அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரிடம் ஆசியும், அனுமதியும் பெற்ற கர்ணன், மீண்டும் அவரை நமஸ்கரித்து விட்டு, துரியோதனன் இருப்பிடத்திற்குச் சென்றான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். மேகலா : கிருஷ்ணா, யுத்த களத்தில், பீஷ்மரும், கர்ணனும் பேசும் இந்தப் பகுதி கண்ணீரை வரவழைக்கிறது; இல்லையா, கிருஷ்ணா? பலர் உயிர் துறந்த நிலையிலும், பீஷ்மர், துரியோதனனிடமும், கர்ணனிடமும், யுத்தத்தைக் கை விட்டு, சமாதானத்தை நாடச் சொல்வது, அவருடைய பக்குவத்தைக் காட்டுகிறது. கிருஷ்ணர் : கண் முன்னே, தலை துண்டிக்கப்படுதலும், ரத்தம் ஆறாய் ஓடுவதும் காணச் சகிக்காதவர்; ஒரு கட்டத்தில், ’வாழ்நாள் முழுக்க யுத்தம் புரிந்து, உயிர்களைக் கொல்வதிலேயே கழித்து விட்டேன்’ என்று விரக்தியாய்ப் பேசுகிறார். அவருக்குத் தெரியும், இறுதியில் பாண்டவர்கள் வெல்லப் போகிறார்கள் என்று. முடிவு தெரிந்த யுத்தத்தில், உயிரிழப்பு அவருக்கு மன வருத்தத்தைக் கொடுக்கிறது. கடைசியாக ஒரு முயற்சி; தான் வீழ்ந்தால், சமாதானம் உண்டாகலாம் என்று நினைக்கிறார். அதனால்தான், தன்னிடம், தன்னைச் சாய்க்க வழி கேட்ட தருமனுக்கு, ‘சிகண்டிய

மனிதர்கள் பலவிதம் - பகுதி 1

மேகலா : Hello கிருஷ்ணா! Happy birthday to you, கிருஷ்ணா! (கிருஷ்ண ஜெயந்தி சமயம் எழுதப்பட்டது) கிருஷ்ணர் : ‘அக்கார அடிசலும்’, ‘சர்க்கரைப் பொங்கலும்’ சாப்பிட்டுச் சாப்பிட்டு திகட்டி விட்டது, மேகலா..... உன் வாழ்த்துக்களுக்கு நன்றி, மேகலா! மேகலா : வாழ்த்துச் சொன்னேனா!? வாழ்த்து பெறத்தான் வந்தேன் கிருஷ்ணா! நீ எனக்குக் கடவுள் மட்டுமல்ல, கிருஷ்ணா! நீ என் ’குரு’. எனக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்லுகிறாய். என் மீது பரிவு கொண்டு, என் நலத்தின் மீது அக்கறை கொண்டுள்ளாய். என்னோடு வம்பளக்கிறாய்! என்னை உரிமையாய் கலாய்க்கிறாய். நான் திருட்டு முழி முழிச்சால், உடனே கண்டு பிடித்து கண்டிக்கவும் செய்கிறாய். நீ என் அம்மாவா! நண்பனா! பல சமயங்களில் நான் திணறிப் போகிறேன். நீ எனக்கு என்ன உறவு என்று யோசிக்கும் போது, கண் சிமிட்டி, மாயமாய் மறைந்தும் போகிறாய். என்னைக் கடந்து போவதால், உன்னைக் ‘கடவுள்’ என்று அழைக்கிறேன். கடவுள் மட்டுமே, நண்பனாய், குருவாய், தாயாய், தந்தையாய், ஏன், சமயத்தில் குழந்தையாய்க் கூட மாற முடியும். நீ என் கடவுள் என்றால், எனக்கு நீதானே வாழ்த்துச் சொல்ல வேண்டும்! கிருஷ்ணர் : நான் கொ

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 60

மேகலா : பீஷ்மர், யுத்த களத்தில் தனது முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்தார். தேவர்களும், ரிஷிகளும் வானத்தில் கூடி விட்டனர். அங்கு நறுமணம் பொருந்திய காற்று வீசியது. தேவ வாத்தியங்கள் முழங்கின. பீஷ்மர் மீது பூமாரி பொழிந்தது. தேவர்களின் ஆசி பெற்ற பீஷ்மர் மீது சிகண்டி பல அம்புகளைப் பாய்ச்சினான். அச்சமயம், அர்ஜுனனும் பல பாணங்களை பீஷ்மர் மீது எய்தான். தன் மீது பாய்ந்த அம்புகளை அர்ஜுனனுடையதுதான் என்று துச்சாசனனிடம் காட்டி, ‘என் கவசங்களைப் பிளக்கும் அம்புகளை அர்ஜுனனால் மட்டுமே பாய்ச்ச முடியும்’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். என்றாலும், பாண்டவர்கள், சிகண்டியை முன்னிறுத்தி, பீஷ்மர் ஒருவரையே எதிர்த்துப் போரிட்டாலும், பீஷ்மர் அசையாமல் மலை போல் நின்றார். அர்ஜுனன் பாணங்களால் பீஷ்மரைத் துன்புறுத்தினான். உடலிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓட, பீஷ்மர், ரதத்திலிருந்து கிழக்கு முகம் பார்த்த நிலையில், கீழே சாய்ந்தார். பீஷ்மர் கீழே விழுந்த போதே, அவருடன் கூடவே, துரியோதனாதிகளின் மனதிலிருந்த தைரியமும் கீழே விழுந்தது. வானத்திலிருந்து யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர் கூட்டம், ‘ஆ’வென்று ஆச்சரியம் மிக

கதை கதையாம், காரணமாம் - பகுதி 13 (நிறைவுப் பகுதி)

மேகலா : சென்ற பகுதியின் இறுதியில், நாராயணப் பெருமாள், நாரதரை பூலோகத்துக்குக் கூட்டிச் சென்றார் என்று பார்த்தோம். அங்கு ஒரு விவசாயி குடும்பத்தை மறைந்திருந்து, நாரதரும் பெருமாளும் பார்க்கத் தொடங்கினார்கள். அதிகாலை வேளை, தூங்கிக் கொண்டிருந்த விவசாயி எழுந்தவுடன், கிழக்குத் திசை நோக்கி ஒளியைப் பரப்பும் சூரியனைத் தொழுது, ‘இறைவா, நாராயணா! உலகமெல்லாம் செழிக்கட்டும், மழை பொழியட்டும், பூமி நனையட்டும், ஆடு, மாடு, கன்றுகள், உயிர்கள் யாவும் பசியாறி, பயன் பெறட்டும்’ என்று வணங்கி விட்டு, குளித்து முடித்து, தாயை வணங்கி, மனைவியிடம் இன்முகம் காட்டி, கலப்பையைத் தோளில் சாய்த்துக் கொண்டு, வயலுக்கு வந்து சேர்ந்தான். விவசாயி வயலுக்கு வந்தவுடன், மாடுகளெல்லாம், ‘மா....’ என்று குரல் கொடுத்தன. கன்று, கட்டிய கயிறை அறுத்துக் கொண்டு, துள்ளிக் குதித்து ஓடி வந்து, அவன் கால்களை நக்கின. ஆடுகளெல்லாம், தீவனத்துக்காக, ‘மே...’ என்று சப்தம் எழுப்பின. கனிவில் மனம் நெகிழ்ந்த விவசாயி, பரபரப்பானான். மாட்டுத் தொழுவத்தைப் பெருக்கி, சாணத்தை வழித்துக் குப்பையில் போட்டு, மாடுகளைக் குளிப்பாட்டி, தூபம் காட்டி, தீவனம் வைத்தான். கன

கதை கதையாம், காரணமாம் - பகுதி 12

மேகலா : கிருஷ்ணா! சிக்கலான சமயத்தில், புத்திசாலித்தனமாகத் தீர்ப்பு சொல்லும் கதை ஒன்று சொல்வதாகக் கூறியிருந்தேனல்லவா? சோழ மன்னர்களில் ‘கரிகால் சோழன்’ பற்றி உனக்குத் தெரியுமா, கிருஷ்ணா? கிருஷ்ணர் : கல்லணையைக் கட்டியவர் தானே..... நன்றாகத் தெரியும். என்ன அவரைப் பற்றி? ஏதாவது கதை விடப் போகிறாயா....? மேகலா : இல்ல, கிருஷ்ணா..... கரிகால் சோழன் சிறு வயதிலேயே, அரசர் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். சிறு வயதிலேயே, அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும், கூர்த்த மதியிலும், புத்திசாலித்தனத்திலும், விவேகமாய் செயல்படுவதிலும், கொஞ்சமும் குறைந்தவரில்லை. ஒரு முறை அவருடைய வழக்காடு மன்றத்திற்கு வழக்கு ஒன்று வந்தது. இரண்டு ஊரைச் சேர்ந்த பொதுமக்களுக்குள், நீர்ப்பங்கீடு பிரச்னை ஏற்பட்டு, கலவரமாகி, அது court வரைக்கும் வந்து விட்டது. இரண்டு ஊரைச் சேர்ந்த பெரிய மனிதர்கள், அரசவைக்கு வந்து, அரசனிடம் தங்கள் வழக்கை எடுத்துரைக்கக் காத்திருந்தார்கள். அரசனும் அரசவைக்கு வந்தார். இளஞ்சிரிப்பும், சிவந்த கரங்களும், முற்றாத தேகமும், முதிராத பால் வடியும் முகமுமாக அரசனைப் பார்த்தவுடன், மக்கள், ‘இத்தனை சிறுவயதுப் பையனா, நமது வழ

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 59

சென்ற பகுதியின் இறுதியில், ஒன்பதாவது நாள் போர் முடிந்ததோடு நிறுத்தியிருந்தோம். மேகலா : ஐயோ கிருஷ்ணா! அர்ஜுனன் உன் காலைப் பிடிப்பதாகட்டும், பீஷ்மர் உன் கையால் தான் வீழ்த்தப்பட வேண்டும் என்று கேட்பதாகட்டும், திரும்பத் திரும்ப ரசித்து, வேண்டுமென்றே நடந்தது போல இருக்கிறது, கிருஷ்ணா.... கிருஷ்ணர் : சரி! பீஷ்மர், துரியோதனனுக்கு ‘விஷ்வோபாக்யானம்’ சொல்லும் நிகழ்ச்சியில், நீ உனக்குப் பிடித்த காட்சியை வர்ணிக்கிறாயே..... மேகலா : கிருஷ்ணரின் மேன்மையை விளக்க எந்த நிகழ்ச்சியைச் சொன்னாலும், அது அவரின் மேன்மையைப் பல மடங்கு உயர்த்தத்தான் செய்யும்; அது என் வாழ்வின் நிகழ்வாக இருந்தால் கூட.... நான் எல்லோருக்கும் தெரிந்த நிகழ்ச்சி இரண்டைக் கூறினேன். பிறருக்காகவே வாழ்ந்த சரித்திரம் தான், ஸ்ரீ கிருஷ்ணரின் சரித்திரம். அதில் சுவாரஸ்யம் அதிகம் உள்ளதால், கண்ணனை விளையாட்டுப் பிள்ளையாகப் பார்ப்பவர்கள் அதிகம். கிருஷ்ணர் : சரி! பாகவதம் பிறகு படிக்கலாம்.... பத்தாம் நாள் யுத்தத்தில், பீஷ்மர் என்ன செய்யப் போகிறார், பார்க்கலாம்..... பீஷ்மரின் விரக்தி ஒன்பதாவது நாள் யுத்தம் முடிந்த பிறகு, தருமபுத்திரர

கதை கதையாம், காரணமாம் - பகுதி 11

மேகலா : கிருஷ்ணா! ‘இயல்பாய் இரு’ என்ற தலைப்பிற்கு மற்றொரு கதை இந்த வாரம் சொல்வதாகச் சொல்லியிருந்தேனல்லவா....? இதோ, அந்தக் கதை.... ஒரு சினிமா நடிகை எப்பொழுதும், make-up-போடு இருப்பவள்; camera முன்புதான் அவளுக்கு வாழ்க்கை.... அவள் திரையில் வந்தாலே, மக்கள் ஆரவாரம் செய்வதும், கரகோஷம் எழுப்புவதும், சர்வ சாதாரண நிகழ்வுகள். புகழின் உச்சியில் இருக்கும் அவளுக்கு, ஆடம்பரம் இல்லாமல், முக்கியமாக make-up இல்லாமல், simple ஆக, ஒரு cotton saree கட்டிக் கொண்டு, கண்ணாடி வளையல் மாட்டிக் கொண்டு, casual ஆக ஊரைச் சுற்றி வர வேண்டும் என்று ஆசையாக இருக்கும். அந்தச் சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாமல், தினந்தோறும் camera முன்னாடி நின்று நடிப்பது என்பது, நித்திய வேலையாகிப் போனது. அன்று, அவளுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தது. உதவியாளர்கள் பலர் வீட்டில் இருந்தாலும், காலையில் எழுந்து, குளித்து, simple ஆக dress பண்ணிக் கொண்டு, make-up இல்லாமல், market செல்லக் கிளம்பினாள். உதவியாளர்கள், ‘madam, என்ன வேண்டும் சொல்லுங்கள், நாங்கள் வாங்கி வருகிறோம்’ என்றார்கள். ‘No, யாரும் என் கூட வர வேண்டாம். நான் மட்டும் தான்

கதை கதையாம், காரணமாம் - பகுதி 10

மேகலா : கிருஷ்ணா! சமீபத்திய news ஒன்று. ’நம் முன்னோர்கள், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, அத்திவரதரை குளத்துக்குள் வைத்திருக்கிறார்கள் என்றால், இனி அந்த பயம் தேவையில்லை. வரதரை, பொதுமக்கள் அனைவரும் தரிசிக்கும்படி இனி கோயிலில் பிரதிஷ்டை செய்யலாமே’ என்று நம்ம ஊரு ஜீயர், ஒரு அறிக்கை விட்டிருக்கிறார், கிருஷ்ணா. இந்தக் கருத்தை எல்லா ஜீயர்களும் ஒன்று சேர்ந்து பேசி முடிவெடுத்து, அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப் போகிறார்களாம். இதற்கிடையில், ஜூலை மாதம் 25-ம் தேதியிலிருந்து, வரதர், நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார், கிருஷ்ணா! கிருஷ்ணர் : நல்ல முடிவா இருக்கே.... எத்தனையோ கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் தரிசனம் தர அத்திவரதர் முடிவெடுத்து விட்டால், அவரைத் தடுக்க யாரால் முடியும்...? மேகலா : கிருஷ்ணா! நான் நேற்று ஒரு படம் பார்த்தேன். அதில், S. P. பாலசுப்ரமணியம் அப்பாவாகவும், பிரபுதேவா மகனாகவும் நடித்திருப்பார்கள். மகன் ஒரு பெண்ணைக் காதலித்திருப்பான். அந்தப் பெண் ஒரு பெரிய மந்திரியின் பொண்ணு. இவனோ, சாதாரணமானவரின் மகன். தனக்கு அந்தப் பெண் கிடைப்பாளோ, மாட்டாளோ என்று மகனுக்கு ஒரே கலவரமாக இருக்கும்