Posts

Showing posts from October, 2022

வழிப்போக்கர்கள் - பகுதி 1

கிருஷ்ணர் : ”காட்டு வழி தனிலே - அண்ணே! கள்ளர் பயமிருந்தால் - எங்கள் வீட்டுக் குலதெய்வம் - தம்பி வீரம்மை காக்குமடா! “நிறுத்து வண்டியென்றே - கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே” - எங்கள் கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா!” மேகலா : என்ன கிருஷ்ணா.... பொடி நடையாய் நடந்து வந்தாயா.... என்ன பாட்டுப் பாடி வந்தாய்? கிருஷ்ணர் : உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சி; அதான் பொடி நடையாய் கிளம்பி வந்தேன். ‘கதிரவனில்’ சூடாய் ஒரு coffee சாப்பிடலாம் என்றால், ‘நான் மட்டும் தனியா எப்படி’ என்று யோசிச்சி, அப்படியே நடந்து வந்தேன். வழிப்போக்கிலே பாலத்தைக் கடக்கும் போது, வழித்துணைக்கு இருக்கட்டுமே என்று, பாரதியாரின் வண்டிக்காரன் பாட்டைப் பாடி வந்தேன். நீ கேட்டுட்டயா.... மேகலா : வழிப்போக்கர்கள் தான், இரவு நேரத்தில், தனியாகப் பயணம் செய்யும் போது, தன் பயத்தை மறைக்க பாட்டுப் பாடிக் கொண்டே செல்வார்கள். நீ பயப்படுறியா என்ன? கிருஷ்ணர் : ’பயம்மா’.... நானா.... சேச்சே..... ச்சும்மா, வீரம்மையையும், மாரியம்மனையும் கூப்பிட்டேன்.... சரி..., அது கிடக்கட்டும்..., பாட்டு எப

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 13 (நிறைவுப் பகுதி)

  மேகலா   : கிருஷ்ணா…., செம மூடுல இருக்க கிருஷ்ணா நீ…. ‘லே ஜாயேங்கே, லே ஜாயேங்கே தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ – என்ற பாட்டுதானே…. கிருஷ்ணா….. எனக்குக் கல்யாணமான வருடம் 1974…. நான் பூனாவில் இருந்த போது, Cycle Society-யில் குடியிருந்தேன். சைக்கிள் கடை வைத்திருக்கும் பஞ்சாப் சிங்குகள் குடியிருந்த காலனி… எனக்குக் கல்யாணமாகி 2 மாதம்தான் ஆகியிருந்தது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு பஞ்சாப் சிங் வீட்டில் கல்யாணம். Aunty, uncle, இளம் வயதினர், குழந்தைகள் என மாப்பிள்ளை ஊர்வலத்தோடு, ஊர்வலம் வருகிறார்கள். Band வாசிப்பவர்கள், இந்தப் பாட்டை வாசிக்க ஆரம்பித்ததும், பாட்டி முதல் குழந்தைகள் வரை குதூகலமாய் டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுகிறார்கள். ஊர்வலம் சற்று நிற்கிறது. எந்த வித பந்தா இல்லாமல், பகட்டுக்காக இல்லாமல், இது சடங்கு என்று இல்லாமல், சந்தோஷமாக ஆடுகிறார்கள். நாங்கள் வாசலில் நின்று வேடிக்கை பார்த்தோம். எனக்குக் கொஞ்சம் ஏக்கமாகவும் இருந்தது, நம்ம கல்யாணத்தில் டான்ஸ் ஆடலியே என்று. அன்று, அந்த வீட்டு வாசலில் வைத்துத்தான் தந்தூரி, ரொட்டி, சிக்கன் மற்றைய உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கப்பட்டது. சாப்

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 12

மேகலா   : கிருஷ்ணா…., நான் ஆரம்பத்துல என்ன சொன்னேன்…. கல்யாணத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் அவரவர் மன விருப்பப்படிதான் நடக்கிறதுன்னு சொன்னேன்ல….   இப்ப எங்க பக்கத்துல, ‘மருதாணி இடுவது’ என்பது trending-ல இருக்கும் ஒரு கலாச்சாரம் என்பதைக் காட்டிலும், ‘கலாட்டா’ என்று சொன்னால், நீ easy-யாகப் புரிந்து கொள்வாய்…. கிருஷ்ணர்  : Oh! ஏன் அப்படிச் சொல்லுற…. மேகலா  : இந்த ‘மருதாணி இடுவது’ எல்லாம் எங்க பக்கத்துல function வைத்துக் கொண்டாடுவது கிடையாது. மணப்பெண் வீட்டில், கொல்லையில் வளர்ந்திருக்கும் மருதாணி இலையைப் பறித்து, சில கட்டெறும்புகளைச் சேர்த்துப் போட்டு, விழுதாக அரைத்து, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மணப்பெண்ணுக்கு,  ‘மருதாணி போட்டுக்கோ, கை நல்லா சிவக்கும்; கல்யாணத்தன்று மங்களகரமாக இருக்கும்’  என்று பரிந்துரை செய்து, இடச் சொல்லுவார்கள். இதற்கு function-லாம் நடத்த மாட்டார்கள். அரைத்ததில், மணப்பெண் இட்டது போக மிச்சமிருந்தால், மற்றவர்களும் அவர்களாகவே வைத்துக் கொள்வார்கள். மருதாணி இடுவது, சந்தோஷத்தின் அடையாளம். ஆனால், இதை function-ஆக நடத்தி, கல்யாணச் சடங்காகச் செய்தவர்கள் North Indians

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 11

மேகலா   : கிருஷ்ணா, எங்கள் பக்கங்களில் ’கட்டு சாதம்’ என்ற சம்பிரதாயம் கிடையாது…. ஆனாலும், கல்யாணத்தன்றாவது, கறிச்சாப்பாடு அன்றைக்காவது…, கல்யாண வீட்டார், மிளகாய்க்குழம்பு, கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு, மாங்காய் ஊறுகாய் என்று மாஸ்டரிடம் வைத்துத் தரச் சொல்லுவார்கள். அதை எடுத்து வந்து, கல்யாணம் முடிந்த பின், குடும்பத்தார்கள் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடுவார்கள். கட்டு சாதம் என்று தனியாகச் சமைப்பதில்லை கிருஷ்ணா. ஆனால், ஐயர் வீட்டுக் கல்யாணங்களில், கட்டு சாதம் என்பது, 3-வது நாள் நடக்கும் ஒரு சிறப்பான விருந்து கிருஷ்ணா…. கல்யாணத்தில், சடங்கு, சம்பிரதாயம், என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை நடத்தி, அலுத்து களைச்சு போயிருப்பாங்கல்ல…, அதான் மூன்றாவது நாள் கட்டு சாதம் என்று, புளிசாதம், தயிர்சாதம், மிளகுக்குழம்பு, சிப்ஸ் என்று ஒரு சம்பிரதாயத்தை இரு வீட்டாரும் கோலாகலமாகக் கொண்டாடி சாப்பிடுவார்கள் போல…. சில chef, ‘கட்டு சாத’ மெனுவை பட்டியலிட்டு, தயாரித்துத் தருவதாக விளம்பரப்படுத்தியிருந்ததைப் பார்த்தேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! விளம்பரமே செய்திருந்தார்களா…..! அதில் என்னென்ன மெனு