Posts

Showing posts from April, 2020

நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 2

மேகலா : ஸ்ரீவி enter பண்ணியவுடன் நேரே..... என் ‘மாரியம்மனின்’ காலடியில் தான், போய் இறங்கினேன், கிருஷ்ணா.... கிருஷ்ணர் : யப்பா.... போய்ப் பார்த்துட்டியா.... ஆத்தாளும் உன்னைப் பார்க்கக் காத்திருப்பாள்...., இல்லையா, மேகலா? மேகலா : கிருஷ்ணா....., பூக்குழி கொடியேறி 5 நாட்கள் ஆகி விட்டன. இதுவரையில், இப்படி பூக்குழி விரத காலத்தில், ஊருக்கு வெளியே இருந்ததே கிடையாது. என் குற்ற உணர்வு, பாசம், அன்னையைப் பிரிந்த பிள்ளையின் ஏக்கம், எல்லாம் கலந்த தவிப்பில் நான் நிற்க, என் அன்னை சிறிது நேரம் அங்கேயே என்னை நிறுத்தி விட்டாள். பூசாரி என்னைக் கவனிக்கும் நேரம் வரைக்கும், என் மௌன மொழிகள், என் அன்னையிடம் ஆயிரம் வார்த்தைகள் பேசின. அம்மாவும், ‘எங்க போன, நீ’ என்று கம்பீரமாய் கேட்டது போல சிலிர்த்துப் போனேன், கிருஷ்ணா! கிருஷ்ணர் : கேட்டாளா....? ஆயிரம் பக்தர்கள் புடைசூழ இருந்தாலும், தன்னை விரும்பும் ஒரு பக்தனையாவது காணவில்லையென்றால், அன்னை தவித்துத்தான் போவாள். மேகலா : கிருஷ்ணா...., இந்த வார்த்தைகள்; இது போதும் எனக்கு.... வெக்கையான நேரத்தில், மழைநீரை, ‘ஹோலி’ நீராக என் மீது பாய்ச்சியிருக்கிறாய் . அ

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 80

மேகலா : யுத்த களத்தில், சல்யன், கர்ணனின் மதிப்பைக் குறை சொல்லி, அர்ஜுனனின் பெருமையை அதிகரித்துப் பேசி, கர்ணனைக் கோபமுறச் செய்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இப்படி, தருமபுத்திரனுக்கு உதவி செய்வதற்காகப் பேசினாலும், தன் போர்த்திறமையை வெளிப்படுத்துவதிலும், ரதத்தைத் திறமையாக ஓட்டுவதிலும் சல்யன், எந்தவிதக் குறையும் வைக்கவில்லை. என்றாலும், கர்ணன் தன் ஆர்வத்தைக் கொஞ்சம் இழந்து சிந்தனையில் ஆழ்ந்தான். பின் சல்யனைப் பார்த்து, ‘கிருஷ்ணரையும், அர்ஜுனனையும் பயமின்றிப் போரில் எதிர்க்கத் துணிந்த இந்த நேரத்தில், நான் பெற்ற இரண்டு சாபங்களை உன்னிடம் கூறுகிறேன். பிராமணர்களுக்கு மட்டுமே அஸ்திரம் பயிற்றுவிப்பது என்று விரதம் பூண்டிருந்த பரசுராமரிடம், பிராமணனாக வேஷமிட்டு, அஸ்திரங்கள் அனைத்தையும் கற்று, சிறந்து விளங்கினேன். என்னுடைய திறமையிலும், குருபக்தியிலும் மிகுந்த மகிழ்ச்சி கொண்ட பரசுராமர், என் தொடை மீது தன் தலையை வைத்துத் தூங்கினார். தேவேந்திரன், அர்ஜுனனுக்கு நன்மை செய்ய விரும்பி, ஒரு புழுவாக உருமாறி, என் தொடையைத் துளைத்து, அதிலிருந்து இரத்தம் கசிந்தது. குருவின் தூக்கம் கலையாமல்

நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா..... ரோடெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கிறது..... வீதியில் ‘மாரியம்மன்’ தேரைக் காணோம்..... காப்புக் கட்டிய கரத்தோடும், மஞ்சளில் குளித்த ஈர உடையோடும், ஒரு பக்தனைக் கூட வீதியில் பார்க்க முடியவில்லை. வெடிச் சத்தத்தைக் கேட்கவே முடியவில்லை. என்ன ஆச்சு....? ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த ஊருக்குச் சென்றாலும், நகரமே முடங்கிக் கிடக்கிறது. என்ன காரணம்...? உனக்கு ஏதாவது தெரியுமா....? மேகலா : என்ன கிருஷ்ணா.... ‘நீ’ இப்படிச் சொல்லுற...! மனிதனுடைய பிறப்புக்குக் காரணமானவன் நீ.... மனிதன் உன்னை வந்து சேரும் நாளைக் கூட, ‘விதி’ என்ற பெயரில் கணித்து வைத்திருப்பவன். உன்னுடைய இணைய தளத்தில், உலகின் இண்டு இடுக்குகளில் நடக்கும் காட்சி ஒவ்வொன்றும் பதிவாகி, உன் பார்வைக்கு வந்து விடும். இது எப்படி miss ஆயிருச்சி..... ‘கொரோனா வைரஸ்’ என்ற ‘விஷக் கிருமி’, இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே வீதியில் நடமாட விடாமல் ஓடி ஒளியச் செய்கிறது. நீ எப்படி அறியாமல் விட்டாய்...! இங்கு பூக்குழி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆண்டாள் கோயில் முதல், காசி விசுவநாதர் கோயில் வரை எல்லாக் கோயில்கள

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 79

மேகலா : கர்ணனுக்குத் தேரோட்ட சல்யன், சில நிபந்தனைகளோடு சம்மதித்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இது சம்பந்தமாக ஸ்ரீ கிருஷ்ணருக்கும் எனக்கும் இடையே நடந்த சம்பாஷனையோடு இப்பகுதியைத் துவக்குகிறேன். மேகலா : மீனு வலயில மாட்டிக்கிச்சு டோய்.... கிருஷ்ணா! அடுத்த batsman கர்ணன்.... clean bowled.... கிருஷ்ணர் : இதுக்குத்தான முதலிலேயே கேட்டு வச்சிக்கிட்டோம். சல்யன் தேரோட்ட மறுக்கும் போது, எனக்கெல்லாம் ‘பக்கு’ ‘பக்கு’னு இருந்தது,  ‘ஐயய்யோ, இவன் வேற காரியத்தைக் கெடுத்துருவான் போலயே’ என்று. கொஞ்சம் ‘பிகு’ பண்ணினாலும், தருமனிடம் வாக்குறுதி தந்தது ஞாபகத்திற்கு வந்துரிச்சி, நமக்கும் காரியம் சுலபமாப் போச்சி. இன்னும் பார், சல்யன், கர்ணனை நல்லா வெறுப்பேத்துவான். ஒரு project பண்ணும் போதோ அல்லது கூட்டு முயற்சியிலோ, அங்குள்ளவர்களிடையே chemistry நன்றாக ஒத்துப் போகணும். அப்படி ஒத்துப் போகாத காரியம், எத்தனை திறமையாளர்கள் வேலை பார்த்தாலும், எரிச்சலும், விதண்டாவாதமும், காரியத்தை முடிக்க விடாமல், சிதறச் செய்யும். அதற்கு இந்தச் சம்பவம் மிகச் சிறந்த உதாரணம். சரி...., நீ கதையை மேலே சொல்லு..

வரி கட்ட மறந்துட்டாங்க...!

கிருஷ்ணர் : ஹாய்....ஹாய்....ஹாய்... என்ன மேகலா, ஒரே visit மயமாக இருக்குதோ.... ஒரு club, ’சிங்கப் பெண்’ விருது கொடுக்கிறது; ஒரு club, cooking competition-க்கு judge ஆகக் கூப்பிடுகிறார்கள்..... இனி, உன்னை ’chef அம்மா’ என்றுதான் கூப்பிடப் போகிறேன்....! மேகலா : நீ என்ன வேணாலும் என்னைக் கூப்பிட்டுக்கோ.... இப்போ...., என்ன topic-ல் பேசப் போகிறோம்...? கிருஷ்ணர் : மேகலா.... இப்ப, தமிழ்நாட்டுல யாரோ mass hero-வாமே.... யாரு அது....? வருமான வரித்துறை அதிகாரிகள், shooting spot-க்கே போயி, arrest பண்ணிட்டாங்களா...? மேகலா : உனக்கு யாரு இந்த news-அ சொன்னது...? IT raid தான் நடந்தது..... arrest-லாம் பண்ணல..... கிருஷ்ணர் : வருமான வரித்துறை அதிகாரிகள், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று, விசாரணைக்காக அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். நம் ஹீரோ, தன்னுடைய காரில் ஏறப் போனார். ’ அவரைத் தங்கள் Innova காரில், நடுவில் உட்கார வைத்து, இரு பக்கமும் அதிகாரிகள் உட்கார்ந்து அழைத்துச் சென்றனர்’ என்றால், இது ’ஒரு வகையான’ நடவடிக்கை தானே... மேகலா : இதை, சட்டப்பூர்வமான நடவடிக்கை என்றும் சொல்லலாமே.....

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 78

கர்ண பர்வம் கர்ணன் படைத் தலைமை ஏற்றான் மேகலா : பதினைந்தாவது நாள் யுத்தம் முடிந்த பிறகு, கௌரவ சேனையின் முக்கியஸ்தர்கள் ஆலோசனை நடத்தினார்கள். துரியோதனன் அவர்களைப் பார்த்து, ‘இனி அடுத்து என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான். அஸ்வத்தாமா, ‘அரசனே! மனிதர்கள் முழு முயற்சியோடு ஒரு காரியத்தில் இறங்கும் பொழுது, தெய்வமும் அவர்களுக்குக் கருணை புரிகிறது. இந்த நேரத்தில், நம்மிடையே சிறந்து விளங்குபவனை படைத் தலைவனாக நாம் ஏற்க வேண்டும். மனிதர்களுள் சிறந்தவனாகிய கர்ணனை, நமது படைத் தலைவனாக நியமிப்போம். கர்ணன் பலம் படைத்தவன். அவனைச் சேனாதிபதியாக அபிஷேகம் செய்வதே முறை’ என்று தன் கருத்தைக் கூறினான். அஸ்வத்தாமாவின் யோசனையைக் கேட்ட துரியோதனன், பெரும் மகிழ்ச்சியோடு, கர்ணனைப் பார்த்துப் பேசினான், ’கர்ணா! தேவர்களின் படைகளுக்கு முருகன் தளபதியாக இருந்தது போல், நமது படைக்கு நீ தளபதியாக இருந்து நடத்திச் செல்ல வேண்டும். இருளைச் சூரியன் அழிப்பது போல, எதிரிகளின் படைகளை நீ நாசம் செய்வாயாக’. இவ்வாறு துரியோதனன் கூறியவுடன், கர்ணன், படைத் தலைமை ஏற்பதற்குச் சம்மதித்தான். ‘துரியோதனா! பாண்டவர்கள் கொல்ல

வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 7 (நிறைவு)

மேகலா : இன்னொரு ‘சிங்கப் பெண்’ணைப் பற்றிக் கேட்டிருந்தாயல்லவா, கிருஷ்ணா....? அந்த ‘சிங்கப் பெண்’ யாரென்று கேட்டால், நீ நம்பவே மாட்டாய் கிருஷ்ணா.....! கிருஷ்ணர் : என்னவாக இருக்கும்.....? மேகலா : நீ யோசித்தது போதும்...... உன் ‘scan' கண்கள் மோப்பம் பிடித்து விடும்.... நானே சொல்லுகிறேன். இப்போ, புதிதாகத் தாய்மை அடையும் பெண்கள், பிள்ளைப்பேறு, delivery time, வலி, மசக்கை என்று பயப்படுகிறார்கள் அல்லவா...... கிருஷ்ணர் : அவர்களின் கருவறையில் இருக்கும் குழந்தைகளுக்கு positive vibration, normal delivery-க்கான மனப் பயிற்சி, உடற்பயிற்சி கொடுக்கிறார்களா.....? மேகலா : அப்பப்ப, நீ கடவுள் என்பதைக் காட்டி விடுகிறாய், கிருஷ்ணா..... கிருஷ்ணர் : நான் சொன்னதுதானா.... ஏன் மேகலா..... இதைத்தானே என் தங்கை ‘சுபத்ரை’, அபிமன்யுவைக் கருவுற்றிருந்த போது செய்து காட்டினாள்..... சொல்லப் போனால், பிரகலாதன் காலத்திலேயே, அவனுடைய தாயார் கருவுற்றிருந்த போது, வாத்தியார், நாராயண மந்திரத்தின் பெருமைகளைக் கூறிக் கொண்டே வருவார். அப்பொழுது, பிரகலாதனின் தாயார், சற்று கண் அயர்ந்து விடுவாள். அப்பொழுது, வாத்தியார்

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 77

முக்கண்ணனின் மகிமை மேகலா : அஸ்வத்தாமா, நாராயணாஸ்திரத்தை ஏவியவுடன், பாண்டவர் தரப்பு வீரர்களைப் பார்த்து ஆயுதங்களைக் கீழே போடுமாறு கூறிய கிருஷ்ணர், மேலும் தொடர்ந்தார். ‘கையில் ஆயுதம் தாங்கிக் கொண்டு வருபவர்களை இந்த நாராயணாஸ்திரம் நிச்சயமாக வீழ்த்தி விடும். இதை அடக்குவதற்கு உண்டான ஒரே வழி, இதனிடம் சரணடைந்து விடுவதே! நாம் அமர்ந்துள்ள வாகனங்களையும், ரதத்தையும் விட்டுக் கீழே இறங்கி விட வேண்டும். இந்த அஸ்திரம் நாராயணனைப் போன்றது. எந்த மனிதர்கள் இதை எதிர்க்க நினைக்கிறார்களோ, அவர்கள் அழிவார்கள். அனைவரும் நாராயணாஸ்திரத்தை நோக்கி கை கூப்பி நில்லுங்கள்’. இப்படிக் கிருஷ்ணர் கூறியவுடன், அனைவரும் அஸ்திரங்களைக் கீழே போட்டார்கள். ஆனால், பீமன் மட்டும் கிருஷ்ணருடைய வார்த்தைகளுக்கு இணங்கவில்லை. பீமன், ‘யாரும் அஸ்திரங்களைக் கீழே எறியாதீர்கள். இந்த அஸ்திரத்தை நான் தடுத்து விடுகிறேன். என் கையில் இருக்கும் ‘கதை’யைக் கொண்டு நாராயணாஸ்திரத்தை நான் நாசம் செய்கிறேன்’ என்று அஸ்வத்தாமாவை எதிர்த்துப் போர் செய்வதைத் தொடர்ந்தான். மற்ற எல்லா வீரர்களும், தங்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி, ஆயுதங்களைக் கீழே

வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 6

மேகலா : மேடைக்கு என்னைப் பேச அழைத்ததும், ‘கனவில் மிதப்பது போல இருந்ததா....?’ என்று கேட்டிருந்தாயல்லவா, கிருஷ்ணா..... அப்படீண்ணும் சொல்ல மாட்டேன். மெதுவாக நடந்து, பொன்னாடையையும், விருதையும் ஏற்றுக் கொண்டு, ‘மைக்’ முன்னே சென்றேன். President, 'அம்மா, ‘மூன்று’ நிமிடம்’ என்றார்...... கிருஷ்ணர் : அச்சச்சோ....... நமக்கு time குறித்துக் கொடுத்தாரா..... அப்போ.... நம்மைப் பற்றிய ரகசியம் அவருக்குத் தெரியுமோ.....? மேகலா : ரகசியமா....? கிருஷ்ணர் : ஆமா....ம்..... ‘மைக்’ கிடைத்தால், மணிக்கணக்காகப் பேசுவோமே.... அதைச் சொன்னேன்..... மேகலா : நீ என்னை ரொம்பக் கிண்டல் பண்ணுற, கிருஷ்ணா...... கிருஷ்ணர் : ச்சோ...ச்சோ.... நீ ரொம்ப வருத்தப்படுறயா....? மேகலா : வருத்தமா....? உன்னோடு பேசும் போது, குதூகலம் தவிர எனக்கு வேற தெரியவே தெரியாது, கிருஷ்ணா! President 3 நிமிஷம்ணு சொன்னால், நாம விட்ருவோமா, கிருஷ்ணா....? அவங்க club-ஓட concept-ஆக, ‘வாழ்த்துக்கள் நம்மை வளப்படுத்தும், வலுப்படுத்தும், வசப்படுத்தும்’ என்றும், ‘சிங்கப் பெண்’ title-க்கான அர்த்தமாக, ‘தொட்டில் ஆட்டும் கை, தொல்லுலகை ஆளும் கை’