Posts

Showing posts from October, 2021

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 16

கிருஷ்ணர்   : அடுத்து என்ன…. அவர்களுடைய நடையைப் பார்க்கலாமா…. மேகலா  : நடையா…. நடவடிக்கையா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : விடிய விடிய படித்த பின்னும், சீதைக்கு ராமன் சித்தப்பாண்ணு சொன்ன கதையா இருக்கு… இவ்வளவு நேரமும் கிராமத்து மக்களின் எளிய பழக்க வழக்கம், வாழ்க்கை முறை பற்றித்தானே பேசி வருகிறோம். அதுவே நடவடிக்கைகள் தானே…  நாம பேசப் போவது நடையைப் பற்றி…. மேகலா  : ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா’ கிருஷ்ணர்  : ‘தடம் பாத்து நடை நடந்து’ – ‘வாவ்’…. எப்படிப்பட்ட வார்த்தை…  நம் முன்னோர்கள் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என்பதை, எப்படி அழகாக, ‘தடம் பாத்து நடை நடந்து’ என்று கவிஞர் சொல்லியிருக்கிறார்….,  பார்த்தாயா மேகலா…. மேகலா  : Oh! நீ தடம் பாத்து நடப்பதைச் சொல்லுகிறாயா…. நான் நடப்பதைப் பற்றிப் பேசப் போகிறோம் என்று நினைத்தேன்…. கிருஷ்ணர்  : நீ தானே பாட்டுப் பாடினாய்…. சரி, சரி…, நீ எந்த நடையைச் சொல்லப் போகிறாய்… மேகலா  : இது உடம்பு இளைப்பதற்காகப் போகும் walking இல்ல கிருஷ்ணா…. கிராமத்து மக்கள், transport பரபரப்பு இல்லாத காலத

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 15

மேகலா   : ஆமாம் கிருஷ்ணா…. எங்க ஐயாமையோட தண்டட்டியை உருக்குவதற்கு, தங்க நகை செய்யும் ஆசாரி என்ன செய்தார் தெரியுமா…. மேலே சுற்றியிருந்த தகடை, chocolate paper மாதிரி உரித்து எடுத்து விட்டார்.   அப்பத்தான் எங்களுக்குத் தெரியும்…. தண்டட்டியில், தங்கம் கொஞ்சம், அரக்கு நிறைய என்று… கிருஷ்ணர்  : Oh……! உங்க ஐயாமை காலத்துக்குப் பிறகு, யாரும் தண்டட்டி அணியவில்லையோ…. மேகலா  : எங்கள் உறவுகளில், எங்க ஐயாமா generation-க்குப் பிறகு வந்தவர்கள் யாரும் காது வளர்க்கவில்லை கிருஷ்ணா…. காது வளர்த்துக் கொடுப்பவர்கள் யாரையும் எனக்குத் தெரியவும் தெரியாது கிருஷ்ணா….. ஆனால், ‘தோடு’ போடும் இடத்தின் மேல் பகுதியில், ‘கொப்பு’ என்ற nut-screw type என்ற நகையை அணியத்தான் செய்தார்கள். உனக்குத் தெரியுமா கிருஷ்ணா….  ஒற்றைக்கல் கம்மலை, ‘கடுக்கன்’ என்பார்கள்  கிருஷ்ணா…. இந்தக் கடுக்கனை பொதுவாக ஆண்கள்தான் பெரும்பாலும் அணிவார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! ஆண்களுக்கு ‘கடுக்கன்’ என்றால், பெண்களுக்கு…. மேகலா  : ஏழுகல் தோடு, தண்டட்டி, மூக்குத்தி, புல்லாக்கு…. கிருஷ்ணர்  : மூக்குத்தி தெரியுது…. புல்லாக்குன்னா…. மேகலா  : மூக்கின்

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 14

கிருஷ்ணர் : கிராமீய வாழ்க்கையின் அழகைப் பேசத்தானே ஆரம்பித்தோம்.... எவ்வளவு பெரிய இலக்கியங்கள் இங்கிருந்து பிறந்திருக்கிறது.... யப்பா.... மேகலா : இது ஊத்துத்தண்ணி கிருஷ்ணா.... தோண்டத் தோண்ட ஊத்துத்தண்ணி பெருகத்தானே செய்யும் கிருஷ்ணா.... கிருஷ்ணர் : சரி..., கிராம மக்கள் நடை, உடை என்று எதுகைக்காகச் சொன்னாயோ தெரியவில்லை. ஆனால், கிராம மக்களின் costume பற்றி நீயும் தெரிந்து வைத்திருப்பாய். ஆண்கள் என்றால், இடுப்பில் ஒரு வேஷ்டி..., தோளில் ஒரு துண்டு... பெண்கள் என்றால், ஒன்பது கெஜம் சேலை.., அதுவும் பின்கொசுவம் வைத்து கட்டப்படும் சேலை.... Blouse-லாம் கிடையாது... கிருஷ்ணர் : அப்படியா.... ஆண்களுக்கான costume நான் அறிந்தது தான். என்னுடைய costume-மும் அதுதானே... பெண்களின் உடையைப் பற்றிச் சொல்லு மேகலா; நான் தெரிந்து கொள்கிறேன்... மேகலா : ஒரு விவசாயி, வேஷ்டி மட்டும் தான் கட்டுவான். பண்ணையம் பார்க்கும் போது, துண்டை தலைப்பாகையாக கட்டிக் கொள்வான். வேட்டியை மடித்து தார்ப்பாச்சிக் கட்டுவான் என்பது எதற்காக.... இந்த வெய்யிலில் வேலை செய்யும் போது, சட்டையெல்லாம் தேவையில்லை. மண்ணோடு மண்ணாக

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 13

மேகலா   : இது மட்டுமல்ல கிருஷ்ணா…. ‘பஞ்ச் டயலாக்’ மாதிரி, பழமொழியை உருவாக்கி, அதன் மூலம் எத்தனையோ தகவல்களை அடுத்த தலைமுறையினருக்கு சொல்லியிருக்கிறார்கள் கிருஷ்ணா. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’  – என்று ஒரு விவசாயி, விதைப்புக்கான காலத்தை சொல்லி வைத்தால், அது அழகான பழமொழி ஆகிப் போச்சு பார்த்தாயா கிருஷ்ணா… கிருஷ்ணர்  : சொல்லு மேகலா… இது மாதிரி கிராம மக்கள் சொல்லி வச்ச பழமொழிகளைச் சொல்லு… அதக் கேட்டாலே,  கிராமத்தான், psychological-ஆக, practical-ஆக, technical-ஆக எத்தனை ஞானமுள்ளவனாக இருந்திருக்கிறான்  என்று தெரிந்து விடும்…. ‘ ஆலும் வேலும் பல்லுக்குறுதி’  – என்று யார் சொன்னார்களோ…. ஆனால், அதில் பல்லுக்கான மருத்துவம் அடங்கியிருக்கிறது. எவ்வளவு அசால்ட்டாக சொல்லியிருக்கிறார்கள் பார். மேகலா  : கிருஷ்ணா! நீ psychological என்று சொன்னாயா…. எனக்கு உடனே, ‘ சின்னப்புள்ளைக வெள்ளாம, வீடு வந்து சேராது’  – என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருது. இன்றைய காலத்தில், சின்னப்புள்ளைக கையில், தைரியமாய், IT சம்பந்தப்பட்ட நுணுக்கமான project-ஐ கொடுக்கச் சொல்லுகிறார்கள். ஆனாலும், மிகப் பெரிய பொறுப்புகளை, சின்னப்புள்ளைக கையில் கொட