Posts

Showing posts from July, 2020

ராமரின் வில்லும், கிருஷ்ணரின் ஸ்ரீ சக்கரமும் - பகுதி 2

மேகலா : இந்த இலச்சினை (ராமர் விட்ட அம்பு, ‘டிராகனை’ குத்தி நின்றது) trending ஆகிக் கொண்டிருந்த வேளையில், பிரதமர், சீனாவின் 59 app-களை செயலிழக்கச் செய்த செயல், அமெரிக்காவை ரொம்பவே குஷிப்படுத்தியது. 'ஓஹ்ஹோ... சீனாவை வீழ்த்த இப்படி ஒரு route இருக்கோ' என்று துள்ளிக் குதிக்க.... நம் நாட்டில், ஒரு heart-warming நிகழ்ச்சி ஒன்று நடந்தது. கிருஷ்ணர் : ஹ்.... ஹேங்.... என்ன அது, எனக்குத் தெரியாமல்.... மேகலா : எல்லாம் நீ நடத்தியதுதானே கிருஷ்ணா; உனக்குத் தெரியாமலா.... ஜூன் 3-ம் தேதி, நாங்களெல்லாம் news பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம். எந்த அறிவிப்பும் இல்லாமல், தனி ஹெலிகாப்டரில், ராணுவ உடை அணிந்த நமது பாரதப் பிரதமர், முப்படைத் தளபதி, ‘பிபின் ராவத்’ மற்றும், Army Chief, General Naravane ஆகியோருடன், லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், நமது ராணுவம் முகாமிட்டிருக்கும் பகுதிக்குச் சென்று, அவர்களிடையே உணர்ச்சி மிகுந்த உரையாற்றினார். கிருஷ்ணர் : பள்ளத்தாக்கின் அந்தப் புறம், இன்னும் சீனப்படை, பீரங்கியோடு முகாமிட்டிருந்த வேளையிலேயே....., என்ன துணிச்சல்...! மேகலா : ஆம்மாம்....

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 93

மேகலா : மிகவும் காயமுற்ற நிலையில் இருந்த துரியோதனன், பாதுகாப்பிற்காக, ஒரு மடுவில் நீரைக் கட்டி, ஒளிந்து கொண்டான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இங்கே இவ்வாறு நடக்கையில், யுத்த களம் சூன்யமாகியது. துரியோதனன் மடுவில் ஒளிந்தபடி இருந்தான். சூரியன், அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். யுத்த களத்தில் மட்டுமல்லாமல், பாசறைகளில் கூட, கௌரவர்கள் யாருமே இருக்கவில்லை. துரியோதனன் தரப்பு, பெரும் தோல்வியைக் கண்டது. திருதராஷ்டிரனின், வைசிய குலத்து மனைவிக்குப் பிறந்த ‘யுயுத்சு’ தான், துரியோதனனின் சகோதரர்களில் எஞ்சியவன். மகாரதர்களான கிருபர், அஸ்வத்தாமா, கிருதவர்மா மூவரும், சஞ்சயனிடமிருந்து துரியோதனன் இருக்குமிடத்தை அறிந்து, அவனைக் காண விரும்பினார்கள். சஞ்சயன், தான் அறிந்ததையும், பார்த்ததையும், விதுரனிடம் விவரித்தார். அவர் பெரும் துக்கத்திற்குள்ளானார். யுயுத்சுவைப் பார்த்து, ‘திருதராஷ்டிரனுக்கு நீ தான் இனி எல்லாம். நீ தான் அவனுக்கு இனி ஊன்றுகோல்’ என்று அறிவுரை கூறினார். மேகலா : ஸம்சப்தர்கள், பாஞ்சால வீரர்கள், பாண்டவர்கள், கௌரவர்கள், யானைகள், ரதங்கள், தேரோட்டி, குதிரை, கர்ஜனை, கோபாவேசம

ராமரின் வில்லும், கிருஷ்ணரின் ஸ்ரீ சக்கரமும் - பகுதி 1

மேகலா : கிருஷ்ணா....... கிருஷ்ணா....... கிருஷ்ணர் : அடாடா..... டா..... இந்த கொரோனா நேரத்துல..... என்ன இப்படி.... அலறியடிச்சிக்கிட்டு ஓடி வர்ற...... ஏதோ முக்கியமான விஷயம் போலிருக்கே.... உன் முகம் bright-ஆ இருக்குது..... மேகலா : இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், என்ன விஷயம் என்று கண்டுபிடித்து விடுவாய்..... நானே சொல்கிறேன்...... நீ தெரிந்தாலும், சொல்லாத...... கிருஷ்ணர் : Oh! சரி..... நீயே சொல்லு..... என்ன விஷயம்....? மேகலா : கிருஷ்ணா! சீனாவின் அத்துமீறலை நீ அறிவாயா....? கிருஷ்ணர் : ‘லடாக்’ பகுதியில், ‘கால்வான்’ பள்ளத்தாக்கில் படைகளைக் குவித்து வைத்ததையா..... ஏதோ கொஞ்சம் தெரியும்.... அதற்கென்ன..... மேகலா : நான் இந்த ‘பாலிடிக்ஸ்’ பற்றியெல்லாம் பேசப் போவதில்லை, கிருஷ்ணா..... ஏனென்றால், எங்கள் நாட்டிற்கு, தேச பக்தி கொண்ட பிரதம மந்திரியைத் தந்திருக்கிறாய். அவருக்கு புத்திக்கூர்மையையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்திருக்கிறாய். அதே சமயத்தில், உன்னுடைய அருளையும் அளித்திருக்கிறாய் என்று நான் நம்புகிறேன். கிருஷ்ணர் : நீ நம்பினால், சரியாகத்தான் இருக்கும்....

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 92

மேகலா : துரியோதனனிடமிருந்து ராஜ்ஜியம் நழுவிக் கொண்டிருந்த நிலையிலும், அவன், அவனது எஞ்சியிருந்த படை வீரர்களைப் பார்த்து உற்சாக வார்த்தைகளைக் கூறி, அவர்களைப் போர் புரிய வைக்க முயற்சித்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்ட கௌரவப் படையினர், மீண்டும் ஒன்றுகூடிப் பாண்டவர்களை எதிர்க்கத் தொடங்கினார்கள். சாத்யகி, சகுனியை எதிர்ப்பதில் முனைந்தான். அர்ஜுனன், கௌரவப் படைக்குள் புகுந்தான். சால்வ மன்னனை, சாத்யகி வீழ்த்திக் கொன்றான். இப்படிப் பல பின்னடைவுகள் கௌரவர்களுக்கு நேர்ந்தாலும், துரியோதனன் முனைந்து போர் செய்து கொண்டிருந்தான். பாண்டவ சகோதரர்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி அனைவரையும், துரியோதனன் ஒருவனே எதிர்த்தான். பாண்டவர்கள் அனைவரும் கூடியும் துரியோதனனை எதிர்க்க முடியவில்லை என்பதைக் கண்ட தேவர்கள் வியந்தார்கள். சகுனி கடும் யுத்தம் புரிந்து, தருமனை நடுங்கச் செய்தான். தருமனைக் காப்பாற்ற, சகதேவன் அவரை ரதத்தில் ஏற்றி, வேறு இடத்திற்குக் கொண்டு சென்றான். பாண்டவ தரப்பினர், பெரும் கோபம் கொண்டனர். அங்கு எல்லா வரம்புகளையும் கடந்த யுத்தம் நடக்கத் தொடங்கியது.

Lock-down கலகலப்பு - பகுதி 5 (நிறைவு)

மேகலா : என் அம்மாவைப் பற்றிய விவரங்களோடு இந்த வாரப் பகுதியை ஆரம்பிப்பதாகக் கூறியிருந்தேனல்லவா... ஏன் கிருஷ்ணா...., என் அம்மாவுக்கான, நான் எழுதியிருக்கும் குறிப்புகளை நீ படித்தாயா..., இல்லையா....? எங்க அப்பா, அவர் பாட்டுக்கு அதிகாரம் பண்ணிக்கிட்டே இருப்பார். எங்க அம்மா, கேட்குற நேரத்தில் தான் கேட்பார். சில சமயங்களில், எங்க அப்பா தலையீட்டால், எங்க அம்மாவுக்கு வேலை மிச்சமாகுதுல்ல. எங்க அப்பா எல்லா விஷயத்திலும் தலையிடுகிறேன் பேர்வழி என்று.... எங்க அம்மாவிடம் நல்லா ‘டோஸ்’ வாங்குவார் என்றும் எழுதியிருந்தேன் அல்லவா. இருவருடைய நட்பும் ஒரு புரிதலுடன் இருந்தது கிருஷ்ணா! கிருஷ்ணர் : அதுவும் சரிதான். இருப்பினும், உன் எழுத்துக்களினாலும், நினைவுகளின் பகிர்வினாலும், உன் அம்மா, அப்பாவுக்கு காவியமே படைத்து விட்டாய் மேகலா. ஊரடங்கு காலத்தை, வெகு சுவாரஸ்யமாகத்தான் கொண்டு செல்கிறாய். மேகலா : அதற்குப் பிறகு, சின்னப் பிள்ளைகளுக்கான ‘அடுப்பில்லாத சமையல் போட்டி’ நடத்தினோமே...., நீ பார்க்கலியா, கிருஷ்ணா...? கிருஷ்ணர் : நீயாகச் சொன்னால், ரசனையோடு சொல்வாய். சரி...., முதலில் இது யாரோட idea? மேகலா :

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 91

மேகலா : துரியோதனனின் வேண்டுகோளை ஏற்று, சல்யன் கௌரவர் படைக்குத் தலைமை ஏற்கச் சம்மதித்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். கௌரவர் தரப்பில் எல்லோருக்கும் மீண்டும் புதியதோர் உற்சாகம் பிறந்தது. இந்தச் செய்திகளை யுதிஷ்டிரர் அறிந்தார். அவர் இது பற்றிக் கிருஷ்ணரிடம் பேசினார். துரியோதனன் படைக்கு சல்யன் தலைமை ஏற்றிருக்கும் இந்த நிலையில் என்ன செய்வது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தருமன், கிருஷ்ணரைக் கேட்டுக் கொண்டான். கிருஷ்ணர் சொன்னார், ‘யுதிஷ்டிரரே! சல்யன் சிறந்த வீரன் என்பதில் சந்தேகமில்லை. இந்த சூழ்நிலையில், சல்யனை எதிர்ப்பதற்கு நீர்தான் தகுதியானவர் என்பது என் கருத்து. புலிக்குச் சமமான வல்லமை உம்மிடம் இருக்கிறது. இந்த இறுதிக் கட்டத்தில் சல்யனை நீர் வீழ்த்துவதுதான் முறையாக இருக்கும். உமக்குள்ள தவ வலிமையையும், க்ஷத்திரிய பலத்தையும் காட்டுவதற்கு இதுதான் தருணம். ஆகையால், சல்யனை வதம் செய்யத் தக்கவர் நீரே’. இப்படிக் கூறி விட்டு, கிருஷ்ணர் தனது பாசறைக்குச் சென்றார். பதினேழாவது நாள் இரவு கழிந்தது. தனது படைகளைத் தயாராகும்படி, துரியோதனன் உத்தரவிட்டான். யாருமே தனியாக

Lock-down கலகலப்பு - பகுதி 4

கிருஷ்ணர் : இத்தனை பிள்ளைகளையும், கலகலப்பாக வைத்திருப்பது லேசுப்பட்ட காரியமில்லை என்று சொன்னேனல்லவா..... அடுத்து, whatsapp-ல் என்ன post செய்திருக்கிறாய்....? ஒரே பரபரப்பாய் இருக்கிறாயே... மேகலா : கிருஷ்ணா! முதலில் நான் நினைத்தது, ’எங்க ஐயாமா, ஐயாப்பா தொடங்கி, ராணிமா பிள்ளைகள் வரை அனைவர் photo-வையும் போட்டு, அவர்களைப் பற்றின சிறு குறிப்பு (bio-data) எழுதி post செய்யலாம்’ என்று. அது என்னோட style-ல் எழுதும் போது, வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைத்துத்தான் ஆரம்பித்தேன்..... கிருஷ்ணர் : ஏன்....? என்னாச்சு.... அப்படி எழுதலயா? மேகலா : எங்க அம்மாவை எழுதும் போது, சரித்திரம் படைத்தவர்களை, அவர்கள் வாழ்க்கை முறைகளை எழுதும் போது, நம்மைப் பற்றியும் எழுதினால், அதில் அத்தனை சுவாரஸ்யம் இருக்கும் என்று எனக்குத் தோணவில்லை. அதனால், எங்க அம்மாவைப் பற்றி எழுதிய கையோடு முடித்து விட்டேன், கிருஷ்ணா! கிருஷ்ணர் : ஏன்....? Bio-data என்றால், சின்னச் சின்னதாக, பெயர், ஊர்.... இப்படித்தானே.... மேகலா : நான் அப்படி எழுதல கிருஷ்ணா....! கிருஷ்ணர் : Oh! ஓஹ்ஹோ.... அம்மா..... சிறு குறி

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 90

சல்ய பர்வம் சல்யன் சேனாதிபதியானான் மேகலா : பதினேழாவது நாள் யுத்தம் நிறுத்தப்பட்ட பிறகு. இரு சைன்யங்களும் ஓய்வெடுத்தன. அப்போது, கிருபர் துரியோதனனை நாடிச் சென்றார். யுத்தத்தில் கொல்லப்பட்ட பீஷ்மர், துரோணர், நண்பர்களான அரசர்கள் ஆகியோரை நினைத்துப் பெரிதும் துக்கித்த கிருபர், துரியோதனனுக்கு ஆலோசனை சொல்ல முற்பட்டார். ‘அரசர்களுக்கெல்லாம் தலைவனே! நான் சொல்லும் வார்த்தைகளைச் சற்று பொறுமையோடு கேள். யுத்த தர்மத்தை விட மேலான தர்மம் க்ஷத்திரியனுக்குக் கிடையாது. பகைவனை எதிர்ப்பது தான் க்ஷத்திரியனுக்கு லட்சணம்! ‘ஆனால், துரியோதனா! நமது நிலையைச் சற்று நினைத்துப் பார். பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன், உன்னுடைய சகோதரர்கள் போன்ற பல வீரர்களை நாம் இழந்து விட்டோம். அவர்களை நம்பித்தான் நாம் ராஜ்ஜியத்தை விரும்பினோம். இன்று அவர்கள் இல்லை. பதினேழு நாட்கள் யுத்தம் நடந்து விட்டது. அர்ஜுனனைக் கண்டும், பீமனைக் கண்டும் நமது படை நடுங்குகிறது. அர்ஜுனனின் போர்த் திறனை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது தானே உண்மை. பீமன் நமது சபையில் செய்த சபதத்தை இந்த யுத்த களத்தில் நிறைவேற்றி விட்டான். ப

Lock-down கலகலப்பு - பகுதி 3

கிருஷ்ணர் : உங்கள் ‘சமையல் போட்டி’யில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைக் கேட்க ஆவலாக இருக்கிறேன், மேகலா....., சீக்கிரம் சொல்லு... மேகலா : கிருஷ்ணா! எல்லோரும் lockdown-ல் என்ன செய்வது என்று தெரியாமல், பொழுது போக்கவும் முடியாமல் தானே இருக்கிறார்கள். நான் ஆரம்பித்து வைத்த போட்டி, என்னைப் போலவே, எல்லோருக்கும், எல்லோருடனும் பேசுவதற்கு வாய்ப்பாகிப் போனதுதான் நிஜம். கிருஷ்ணா! முதலில், அதாவது வியாழக்கிழமை மதியம், 1.30 மணி சுமாருக்கு, ‘மலர்’ என்னுடைய whatsapp-ல் ஒரு photo post பண்ணியிருந்தாள். ‘அத்தை, egg noodles' என்று போட்டிருந்தாள். நான் அந்த photo-வைப் பார்த்து விட்டு, ‘மலர், இதை Lord group-ல் post பண்ணிரு’ என்று போட்டிருந்தேன். அவளும், ‘சரி அத்தை’ என்று சொல்லி விட்டு, group whatsapp-ல் போட்டு விட்டாள். அப்புறம் பார்க்கணும், கிருஷ்ணா - comments-ஐ....... Priya சொல்றா.... ’veg. noodles பண்ணிட்டு, photo-வுக்காக, egg scramble-ஐ தூவியிருக்க’ என்கிறாள். ஒருத்தன் சொல்றான், ‘கடையில் noodles வாங்கிட்டு, photo போட்டுட்ட’ என்கிறான். அடேயப்பா..... கிருஷ்ணர் : அப்ப....., கிச்சன்..... களை கட்