Posts

Showing posts from April, 2025

Passion - பாகம் 2

மேகலா   : ‘சிவகாசி சமையல்’ channel ஆரம்பித்த பின்…, frankie கற்றுக் கொள்ளும் அவசியம் வந்தது கிருஷ்ணா… Bangalore-ல் Sheethal, Commercial street-க்குக் கூட்டிச் சென்றாள்… அங்கு, ரோட்டோரக் கடையில் ஒருவர், frankie செய்து கொண்டிருந்தார். ஷீத்தல், மெனக்கெட்டு, frankie செய்வதை watch பண்ணச் சொன்னாள்… சும்மாவே, ரோட்டுக் கடைகளில், பரோட்டா போடுவதை மெய் மறந்து ரசிப்பதுண்டு…. கிருஷ்ணர்  : Sorry…, ஜொள்ளு ஒழுக…, என்று சொல்லு… மேகலா  : அப்படியே இருக்கட்டும்… யாரும் சொல்லாமலேயே…, பரோட்டா செய்வதை வேடிக்கை பார்ப்பவள்…, அன்று ஷீத்தல் சொன்னதும், ஆசை ஆசையாய், frankie செய்முறையை வேடிக்கை பார்த்து…, மறுநாள், மிக அழகாகச் செய்து காட்டினோம்… மறக்காமல், ரோட்டுக்கடை விவரத்தையும் சொல்லித்தான் செய்தோம் கிருஷ்ணா….  எங்கள் channel-ல் நாங்கள் recipies-ஐ செய்து காட்டும் போது…, நான் எப்படிக் கற்றுக் கொண்டேன் என்பதையும் மறைக்காமல்…, மறக்காமல் சொல்லி விடுவேன்…. கிருஷ்ணர்  : Oh! பரவாயில்லை… மேகலா  : எங்கள் channel ஆரம்பித்த கொஞ்ச நாளில், பரவலாக, பலர் மத்தியிலும், எங்களுக்கு ஒரு பெயர் ஏற்பட்டது… ...

Passion - பாகம் 1

மேகலா   : கிருஷ்ணா…., நீ எங்க இருக்க கிருஷ்ணா…. கூப்பிட்டதும் ஓடி வருவியே கிருஷ்ணா…. இன்னம் காணலியே…. கிருஷ்ணர்  : யப்பா…., என்ன சத்தம்…. வெளியில் பனி பெய்து கொண்டிருக்கிறது…, அதை enjoy பண்ணினேன்… இன்று மார்கழி முதல் நாள் அல்லவா… எங்கு திரும்பினாலும்…., ‘திருப்பாவை’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது…. நேற்று, ஆண்டாள் கோயிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா வந்திருந்தார் அல்லவா… அதான், கொஞ்சம் லேட்டாயிருச்சி…. சரி…, நீ எதுக்குக் கூப்பிட்ட…. மேகலா  : ஏதாவது தலைப்பில் பேசலாம்னு நினைத்தேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி…., என்ன தலைப்பு யோசித்திருக்கிறாய்…. மேகலா  : என்ன தலைப்பில் பேசலாம்னு நீ சொல்லேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ‘Passion’…. அப்படீன்னா…, என்னன்னு தெரியுமா…. மேகலா  : ஒருவருடைய தனித்தன்மை…, தனித் திறமையா…, கிருஷ்ணா…. கிருஷ்ணர்  :  தனித்தன்மையாய் ஒருவரிடம் இருக்கும் தனித் திறமையை செயல்படுத்துவதில் சந்தோஷப்படுவது, ‘passion’ என்று சொல்லலாம்…  அதைப் பற்றிப் பேசலாமா… சரி…, உன்னுடைய passion எதுன்னு சொல்லு பார்ப்போம்… மேகலா  : என்னுடைய passion-ஆ...

தன்னம்பிக்கை - பாகம் 6 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : பாண்டவர்கள் கதை வேறு… எல்லோருக்கும் தெரிந்தே வனவாசம் சென்றார்கள்… பதின்மூன்று வருடங்களாக…, நாடும் நகரமும், நல்லவர்களும் அவர்களுக்காகக் காத்திருந்தனர். ஆனால், ஒரு சிற்றரசரோ…, பேரரசரோ, தன் ஆட்சியைப் பறி கொடுத்தால்…, தலைமறைவு வாழ்க்கையை…, தன் பகுதி மக்களுக்கே தெரியாமல் தான் வாழ முடியும்… உதாரணத்திற்கு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை உனக்குத் தெரியுமா… அவனுடைய இயற்பெயர், ‘மாறவர்மன்’. தன்னுடைய பெயரே, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று மாறுமளவுக்கு, சோழர்களிடமிருந்து தன்னுடைய நாட்டை மீட்பதற்கு, கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் பொறுமையாகப் போராடித்தான் அடைந்திருக்கிறான். தன்னுடைய நாடு, சோழர்களிடம் பறி போன பின், 23 ஆண்டு காலம் கழித்துப் போய், அவர்களிடம் பொறுமையாகவா கேட்டுப் பெற்றிருப்பார்… மேகலா  : இல்லை…, ஆனால், எனக்கு, இது எப்படி சாத்தியமாயிற்று என்பதுதான் என் சந்தேகமே… கிருஷ்ணர்  : சரி…, உனக்கு வேற மாதிரி கேள்வி கேட்கிறேன். உன்னுடைய ஒரு பொருளை நீ இழந்திருந்தால்…, அல்லது உன்னால் வாங்க முடியாத பொருளை வாங்க வேண்டும் என்றால், என்ன செய்வாய்…? மேகலா  : கிருஷ்ணா…, என்னைப்...