Passion - பாகம் 2

மேகலா : ‘சிவகாசி சமையல்’ channel ஆரம்பித்த பின்…, frankie கற்றுக் கொள்ளும் அவசியம் வந்தது கிருஷ்ணா… Bangalore-ல் Sheethal, Commercial street-க்குக் கூட்டிச் சென்றாள்… அங்கு, ரோட்டோரக் கடையில் ஒருவர், frankie செய்து கொண்டிருந்தார். ஷீத்தல், மெனக்கெட்டு, frankie செய்வதை watch பண்ணச் சொன்னாள்… சும்மாவே, ரோட்டுக் கடைகளில், பரோட்டா போடுவதை மெய் மறந்து ரசிப்பதுண்டு….

கிருஷ்ணர் : Sorry…, ஜொள்ளு ஒழுக…, என்று சொல்லு…

மேகலா : அப்படியே இருக்கட்டும்… யாரும் சொல்லாமலேயே…, பரோட்டா செய்வதை வேடிக்கை பார்ப்பவள்…, அன்று ஷீத்தல் சொன்னதும், ஆசை ஆசையாய், frankie செய்முறையை வேடிக்கை பார்த்து…, மறுநாள், மிக அழகாகச் செய்து காட்டினோம்… மறக்காமல், ரோட்டுக்கடை விவரத்தையும் சொல்லித்தான் செய்தோம் கிருஷ்ணா…. எங்கள் channel-ல் நாங்கள் recipies-ஐ செய்து காட்டும் போது…, நான் எப்படிக் கற்றுக் கொண்டேன் என்பதையும் மறைக்காமல்…, மறக்காமல் சொல்லி விடுவேன்….

கிருஷ்ணர் : Oh! பரவாயில்லை…

மேகலா : எங்கள் channel ஆரம்பித்த கொஞ்ச நாளில், பரவலாக, பலர் மத்தியிலும், எங்களுக்கு ஒரு பெயர் ஏற்பட்டது… அப்போ, ரொம்ப பேர், என்னை ஒரு பெரிய chef – ஆக பார்ப்பதும் உண்டு… அந்த சமயத்தில், எங்கள் உறவினர் ஒருவர்…, எங்க அம்மா வயசு உள்ளவர்…, என்னிடம், தன்னுடைய சாம்பார் பொடி ரகசியத்தைச் சொல்லி, இப்பவும், தான் கேட்பவருக்கு செய்து கொடுப்பதாகவும் சொல்லி மகிழ்ந்து போனார்… அந்த சமயத்தில், அவர் முகத்தில், சாம்பார் பொடியின் patent-ஏ அவருடையதுதான் என்ற பூரிப்பு தெரிந்தது…. நான், அவரிடம், அந்த ரகசியத்தைக் கேட்டு, ரொம்ப வித்தியாசமாகவும், சுவை கூட்டுவதுமாகவும் இருப்பதாகச் சொன்னேன்….

கிருஷ்ணர் : அது மாதிரி செய்து பார்த்தாயா…

மேகலா : நான் செய்யும் முறையில் தான், சாம்பார் பொடி…, அவருடைய முறையும் இருந்தது…. இருந்தாலும், அவருடைய அனுபவத்திற்கு நான் கொடுத்த சிறு மரியாதை கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh…., very good….

மேகலா : ஆனால் ஒன்று கிருஷ்ணா…. கூழ் வடகம் அவர் செய்தால்…, எல்லா வடகமும், சிப்பி மாதிரி அளவெடுத்து ஊற்றியது மாதிரி…, ஒரே அளவில், அவ்வளவு அழகாக இருக்கும். சிலரெல்லாம், தன் வேலையை ரசிச்சி செய்கிறார்கள்… ஆனால், அவர்கள் திறமை வெளியில் தெரிவதில்லை. குடத்துக்குள் இருக்கும் விளக்கு மாதிரி இருந்தாலும்…, சமையல் அவர்களுக்கு, passion தானே கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நிச்சயமாக…. அப்படிப் பார்த்தால்…, தன் திறமையும், தன் ரசனையும்…, யாரும் அறியாத வண்ணம் வாழ்ந்த மேதைகள் நிறையப் பேர் உண்டு மேகலா… இப்படிப்பட்டவர்களால் தான் ரசிச்சி செய்யும் வேலையை, தூக்கத்தில் கூடத் தவறாகச் செய்ய முடியாது…. தவறு நேர்ந்து விடக் கூடாது என்பதற்காகத்தான், சாமானியரிடம் சென்று கற்றுக் கொள்ளும் போது கூட, ஒரு பணிவான மாணவனைப் போல் கற்றுக் கொள்கிறார்கள்….

மேகலா : இவர்கள் தங்கள் கலையை இன்னொருவருக்குக் கற்றுக் கொடுக்கும் போதும், ரொம்ப ரசிச்சி, ஈடுபாட்டோடத்தான் கிருஷ்ணா, சொல்லிக் டொடுக்கிறாங்க… குறிப்பா.., வெங்கடேஷ் பட் மாஸ்டர், வடை சுடுவதை சொல்லிக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்…. ‘இவன் இருக்கானே…, லேசுக்குள்ள வர மாட்டான். அவனை, அப்படியே உருண்டையாய் பிடித்து, எண்ணெய்க்குள்ள மெதுவாய் விட்டால்…, சும்மா, ’தகதக’ன்னு குதிப்பான்… அப்படியே லேசா திருப்பி விட்டு…, golden color-ல வந்ததும் எடுத்தா…, அப்படியே, crispy-யா, உள்ளுக்குள்ள softஆ…., பிரமாதமாயிருப்பான்… வாவ்….’ அப்படீன்னு, அவர் வர்ணிக்கும் விதத்திற்காகவே வீடியோ பார்க்கலாம் கிருஷ்ணா…. இவர் இப்படீன்னா…, தங்கம் மாமின்னு ஒரு லேடி…., snacks செய்யும் ஒரு industry வச்சிருக்காங்க கிருஷ்ணா… அவங்க, personal ஆக, தனக்கு பலகாரம் பக்குவமாகச் செய்ய வருகிறது என்று நினைத்து, பலருக்கும் பலகாரம் செய்து கொடுக்கும் தொழிலை ஆரம்பிக்கிறார்கள்… அது, அவர்களுக்கு நன்றாகவே கை கொடுக்கிறது…. இன்று, முழுவதுமாக பெண்களையே வேலைக்கு அமர்த்தி, ரொம்ப பெரிய அளவில், industry மாதிரி நடத்துகிறார்கள். அவரைப் பார்த்து, அவருடைய industry-யைப் பார்ப்பதற்கு, chef தீனா வருகிறார்… தங்கம் மாமி, கைச்சுத்து முறுக்கு செய்வதில் கில்லி. Chef, அவருடைய கைச்சுத்து முறுக்கு திறமையைப் பற்றி விவரம் கேட்கிறார்…. அதற்கு மாமி, மாவு measurement…, மாவு பிசையும் பக்குவம்…, எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டு…., கொஞ்சம் மாவைத் தானே பிசைகிறார்…. கொஞ்சம் வெண்ணெயை எடுத்து முறுக்கு, மாவுடன் சேர்த்து பிசைகிறார். அதற்குத் தகுந்த அளவில், எள்ளு, பெருங்காயம் முதலானவற்றைச் சேர்த்து, கையில் கொஞ்சம் மாவை எடுத்து, முறுக்குத் தட்டில், முறுக்கு சுற்றுகிறார்…. இந்த வேலையைச் செய்யும் போது, ஒரு செல்ல பூனைக்குட்டியை மடியில் வைத்து தடவிக் கொடுக்கும் போது…, முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரியும் அல்லவா… அது மாதிரியான பாவனையில்…, ‘இது என் வேலை… அழகாய்ச் சுற்றி, சுவையா சுட வேண்டும்’ என்ற கவனத்தோடு செய்யும் போது…, இந்த வேலையை எவ்வளவு ஆர்வத்துடன்…., அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிறார் என்பது தெரிகிறது… அவர் நினைத்தால்…, இது demo show தானே…, நம்ம கிட்ட வேலை பார்க்கும் பெண்ணையே செய்யச் சொல்லிக் காட்டியிருக்கலாம்… At least, மாவு பிசைவதையாவது…, பிசையச் சொல்லியிருக்கலாம். ஒரு chef வந்து interview எடுக்கும் போது…, தானே அமர்ந்து, கைச்சுத்து முறுக்கின் சுவையை…, சுட்டுக் காண்பிக்க வேண்டும் என்றுதான், தன் வேலையை passion ஆக நினைப்பவர் செய்வார்கள்… இதைச் செய்யும் போது பேசியதுதான் highlight…. ’வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும்படிக்கு, ‘பெண்கள் ஒவ்வொருவரிடமும், சமையல் வகையில் நிறைய திறமை இருக்கிறது… நம்மிடம் எந்தத் திறமையும் இல்லையோ என்று யாரும் யோசிக்க வேண்டாம்…’ என்று நம்பிக்கையாய் பேசுகிறார் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஆமாம்…. சொல்லுவாரில்ல… நடைமுறையில் சாதித்தவர்… பல பெண்களுக்கு வாழும் வழியைக் காட்டியவர்… தான் ரசித்த ஒரு வேலை, தனக்கு, தாயாய்…, தனலட்சுமியாய் கை கொடுத்த அனுபவத்தை சொல்லத்தானே செய்வார்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1