Passion - பாகம் 1

மேகலா : கிருஷ்ணா…., நீ எங்க இருக்க கிருஷ்ணா…. கூப்பிட்டதும் ஓடி வருவியே கிருஷ்ணா…. இன்னம் காணலியே….

கிருஷ்ணர் : யப்பா…., என்ன சத்தம்…. வெளியில் பனி பெய்து கொண்டிருக்கிறது…, அதை enjoy பண்ணினேன்… இன்று மார்கழி முதல் நாள் அல்லவா… எங்கு திரும்பினாலும்…., ‘திருப்பாவை’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது…. நேற்று, ஆண்டாள் கோயிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா வந்திருந்தார் அல்லவா… அதான், கொஞ்சம் லேட்டாயிருச்சி…. சரி…, நீ எதுக்குக் கூப்பிட்ட….

மேகலா : ஏதாவது தலைப்பில் பேசலாம்னு நினைத்தேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…., என்ன தலைப்பு யோசித்திருக்கிறாய்….

மேகலா : என்ன தலைப்பில் பேசலாம்னு நீ சொல்லேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ‘Passion’…. அப்படீன்னா…, என்னன்னு தெரியுமா….

மேகலா : ஒருவருடைய தனித்தன்மை…, தனித் திறமையா…, கிருஷ்ணா….

கிருஷ்ணர் : தனித்தன்மையாய் ஒருவரிடம் இருக்கும் தனித் திறமையை செயல்படுத்துவதில் சந்தோஷப்படுவது, ‘passion’ என்று சொல்லலாம்… அதைப் பற்றிப் பேசலாமா… சரி…, உன்னுடைய passion எதுன்னு சொல்லு பார்ப்போம்…

மேகலா : என்னுடைய passion-ஆ கிருஷ்ணா… என்னுடைய தமிழ்… தமிழில் அழகான வார்த்தைகளை, ரசித்து எழுதுவது… அதிலும், இயற்கையான சூழலை எங்கெல்லாம் பார்த்து ரசிக்கிறேனோ…, அந்த அழகு, என் விரல்கள் வழியாக வழிந்து விடும்…. ஒரு வகையில் பார்த்தால்…, ‘என் தந்தையர் நாடெனும் போதினிலே, ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’ – என்று பாரதியார் சொன்னது போல, எனக்கு மனசுக்குப் பிடிச்ச காட்சிகளை எழுதும் போது, தமிழ் வார்த்தைகள், என் மனசு பூராவும் நிறைந்து, ஒரு சக்தியே பிறந்து விடும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : புரியுது…., நீ என்ன சொல்லப் போகிறாய் என்று எதிர்பார்த்துத்தான் கேட்டேன்…. சிலர் அப்படித்தான்…, தனக்கு சில விஷயம் பிடிக்கும்னா, அதைத் திரும்பத் திரும்ப ரசித்து செய்வார்கள்… நீ பிரியாணி சாப்பிடுவது கூட passion தானோ….

மேகலா : ஒரு திருத்தம் கிருஷ்ணா…. பிரியாணி சாப்பிடுவது எனக்குப் பிடிக்கும் தான்; ஆனால், பிரியாணி செய்வதை நான் ரொம்ப ரசிச்சிதான் செய்வேன் கிருஷ்ணா… இப்பத்தான் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது….

கிருஷ்ணர் : வரட்டும்…, வரட்டும்… அதுக்குத்தான…, இந்தக் கேள்விய நான் கேட்டேன்…

மேகலா : நாங்கள், ‘ஜேஸீஸ்’ சார்பாக…, cooking competition-க்கு judge ஆக போயிருந்தோம் இல்லையா கிருஷ்ணா… நீ நம்பவே மாட்ட கிருஷ்ணா… அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் நிறையப் பேர், சின்ன வயசுப் பெண்பிள்ளைகள்…. விதவிதமான dishes செஞ்சு கொண்டு வந்திருந்தாங்க…. அவங்ககிட்ட, சில recipes எப்படி செஞ்சீங்க என்று நான் கேட்டேன்… அதில் ஒரு girl சொன்னா…, ‘எனக்கு cooking, passion’ அப்படீன்னு சொன்னா… எனக்கு அவள் சொன்ன விதம் ரொம்ப பிடிச்சிருந்தது….

கிருஷ்ணர் : உடனே மார்க் அள்ளிப் போட்டியா….

மேகலா : அதுக்கு ஏத்த மாதிரி அவ food கூட நல்லா இருந்தது கிருஷ்ணா… ‘Passion’ என்று, நம்பள impress பண்றதுக்கு மட்டும் சொல்லல… நெசம்மாவே, ரசிச்சுதான்…, அதிலும் unique ஆகவும் செய்திருந்தா கிருஷ்ணா…. நான் கூட யோசிப்பேன் கிருஷ்ணா…, ‘சமையல் வேலை எப்படி passion ஆகும்’ என்று…. ஆனால், இது எங்க உசிருக்கும் மேலே என்று சொல்லும் ஒரு கூட்டமே இங்கு இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்னம்மா, இது புதுக்கதையா இருக்கு…. ‘கூட்டமா’…..

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நீ YouTube-ல, வெங்கடேஷ் பட்…, வாவ் chef…, தீனா…, இவர்களுடைய சமையலைப் பார்த்ததில்லையா கிருஷ்ணா… இவங்க, வெறுமனே சமையலை மட்டும் செய்து காட்டுவதில்லை… அதோட, தங்கள் அனுபவத்தையும் பகிர்வார்கள்… ஒரு food recipe-யை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்…, வெறுமனே சமையல் புத்தகத்தைப் பார்த்து மட்டும் செய்வதில்லை…. உதாரணத்துக்கு…, செட்டி நாட்டு பலகாரம் செய்யக் கத்துக்கணும்னா…, காரைக்குடிக்கே சென்று…, ஆச்சிமாரிடம் கேட்டு….; அவங்களுக்கு கத்துக் கொடுக்கும் mood இல்லையென்றால்…, காத்திருந்து, செய்து காட்டும் போது கத்துக் கொண்டு வந்ததாக, வெங்கடேஷ் பட், ஒருமுறை சொல்லியிருக்கிறார்….. சமையல் கலையைக் கத்துக் கொள்வதற்கு எவ்வளவு importance கொடுக்கிறார்… ‘அது அவர் தொழில்’ என்று சொல்லிட்டுப் போகலாம்… இந்த செய்தியை அவர் சொல்லும் போது…, ஒரு மாணவன், குருகுலத்தில் கற்றுக் கொள்ளும் போது, ஒரு தவம் மாதிரியான மனநிலையில் கற்றுக் கொண்ட பாவனை தெரிந்தது கிருஷ்ணா…. தன் தொழில் சார்ந்த கலையில், அவருக்கு எத்தனை ஆர்வம் கிருஷ்ணா…. இவர், இப்படீன்னா…., chef தீனா…, ஒவ்வொரு ஊரிலிருக்கும் famous ஆன கடையோ…, food-டோ, அதனோட expert கிட்டயே பேசி, recipe-யைக் கேட்டு, தானும் செய்து பார்க்கும் போது, அவர் முகத்தில், அப்போதான் புதுசா கத்துக்கிற student மாதிரி ஒவ்வொரு measurement-ஐயும் கேட்டு செய்யும் பாங்கு…, பார்க்கும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும் கிருஷ்ணா… இதுல ஒரு highlight என்னன்னா…., திருநெல்வேலி சென்றிருந்த போது, ‘உளுந்து சோறும், எள்ளுத் துவையலும்’ செய்து பார்க்க…, என்னைப் போல, சாதாரண housewife வீட்டுகுச் சென்று, demo பார்த்தார்… அப்போ, அவங்க சமையல் மீது…, இல்லையில்லை, ‘சமையல் கலை’ மீது எத்தனை பக்தியும், ரசனையும் வைத்திருக்கிறார்கள்….

கிருஷ்ணர் : Of course, yes… தன் தொழிலையே காதலிப்பவர்களல்லவா… அதான்…, ஒரு கல்லூரியே…, student ஆக மாறித்தான் கற்றுக் கொள்வார்கள். இவர்கள், கற்றுக் கொள்ளணும் என்பதில்லை…. ஆனால், அந்த region-க்கே சென்று…, regional மக்களுடன் சகஜமாகி, அவர்கள் சூழலுக்கேற்ப, தன்னையும் மாற்றி…, முதலில், ஒண்ணுமே தெரியாத மாதிரி பாவனையைக் கொண்டு வந்து…, யப்பா…, இதுவல்லவோ…, ‘passion’… உனக்கு, இப்படி ஒரு chance கிடைத்தால்…, நீ எப்படிக் கற்றுக் கொள்வாய்….

மேகலா : கிருஷ்ணா…. நானெல்லாம் சாதாரண ஆளு கிருஷ்ணா… இருப்பினும், ‘சிவகாசி சமையல்’ channel ஆரம்பித்த பின்…, frankie கற்றுக் கொள்ளும் அவசியம் எங்களுக்கு வந்தது கிருஷ்ணா…. Bangalore-ல், ஷீத்தல், commercial street-க்கு கூட்டிச் சென்றாள்…. அங்கு….,

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1