Posts

Showing posts from August, 2025

ஆளுமை - பாகம் 7

மேகலா   : ஆமாம் கிருஷ்ணா…. நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும்…, யார் வல்லவர்கள் என்று…. கிருஷ்ணா…, நான் இன்னொரு விஷயத்தைச் சொல்லட்டா…. கிருஷ்ணர்  : பேசுவதற்குத்தானே, ‘ஆளுமை’யை ஆரம்பித்திருக்கிறோம்… இதில் என்ன permission கேட்கிறாய்… மேகலா  : கிருஷ்ணா…, M. G. R., உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்து, release தேதியை அறிவித்து விட்டார். அவர் புகழிலும், வளர்ச்சியிலும் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் கையில் அரசாங்கம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தை release பண்ண விடக் கூடாது.. அதற்கான விளம்பரங்களையும் தடை செய்து அராஜகம் செய்தனர்… மக்களோ, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்…, படம் எப்போது release ஆகும் என்று. M. G. R. சொன்ன தேதியில் படம் release ஆகும் என்று, எந்த தியேட்டர், எத்தனை மணி show என்பதெல்லாம் சின்னச் சின்ன பெட்டிக் கடைகளுக்கு bit notice மூலம் தகவலை அனுப்புகிறார்… படப் பெட்டியை வழக்கமான முறையில் அனுப்பாமல், ரகசியமாக அனுப்பி, குறித்த தேதியில் release-ம் பண்ணி விட்டார்… ரசிகர்கள் கைக்கு பிரச்னை வந்து விட்டது… இனி படத்தை எந்த அரசாங்கமும் தடுத்து விட ...

ஆளுமை - பாகம் 6

மேகலா   : நீ சொல்லச் சொல்ல, dominating personalities-ஐ நமக்கு ஏன் ரொம்ப பிடிக்கிறது என்று இப்ப புரியுது. ஆனாலும்…, பலன் எதிர்பாராமலா கடமையைச் செய்கிறார்கள் கிருஷ்ணா…. நம் நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்று காத்திருந்து, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கலாமும் எதிர்பார்த்துத்தானே தங்கள் கடமையைச் செய்தார்கள்… அது போல, அண்ணாமலையும், மக்கள் நாட்டின் நிலமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்துத்தானே, நியாயமான முறையில் தகவல்களை எடுத்துச் சொல்லுகிறார்… கிருஷ்ணர்  : நீ கொஞ்சம் புத்திசாலின்னு நெனச்சேன்… உன் மேதாவித்தனத்தை காட்டிட்டயா…  பலன் என்பது, அவரவர் சொந்த விருப்பம் நிறைவேறுவதற்கு என்று நீங்களாக நினைத்தால்…, எத்தனை முறை கீதையை எடுத்துச் சொன்னாலும், உனக்கு விளங்காது… தான் முன் நின்று நடத்தும் கடமையின் பலனை ஆளுமையாளர்கள் சாதிப்பார்கள்…, தன் குடும்பம் பலன் பெற அல்ல…. இதுதானே காலங்காலமாய் ‘கீதை’ விளக்குவது…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி, போகட்டும்…  ஒரு பலனை, தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அடைய வேண்டும் என்பதற்காக, ஒருவன் தகுந்த நடவடிக்கையை ...