Posts

Showing posts from August, 2025

ஆளுமை - பாகம் 9

மேகலா   : கிருஷ்ணா…, நாம் கடந்து வந்த பாதைகள், நம் மனதில் பட்டா போட்டு உட்கார்ந்து விடும் என்று சொன்னாயே…, அது great கிருஷ்ணா… இன்னும் ஒரு psychology இருக்கு கிருஷ்ணா…   நம் மனசை முழுசாக ஆக்ரமித்தவர்கள், கோபப்பட்டால் கூட, அந்தக் கோபம் நம்மையும் தொற்றி விடும்   கிருஷ்ணா… கிருஷ்ணர்  : எப்படிச் சொல்லுகிறாய்… மேகலா  : இப்போ…, அரசியலில் நாம் ரசிக்கும் ஒருவர்…, இவர்களால் நம்ம நாடு வளர்ச்சியுறும் என்று யாரை நம்புகிறோமோ…, அவர்கள் கோபப்பட்டு, எதிர்க்கட்சியினர் செய்த தவறை சுட்டிக் காட்டும் போது, அந்தக் கோபம் சாதாரணமாகவே நம்மையும் தொற்றிக் கொள்ளும் கிருஷ்ணா… அதிலும், சமீபத்தில், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர், ஒரு protest-ல் பங்கு கொண்டு, காவல் அதிகாரியால் சிறை பிடிக்கப்பட்டு, காவலதிகாரியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பத்திரிகையாளர் ஒருவர், மாநிலத் தலைவரிடம், ‘உங்கள் போராட்டமே ஒரு நாடகம்’ என்று இன்னொரு தலைவர் சொல்கிறாரே’ என்று கேட்கிறார். அதற்கு, B. J. P. மாநிலத் தலைவர், ‘அவர் ‘work from home’ politics பண்ணுகிறார்… கோடிக் கணக்கில் ஊழல் நடந்து, அதை எதிர்த்து,...

ஆளுமை - பாகம் 8

மேகலா   : தர்மபுத்திரனுக்கு, ‘ராஜசூய யாகம்’ நடத்த வேண்டும் என்று ஆசை வருகிறது. ஆனால், கிருஷ்ணரோ, ’ஜராசந்தனை அழிக்காமல் ராஜசூய யாகம் நடத்த முடியாது… அதை மீறி நீ செய்தாலும், யாகம் பாதியிலேயே நின்று விடும்’ என்று எச்சரிக்கிறார்…. அதற்கான காரணத்தை பாண்டவர்கள் கேட்க, ’ஜராசந்தன் 100 அரசர்களை ருத்திரருக்கு பலி கொடுத்தால், இந்திரலோகப் பதவி கிடைக்கும் என்ற ஆசையில், 86 அரசர்களை சிறைபிடித்து விட்டான். இன்னும் 14 அரசர்களை பிடித்து விட்டால், அவனை யாராலும் வெல்ல முடியாது… அதனால் அவனை அழிக்க வேண்டும்… யாதவ குலத்தையே மதுராவிலிருந்து விரட்டியடித்தவன்’ என்று சொன்னதும், தர்மபுத்திரன் ஜராசந்தனுக்குப் பயந்து, ராஜசூய யாகத்தையே நிறுத்துவதாகக் கூறினான். இதைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணர்,   ‘ஒரு காரியத்தை நடத்த வேண்டாம் என்று சொல்வதற்குக் கூட, அவனால் முடியாது என்ற தகுதி இருக்க வேண்டும்.   ஆனால் ஜராசந்தனை அழிக்கும் வல்லமை கொண்ட பீமனும், அர்ஜுனனும் இருக்கும் போது, முயற்சியே எடுக்காமல் யாகத்தை நிறுத்துவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல.   எடுத்த காரியம் எப்படி ஆனாலும் சரி, ‘முயற்சி’ என்ற ஒன்று இல்லாமல் போனால்...

ஆளுமை - பாகம் 7

மேகலா   : ஆமாம் கிருஷ்ணா…. நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும்…, யார் வல்லவர்கள் என்று…. கிருஷ்ணா…, நான் இன்னொரு விஷயத்தைச் சொல்லட்டா…. கிருஷ்ணர்  : பேசுவதற்குத்தானே, ‘ஆளுமை’யை ஆரம்பித்திருக்கிறோம்… இதில் என்ன permission கேட்கிறாய்… மேகலா  : கிருஷ்ணா…, M. G. R., உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்து, release தேதியை அறிவித்து விட்டார். அவர் புகழிலும், வளர்ச்சியிலும் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் கையில் அரசாங்கம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தை release பண்ண விடக் கூடாது.. அதற்கான விளம்பரங்களையும் தடை செய்து அராஜகம் செய்தனர்… மக்களோ, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்…, படம் எப்போது release ஆகும் என்று. M. G. R. சொன்ன தேதியில் படம் release ஆகும் என்று, எந்த தியேட்டர், எத்தனை மணி show என்பதெல்லாம் சின்னச் சின்ன பெட்டிக் கடைகளுக்கு bit notice மூலம் தகவலை அனுப்புகிறார்… படப் பெட்டியை வழக்கமான முறையில் அனுப்பாமல், ரகசியமாக அனுப்பி, குறித்த தேதியில் release-ம் பண்ணி விட்டார்… ரசிகர்கள் கைக்கு பிரச்னை வந்து விட்டது… இனி படத்தை எந்த அரசாங்கமும் தடுத்து விட ...

ஆளுமை - பாகம் 6

மேகலா   : நீ சொல்லச் சொல்ல, dominating personalities-ஐ நமக்கு ஏன் ரொம்ப பிடிக்கிறது என்று இப்ப புரியுது. ஆனாலும்…, பலன் எதிர்பாராமலா கடமையைச் செய்கிறார்கள் கிருஷ்ணா…. நம் நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்று காத்திருந்து, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கலாமும் எதிர்பார்த்துத்தானே தங்கள் கடமையைச் செய்தார்கள்… அது போல, அண்ணாமலையும், மக்கள் நாட்டின் நிலமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்துத்தானே, நியாயமான முறையில் தகவல்களை எடுத்துச் சொல்லுகிறார்… கிருஷ்ணர்  : நீ கொஞ்சம் புத்திசாலின்னு நெனச்சேன்… உன் மேதாவித்தனத்தை காட்டிட்டயா…  பலன் என்பது, அவரவர் சொந்த விருப்பம் நிறைவேறுவதற்கு என்று நீங்களாக நினைத்தால்…, எத்தனை முறை கீதையை எடுத்துச் சொன்னாலும், உனக்கு விளங்காது… தான் முன் நின்று நடத்தும் கடமையின் பலனை ஆளுமையாளர்கள் சாதிப்பார்கள்…, தன் குடும்பம் பலன் பெற அல்ல…. இதுதானே காலங்காலமாய் ‘கீதை’ விளக்குவது…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி, போகட்டும்…  ஒரு பலனை, தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அடைய வேண்டும் என்பதற்காக, ஒருவன் தகுந்த நடவடிக்கையை ...