உள்ளத்தனையது உயர்வு - பாகம் 8
மேகலா : நாங்க பேசும் தமிழை இவ்வளவு சரளமாகப் பேசுகிறாய் கிருஷ்ணா… சரி…, பெரிய பெரிய புராணங்களிலும், கதைகளிலும் நாம் படித்திருக்கிறோம்…, கேட்டிருக்கிறோம்…, கொடுமை செய்யும் அசுரர்களும், ராட்சசர்களும் கொடுந்தொழில் புரிய நினைத்து…, எதிரியை வெல்வதற்கான ஆயுதங்களை…, கடவுளிடமிருந்தே கேட்டுப் பெறுகிறார்களே… அவர்கள் கேட்ட வரத்தை, கடவுளும் கொடுக்கிறார். அது ஏன் கிருஷ்ணா… நாம் செய்யும் நற்செயல்… bank deposit… அதில் சேரும் வட்டி என்பது கடவுள் அளிக்கும் வரம் என்றாயே…, அதனால் கேட்டேன்… கிருஷ்ணர் : சரி…, நீ யாரை மனதில் வைத்து இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்… அதைச் சொல்… நான் பதில் சொல்லுகிறேன்… மேகலா : எல்லா அசுரர்களும் தான் கிருஷ்ணா… ராவணனிலிருந்து…, எத்தனை பேர், இந்த மாதிரி வரம் வாங்கியவர்களாக இருக்கிறார்கள்… மகாபாரதத்தில் அர்ஜுனன், பரமசிவனாரை நோக்கி தவம் செய்து பெற்றது ‘பாசுபதா அஸ்திரம்’ என்று பலமுறை படித்து படித்து மெய் சிலிர்த்திருக்கிறேன்… அதே மகாபாரதத்தில், துரியோதனின் சகோதரி துச்சலையினுடைய கணவன் ஜயத்ரதன், திரௌபதியிடம், வனவாசத்தின் போது, தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான்… இதனால் க...