Posts

Showing posts from December, 2024

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 11 (நிறைவுப் பகுதி)

மேகலா   : நீ எங்களை நினைத்து வருத்தப்படுகிறாயா கிருஷ்ணா…. எனக்கென்னவோ, பிள்ளைகளை வேலை செய்யப் பழக்குவதற்கு அம்மா trick செய்வது பரவாயில்லையோ என்று தோன்றுகிறது…. கிருஷ்ணர்  : நீ சொல்வது சரிதான் என்றாலும், பிள்ளைகளுக்கு, சிறுவயது முதலே, பிறருக்கு உதவ வேண்டும்…, சாப்பிடும் பொருளோ, அல்லது சில ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ மாதிரியான பென்சில், note-book என்ற பொருட்களை, எல்லோருக்கும் share பண்ணணும், ‘சண்டை போடக் கூடாது’, ‘விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று சில கதைகளைக் கூறி புரிய வைக்க வேண்டும்… அப்பத்தான், demand பண்ணும் பொருளை வாங்கிக் கொடுத்தாவது வேலை செய்ய வைப்பது என்பதை ஒத்துக் கொள்ளலாம்… இருந்தாலும், உயர்ந்த உள்ளம் என்பது, சொல்லிக் கொடுத்து வருவதல்ல….. ஆனாலும், ஒரு மனிதனின் வளர்ச்சி, இப்படியும் வளர வாய்ப்பிருக்கிறது… நானும், என் அப்பாவைப் போல…, படித்து doctor ஆவேன் என்பதில் தொடங்கி…, எங்க teacher மாதிரி பாடம் நடத்துவேன்…. கொஞ்சம் வளர்ந்த பின், ‘தோனி’ மாதிரி விளையாடுவேன்… அப்துல் கலாம் மாதிரி scientist ஆவேன்… நானும் pilot ஆவேன்… என்று ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிய வரும் போது, அவர்கள் மாதிரி த...

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 10

மேகலா   : ஓ…! வாவ்…! நீ சொல்லும் போது….., நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற நமக்கான சவுகரியங்கள் அனைத்தும் நாம் நன்றாக, வளமாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் என்று புரியும் போது, நம் முன்னோர்களைக் கும்பிடத் தோணுது கிருஷ்ணா…. அப்படிப் பார்த்தால், நம்முடைய முன்னோர்கள் செய்த பிழை கூட, நமக்கான எச்சரிக்கைதானே…. கிருஷ்ணர்  : கண்டிப்பாக…. சட்டத்தை நம்ம இஷ்டத்துக்கு வளைத்துக் கொள்ளலாம் என்று ஒருவன் செயல்பட்டால், அந்தச் செயலே…, அவனை படுகுழியில் தள்ளி விடுகிறது… இது பின்னாடி வருபவர்களுக்கு ஒரு பாடமாகிறது… ‘பாமா விஜயம்’ படத்தின் கருத்தாக, T. S. பாலையா என்ன சொல்கிறார்…. மேகலா  : நான் சொல்கிறேன் கிருஷ்ணா…  ’இந்த உலகம், ஒரு விசித்திரமான பள்ளிக்கூடம். பாடம் நடத்தி விட்டு, பரீட்சை வைப்பதில்லை. பரீட்சை வைத்து விட்டு…, அதிலிருந்து பாடம் கற்றுக் கொடுக்கிறது…’  என்று….. கிருஷ்ணர்  : அதேதான்…  உயர்வோ…, தாழ்வோ…, மனிதன் எப்படி இருக்கணும்…, எப்படி இருக்கக் கூடாது…, என்பதற்கு பல உதாரணங்களை, நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள்… அதையெல்லாம், மனிதன் தன் பாடமாக எட...

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 9

மேகலா  : பஸ்மாசுரன் கதை தெரியும் கிருஷ்ணா… அதைச் சொல்லட்டா…. கிருஷ்ணர்  : எனக்கு கதை தெரியும்… வேண்டாம் என்று சொன்னால் விடவா போகிறாய்… சொல்லு… சொல்லு…. மேகலா  : யப்பாடா… எங்க நீ வேண்டாம் என்று சொல்லி விடுவாயோ என்று நினைத்தேன் கிருஷ்ணா…. பஸ்மாசுரன் என்று ஒரு அசுரன். அவனுக்கு திடீரென்று, தான் சர்வ வல்லமை படைத்தவன் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது…  வல்லமை படைத்தவனாக வேண்டும் என்று நினைத்தால், எல்லோரும் புகழும்படியாக உயர்ந்து நிற்க வேண்டும்… மக்களைப் பாதுகாக்க வேண்டும்… நல்லாட்சி புரிய வேண்டும்…. எதிரிகளிடம் விழிப்பாக இருக்க வேண்டும்…. இது நேர்மையான வழி…  ஆனால், ‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது நிதர்சனமான உண்மை… பஸ்மாசுரனுக்கு, தான் யார் மீது கை வைக்கிறானோ…, அவர்கள் எரிந்து சாம்பலாகி விட வேண்டும்… என்று புது மாதிரி ஒரு யோசனை வருகிறது. அப்படி நடந்து விட்டால்…, தான் தான் உலகில் சர்வ வல்லமை படைத்தவன் ஆகி விடுவோம் என்று தப்புக்கணக்கு போடுகிறான்… ஆனாலும், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குறுக்குவழி போவதற்கும் வழி தெரிய வேண்டுமே… அதனால், இந்த வல்லமையைத் தர வல்லவர்கள்...