Posts

Showing posts from January, 2025

ஏணிப்படிகள் - பாகம் 3

மேகலா   : டீச்சரோட அணுகுமுறைதான் கிருஷ்ணா…. முதல் முதலாக school-க்கு வருவதால், பிள்ளைகள் பயந்து போய் அழுகும் கிருஷ்ணா…. டீச்சர்…, அம்மாவிடம் கண்ணை சிமிட்டி போகச் சொல்லி விட்டு, ‘என்ன கண்ணு…, அழக் கூடாது…, இங்க பாரு…, டீச்சர் உனக்கு மிட்டாய் வச்சிருக்கேன் பாரு’ என்று mesmerizing-ஆ பேசும் போது, பிள்ளைகள் பாதி control ஆயிரும்…. ஒரு வாரம், பத்து நாள்…, இந்த கூத்து முடிந்ததும், முதலில் பாட்டு, rhymes என்று பிள்ளைகளுக்கு அபிநயம் பிடித்து சொல்லிக் கொடுப்பதும்…, பிள்ளைகள் ஆளுக்கொரு சுதியில் ராகம் இழுப்பதும்…, பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்…   நெசம்மா சொல்லணும்னா, ‘மாண்டிசோரி’ கல்வி கற்பித்தலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லுமளவு, டீச்சரின் சொல்லிக் கொடுக்கும் பண்பு…, அபாரமானது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இந்த மாதிரியான ஏணிப்படிகளால் மட்டும் தான், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கான பணியை சிறப்பாகச் செய்ய முடியும்… மேகலா…, சூப்பர்…, சூப்பர்…. மேகலா  : இது மட்டுமல்ல கிருஷ்ணா… நான் 3rd Std படிக்கும் போது, எங்க டீச்சர் எனக்கு எப்படி கணக்கு சொல்லிக் கொடுப்ப...

ஏணிப்படிகள் - பாகம் 2

கிருஷ்ணர்   : மேகலா…, உன்னிடம் ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன். இப்பெல்லாம், பிள்ளைகளுக்கு சரியான school select பண்ணுவதற்கு, parents, Google-ல் தேடி…., friends-இடம் கேட்டு, அப்படியிப்படின்னு அலப்பறைய கூட்டுறாங்க… இதில் school fees விவகாரம் ஏதுவா இருக்கணும்கற எதிர்பார்ப்பு வேற இருக்கும்…. சரி…, நீயெல்லாம் school-ல சேரும் போது, நிலவரம் எப்படி… உனக்குத்தான் அந்தக்காலத்து கதையை பேசுறதுனா ரொம்பப் பிடிக்கும்ல… அதுவும், ஏணிப்படிகளைப் பற்றிப் பேசுறோம். அந்தக் காலத்து ஆசிரியர்களைப் பற்றி தெரிஞ்சிக்கலாம்ல…. மேகலா  : ஐயோ…, கிருஷ்ணா…, அந்தக் காலத்து நிகழ்ச்சிகளை பேசுறதுனாலே, எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. நீ வேற கேட்டுட்டயா… இதோ சொல்றேன் கிருஷ்ணா…. கிருஷ்ணா…, முதல்ல எங்க school-அப் பத்தி சொல்லணும் கிருஷ்ணா…. எங்கள் பள்ளி நூறாண்டுகள் கடந்தது… பல கலெக்டர்களை…, பல பொறியாளர்களை…, பல தொழிலதிபர்களை உருவாக்கிய இந்தப் பள்ளிக்கூடம்…, நாடார் சமுதாய மகமை பண்டினால் ஆரம்பிக்கப்பட்டது… விசாலமான area… ஒவ்வொரு வகுப்பும், காற்றோட்டமாக, விசாலமாக…, 50 மாணவர்கள் கூட, சுலபமாக அமர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக இர...

ஏணிப்படிகள் - பாகம் 1

மேகலா   : ஏ! கிருஷ்ணா…, இதோ நானும் வாரேன்… கொஞ்சம் நில்லு. என்னால் வேகமா நடக்க முடியல… கிருஷ்ணா…., நில்லு…. கிருஷ்ணர்  : ஹையைய்யோ…., இவ பாத்துட்டாளா…. இனி தப்ப முடியாதே… கேள்வியால என்ன குடைஞ்சிருவாளே… இன்னைக்கு என்ன கேக்கப் போறாளோ…, தெரியலயே… வா, மேகலா… என்ன இந்தப் பக்கம் வந்திருக்க… நான் அப்படியே காத்து வாங்கலாம்னு வந்தேன். உன்னை எதிர்பார்க்கல… அதான் வேகமா போய்க்கிட்டு இருந்தேன்… என்ன…, உன்னை கொஞ்ச நாளா ஆளையே காணோமே… ஊருக்கு எங்கயும் போயிட்டயோ…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. சென்ற வாரம், திண்டுக்கல்லில் உள்ள ‘கல்யாண சௌந்தரராஜப் பெருமாள்’…, ‘சௌந்தரவல்லித் தாயார்’ குடியிருக்கும் கோயிலுக்கும்…, கோட்டை மாரியம்மன் கோயிலுக்கும் சென்றிருந்தோம் கிருஷ்ணா…. அடுத்து நம்ம ஊரில், ஆடிப்பூரத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது… எங்க மாமனார் நினைவு நாள்…, என்று அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளினால் எழுத ஆரம்பிக்காமல் விட்டுட்டேன்…  அறிவு வற்றிப் போய் விடுமோ என்று பயந்து போய் …, இன்று எழுத உட்கார்ந்து விட்டேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அறிவு வற்றி விடுமா…! என்ன உளறுகிறாய்…  அறிவு, கல்வி....