Posts

Showing posts from February, 2025

தன்னம்பிக்கை - பாகம் 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்னம்மா…, அதுக்குள்ள வந்துட்ட… இன்னும் ஒரு வாரத்துக்கு நீ என்னைத் தேடவே மாட்டேன்னு நினைச்சேன்… என்ன…, bore அடிக்குதா…. மேகலா  : Bore அடிச்சா மட்டும் தேடுவதற்கு பரம்பொருள் கிருஷ்ணன்… சினிமா தியேட்டரா கிருஷ்ணா… நீ என் குரு… என் கடவுள்… அதுக்கும் மேல…, என் மூச்சே நீதான கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி…, சரி…, ரொம்ப அலட்டாத…. இன்னைக்கு என்ன தலைப்புல பேசலாம்னு இருக்க… மேகலா  : கிருஷ்ணா…, என் வாழ்க்கையில், இந்த அளவுக்கு, பக்குவமாய், திருப்தியா நான் இருக்கேன்னா…, சந்தோஷமா எனக்கான கடமையைச் செய்யிறேன்னா…, அதெல்லாம் நீ எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்…  ’பிரச்னை என்பது, வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் வரத்தான் செய்யும்… அதையெல்லாம் பார்த்து துவண்டு விடுவதால் மட்டும்…, பிரச்னை விலகப் போவதில்லை…. அதற்குப் பதிலாக, பிரச்னையை தைரியமாக எதிர்கொள்…, சுலபமாகக் கடந்து செல்வாய்…’  என்று நீ கற்றுக் கொடுத்த பாடம் எனக்கு, தைரியத்தைக் கொடுத்தது… ஒவ்வொரு பிரச்னையையும் சந்திக்க, சந்திக்க…, வாழ்க்கையின் மீது…, ‘வாழ்ந்து பார்க்கலாம்’ என்று சுவையான ந...

ஏணிப்படிகள் - பாகம் 5 (நிறைவுப் பகுதி)

மேகலா   : என்ன கிருஷ்ணா…, அதுக்குள்ள முடிச்சிரலாமான்னு கேட்கிற… ஏணிப்படிகளாக வாழ்ந்தவர்களைப் பற்றி யாரையாவது உதாரணம் காட்டினால், இந்த கட்டுரையின் concept இன்னும் strong ஆகுமே கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஏணிப்படிகள், ஏற்றி விடத்தானே செய்யும். அது அந்த இடத்துலயேதான் இருக்கும்… இருந்தாலும்,  உலகத்திலுள்ள அத்தனை ஆசிரியர்களையும் ஏணிப்படிகள் என்று தாராளமாகச் சொல்லலாம்…  ஒருவர் இருக்கிறார்… தன் வாழ்க்கையில் பல மாணவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்து, ‘இப்படியும் முயற்சி செய்யலாமோ’ என்று சிந்திக்க வைத்த ஏணிப்படி… ஆனால், எவராலும் எட்ட முடியாத உயரத்தில் இன்றும் நிலைத்திருக்கும் ஒருவரை உனக்குத் தெரியுமா… அவர் சொன்ன ஒரு தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கேள்….  ‘அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்குத் துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கிருக்கிறது’  – இதை யார் சொன்னது தெரியுமா… மேகலா  : ஏவுகணைகளின் தந்தை டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்… கிருஷ்ணர்  : இந்தக் கூற்றினை, ஏதோ ஒரு room-ல் உட்கார்ந்து, article எ...

ஏணிப்படிகள் - பாகம் 4

கிருஷ்ணர்   : இன்னும் ஒன்று தெரியுமா….? உற்சவர்…, பிரம்மோற்சவ காலங்களில் மக்களைச் சந்திக்க வருவது வழக்கம். அந்த சமயங்களில், இந்தப் படிகள் வழியாகத்தான் இறங்கி வர வேண்டும்… பெருமாளும் எத்தனை முறை ஏறி, இறங்கியிருப்பார்… ஐயப்பன் கோவிலில், மேலே ஏற்றி விடும் இந்தப் படிகளுக்கு பூஜையே செய்வார்கள். ஏனென்றால், பரம்பொருளைக் காட்டுவதற்காக ஏற்றி விடும் ஏணிப்படிகள், புனிதப் பணியைச் செய்கிறது. அதுதான் விசேஷம்… இப்படித்தான்.., ஏணிப்படிகள், பயணிகளை பயணம் செய்ய வைப்பது மட்டுமல்ல…, வேறு உலகத்திற்கும் கூட்டிச் செல்வது போல, பக்தர்களுக்கு மோட்சத்திற்கான வழியையும் காட்டும்…. மேகலா  : கிருஷ்ணா…, பழநி மாதிரி கோவில்களில், படியேறி வருவது சிரமம் என்பதால்…, பழநியில் ‘விஞ்ச்’ வைத்திருக்கிறார்கள்… நாங்கள், ஹரித்வாரில், மானஸ தேவியை, இந்த ‘rope car-ல்’ ஏறித்தான் சென்று தரிசித்தோம்… திருப்பதி மாதிரி மலைக்கோவில்களில், படிகளில் ஏறிச் செல்வதற்கே பல மணி நேரம் ஆகும். அதனால், மலையைச் சுற்றிச் சுற்றி, கார், பஸ் செல்லும்படிக்கு பாதை அமைத்து, நம்மைச் சீக்கிரம் கூட்டிச் செல்கிறார்கள்… இன்னும், பலமாடிக் கட்டிடங்களில், ஏண...