பேச்சுத்தமிழ் - பாகம் 3
கிருஷ்ணர் : வாவ்! இவ்வளவுதான் பாடலா… ‘திருக்குறள்’ மாதிரி சின்னப் பாட்டு… கண்ணு முன்னே துள்ளிக் குதிக்கும் கன்னுக்குட்டியும், குட்டியை நக்கிக் கொடுக்கும் பசுமாடும், எவ்வளவு அழகாக கண்ணு முன்னே flash ஆகுது… ஆஹா…, இது பசுஞ்சாணத்தை விட தூய்மையானது…. மாட்டுத் தொழுவத்தை விட அழகாக இருக்கு மேகலா…. மேகலா : மாடு மேய்க்கும் கண்ணனுக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் கிருஷ்ணா… இன்னும் ஒண்ணு… நாட்டுப்புறப் பாடல்கள்…, பேச்சுத் தமிழில், அதுவும் வட்டார வழக்குகளில் பேசப்படும் அழகான தமிழ் இலக்கியங்கள் தானே கிருஷ்ணா… நாட்டுப் புறப் பாடல்களில், ராமாயணம், மகாபாரதம் கூட பாடப் பட்டிருக்கிறது கிருஷ்ணா… அந்தக் காலங்களில் தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, இவை மூலமாக பாடப்படும் பாடல்கள் அநேகமாக பேச்சுத்தமிழாகத்தான் இருக்கும் கிருஷ்ணா… அதிலும், வில்லுப்பாட்டு…, ஒருவர் கதையையோ, சம்பவத்தையோ விளக்கிச் சொல்லுவார். பின்னாடி ஒருவர் ஒத்து ஊதுவது மாதிரி…, ஆமாம்…, ஆஹா…, என்று சொல்லுவார். விளக்கிய பின்பு, அதையே எல்லோருமாக, வில்லின் இசையோடு சேர்ந்து பாட்டாகப் பாடுவ...