Posts

Showing posts from August, 2026

கதை கதையாம் காரணமாம் - பாகம் 17

மேகலா : கௌசிகனுக்கு தர்மவியாதர் கூறிய விளக்கங்கள் தொடர்ந்தன…கெட்ட காரியம் செய்வதில் விருப்பமுடைய ஒருவரை, அவர் கல்வி அறிவு கூட சரி செய்வதில்லை. எல்லா தர்மங்களையும், correct-ஆக அனுசரிப்பவருக்குக் கூட, அவருடைய முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பதில்லை… கெட்ட வழியில் செல்பவர்கள், சுகத்தை அனுபவிக்கிறார்கள். ஒருவர் எந்தவித முயற்சியும் எடுக்காமலேயே, அவர்களுக்கு பணம் வந்து சேரலாம். ஒருவர், எவ்வளவு உழைத்தும், உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை…. தவமிருந்து பெற்ற பிள்ளை, நம்முடைய பெயரைக் கெடுக்கும்படி இருக்கலாம்… செல்வம் நிறைய இருப்பவனுக்கு, நோய் வந்து வாட்டலாம். அவனால் நல்ல உணவை சாப்பிட முடியாமல் போய் விடும். ஆரோக்யமாக இருப்பவனுக்கு, நல்ல உணவு கிடைக்காமல் போகலாம்… இவையனைத்துக்கும் ஒரே காரணம்…, முன்வினைப்பயன் தான். முன்பிறவியில் நாம் செய்த வினைகளின் பலனை, இந்தப் பிறவியில் நாம் அனுபவித்தே தீர வேண்டும். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. அதனால் இந்தப் பிறவியில் நன்மைகளை மட்டுமே செய்ய வேண்டும். இந்த நன்மைகள் அடுத்த பிறவியில், நமக்கு நல்ல வாழ்வைக் கொடுக்கும். இப்பிறவியில், முன்வினைப்பயன் காரணமாக வரும் துன்பங்...