ஆளுமை - பாகம் 1
கிருஷ்ணர் : ஹாய் மேகலா…, என்ன இந்தப் பக்கம்…. இன்று வருவயோ…, மாட்டாயோ…, அப்படீன்னு நினைச்சேன்… நினைச்ச மாத்திரத்தில் வந்துட்டயே…. மேகலா : என்ன கிருஷ்ணா…., ஒண்ணும் மண்ணுமா பழகுறோம்… நீ என்னை நினைப்பது எனக்குத் தெரியும் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : வந்து…, என்ன topic-ல பேசலாம்ணு கேட்டு, என்னைத் தொந்தரவு பண்ணுவியே… அத நெனச்சேன்…, வேற ஒண்ணுமில்ல… மேகலா : கிருஷ்ணா…, நீ என்னைத் ’தொந்தரவு’னு நெனச்சாலும் பரவாயில்ல… என் மனசுக்குள் கோலாகலாமாய் கோலோச்சி நிக்குற கிருஷ்ணா… நான் கோயிலுக்குப் போய், கிடந்த பெருமாளையும், குழலூதும் கண்ணனையும் பார்க்கணும்னு கூட வேண்டியதில்லை கிருஷ்ணா… ‘விடாமுயற்சி’, ‘உழைப்பு’, ‘பக்குவமாதல்’, ‘பக்தி’ என்று ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசும் சந்தர்ப்பம் வந்தால், உன் கீதையின் முகமும், குரலும் எனக்குள்ளே வியாபித்து நிற்குது கிருஷ்ணா… நீ சொன்ன வார்த்தைகள் தான், இலக்கணமாய், இலக்கியமாய் எனக்கு உபதேசம் பண்ணுகிறது… ஒண்ணும் வேண்டாம்…, சினிமா பார்த்து, M. G. R – ஐப் பற்றியோ, சிவாஜி பற்றியோ பேசக் கிடைத்தால்…, உடனே என் கிருஷ்ணனின் முகம் தோன்றி…, ‘பார்ரா…, M. G. R. மாதிரி...