ஆளுமை - பாகம் 5
கிருஷ்ணர் : உலகம் அப்படித்தான் மேகலா…. ஆளுமை மிகுந்தவன் சொல்லை மற்றவர்கள் ஏன் அனுமதிக்கிறார்கள்…. அவனால் கிடைக்கப் போகும் பலனுக்காகத்தான்… இப்போ, அண்ணாமலை press meet கொடுக்கிறார். அருகில், B.J.P. தலைவர்கள் நிறைய பேர் அமர்ந்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு அண்ணாமலை மட்டும் தான் பதில் சொல்லுகிறார்… அந்த பதில் மற்றவர்களுக்குத் தெரியாதா…, அவர்களால் சொல்ல முடியாதா…. சொல்ல முடியும்… ஒரு தலைவன் பேசும் போது, சொல்ல வரும் தகவல்களை, முழுசாக, ஆதாரபூர்வத்துடனும், தெளிவாக சொல்லுகிறார். சொல்லும் தகவல், மக்களைச் சென்றடைய வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ வேண்டும். அதனால், தலைவனின் ஆளுமை மிகச் சரியானதே…. M. G. R – னால் தொழிலாளிகள் பயன் பெறுகிறார்கள் என்றால், அவருடைய ஆளுமையை நானும் ரசிக்கிறேன்…. இன்னும் ஒண்ணு உனக்கு நான் சொல்லியே ஆகணும் மேகலா… மகாத்மா காந்தியோ, பாரத ரத்னா அப்துல் கலாமோ, லார்டு அருணாச்சலமோ, B. J. P. மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, மக்கள் திலகம் M. G. R-ஓ…, ஏன் ஆளுமை உள்ளவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா…. ஒரு situation-ல் dominate பண்றவங்க, அந்த இடத்...