Posts

Showing posts from July, 2025

ஆளுமை - பாகம் 5

கிருஷ்ணர்   : உலகம் அப்படித்தான் மேகலா…. ஆளுமை மிகுந்தவன் சொல்லை மற்றவர்கள் ஏன் அனுமதிக்கிறார்கள்…. அவனால் கிடைக்கப் போகும் பலனுக்காகத்தான்… இப்போ, அண்ணாமலை press meet கொடுக்கிறார். அருகில், B.J.P. தலைவர்கள் நிறைய பேர் அமர்ந்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு அண்ணாமலை மட்டும் தான் பதில் சொல்லுகிறார்… அந்த பதில் மற்றவர்களுக்குத் தெரியாதா…, அவர்களால் சொல்ல முடியாதா…. சொல்ல முடியும்… ஒரு தலைவன் பேசும் போது, சொல்ல வரும் தகவல்களை, முழுசாக, ஆதாரபூர்வத்துடனும், தெளிவாக சொல்லுகிறார். சொல்லும் தகவல், மக்களைச் சென்றடைய வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ வேண்டும். அதனால், தலைவனின் ஆளுமை மிகச் சரியானதே…. M. G. R – னால் தொழிலாளிகள் பயன் பெறுகிறார்கள் என்றால், அவருடைய ஆளுமையை நானும் ரசிக்கிறேன்…. இன்னும் ஒண்ணு உனக்கு நான் சொல்லியே ஆகணும் மேகலா… மகாத்மா காந்தியோ, பாரத ரத்னா அப்துல் கலாமோ, லார்டு அருணாச்சலமோ, B. J. P. மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, மக்கள் திலகம் M. G. R-ஓ…,   ஏன் ஆளுமை உள்ளவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா…. ஒரு situation-ல் dominate பண்றவங்க, அந்த இடத்...

ஆளுமை - பாகம் 4

மேகலா   : நிறைய சம்பவத்தைச் சொல்லலாம் கிருஷ்ணா…. இவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு, இவர் ஒரு goldmine கிருஷ்ணா… ஒரு தயாரிப்பாளர் இவரை ‘தெய்வமே’ என்றுதான் கூப்பிடுவாராம். அது அவரோட நன்றி கலந்த மரியாதை…. M. G. R. அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா…. தனக்கு அவர் சம்பளம் தருவதால், ‘முதலாளி’ என்றுதான் கூப்பிடுவாராம். இந்த எளிமையால், முதலாளி மனதில் உயர்ந்து நின்று, வரப் போகும் படங்கள் அனைத்திலும், M. G. R-ஐயே நடிக்க வைத்தார்… இது, அவரோட தொழிலில் அவர் காட்டிய மரியாதை… இன்னொரு side கிருஷ்ணா…. அவங்க team ஊட்டியில் நடித்துக் கொண்டிருந்தார்கள். சக நடிகையின் மகளுக்கு, சென்னையில் பாட்டுக் கச்சேரி அரங்கேற்றம் இருக்கிறது. அதற்கு அந்த நடிகை சென்றே ஆக வேண்டும்…. அந்த நடிகை ஒன்றும் heroine கிடையாது; extra நடிகை தான்… அவருக்கான portion-ஐ முடித்துக் கொடுக்கச் சொல்லி, director இடம் அவசரப்படுத்த முடியாது… அந்த நடிகை, M. G. R – இடம் வந்து, விஷயத்தைச் சொல்லி, பாட்டுக் கச்சேரிக்கு M. G. R-ஐ அழைத்து, வாழ்த்துவதற்கு வர வேண்டும் என்று கூப்பிட, M. G. R., ‘உன் மகள் நன்றாகப் பாடுவாளா’ என்று ஆச்சரியப்...

ஆளுமை - பாகம் 3

மேகலா   : இந்த ‘மண்ணின் மைந்தன்’, ‘மாணவர்களின் நம்பிக்கை’, ‘ஏவுகணைகளின் தந்தை’, பாரத ரத்னா, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்… கிருஷ்ணர்  : அவர், எளிமையானவர், நேர்மையானவர்…, அதே நேரத்தில், தீவிரவாதத்தின் வீர்யத்தை உணர்ந்தவர். நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளிடம், அஹிம்சை பேசக் கூடாது… ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ – என்று அந்நிய சக்திகளிடம் சிரித்துக் கொண்டே சொன்னாரா, இல்லையா… ‘பொக்ரான்’ குண்டு வெடிப்புச் சோதனையை நடத்தி…, பாரத நாட்டின் பலத்தைக் காட்டி, பக்கத்து நாடுகளுக்கு கிலியைக் கொடுத்தாரா, இல்லையா… இந்த ஒரு நிகழ்ச்சியினால், பாரத நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மனதிலும் நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்தாரா, இல்லையா…. அவரைப் பற்றி ஒரு comment-ஐ, நீ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அதைச் சொல்லேன்…. மேகலா  : கலாம் அவர்கள் மறைந்த போது, ஒருவர், தன் கடையின் முன்னால் எழுதியிருந்த கண்ணீர் அஞ்சலியா கிருஷ்ணா… கிருஷ்ணர்  : ஆமாம்…, அதேதான்… மேகலா  :  ‘ஐயா, எங்களுக்கு பெரிய அறிவாளிகளையோ, தலைவர்களையோ தெரியாது… எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், நீங்கள் மட்ட...

ஆளுமை - பாகம் 2

மேகலா   : கிருஷ்ணா…., அமெரிக்க அதிபர் ‘ஜான்சன்’ என்பவர், ‘two at a time’ என்ற அர்த்தத்தில்…., ‘நடந்தா பேச்சு வராது, பேசிக் கொண்டே நடக்கத் தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார். இதை எங்க அப்பா, ‘கப்பு’னு புடிச்சிக்கிட்டாரு. நாங்க ஏதாவது, இந்த மாதிரி situation-ல மாட்டிக்கிட்டு இருந்தோம்னா…, இந்த பழமொழியைச் சொல்லி, ‘கபகப’ன்னு சிரிப்பாரு… எங்களுக்கு, ‘அமெரிக்க அதிபர்’, அப்பாவோட அதிரடி சிரிப்புலேயே அரண்டு போயிருவோம்…. சொல்ல வந்ததை மறந்தும் போயிருவோம்… கிருஷ்ணர்  : Oh! உங்க யாருக்கும், அமெரிக்க அதிபரைப் பற்றித் தெரியாது… இது ஒரு மாதிரியான தகவல் dominating-காக இருக்கே… மேகலா  : கிருஷ்ணா…., பொய்யான தகவல்கள் அவரிடம் இருக்கவே இருக்காது கிருஷ்ணா… நண்பர்களுக்கு மத்தியிலும், உறவினர்கள், தன் சொந்தப் பிள்ளைகள், அதிகாரிகள் என்று, யார் முன்னிலையிலும், ‘பேசுபவரும்’, தகவல் பரிமாற்றமெல்லாம் கிடையாது. தகவல்களைச் சொல்பவரும் அவர் மட்டுமே…, அவர் மட்டுமே கிருஷ்ணா…. இத்தனைக்கும், ‘தினமணி’ தினசரிப் பத்திரிக்கை மட்டும் தான் வாசிப்பார்…. பின் நாட்களில், ‘துக்ளக்’ வாரப் பத்திரிக்கையும், அரசியல் செய்திகளு...