பக்குவம் - பாகம் 5
கிருஷ்ணர் : ‘பக்குவமான நேரம்’ என்பது, சம்பந்தப்பட்டவர் சந்தோஷமாக இருக்கும் நேரம்… நம்மளோட அணுகுமுறையே காரியத்தை சாதிக்க வைத்து விடும்… பக்குவத்திற்கு அவ்வளவு வலிமை உண்டு மேகலா…. ‘பக்குவமான நேரம்’ – மிகச் சரியான நேரம் என்று சொல்லலாம். நேரம் பார்த்து, பக்குவமா, பதமா சொல்லு… எந்தத் தப்பும் வந்து விடக் கூடாது… எந்தத் தடையும் தடுத்து விடக் கூடாது. அதற்குத் தகுந்தாற் போல, ‘பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கம்… மேகலா : கிருஷ்ணா…, பெண் பிள்ளைகள் பிறந்த எல்லோர் வீட்லயும் தவறாமல் வரும் ஒரு situation-ல் பக்குவம் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்படும் தெரியுமா கிருஷ்ணா…. கிருஷ்ணர் : என்னது…, சாமர்த்தியமாக செயல்படுகிறதா… சுவாரஸ்யமா இருக்கு… எங்க சொல்லு பார்ப்போம்… மேகலா : கிருஷ்ணா…., திருமணம் முடிஞ்சி, பெண் அழைப்பிற்காக மாப்பிள்ளை வீட்டார் வருவாங்க இல்லையா… இது வரை சந்தோஷமாக வலம் வந்த அம்மாவுக்கும், அப்பாவுக்கும், மகள் நம்மை விட்டுப் பிரிந்து புருஷன் வீட்டிற்குச் செல்லப் போகிறாள் என்ற உண்மை கலங்க வைக்கும்… அதை விட அதிகமாக…, நம்ம பொண்ணு புருஷன் வ...