Posts

Showing posts from October, 2025

பக்குவம் - பாகம் 5

கிருஷ்ணர்   : ‘பக்குவமான நேரம்’ என்பது, சம்பந்தப்பட்டவர் சந்தோஷமாக இருக்கும் நேரம்… நம்மளோட அணுகுமுறையே காரியத்தை சாதிக்க வைத்து விடும்… பக்குவத்திற்கு அவ்வளவு வலிமை உண்டு மேகலா….   ‘பக்குவமான நேரம்’ – மிகச் சரியான நேரம் என்று சொல்லலாம்.  நேரம் பார்த்து, பக்குவமா, பதமா சொல்லு… எந்தத் தப்பும் வந்து விடக் கூடாது… எந்தத் தடையும் தடுத்து விடக் கூடாது. அதற்குத் தகுந்தாற் போல, ‘பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கம்… மேகலா  : கிருஷ்ணா…, பெண் பிள்ளைகள் பிறந்த எல்லோர் வீட்லயும் தவறாமல் வரும் ஒரு situation-ல் பக்குவம் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்படும் தெரியுமா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்னது…, சாமர்த்தியமாக செயல்படுகிறதா… சுவாரஸ்யமா இருக்கு… எங்க சொல்லு பார்ப்போம்… மேகலா  : கிருஷ்ணா…., திருமணம் முடிஞ்சி, பெண் அழைப்பிற்காக மாப்பிள்ளை வீட்டார் வருவாங்க இல்லையா… இது வரை சந்தோஷமாக வலம் வந்த அம்மாவுக்கும், அப்பாவுக்கும், மகள் நம்மை விட்டுப் பிரிந்து புருஷன் வீட்டிற்குச் செல்லப் போகிறாள் என்ற உண்மை கலங்க வைக்கும்… அதை விட அதிகமாக…, நம்ம பொண்ணு புருஷன் வ...

பக்குவம் - பாகம் 4

கிருஷ்ணர்   : இதுதான் கீதையில், அர்ஜுனனிடம் சொல்லப்பட்ட உபதேசம்…, போர்க்களத்தில், உனக்கான உரிமையைப் போரிட்டு, எதிரிகளை வீழ்த்திப் பெறுவதில் தவறேயில்லை…. அவரவர்க்கான கடமைகளை, அவரவர் செய்வதுதான், மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட விதி… அதை சிறப்பாக திறமையாகச் செய்பவன், எல்லோராலும் விரும்பப்படுகிறான்… நீ சொன்ன உதாரணம் உண்மையானது…, வலிமையானதும் கூட.   மனிதனோட வேலைகளை எட்ட நின்று, encourage பண்ணலாம். ‘நான் அந்த வேலையைச் செய்கிறேன்’ என்று யார் குறுக்கே வந்தாலும்…, கடவுளே ஆனால் கூட, மனிதனால் ‘பக்குவம் அடைவது’ என்ன…, ‘வளரவே’ முடியாது…. மேகலா  : உண்மை கிருஷ்ணா… இந்த ‘பக்குவத்திற்கு’ இன்னும் ஒரு அர்த்தம் கூட இருக்கிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன…, அது…? மேகலா  : ஒருவருக்கு, ஏதோ ஒரு இழப்பு நேர்ந்து, அதனால் பாதிக்கப்பட்டு, மனம் உடைந்து அழுகிறார் என்று வைத்துக் கொள்வோம்… அம்மாவோ…, அப்பாவோ…, யார் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என்று அறிந்து, அவர்களிடம், ‘நீதான் பக்குவமாய் எடுத்துச் சொல்லி, அவளை சமாதானப்படுத்தணும்’ என்று கேட்டுக் கொள்வார்களே… இந்தப் பக்குவத்தின் அர்த்தம் என்ன கிருஷ்...

பக்குவம் - பாகம் 3

மேகலா   : எப்புடி கிருஷ்ணா.., எப்டி…, என் மனசுல உள்ளத அப்படியே சொல்ற…. கிருஷ்ணர்  : இதை நீ சொல்லி…, நான் கேட்டு கேட்டு…, என் ஒரு பக்கத்துக் காது வீங்கியே போச்சு… ஆனாலும், நீ சொல்லும் கைப்பக்குவம் ரொம்ப சுவையா இருக்கு… இது மட்டும் தானா…, இன்னும் இருக்கா…. மேகலா  : ஐயோ கிருஷ்ணா…, தீபாவளி வரட்டும் கிருஷ்ணா… அதற்கான பலகாரங்களில் இந்த ‘பக்குவம்’ சும்மா புகுந்து விளையாடும். அதிலும், இனிப்பு வகையறாவில்…, ‘ஜீரா’ தயாரிப்போமே…, அதற்கு ‘பக்குவம்’ ரொம்ப அவசியம் கிருஷ்ணா… குலோப் ஜாமூனுக்கு…, ஜீராவின் பக்குவம், பிசுபிசுப்பாய் இருக்க வேண்டும்… லட்டுக்கு, one string கம்பி பதம்…. அதிலும், அதிரசத்திற்கு வெல்லப் பாகு ‘டங்கு’ பதம்… அப்படீன்னு, பலகாரம் பக்குவமாய் வருவதற்கு, இந்த பதம் பலவிதமாய் மாறுபடும்…. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பக்குவம் இருக்கு… இந்த ‘பக்குவம்’ தப்பாமல் செய்தால் மட்டுமே, நாம் விரும்பும் சுவை நமக்குக் கிடைக்கும். முறுக்கு பக்குவமாய் செய்தால் தான், ‘கரகரப்பாய்’ இருக்கும்… அதிரசம் பக்குவமாய் செய்தால் தான் மிருதுவாய் இருக்கும்…. கிருஷ்ணர்  : Oh! இதில் இத்தனை விஷயம் இருக்கா…...

பக்குவம் - பாகம் 2

மேகலா   : கிருஷ்ணா…, சின்னப்புள்ளைகளாக இருக்கும் போது, ஒவ்வொரு மனிதர்களும் எப்படிலாம் ஆசைப்படுவாங்க தெரியுமா கிருஷ்ணா… அது குழந்தைத்தனமான ஆசைன்னு சொல்லி easy-யா இப்போ ஒதுக்கிரலாம். சொல்லப் போனா, ஒவ்வொரு பருவத்திலும் மனிதன், தான் நினைப்பதுதான் சரி…, நாம ஆசைப்படுறதுல தப்பே கிடையாது…, அது நிச்சயம் நமக்குக் கிடைக்கும்…, என்று தன்னுடைய தகுதி மறந்து நினைப்பதுண்டு… இவ்வளவு ஏன்…? மாணவப் பருவத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு hero பிடிச்சிருக்கும். அவங்க நடிச்ச படத்தின் பாடலை மனப்பாடம் பண்ணுவது மட்டுமில்லை…, அந்த hero-வோட heroine ஆக நினைப்பதிலே, அவர்களுக்கு ஒரு சந்தோஷம்… இதெல்லாம் நிஜத்தில் நடக்குமா என்ற ‘பக்குவம்’ கிடையாது. முதலில் அந்த hero-வுக்கு நம்மைப் பிடிக்குமா என்ற அறிவு கூட இல்லாமல், கற்பனையிலும், கனவுகளிலுமே லயித்திருப்பார்கள்.   இப்படி immature behavior எப்போ மாறும் தெரியுமா… நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவத்தையும் சந்திக்க சந்திக்க…, யதார்த்தம் புரிய ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக பக்குவமாகிறார்கள்.  அப்பவும்…, புதுசா ஒரு அனுபவத்தை சந்திக்கும் போது, ஆலோசனை சொல்பவர்களை ஏற்றுக...