பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)
கிருஷ்ணர் : ‘பிரம்மரிஷி’ என்பது ஒரு நிலை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், இதை விட better-ஆ நாம் நடந்து கொள்ளணும்…, இல்லையென்றால்…, இதை விட உயர்ந்த promotion-க்கு நாம் முன்னேறணும் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்கும் போது, அவனுடைய பழக்க வழக்கம் நடத்தை மட்டுமல்ல மேகலா…. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய attitude கூட shape ஆக ஆரம்பிக்கும். அதனால் அவன் மனநிலையும் பக்குவமடைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், அறிவில் தெளிவு மட்டுமல்ல, நிதானம், பொறுமை, அடுத்து நடக்கப்போவதில் தீர்க்கம்…, அதற்கான ஆயத்தம்…, தன் திறமையில் நம்பிக்கை…, அதற்கான பணிவு எல்லாம் ஒன்று சேரும் போது, அவன் outstanding personality யாக, தீர்க்கதரிசனமாக தன் மரணத்தைக் கூட தெரிந்து கொள்ளும் தைரியசாலியாக நிற்கும் நிலை வருமல்லவா…, அதுதான் ‘பிரம்மரிஷி’… இதைத்தான் விசுவாமித்திரருக்கு, வசிஷ்டர் சூசகமாகத் தெரிவித்தார். இந்த முயற்சியில் ஈடுபடும் போது, ஆசைப்பட்டாலும், கோபப்பட்டாலும் கூட நம் நிதானம் தவறி விடுகிறது… விசுவாமித்திரருக்கு, மேனகை மீது காதல் வந்ததும்…, திரிசங்கு கேட்டதால், அவனை ஸ்தூல உடம்புடன் சொர்க்கத்திற்கு அனுப்பி வைக...