Posts

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2

கிருஷ்ணர்   : இதிகாசம், புராணங்கள் இவற்றிலிருந்து, மனிதனின் உயர்ந்த உள்ளத்தைக் கூறேன்…. மேகலா  : இதற்கு எதற்கு இதிகாசத்தைப் புரட்டணும்… இருந்தாலும், அதையும் சொல்லுகிறேன்… சிம்பிளா…, போற போக்குல பஞ்ச் டயலாக் மாதிரி சொன்ன பழமொழி போதும் கிருஷ்ணா…, நம் முன்னோர்களின் உயர்ந்த உள்ளத்தைக் காட்ட… ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ – என்று நம் முன்னோர்கள், நமக்கு யோசனையாகச் சொல்லும் பழமொழி… சிறுக, சிறுக சேமித்து, பெருமையாய் வாழணும் என்று சொல்லும் போது, சிக்கனம், சேமிப்பு…, பெருமையாய் வாழ வாழ்த்து என்று, வாழ்க்கையை வாழும் முறையை, இவ்வளவு எளிமையாக, உயர்வாக யாரால் சொல்ல முடியும்…  நம்ம பெருசுகளுக்கு, வாழ்த்துவதற்கு பெரிய காரணம் எதுவும் தேவையில்லை கிருஷ்ணா… வாழ்த்த மனசு இருந்தால் போதும். ‘ஆல் போல் பெருகி அருகு போல் செழிக்கணும்’ – என்று மனம் நிறைந்து வாழ்த்துவார்கள் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : ஆஹா… ஆலமரம், எத்தனை பேர் வந்தாலும்…, நிழல் கொடுத்து இளைப்பாற இடம் கொடுக்கும். அது தவிர, ஆலமரத்தின் விழுதுகளும் கீழிறங்கி, அடிமரத்தின் வேருக்கு பலம் கொடுக்கும்… அருகம்புல், தான் முளைத்த இடமெல்லாம் பரவி, சுட்டெரிக்கும் வெயிலா

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

கிருஷ்ணர்   : என்னம்மா… எலெக்‌ஷன் முடிஞ்சிருச்சா…. ஒரே பரபரப்பாய் இருந்தயே… லீவு எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு…, ஒரேயடியா ‘லீவு’ எடுத்துட்டயோ… என்று பார்த்தேன்… என்ன விஷயம்…, இந்தப் பக்கம்…. மேகலா  : என்ன கிருஷ்ணா…, ஒண்ணுமே தெரியாதது மாதிரி பேசுகிறாய்… ஏதாவது ‘தலைப்பு’ சொல்லேன்… கிருஷ்ணர்  : நீ ஏதாவது யோசித்திருப்பாயே…, சொல்லு பார்ப்போம்…. மேகலா  : ‘உள்ளத்தனையது உயர்வு’ என்று யோசித்திருக்கிறேன்… Okay-யா கிருஷ்ணா… கிருஷ்ணர்  : Very good… ‘ வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு’ என்று உள்ளத்தின் உயர்வை, தாமரை மலர் நீட்டத்தை உதாரணம் சொல்லி, எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்…. சூப்பர் மேகலா… எங்கே உன் கருத்தை நீ சொல்லு… உன் உள்ளத்து உயர்வைப் பார்க்கலாம்…, சரி, இந்தத் திருக்குறளுக்கு அர்த்தம் சொல்லு பார்க்கலாம்… உனக்குத் தெரிகிறதா என்று பார்க்கலாம்… மேகலா  : கிருஷ்ணா…,  ஒரு குளத்தில், தாமரைப் பூ, பூத்திருக்கிறது என்றால்…, அக்குளத்தில் தண்ணீரின் அளவைச் சொல்லி விடலாம்… கிருஷ்ணர்  : எப்படி…? மேகலா  : கிருஷ்ணா…., இந்த தாமரையின் குணம் என்ன தெரியுமா… தண்ணீர் எவ்வள

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

மேகலா   : நிஜம் தான் கிருஷ்ணா… ஏன் கிருஷ்ணா…,   ‘வலிமை’ என்பது, இயல்பாக இருக்கக் கூடிய குணமா… அப்படியில்லை…, ‘வலிமை’ என்பது மனிதன் வளர, வளர, வளர்த்துக் கொள்வதா…  அப்படியென்றால், எப்படியெல்லாம் ‘வலிமை’ மனிதனுக்குப் பெருகும்…. கிருஷ்ணர்  : நல்ல கேள்வி… ராமாயணத்தில் ஒரு காட்சி வரும். சீதையைத் தேடி, ‘அங்கதன்’ தலைமையிலான, அனுமன் உள்ளிட்ட குழு, தென் திசைக்கு வந்திருப்பார்கள்… எதிரில், பரந்து விரிந்து கிடக்கும் கடலைப் பார்த்து, ‘இந்தக் கடலைத் தாண்டி எப்படி செல்வது’ என்று எல்லோரும் திகைத்துப் போவார்கள். அப்பொழுது, ஜாம்பவான் என்ற கரடி இனத்தைச் சேர்ந்த வீரன் மட்டும், ‘இந்தக் கடலைக் கடக்கவல்ல தகுதியும், திறமையும் வாயுபுத்திரனாகிய அனுமனுக்கு மட்டுமே உண்டு’ – என்று சொல்லி, அனுமன் மறந்திருந்த அவருடைய ஆற்றலை, பராக்கிரமத்தை எடுத்துச் சொல்லுவார். அவர், அனுமனின் திறமையை எடுத்துச் சொல்லச் சொல்ல, அனுமனின் மனதுக்குள் புதிய உத்வேகம் ஏற்பட்டு, அவருடைய சக்தியும் வெளிப்படுகிறது…’ என்று பார்த்திருக்கிறோம்… ஒருவரின் நினைவூட்டுதலால், ‘வலிமை’ வெளிப்படுகிறதா என்றால், அது அப்படியல்ல…  ஒருவருக்கு, இயற்கையாகவே தைரியமு

வலிமை - பாகம் 8

கிருஷ்ணர்   : ‘வலிமை’யைப் பற்றி இன்னொரு நுணுக்கமான, சுவாரஸ்யமான ஒரு psychology உனக்குத் தெரியுமா…. மேகலா  : நீ சொல்லு கிருஷ்ணா…. நான் தெரிஞ்சிக்கிறேன்…. கிருஷ்ணர்  : அதாவது, பிள்ளைகள் படிக்கிற காலத்தில், exam time-ல, ஒரு மாணவன் படிக்கும் திறனுக்கு 80% மார்க் வாங்குபவனாக இருப்பான். அப்போ, அவனோட teacher, ‘உனக்கிருக்கிற திறமைக்கு இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால், state first எடுப்பாய்..’ என்று சொன்னால் போதும். அந்த நிமிஷத்திலிருந்து கூடுதல் effort, கவனம், முனைப்பு…, என்று எல்லாவற்றையும் போட்டு, அந்த மாணவன், ’நூற்றுக்கு நூறு’ வாங்கப் போராடுவான்…  ஒருவர், நமக்குக் கொடுக்கும் ;உந்துசக்தி’, மிகப் பெரிய வலிமையை கொடுக்கும்.  இது இப்படி என்றால்…, மிகப் பெரிய பொறுப்பு இருக்கும் வீரனோ, திறமைசாலியோ, ஒரு வேலையைச் செய்யும் முன், யாராவது, ‘உன்னால் என்ன செய்ய முடியும்…, உனக்கு அதற்கான தகுதி கிடையாது’ – என்று எகத்தாளமாகப் பேசினால், எப்பேர்ப்பட்ட திறமையாளனுக்கும், ‘பொசுக்’குனு போய் விடும்…  எதிர்மறையான விமர்சனத்தையும் positive ஆக எடுத்து, ‘ஜெயித்துக் காட்டுகிறேன்’ என்று சவால் விட்டு ஜெயிப்பவர்களும் உண்டு

வலிமை - பாகம் 7

மேகலா   : கிருஷ்ணா….. ‘வலிமை’யின் சுவாரஸ்யமான பரிமாணங்களைப் பார்த்தோமல்லவா… இன்னொரு சூப்பர் சுவாரஸ்யமான பக்கமும் இதுக்கு இருக்கு தெரியுமா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஏய்…, என்னம்மா, ‘வலிமை’ என்ற ரொம்ப ஆகிருதியான ஒரு தலைப்பை, ‘ரொம்ப சுவாரஸ்யம்’ என்று சொல்லிக் கொண்டே போகிறாய்… மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. ஒரு M. G. R. பாட்டு ஒன்று சொல்லவா…. ‘புகழினில் போதையில்லையோ பிள்ளை மழலையில் போதை இல்லையோ காதலில் போதை இல்லையோ…. என்ற பாட்டைக் கேட்டிருக்கிறாயா கிருஷ்ணா… கிருஷ்ணர்  : புகழும், மழலையும், காதலும்…, போதை மட்டுமல்ல…, நெஞ்சுக்குள் வலிமையை பெருக்கும் என்று சொல்லியிருக்காங்களா….. சூப்பர்… சூப்பர்… எனக்கும் ஒரு பாரதியார் பாட்டு ஞாபகத்துக்கு வருது… ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்…. காதற்பெண்கள் கடைக்கண் காட்டினால்’ என்று பாடுகிறார்….. பாரதிதாசனோ…, ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்று பாடி, காதலின் வலிமையை எடுத்துச் சொல்லியிருக்காங்க. இது காதலின் ‘வலிமை’. உனக்கு ஒண்ணு தெரியுமா மேகலா…. இன்னொரு புறம், பிள்ளைகள் எத்தனை சேட்டை பண்ணி, முரட்டுத்தனமாக இரு

வலிமை - பாகம் 5

மேகலா : கிழக்கிந்திய கம்பெனியர்களை எதிர்த்து, பாரத மக்கள், ‘மகாத்மா காந்தி’ என்ற ஒற்றை மனிதர் பின் அணி திரண்டதால் தானே, பாரதம் சுதந்திரம் பெற்றது... அவ்வை பிராட்டி சொன்ன, ‘ஒற்றுமை என்றும் பலமாம்’ என்ற ஆத்திசூடி பொன்மொழி எவ்வளவு அழுத்தமான உண்மை கிருஷ்ணா.... பெரிய பெரிய corporate company-களில், வேறு வேறு திசைகளில் படித்த இளைஞர்கள் தங்கள் திறமையை நிரூபித்து, வேலைக்கு சேர்கிறார்கள். இவர்களில், project எடுத்து செய்பவர்..., ஒரு குழுவாக உருவாகித்தான் project-ஐ செய்து முடிப்பார்கள். இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இந்த குழுவுக்கு ஒரு head இருப்பார். இவர் ‘team leader' என்று அழைக்கப்படுவார். குறிப்பிட்ட தினத்துக்குள் project-ஐ செய்து முடிக்க வேண்டும் என்று target நிர்ணயிக்கப்படும்... Group discussion என்ற முறையில் அவர்களுக்குள் கலந்து ஆலோசனை செய்து..., சிறந்த கருத்தை unanimous ஆக முடிவு செய்து, வெற்றிகரமாக project-ஐ செய்து முடிப்பார்கள். அப்போ, ஓர் அணியில் திரண்டாலும், கருத்து வேற்றுமைகளைக் களைந்து விட்டு, அதில், சிறப்பான project-க்குத் தேவையான முடிவினை, ஒருமனதாக தேர்ந்தெடுப்

வலிமை - பாகம் 6

கிருஷ்ணர்   : வள்ளுவர் காட்டும் அந்தப் பரிமாணம்…, practical-ஆக ரொம்ப சிறப்பான விஷயம். அந்தக் குறளைச் சொல், பார்க்கலாம்…. மேகலா  : “நெடும்புனலுள் வெல்லும் முதலை, அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற” என்று சொல்கிறார் கிருஷ்ணா…. தண்ணீருக்குள்ள இருக்கிற வரைக்கும் தான், முதலை strong… யானையோ, புலியோ…, எது மாட்டினாலும், சும்மா ஒரே கடியில் கடித்து கொத்துக்கறி போட்டு விடும்…. ஆனால், அதே முதலை நீர் நிலையை விட்டு வெளியே வந்து விட்டால், மற்ற மிருகங்கள், முதலையைப் பந்தாடி விடும். அவரவர்கள்….,  அவரவர் இடத்தில் இருக்கும் வரைக்கும் தான், அவர்கள் வலிமையாய் இருக்க முடியும்.  தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்டால், அந்த இடத்தின் வலிமையானவர்களை வெல்லுவது ரொம்பக் கஷ்டம் தானே கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : இது ரொம்ப யதார்த்தமான உண்மை, மேகலா…. அதிலும், இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, எதிரி நாட்டு தட்ப வெப்பம், கால நேரம்…, இவையெல்லாம் அனுசரித்துத்தான் போருக்குச் செல்ல வேண்டும்…. இரண்டாவது உலகப் போரில், சர்வ உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த, ஜெர்மனியைச் சேர்ந்த ஹிட்லரின் படை, ரஷ்யாவில், பெரும் பின்னடைவைத்தா