Passion - பாகம் 8
மேகலா : ‘இசையே ஒரு வரம்’ கிருஷ்ணா…. எனக்கெல்லாம் தேச பக்தி வரக் காரணமே, பாரதியார் பாடல்களும், M. G. R. படப்பாடல்களும் தான்…. அது மட்டுமல்ல கிருஷ்ணா…. கடவுளை மெய் மறந்து, மெய்யுருகி பக்தி செலுத்துவதற்குக் கூட, பக்திப் பாடல்கள் தான் எனக்கு வழிகாட்டியாகிறது… இவ்வளவு ஏன்…, என் பிள்ளைகளை, தாலாட்டி, என் வசப்படுத்துவதற்கும் கூட, K. V. மகாதேவனுடைய, ‘வெள்ளி நிலா முற்றத்திலே’…, இளையராஜாவுடைய, ‘கண்ணே கலைமானே’ பாடல் தான் எனக்குக் கை கொடுத்தது. இந்தப் பாடல்களை இசையமைத்தவரும், பாடியவரும், இசையை எவ்வளவு ரசித்திருந்தால், இந்த சாகாவரம் பெற்ற பாடல்களை படைத்திருப்பார்கள்… நம்மையும் பாடச் செய்திருப்பார்கள்…. கிருஷ்ணர் : உண்மைதான்… என்ன மேகலா…, M. S. அம்மாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்…. மேகலா : என்ன கிருஷ்ணா…, என்னைக் கேட்கிறாய்… அந்த அம்மா, இறைவனால், special-ஆக…, மனம் மகிழ்ந்து படைக்கப்பட்டவர் என்று நான் நம்புகிறேன் கிருஷ்ணா… இன்று உள்ளவர்கள் மாதிரி, இசை என் passion என்று சொல்லாமல், மனம் மகிழ்ந்து, பக்தி சிரத்தையோடு கற்றுக் கொண்டிருப்பார்கள் போல கிருஷ்ணா… இன்ற...