Posts

Showing posts from May, 2024

பெண்களால் முடியும் - பாகம் 6

மேகலா   : கிருஷ்ணா…., பவானி ஆற்றங்கரையில் விவசாயம் பார்த்துக் கொண்டிருப்பவர் கிருஷ்ணா…. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சார்ந்த பாப்பம்மாள். விவசாயத்தின் மீது கொண்ட நம்பிக்கையில், முதலில் 4 ஏக்கர் நிலம் வாங்கி, ‘இயற்கை முறை’யில் (organic) விவசாயம் பார்க்க ஆரம்பித்தார்… அது, இன்று 10 ஏக்கராக பெருகியிருக்கிறது… பிறருக்கு ஆரோக்கிய உணவு கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் விவசாயம் பார்ப்பதை அறிந்த சமூக ஆர்வலர்கள், அவரை பெருமையுடன் கொண்டாடுகின்றனர். இதைக் கேள்வியுற்ற மத்திய அரசாங்கம்…, இன்று, பாரதத்தின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  :  விருதுக்கு ஆண், பெண் பேதம் கிடையாது.  ஆனாலும்…, பாப்பம்மாளுக்கு விருது வழங்கியதில், விருது, நிமிர்ந்து, உயர்ந்து நிற்கிறது மேகலா…. வாவ்…. பெண்களால் முடியும்…. மேகலா  : கிருஷ்ணா…., விருது வழங்கப்பட்ட பெண்ணைத்தானே இப்போ பார்த்தோம். பிரதமந்திரியே ஒரு பெண்ணின் காலில் விழுந்த சம்பவம் நினைவிருக்கிறதா கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : மறக்க முடியுமா மேகலா… ‘சின்னப்புள்ள’… இவரும், எளிய, அழகான கிராமத்தைச் சேர

பெண்களால் முடியும் - பாகம் 5

மேகலா  : கிருஷ்ணா…., நீ தாய்மை குணம் கொண்ட பெண்கள் என்று சொன்னது, ஔவைக்கு மிகச் சரியாகப் பொருந்தும் கிருஷ்ணா… அந்தக் காலங்களில், குறுநில மன்னர்களிடையே போர் நடந்து கொண்டே இருக்கும் போல… அப்படியொரு சூழலில், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி, தனக்குப் பிறந்த இரு பெண் பிள்ளைகளைப் பரிதவிக்க விட்டு மாண்டு போனான். பாரியின் வள்ளல்தன்மை, சங்க நூல்களில் பிரசித்தமான வரலாறு. அவனுடைய பெண்பிள்ளைகள், அரவணைக்க யாருமின்றி தவிப்பதைக் கேள்வியுற்ற ஔவைப்பிராட்டி, பாரியின் பரம்பு நாட்டிற்குச் சென்று, அவருடைய மகள்களைத் தன் மகள்களாகப் பாவித்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : ஏய்…, இது super தகவலாக இருக்கிறதே… நாம், ராமாயண காலத்திலேயே பார்த்திருக்கிறோமே… விசுவாமித்திரர், தானாக முடிவெடுத்து, ராமருக்கு, ஜனகரின் மகளாகிய ஜானகிக்கு மணமுடித்து வைத்த நாடல்லவா…, நம்முடைய பாரத நாடு… இங்கு குருவாக இருப்பவர்களுக்கு பொறுப்பு அதிகம்…  இதில் ஆண் என்ன, பெண் என்ன.. ஔவையால்…., ஏன்…, பெண்களால் முடியும் மேகலா…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா… நீ சொன்ன பிறகுதான் தெரியுது…. விசுவாமித்திரரும், பொறுப்பாக ராமரு

பெண்களால் முடியும் - பாகம் 4

மேகலா   : கிருஷ்ணா…, ‘தகடூர்’ அதியமான், அரசனாகப் பொறுப்பேற்று ஆண்ட ஒரு குறுநிலநாடு என்று சொல்லலாம். இப்போ இருக்கும், ‘தர்மபுரி’யும் அதைச் சுற்றியுள்ள நகரமும்…., இப்பவும் பச்சைப் பசேலென்று செழித்து நிற்கும் பூமிதான் ‘தகடூர்’… அதியமான், கற்றவர்களை மிகவும் மதிப்பவன்…. அவர்கள் நாட்டிற்கு, ஔவையார் வருகை புரிந்திருந்தார். ஔவையாரின், ‘நன்னெறி’, ‘மூதுரை’…, போன்ற இலக்கியங்களை வாசித்திருந்த அதியமான், அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, தங்கள் நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு வேண்டிக் கொண்டான்… ஔவையாரும், மன்னனின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, அங்கேயே சில காலம் தங்கி விட்டார். ஒரு முறை அதியமான், ஔவையாரை, தன் நாட்டின் செழிப்பான பகுதிகளைக் காண அழைத்துச் சென்றான். அப்போ, ஒரு காயலான் கடையில், முனை மழுங்கிய வாள், இரண்டாக உடைந்த வேல்…, என்று போர்க்கருவிகள் குவிந்து கிடந்தன. ஔவையாருக்கு ஒரே மனக்குழப்பம்… மண்வளம் செழிப்பாக இருக்கும் இந்த விவசாய பூமியில், படைக்கருவிகள் ஏன் இத்தனை குவிந்து கிடக்கின்றன…, என்ற வேதனை, அவர் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தன…. இதனை குறிப்பாகப் புரிந்து கொண்ட அதியமான்…, தன்