Posts

Showing posts from October, 2024

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2

கிருஷ்ணர்   : இதிகாசம், புராணங்கள் இவற்றிலிருந்து, மனிதனின் உயர்ந்த உள்ளத்தைக் கூறேன்…. மேகலா  : இதற்கு எதற்கு இதிகாசத்தைப் புரட்டணும்… இருந்தாலும், அதையும் சொல்லுகிறேன்… சிம்பிளா…, போற போக்குல பஞ்ச் டயலாக் மாதிரி சொன்ன பழமொழி போதும் கிருஷ்ணா…, நம் முன்னோர்களின் உயர்ந்த உள்ளத்தைக் காட்ட… ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ – என்று நம் முன்னோர்கள், நமக்கு யோசனையாகச் சொல்லும் பழமொழி… சிறுக, சிறுக சேமித்து, பெருமையாய் வாழணும் என்று சொல்லும் போது, சிக்கனம், சேமிப்பு…, பெருமையாய் வாழ வாழ்த்து என்று, வாழ்க்கையை வாழும் முறையை, இவ்வளவு எளிமையாக, உயர்வாக யாரால் சொல்ல முடியும்…  நம்ம பெருசுகளுக்கு, வாழ்த்துவதற்கு பெரிய காரணம் எதுவும் தேவையில்லை கிருஷ்ணா… வாழ்த்த மனசு இருந்தால் போதும். ‘ஆல் போல் பெருகி அருகு போல் செழிக்கணும்’ – என்று மனம் நிறைந்து வாழ்த்துவார்கள் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : ஆஹா… ஆலமரம், எத்தனை பேர் வந்தாலும்…, நிழல் கொடுத்து இளைப்பாற இடம் கொடுக்கும். அது தவிர, ஆலமரத்தின் விழுதுகளும் கீழிறங்கி, அடிமரத்தின் வேருக்கு பலம் கொடுக்கும்… அருகம்புல், தான் முளைத்த இடமெல்லாம் பரவி, சுட்டெரிக்கும் வெயிலா

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

கிருஷ்ணர்   : என்னம்மா… எலெக்‌ஷன் முடிஞ்சிருச்சா…. ஒரே பரபரப்பாய் இருந்தயே… லீவு எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு…, ஒரேயடியா ‘லீவு’ எடுத்துட்டயோ… என்று பார்த்தேன்… என்ன விஷயம்…, இந்தப் பக்கம்…. மேகலா  : என்ன கிருஷ்ணா…, ஒண்ணுமே தெரியாதது மாதிரி பேசுகிறாய்… ஏதாவது ‘தலைப்பு’ சொல்லேன்… கிருஷ்ணர்  : நீ ஏதாவது யோசித்திருப்பாயே…, சொல்லு பார்ப்போம்…. மேகலா  : ‘உள்ளத்தனையது உயர்வு’ என்று யோசித்திருக்கிறேன்… Okay-யா கிருஷ்ணா… கிருஷ்ணர்  : Very good… ‘ வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு’ என்று உள்ளத்தின் உயர்வை, தாமரை மலர் நீட்டத்தை உதாரணம் சொல்லி, எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்…. சூப்பர் மேகலா… எங்கே உன் கருத்தை நீ சொல்லு… உன் உள்ளத்து உயர்வைப் பார்க்கலாம்…, சரி, இந்தத் திருக்குறளுக்கு அர்த்தம் சொல்லு பார்க்கலாம்… உனக்குத் தெரிகிறதா என்று பார்க்கலாம்… மேகலா  : கிருஷ்ணா…,  ஒரு குளத்தில், தாமரைப் பூ, பூத்திருக்கிறது என்றால்…, அக்குளத்தில் தண்ணீரின் அளவைச் சொல்லி விடலாம்… கிருஷ்ணர்  : எப்படி…? மேகலா  : கிருஷ்ணா…., இந்த தாமரையின் குணம் என்ன தெரியுமா… தண்ணீர் எவ்வள