Passion - பாகம் 6
கிருஷ்ணர் : Oh! Very good… நிறைய விஷயங்கள் வெளியே வருதே… நீ, எப்படி pencil drawing-ல், shades-லாம் கொடுத்து…, பக்காவா வரைவாயா….
மேகலா : ’மாயா சித்ராலயா’ மாஸ்டர்…, வார மலர் கதைகளுக்கு வரைவது போல, கோட்டு drawing-தான் வரையக் கற்றுக் கொடுத்தார்கள் கிருஷ்ணா… ஒரு சின்னக் கோடுல, கோபத்தை, சிரிப்பைக் காட்டுவதாகத்தான் படம் வரையக் கற்றுக் கொடுத்தார்கள். Shades வரைவதெல்லாம், புத்தகங்களில் வரும் சித்திரம் பார்த்து, நானாக வரைய முயற்சி செய்வேன்… அதிலும், நான் ஒரு 6 மாசம் தான் கற்றுக் கொண்டேன் கிருஷ்ணா… எனக்கு drawing-ல interest உண்டு…. ஆனா, அதுவே என் passion கிடையாது என்பது இப்பதான் எனக்குப் புரிகிறது கிருஷ்ணா… திடீரென்று, water color painting வரையப் பிடிக்கும்… brush வாங்குவேன்…, acrylic paint வாங்குவேன்…, chart paper வாங்கி வந்து, கலரை mix பண்ணி. பெரிய ‘ரவிவர்மா’ன்னு நினைத்துக் கொண்டு color பண்ணுவேன். சில சமயம் தண்ணீர் அதிகமாகி, நீர்த்துப் போகும்…, சில சமயம் ‘பட்டை’ அடிக்கும்…. ஆனாலும், எப்படியோ paint பண்ணுவேன்… எனக்கு மனசுல ’வலி’ இருக்கும் போது வரைவதுண்டு கிருஷ்ணா…
கிருஷ்ணர் : Oh! பரவாயில்லை மேகலா… சில சமயங்களில்…, நமக்கு சில படங்களைப் பார்க்கும் போது, வரையணும்னு ஆசை வரத்தான் செய்யும்…, தப்பில்லை… இயற்கையை ரசிப்பவர்கள்…, இசை, கவிதை, ஓவியம், சிற்பம்…, என்று சில மென்மையானவற்றோடு ஒன்றிப் போகத்தான் நினைப்பார்கள்… நீ இவ்வளவு முயற்சி செய்திருக்கிறாயே…, பரவாயில்லை….
மேகலா : Drawing மீது…, கோலத்தின் மீது உண்மையான ஈடுபாடு உள்ள என் தம்பி மனைவி மேகலாவைப் பற்றி உன்னிடம் சொல்லியே ஆகணும் கிருஷ்ணா…. அவளுக்கு, gardening மீது ரொம்ப ஆசை, interest… அதுதான் அவளோட passion என்று கூடச் சொல்லலாம்… நம்ம மண்ணுக்கு வளராத அபூர்வமான செடியைக் கூட, பத்திரமாய்ப் பாதுகாத்து, வளர்த்து விடுவாள் கிருஷ்ணா… அது மட்டுமல்ல…, அந்தச் செடி, எந்த இனத்தைச் சேர்ந்தது, எத்தனை வகை இருக்கிறது, அதற்கு என்ன உரம் போட வேண்டும்…. நிழலில் வளர்ப்பதா…, வெய்யில் தாங்குமா என்ற details கூட, விரல் நுனியில் வைத்திருப்பாள் கிருஷ்ணா…. மேகலாவுக்கு, gardening மட்டும் passion இல்லை… drawing கூட, passion தான்… அதை விட, ‘ரங்கோலி’ வரைவதில் ‘கில்லி’…. அவள் வீட்டு முற்றம், மார்கழி மாதம் முழுக்க, ‘ஆண்டாள்’ பாடிய ‘திருப்பாவை’ போன்று, மனதுக்கு மகிழ்ச்சி கொடுப்பது… அவள் பிள்ளைகள் பிறந்த நாட்களில், அவளின் அன்பின் வெளிப்பாடே, கோலத்தில் தெரியும் கிருஷ்ணா… அந்த அளவுக்கு, ரங்கோலியை ரசித்து வரைவாள் கிருஷ்ணா… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா கிருஷ்ணா… சில வருடங்களுக்கு முன்பு வரையிலும், drawing institute சென்று drawing கற்றுக் கொண்டாள் கிருஷ்ணா…. என் தம்பியை படம் வரைந்திருக்கிறாள் கிருஷ்ணா…. நீ சொன்ன shades-லாம், அழகாகக் கொடுத்து, perfect-ஆக வரைந்திருப்பாள் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : பூக்களால், ‘இகபனா’ என்ற artwork-கிலும் கில்லி…, சரியா….
மேகலா : உனக்கு எப்படி தெரியும் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்’ கட்டுரையில் பேசி இருக்கோமே…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நாங்களெல்லாம், எங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து, அதன் பின் வாழ்க்கை நீரோட்டத்தில், நமக்கான passion என்ன என்பதை மெள்ள மெள்ள கடைப்பிடித்து, கொஞ்சம் நடுத்தர வயது வரும் போதுதான், passion-க்காக, நம்முடைய அன்றாட வேலையில் கட்டாயம் நேரம் ஒதுக்கி, மனமகிழ்ச்சியுடன் அதில் ஈடுபடுகிறோம்… இந்த நிலை சரியா…, தப்பா என்று தெரியவில்லையென்றாலும், மனசுக்கு நிம்மதி தரும் செயலை மனப்பூர்வமாக செய்து, நிம்மதி, திருப்தி என்ற உணர்வுகளை முழுமையாக அறிகிறோம்…. ஆனால், சிலர் படிக்கும் காலத்திலேயே…, ‘எனக்கு இதுதான் பிடிக்கும்…, இதுதான் என்னோட passion…, marks நிறைய இருந்தாலும், engg. college-ல சேர மாட்டேன்… ஓவியக் கல்லூரியில் சேர்ந்துதான் படிக்கப் போகிறேன்…’ என்று பிடிவாதம் பிடித்து, ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்ததை அறியும் போது, என்னால் நம்பவும் முடியவில்லை… பிரமிப்பை அடக்கவும் முடியவில்லை கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : அப்படியா…., யார் அந்த celebrity….
மேகலா : எங்க அண்ணாச்சி மருமகள்…. பப்புவோட wife சித்ரா தான் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : வாவ்! எனக்கு இந்த கதை தெரியாதே….
மேகலா : கதை கிடையாது கிருஷ்ணா…, நிஜம்…. அவள் நல்லா drawing வரைவாள்… Pencil sketch அட்டகாசமாக வரைவாள். அவளுக்கு, சும்மா இருக்கும் நேரமெல்லாம், தன்னை மறந்து…, இந்த உலகத்தையே மறந்து வரைவதென்றால், மிகவும் பிடிக்கும். அவள் drawings-ஐப் பற்றி, அவங்க அம்மாவிடம் பாராட்டிப் பேச நேரிட்டது. அவங்க அம்மாதான் சொன்னாங்க…Drawing College-ல் சேருவதற்காக உண்ணாவிரதம் இருந்து, பிடிவாதம் பிடித்து சேர்ந்தாள் என்று… ஒரு art gallery-யே வைக்கலாம்… அத்தனை collections அவளிடம் உண்டு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இன்று drawing-ல் கில்லியாக இருக்கும் நிறையப் பேர், சின்ன வயதில் அம்மாவுடன் சண்டை போட்டு, அல்லது பிடிவாதம் பிடித்து கற்றுக் கொண்டதாகத்தான் இருக்கும்….
மேகலா : நிஜம் தான் கிருஷ்ணா…..
(தொடரும்)
Comments
Post a Comment