ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 116
மேகலா : எல்லோரும் கூறிய அறிவுரைகளைக் கேட்டு தருமபுத்திரர் சிந்திக்கத் தொடங்கினார் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இருப்பினும், தருமருக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அதற்கான விளக்கம் அளிக்கவும் வியாசர் தயாரானார். ’பாட்டனாராகிய பீஷ்மர், பிராமணராகிய துரோணர், மூத்த சகோதரனாகிய கர்ணன், மேலும் பல அரசர்கள் – எல்லோரையும் கொன்றதனால் எனக்கு ஏற்பட்டுள்ள பாவத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. ராஜ்ஜிய பாரத்தை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஒரு புறம் பொறுப்பு, இன்னொரு புறம் பாவச் சுமை. என்னுடைய மனம், இந்த இரண்டுக்குமிடையில் சிக்கித் தவிக்கிறது’ – என்று கூறிய தருமபுத்திரரைப் பார்த்து, வியாசர் விளக்கமளித்தார். ‘யுதிஷ்டிரா! தர்மத்திற்கு விரோதமாக நடந்து கொண்ட துரியோதனாதிகளைத்தான் கொன்றாய். இதனால் உனக்கு எந்தப் பாவமும் வந்து சேராது. கொடுப்பது மட்டும் அரசனின் கடமை அல்ல; அடிப்பதும் கூட அரசனின் கடமை தான். சமாதானம் செய்து கொள்வது மட்டும் ராஜநீதி அல்ல; எதிரிகளைப் போரில் வீழ்த்திக் கொல்வதும் ராஜநீதி தான்’. இவ்வாறு கூறி, யுதிஷ்டிரன் ...