Posts

Passion - பாகம் 6

கிருஷ்ணர்   : Oh! Very good… நிறைய விஷயங்கள் வெளியே வருதே… நீ, எப்படி pencil drawing-ல், shades-லாம் கொடுத்து…, பக்காவா வரைவாயா…. மேகலா  : ’மாயா சித்ராலயா’ மாஸ்டர்…, வார மலர் கதைகளுக்கு வரைவது போல, கோட்டு drawing-தான் வரையக் கற்றுக் கொடுத்தார்கள் கிருஷ்ணா… ஒரு சின்னக் கோடுல, கோபத்தை, சிரிப்பைக் காட்டுவதாகத்தான் படம் வரையக் கற்றுக் கொடுத்தார்கள். Shades வரைவதெல்லாம், புத்தகங்களில் வரும் சித்திரம் பார்த்து, நானாக வரைய முயற்சி செய்வேன்… அதிலும், நான் ஒரு 6 மாசம் தான் கற்றுக் கொண்டேன் கிருஷ்ணா… எனக்கு drawing-ல interest உண்டு…. ஆனா, அதுவே என் passion கிடையாது என்பது இப்பதான் எனக்குப் புரிகிறது கிருஷ்ணா…  திடீரென்று, water color painting வரையப் பிடிக்கும்… brush வாங்குவேன்…, acrylic paint வாங்குவேன்…, chart paper வாங்கி வந்து, கலரை mix பண்ணி. பெரிய ‘ரவிவர்மா’ன்னு நினைத்துக் கொண்டு color பண்ணுவேன்.  சில சமயம் தண்ணீர் அதிகமாகி, நீர்த்துப் போகும்…, சில சமயம் ‘பட்டை’ அடிக்கும்…. ஆனாலும், எப்படியோ paint பண்ணுவேன்… எனக்கு மனசுல ’வலி’ இருக்கும் போது வரைவதுண்டு கிருஷ்ணா… கிருஷ்ணர...

Passion - பாகம் 5

மேகலா   : கிருஷ்ணா…, நீ சொன்னாயே…, ’ஓவியம் வரைவது, சிற்பம் செதுக்குவது’ என்று. எனக்குத் தெரிந்து,   ஓவியம் வரைபவர்கள், ஓவியம் வரையும் போது, தன்னை மறந்துதான்…, அதாவது ‘மெய் மறந்து’ சித்திரம் வரைகிறார்கள் கிருஷ்ணா…   அதிலும், பென்சிலால் வரையும் கோட்டுச் சித்திரம்…, அத்தனை நுணுக்கமாய்…, நகைகள் கூட ரொம்ப தத்ரூபமாய் வரையும் போது, அந்தச் சித்திரம் மெள்ள உயிர் பெறும் கிருஷ்ணா. அதிலும், ஒரு photo-வை நகல் எடுப்பது மாதிரி வரைவது, பென்சில் drawing-ல் classic touch கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : உண்மை…, நான் நினைக்கிறேன்…, ஓவியர்கள் யாரும்…, தான் வரையும் ஓவியம், தனக்கு சோறு போடும் என்று நினைத்து வரைவதில்லை…  தனக்குள் இருக்கும் தணியாத தாகத்தின் வெளிப்பாடுதான் ஓவியம்…  தன்னால் வரைய முடிகிறது என்று அறிந்த பின்…, அதை முறையாகக் கற்றுக் கொண்டு தேர்ச்சி பெறுகிறார்கள். அதிலும், ‘சில்பி’ வரையும் பாணி, ஓவியங்களிலேயே தனிச் சிறப்பு என்று நினைக்கிறேன். கண்ட காட்சியை, கண் முன்னே photo மாதிரி கொண்டு வர முயற்சி செய்வது… இதற்கு, தான் கண்ட காட்சியை உள் வாங்க வேண்டும். பொறுமையாய், நிதானமாய் வரை...

Passion - பாகம் 4

கிருஷ்ணர்   ; இன்றைய தலைமுறையினர், அவர்களுடைய திறமையை செயல்படுத்த களமிறங்கினால் போதும்…. இங்க எந்த வேலையையும் செய்யலாம்… நாங்கள் யாருக்கும் சளைத்தவரில்லை என்று ready-யானால் போதும்… தங்கம் மாமி சொன்னது போல,   ‘பெண்கள் தனக்குள் இருக்கும் திறமையை உணர்ந்தால் போதும்…, கொடி கட்டிப் பறக்கலாம்…’ மேகலா  : Baking-ங்கிறது, இந்தப் பிள்ளைகள் விரும்பிச் செய்யும் வேலை கிருஷ்ணா…  ஒவ்வொரு order-ஐயும், ரொம்ப கவனமாய்…, ஒரு தவம் மாதிரி செய்றாங்க…  சில பிள்ளைங்க இருக்காங்க கிருஷ்ணா… சேலத்துல ஒரு பொண்ணு, தன்னோட channel-ல, தான் செய்யும் cake-ஐ, செய்முறையைக் காட்டி…, கூடவே படு comedy-யாக…, அதன் experience-ஐயும், அவ்வளவு அழகாகச் சொல்லுவாள் கிருஷ்ணா… அந்தப் பகுதி மக்கள், இவள் செய்யும் cake தான் வேண்டும் என்று பிடிவாதமாக order பண்ணியதைக் கூட, ‘என்னங்க செய்யறது…, நம்ம பாப்பாவுக்கு மொட்டை போடப் போறேன்னு சொன்னாலும், பிடிவாதமா, நீங்க செய்யிற cake தான் வேணும்னு பிடிவாதமாய்ச் சொல்லிட்டாங்க… இவ்வளவு சொன்ன பிறகு, நாம சும்ம இருக்கலாமா… அவங்க சொன்னபடியே, cake-அ design பண்ணேங்க..’ என்று சொல்லச் சொல்...

Passion - பாகம் 3

கிருஷ்ணர்   : சமீப காலத்தில் தான், சமையல் வேலை செய்பவர்களின் தனித்தன்மை மக்களைக் கவர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்… மேகலா  : இருக்கலாம் கிருஷ்ணா…. அதிலும், தொலைக்காட்சி, social media என்று மக்களுக்கு close ஆக இருக்கும் media மூலமாக, இவர்கள் சமையல் வேலை செய்தாலும், அதையும் நாங்கள் ரசிச்சிதான் செய்கிறோம் என்று பெருமையாக videos வெளியிடுகிறார்கள். நமக்கு, அவர்களுடைய சுவையான recipes-சும் கிடைக்கிறது…. அவர்களுக்கு, சமையல் மீது இருக்கும் காதலும் புரிகிறது…. கிருஷ்ணர்  : வாவ்! சூப்பர்…, சூப்பர்… மேகலா  : ‘வாவ் chef’ என்று ஒரு chef, channel நடத்துகிறார் கிருஷ்ணா… அவர் கற்றுக் கொடுக்கும் போது…., பேசும் English…, அதைப் பற்றி உன்னிடம் சொல்லியே ஆகணும் கிருஷ்ணா…. அவர் Hyderabad-ஐச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் சில காலம் வேலை பார்த்திருக்கிறார். அதனால், South Indian dishes தான் நிறைய செய்து காட்டுவார். ஆங்கில உச்சரிப்பு, நிறுத்தி, நிதானமாகச் சொல்லும் பாணி…., ஆங்கிலம் தெரியாதவர்களுக்குக் கூட புரியும் மொழியில் பேசுவார் கிருஷ்ணா…. குறிப்பாக, ‘அரேப்மண்டி’ என்று ஒரு dish…. இதைச் செய்யும...

Passion - பாகம் 2

மேகலா   : ‘சிவகாசி சமையல்’ channel ஆரம்பித்த பின்…, frankie கற்றுக் கொள்ளும் அவசியம் வந்தது கிருஷ்ணா… Bangalore-ல் Sheethal, Commercial street-க்குக் கூட்டிச் சென்றாள்… அங்கு, ரோட்டோரக் கடையில் ஒருவர், frankie செய்து கொண்டிருந்தார். ஷீத்தல், மெனக்கெட்டு, frankie செய்வதை watch பண்ணச் சொன்னாள்… சும்மாவே, ரோட்டுக் கடைகளில், பரோட்டா போடுவதை மெய் மறந்து ரசிப்பதுண்டு…. கிருஷ்ணர்  : Sorry…, ஜொள்ளு ஒழுக…, என்று சொல்லு… மேகலா  : அப்படியே இருக்கட்டும்… யாரும் சொல்லாமலேயே…, பரோட்டா செய்வதை வேடிக்கை பார்ப்பவள்…, அன்று ஷீத்தல் சொன்னதும், ஆசை ஆசையாய், frankie செய்முறையை வேடிக்கை பார்த்து…, மறுநாள், மிக அழகாகச் செய்து காட்டினோம்… மறக்காமல், ரோட்டுக்கடை விவரத்தையும் சொல்லித்தான் செய்தோம் கிருஷ்ணா….  எங்கள் channel-ல் நாங்கள் recipies-ஐ செய்து காட்டும் போது…, நான் எப்படிக் கற்றுக் கொண்டேன் என்பதையும் மறைக்காமல்…, மறக்காமல் சொல்லி விடுவேன்…. கிருஷ்ணர்  : Oh! பரவாயில்லை… மேகலா  : எங்கள் channel ஆரம்பித்த கொஞ்ச நாளில், பரவலாக, பலர் மத்தியிலும், எங்களுக்கு ஒரு பெயர் ஏற்பட்டது… ...

Passion - பாகம் 1

மேகலா   : கிருஷ்ணா…., நீ எங்க இருக்க கிருஷ்ணா…. கூப்பிட்டதும் ஓடி வருவியே கிருஷ்ணா…. இன்னம் காணலியே…. கிருஷ்ணர்  : யப்பா…., என்ன சத்தம்…. வெளியில் பனி பெய்து கொண்டிருக்கிறது…, அதை enjoy பண்ணினேன்… இன்று மார்கழி முதல் நாள் அல்லவா… எங்கு திரும்பினாலும்…., ‘திருப்பாவை’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது…. நேற்று, ஆண்டாள் கோயிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா வந்திருந்தார் அல்லவா… அதான், கொஞ்சம் லேட்டாயிருச்சி…. சரி…, நீ எதுக்குக் கூப்பிட்ட…. மேகலா  : ஏதாவது தலைப்பில் பேசலாம்னு நினைத்தேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி…., என்ன தலைப்பு யோசித்திருக்கிறாய்…. மேகலா  : என்ன தலைப்பில் பேசலாம்னு நீ சொல்லேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ‘Passion’…. அப்படீன்னா…, என்னன்னு தெரியுமா…. மேகலா  : ஒருவருடைய தனித்தன்மை…, தனித் திறமையா…, கிருஷ்ணா…. கிருஷ்ணர்  :  தனித்தன்மையாய் ஒருவரிடம் இருக்கும் தனித் திறமையை செயல்படுத்துவதில் சந்தோஷப்படுவது, ‘passion’ என்று சொல்லலாம்…  அதைப் பற்றிப் பேசலாமா… சரி…, உன்னுடைய passion எதுன்னு சொல்லு பார்ப்போம்… மேகலா  : என்னுடைய passion-ஆ...

தன்னம்பிக்கை - பாகம் 6 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : பாண்டவர்கள் கதை வேறு… எல்லோருக்கும் தெரிந்தே வனவாசம் சென்றார்கள்… பதின்மூன்று வருடங்களாக…, நாடும் நகரமும், நல்லவர்களும் அவர்களுக்காகக் காத்திருந்தனர். ஆனால், ஒரு சிற்றரசரோ…, பேரரசரோ, தன் ஆட்சியைப் பறி கொடுத்தால்…, தலைமறைவு வாழ்க்கையை…, தன் பகுதி மக்களுக்கே தெரியாமல் தான் வாழ முடியும்… உதாரணத்திற்கு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை உனக்குத் தெரியுமா… அவனுடைய இயற்பெயர், ‘மாறவர்மன்’. தன்னுடைய பெயரே, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று மாறுமளவுக்கு, சோழர்களிடமிருந்து தன்னுடைய நாட்டை மீட்பதற்கு, கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் பொறுமையாகப் போராடித்தான் அடைந்திருக்கிறான். தன்னுடைய நாடு, சோழர்களிடம் பறி போன பின், 23 ஆண்டு காலம் கழித்துப் போய், அவர்களிடம் பொறுமையாகவா கேட்டுப் பெற்றிருப்பார்… மேகலா  : இல்லை…, ஆனால், எனக்கு, இது எப்படி சாத்தியமாயிற்று என்பதுதான் என் சந்தேகமே… கிருஷ்ணர்  : சரி…, உனக்கு வேற மாதிரி கேள்வி கேட்கிறேன். உன்னுடைய ஒரு பொருளை நீ இழந்திருந்தால்…, அல்லது உன்னால் வாங்க முடியாத பொருளை வாங்க வேண்டும் என்றால், என்ன செய்வாய்…? மேகலா  : கிருஷ்ணா…, என்னைப்...