Posts

தன்னம்பிக்கை - பாகம் 5

மேகலா   : கிருஷ்ணா…, எனக்கு ஒரு சந்தேகம் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இப்பவரைக்கும் நல்லாத்தான போய்க்கிட்டு இருக்கு… அதுல என்ன சந்தேகம் வந்தது…. மேகலா  : ஐயோ கிருஷ்ணா… இதுவரைக்கும் பேசுனதுல எனக்கு ஒரு doubt-ம் கிடையாது… என்னோட சந்தேகம்…, ஒரு செயல்திறன் மிக்கவன், தன்னுடைய முயற்சியில் தோத்துப் போனாலோ…, தடைகளை சந்திக்கும் போதோ…, எல்லாவற்றையும் தாண்டி, எப்படி ஜெயிப்பான், அவன், தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வான்… அது கஷ்டமில்லையா… உதாரணத்திற்கு, பாண்டவர்களுக்கு, பன்னிரண்டு வருடம் வனவாசம்…, ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மறுபடியும் தங்கள் உரிமையை மீட்க எப்படி முடியும்… பன்னிரண்டு வருடங்கள் தங்குவதற்கு சரியான வீடு கிடையாது…, சாப்பாடு கிடையாது. காட்டிற்குள் போர்ப்பயிற்சி செய்தார்களா…, தெரியாது. அவர்களுடைய ஒரே நம்பிக்கை, ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் தான்… படைபலமோ.., பணபலமோ இல்லாத போது, பின் எப்படி மீண்டு வர முடியும்…? கிருஷ்ணர்  : இறுதியில் நீ சொன்ன வார்த்தை என்ன…? மேகலா  : அவர்களுடைய ஒரே நம்பிக்கை ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் தான்… அப்படீன்னு சொன்னேன்… கி...

தன்னம்பிக்கை - பாகம் 4

கிருஷ்ணர்   : இன்னும் ஒரு முறை அவரிடம் (டாக்டர் A. P. J. அப்துல் கலாம்), ’சுனாமி வருவதை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியாதா’ என்று கேட்கப்பட்டது… அதற்கு அவர், ‘சுனாமியை இத்தனை ஆண்டுகளுக்குள் அறவே தடுத்து நிறுத்த முடியும்’ என்று சொல்லவில்லை…   ’சுனாமி வருவதை, முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்… நாம் தான் பாதுகாப்பான இடத்திற்குப் பெயர்ந்து செல்ல வேண்டும்… இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது… இயற்கையை அனுசரித்துத்தான் வாழணும்’  என்று எந்த மழுப்பலும் இல்லாமல், தெளிவாகச் சொல்லுகிறார்…. இன்னும் ஒரு முறை, ‘ஜப்பானின், புகுஷிமா என்ற இடத்தில், அணுமின் உலைப்பேரழிவு ஏற்பட்ட சமயத்தில், நம்முடைய கூடங்குளத்திலும், அணுமின் உலை, ரஷ்யாவுடன் கூட்டு முயற்சியில் உருவாகிக் கொண்டிருந்தது. அதனைத் தடுக்கும் முயற்சியில் பலரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அரசாங்கம்…, நம்முடைய கலாம் ஐயாவை, விளக்கம் கொடுத்து, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டது. அப்பொழுது…, புகுஷிமா உலையை விட, கூடங்குளம் அணுமின் உலை, மின் கசிவு ஏற்படாதபடி, double protection கொடுக்...

தன்னம்பிக்கை - பாகம் 3

கிருஷ்ணர்   : இந்தியாவின் நட்பு நாடுகள், இந்தியாவின் எதிரியை எதிர்க்க ஒன்று சேர்ந்ததுதான் highlight. இதில், பிரதமரின் நேர்மையான அணுகுமுறை, நாட்டுப்பற்று, தேசத்தின் மீது அக்கறை, இதை செயல்படுத்துவதில் அவருக்கிருந்த துணிச்சல்…, துணிச்சலான குழுத் தலைவர்கள்…. மேகலா  : கிருஷ்ணா…, நீ சொல்லச் சொல்ல, அன்று நடந்த நிகழ்ச்சிகள் கண் முன்னே வந்து போகுது கிருஷ்ணா… அதே மாதிரி, article 370 என்ற செயல்முறையும், எத்தனையோ தடைகளை மீறி செயல்படுத்தப்பட்ட அசாத்தியமான துணிச்சலான செயல் கிருஷ்ணா… இதிலும், ஒன்றை நிச்சயம் பாராட்டியே ஆகணும் கிருஷ்ணா…. பாரதப் பிரதமரின், உலக நாட்டுத் தலைவர்களுடன் அவருக்கிருந்த நட்பு…, அதனால் ஏற்பட்ட தொடர்பு, reaction…, இவையெல்லாம் இங்குள்ள பிரச்னையாளர்களை வாயடைக்கச் செய்தது என்பது நிதர்சனமான உண்மை… கிருஷ்ணர்  : ஆமாம்…, நேர்மையும், தைரியமும்…, அதே நேரத்தில், நம்ம நாடு அமைதியாய் இருக்க வேண்டும் என்ற ஆசை, நாட்டு வளர்ச்சி, பாதுகாப்பில் அக்கறை…, இவையெல்லாம், துணிச்சல்…, தான் எடுக்கும் முடிவு தான் சரி என்ற அசாத்தியமான நம்பிக்கையின் வேர்கள்…. மேகலா  : கிருஷ்ணா…, இன்னைக்கு ...

தன்னம்பிக்கை - பாகம் 2

கிருஷ்ணர்   : நீ சொல்லுவதும் சரிதான்… உனக்கு ஒண்ணு தெரியுமா…. ஒரு வகையில் இப்படி over-confident திறமையாளர்களை நான் பாராட்டுகிறேன்… இவர்களின் அலப்பறையினால் தான், அடுத்தடுத்த திறமையாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.   உலகமும், எல்லாத் துறைகளிலும், போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைகிறது…., என்ற அளவில், அகம்பாவம் சரிதான்…  இருந்தாலும்,   தன்னைப் போலவே இன்னொரு திறமையாளனை சகிக்க முடியாதவர்களும் இருக்கிறார்களே… முறையாக வளர வேண்டிய போட்டி மனப்பான்மை…, எதிராளியை அழிக்கும் அளவு கூட போய் விடுகிறது…   சரி, இதைக் கொஞ்ச நேரம் தள்ளி வைப்போம்…, பிறகு பேசலாம். எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது…. மேகலா  : கேள்வியும், பதிலுமாய் இருக்கும் என் பரம்பொருளே,…, உனக்கும் கேள்வியா… கிருஷ்ணர்  : இந்தக் கேள்விக்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று நான் தெரிந்து கொள்ளணும்… சில காரியங்களில், துணிச்சலாய் இறங்கினேன் என்று சொல்கிறார்களே… அது என்னென்ன என்று உனக்குத் தெரியுமா…. மேகலா  : கிருஷ்ணா…, ‘அறம்’ என்று ஒரு சினிமா வந்தது நினைவிருக்கிறதா கிருஷ்ணா… அந்தப் படம், நிஜமாக நடந்த...

தன்னம்பிக்கை - பாகம் 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்னம்மா…, அதுக்குள்ள வந்துட்ட… இன்னும் ஒரு வாரத்துக்கு நீ என்னைத் தேடவே மாட்டேன்னு நினைச்சேன்… என்ன…, bore அடிக்குதா…. மேகலா  : Bore அடிச்சா மட்டும் தேடுவதற்கு பரம்பொருள் கிருஷ்ணன்… சினிமா தியேட்டரா கிருஷ்ணா… நீ என் குரு… என் கடவுள்… அதுக்கும் மேல…, என் மூச்சே நீதான கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி…, சரி…, ரொம்ப அலட்டாத…. இன்னைக்கு என்ன தலைப்புல பேசலாம்னு இருக்க… மேகலா  : கிருஷ்ணா…, என் வாழ்க்கையில், இந்த அளவுக்கு, பக்குவமாய், திருப்தியா நான் இருக்கேன்னா…, சந்தோஷமா எனக்கான கடமையைச் செய்யிறேன்னா…, அதெல்லாம் நீ எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்…  ’பிரச்னை என்பது, வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் வரத்தான் செய்யும்… அதையெல்லாம் பார்த்து துவண்டு விடுவதால் மட்டும்…, பிரச்னை விலகப் போவதில்லை…. அதற்குப் பதிலாக, பிரச்னையை தைரியமாக எதிர்கொள்…, சுலபமாகக் கடந்து செல்வாய்…’  என்று நீ கற்றுக் கொடுத்த பாடம் எனக்கு, தைரியத்தைக் கொடுத்தது… ஒவ்வொரு பிரச்னையையும் சந்திக்க, சந்திக்க…, வாழ்க்கையின் மீது…, ‘வாழ்ந்து பார்க்கலாம்’ என்று சுவையான ந...

ஏணிப்படிகள் - பாகம் 5 (நிறைவுப் பகுதி)

மேகலா   : என்ன கிருஷ்ணா…, அதுக்குள்ள முடிச்சிரலாமான்னு கேட்கிற… ஏணிப்படிகளாக வாழ்ந்தவர்களைப் பற்றி யாரையாவது உதாரணம் காட்டினால், இந்த கட்டுரையின் concept இன்னும் strong ஆகுமே கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஏணிப்படிகள், ஏற்றி விடத்தானே செய்யும். அது அந்த இடத்துலயேதான் இருக்கும்… இருந்தாலும்,  உலகத்திலுள்ள அத்தனை ஆசிரியர்களையும் ஏணிப்படிகள் என்று தாராளமாகச் சொல்லலாம்…  ஒருவர் இருக்கிறார்… தன் வாழ்க்கையில் பல மாணவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்து, ‘இப்படியும் முயற்சி செய்யலாமோ’ என்று சிந்திக்க வைத்த ஏணிப்படி… ஆனால், எவராலும் எட்ட முடியாத உயரத்தில் இன்றும் நிலைத்திருக்கும் ஒருவரை உனக்குத் தெரியுமா… அவர் சொன்ன ஒரு தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கேள்….  ‘அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்குத் துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கிருக்கிறது’  – இதை யார் சொன்னது தெரியுமா… மேகலா  : ஏவுகணைகளின் தந்தை டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்… கிருஷ்ணர்  : இந்தக் கூற்றினை, ஏதோ ஒரு room-ல் உட்கார்ந்து, article எ...

ஏணிப்படிகள் - பாகம் 4

கிருஷ்ணர்   : இன்னும் ஒன்று தெரியுமா….? உற்சவர்…, பிரம்மோற்சவ காலங்களில் மக்களைச் சந்திக்க வருவது வழக்கம். அந்த சமயங்களில், இந்தப் படிகள் வழியாகத்தான் இறங்கி வர வேண்டும்… பெருமாளும் எத்தனை முறை ஏறி, இறங்கியிருப்பார்… ஐயப்பன் கோவிலில், மேலே ஏற்றி விடும் இந்தப் படிகளுக்கு பூஜையே செய்வார்கள். ஏனென்றால், பரம்பொருளைக் காட்டுவதற்காக ஏற்றி விடும் ஏணிப்படிகள், புனிதப் பணியைச் செய்கிறது. அதுதான் விசேஷம்… இப்படித்தான்.., ஏணிப்படிகள், பயணிகளை பயணம் செய்ய வைப்பது மட்டுமல்ல…, வேறு உலகத்திற்கும் கூட்டிச் செல்வது போல, பக்தர்களுக்கு மோட்சத்திற்கான வழியையும் காட்டும்…. மேகலா  : கிருஷ்ணா…, பழநி மாதிரி கோவில்களில், படியேறி வருவது சிரமம் என்பதால்…, பழநியில் ‘விஞ்ச்’ வைத்திருக்கிறார்கள்… நாங்கள், ஹரித்வாரில், மானஸ தேவியை, இந்த ‘rope car-ல்’ ஏறித்தான் சென்று தரிசித்தோம்… திருப்பதி மாதிரி மலைக்கோவில்களில், படிகளில் ஏறிச் செல்வதற்கே பல மணி நேரம் ஆகும். அதனால், மலையைச் சுற்றிச் சுற்றி, கார், பஸ் செல்லும்படிக்கு பாதை அமைத்து, நம்மைச் சீக்கிரம் கூட்டிச் செல்கிறார்கள்… இன்னும், பலமாடிக் கட்டிடங்களில், ஏண...