Passion - பாகம் 4
கிருஷ்ணர் ; இன்றைய தலைமுறையினர், அவர்களுடைய திறமையை செயல்படுத்த களமிறங்கினால் போதும்…. இங்க எந்த வேலையையும் செய்யலாம்… நாங்கள் யாருக்கும் சளைத்தவரில்லை என்று ready-யானால் போதும்… தங்கம் மாமி சொன்னது போல, ‘பெண்கள் தனக்குள் இருக்கும் திறமையை உணர்ந்தால் போதும்…, கொடி கட்டிப் பறக்கலாம்…’
மேகலா : Baking-ங்கிறது, இந்தப் பிள்ளைகள் விரும்பிச் செய்யும் வேலை கிருஷ்ணா… ஒவ்வொரு order-ஐயும், ரொம்ப கவனமாய்…, ஒரு தவம் மாதிரி செய்றாங்க… சில பிள்ளைங்க இருக்காங்க கிருஷ்ணா… சேலத்துல ஒரு பொண்ணு, தன்னோட channel-ல, தான் செய்யும் cake-ஐ, செய்முறையைக் காட்டி…, கூடவே படு comedy-யாக…, அதன் experience-ஐயும், அவ்வளவு அழகாகச் சொல்லுவாள் கிருஷ்ணா… அந்தப் பகுதி மக்கள், இவள் செய்யும் cake தான் வேண்டும் என்று பிடிவாதமாக order பண்ணியதைக் கூட, ‘என்னங்க செய்யறது…, நம்ம பாப்பாவுக்கு மொட்டை போடப் போறேன்னு சொன்னாலும், பிடிவாதமா, நீங்க செய்யிற cake தான் வேணும்னு பிடிவாதமாய்ச் சொல்லிட்டாங்க… இவ்வளவு சொன்ன பிறகு, நாம சும்ம இருக்கலாமா… அவங்க சொன்னபடியே, cake-அ design பண்ணேங்க..’ என்று சொல்லச் சொல்ல…, இந்த passion செய்யிற வேலையை நெனச்சிப் பார்த்தேன் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : Passion வேற என்ன வேலையைச் செய்தது….
மேகலா : அந்தப் பொண்ணுக்கு, திறமை, தன்னம்பிக்கையோட, நகைச்சுவையாய் பேசவும் கத்துக் கொடுத்திருக்கில கிருஷ்ணா…. அதைச் சொன்னேன்… இன்னொரு பொண்ணு…, சென்னையைச் சேர்ந்த பொண்ணு, baking கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு, கற்றுக் கொடுக்கவும் செய்கிறாள் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : வாவ்! Very good…. இளம் தலைமுறையினருக்கு, கற்றுக் கொள்ள எத்தனை விஷயம் இருக்கு மேகலா… Snacks செய்யவும் கற்றுக் கொடுப்பார்களோ…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா… நிறைய masters, தங்கள் channel-ல் கற்றுக் கொடுத்தாலும், நேரடியாக, students-க்கு, snacks கூட கற்றுக் கொடுக்கவும் செய்கிறார்கள் கிருஷ்ணா… அன்று ஒரு video-வில், நிறைய பெண்கள், variety-யாக நிறைய sweets செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒருத்தர், ingredients, அதற்கான measurement, அடுத்து பக்குவம் என்று சொல்லிக் கொண்டே வருகிறார்கள். Flat-ஆன வடைச் சட்டியில், ஒருவர் மட்டுமல்லாமல், இன்னொருவரும் ஜிலேபி சுற்றிக் கொண்டே வருகிறார்கள்… இந்த actions-ஐப் பார்க்கும் போது, நாமும் இதில் சேர்ந்து கற்றுக் கொள்ளணும்னு ஆசையாய் இருக்கு கிருஷ்ணா…
கிருஷ்ணர் : பரவாயில்ல மேகலா… மக்கள் தொகை பெருகி வருகிறது… வேலை வாய்ப்புகள் எப்படியோ என்று பலர் கவலைப்பட்டாலும்…, மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ’வாழத் தயாராக இருப்பவனுக்கு, இந்த பூமி சொர்க்கம்’ என்று சொல்லி வைத்தவர்களுக்கு, ஒரு salute தான் அடிக்கணும் மேகலா… உலகத்தில், விஞ்ஞானம், technology வளர்வதை விட வேகமாக, சமையல் கலை மீதான ஆர்வமும் நன்றாகவே வளர்கிறது….
மேகலா : இது மட்டுமல்ல கிருஷ்ணா… ஒரு செயலை விரும்பிச் செய்வதுடன், அந்த வேலையை, தெய்வம் தனக்களித்த வரம் என்று நினைத்து செயல்படுபவர்களைப் பார்க்கும் போது, நமக்கு பிரமிப்பாகவும், ஆனந்தமாகவும் இருக்கு கிருஷ்ணா…
கிருஷ்ணர் : இது யாரு… சமையல் வேலைதானா…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா… கல்யாணத்துக்கு ‘பிரியாணி’ செய்து கொடுக்கும் ‘ஜப்பார் பாய்’ தான் கிருஷ்ணா…, நான் சொன்ன chef… ஒவ்வொருவருக்கும் ஒரு style இருக்கும்… இவருடைய தனித்தன்மை…, pre-plan-ல் தெரியும் கிருஷ்ணா…. 1500 பேருக்கு பிரியாணி சமைச்சுப் போடணும் என்றால், இவரோட statement, ‘ஒவ்வொரு இலையிலும், 1500வது இலையில் கூட, பிரியாணி, தாள்சா, சிக்கன் 65, பிரட் அல்வா என்று எல்லா food-ம் correct-ஆ போடணும்’ என்று சொல்லித்தான், அதற்கான பொருட்களை வாங்குவார். வாங்கும் சாமானில் மட்டும், pre-plan கிடையாது…. மறுநாள் செய்யப் போகும் பிரியாணிக்கு, அடுப்பு, விறகு, அடுப்பு மீது தேக்சா என்று கூட, ‘போர்க்களத்து சிப்பாய்’ மாதிரி, ready-யாக நிறுத்தி விடுவார்….
கிருஷ்ணர் : எத்தனை அடுப்பு, எத்தனை தேக்சா வைப்பார்….
மேகலா : கிருஷ்ணா…, நீண்ட ஹாலில், எதிர் எதிராக…, இந்தப் புறம் 4 அடுப்பு, அந்தப் புறம் 4 அடுப்பு…, பற்ற வைத்த பின், ஒவ்வொரு தேக்சாவிலும் fixed oil.., அதாவது, ஒரு தேக்சாவில், 3 கிலோ அரிசி பிரியாணி என்றால், அதற்குத் தேவையான எண்ணெய் என்று…, ஒருவர் தீ மூட்ட, ஜப்பார் பாய் oil ஊற்றிக் கொண்டு வருவார்… அடுத்து, அளந்து எடுத்து வைத்த spices…, அடுத்து வெங்காயம் என்று தாளம் தப்பாமல் நடக்கும்…. Measurement, fuel energy, timing…, அடுத்தது இன்னது என்ற கணக்கு…, இப்படி அடுத்தடுத்து smooth-ஆகப் போகும் கிருஷ்ணா…. 8 மணிக்கு அடுப்பு எரிய ஆரம்பித்தால், பந்தி time 11 மணிக்குள்ள, பிரியாணி, கேசரி, பிரட் அல்வா, தாள்சா, சிக்கன் 65 என்று எல்லா சமையலும், கனகச்சிதமாக முடியும்… பரிமாறும் வேலையை, ஒரு team ஆரம்பிச்சிருவாங்க… இதன் முழு video-வைப் பார்க்கப் பார்க்க…, எனக்கு அலுக்கவே அலுக்காது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Systematic-ஆ வேலை செய்யும் போது, அந்த வேலையின் அழகே சுவையா இருக்கும் மேகலா…
மேகலா : கிருஷ்ணா…, இந்த வேலை நடக்கும் போது, ‘ஜப்பார் பாய்’யோட முகத்தில் தெரியும் தெளிவு…. பிரியாணியை, உப்பு, காரம் சரிபார்க்கும் போது…, ‘ஒரு தேக்சாவில் சுவைத்துப் பார்த்தால் போதும்…, எல்லா தேக்சா பிரியாணியிலும், ஒரே மாதிரி சரியாகத்தான் இருக்கும்’ என்ற நம்பிக்கை….. இதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்லத் தோணும் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அதனால்தான், ஜப்பார் பாய்க்கு, பிரியாணி passion ஆகியது… அந்தக் காலத்தில், பீமனிலிருந்து…, இந்தக் காலம் ஜப்பார் பாய் வரையிலும், சமையலை passion ஆக விரும்பிச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கதையைச் சொல்லுவதும், video-வில் பார்ப்பதும், நெசம்மாவே ருசியான அனுபவம் தான்… உனக்குத் தெரிந்து, வேற வேலை, passion என்று ஆசைப்பட்டுச் செய்யும் வேலைகளைச் சொல்லேன்…, கேட்போம்….
(தொடரும்)
Comments
Post a Comment