Passion - பாகம் 5
மேகலா : கிருஷ்ணா…, நீ சொன்னாயே…, ’ஓவியம் வரைவது, சிற்பம் செதுக்குவது’ என்று. எனக்குத் தெரிந்து, ஓவியம் வரைபவர்கள், ஓவியம் வரையும் போது, தன்னை மறந்துதான்…, அதாவது ‘மெய் மறந்து’ சித்திரம் வரைகிறார்கள் கிருஷ்ணா… அதிலும், பென்சிலால் வரையும் கோட்டுச் சித்திரம்…, அத்தனை நுணுக்கமாய்…, நகைகள் கூட ரொம்ப தத்ரூபமாய் வரையும் போது, அந்தச் சித்திரம் மெள்ள உயிர் பெறும் கிருஷ்ணா. அதிலும், ஒரு photo-வை நகல் எடுப்பது மாதிரி வரைவது, பென்சில் drawing-ல் classic touch கிருஷ்ணா….
கிருஷ்ணர் : உண்மை…, நான் நினைக்கிறேன்…, ஓவியர்கள் யாரும்…, தான் வரையும் ஓவியம், தனக்கு சோறு போடும் என்று நினைத்து வரைவதில்லை… தனக்குள் இருக்கும் தணியாத தாகத்தின் வெளிப்பாடுதான் ஓவியம்… தன்னால் வரைய முடிகிறது என்று அறிந்த பின்…, அதை முறையாகக் கற்றுக் கொண்டு தேர்ச்சி பெறுகிறார்கள். அதிலும், ‘சில்பி’ வரையும் பாணி, ஓவியங்களிலேயே தனிச் சிறப்பு என்று நினைக்கிறேன். கண்ட காட்சியை, கண் முன்னே photo மாதிரி கொண்டு வர முயற்சி செய்வது… இதற்கு, தான் கண்ட காட்சியை உள் வாங்க வேண்டும். பொறுமையாய், நிதானமாய் வரையணும்… அடுத்து, பயிற்சி இருக்க வேண்டும்…. நாம் சொன்னது மாதிரி, கவனம், முனைப்பு, அர்ப்பணிப்பு…, எல்லாவற்றுக்கும் மேலாக, ’ரசனை’….
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…, நீ சொல்றதும் சரிதான் கிருஷ்ணா…. சித்திரம் வரைவது என்பது…, தெய்வத்தின் நேரடி அனுக்ரஹம் பெற்றது மாதிரி…, இல்லையா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Passion என்பதே…, கடவுளுடைய special gift தான்… அதில், இது மட்டும், கடவுளுடைய அருள் பெற்றது…, மற்றதெல்லாம் கொஞ்சம் கம்மிதான் என்கிறதெல்லாம் கிடையாது…
மேகலா : நான் நினைத்தேன்…, கொஞ்சம் மெனெக்கெட்டால், சமையல் வேலையைச் செஞ்சு விடலாம்…. ஆனால், ஓவியமோ…, சிற்பம் செதுக்குவதோ…, தெய்வத்தின் அருள் கொடை இருந்தால் மட்டும் தான் செய்ய முடியும் என்று….
கிருஷ்ணர் : சமையல் வேலையை மெனெக்கெட்டால், செய்யத்தான் செய்யலாம்… ஆனாலும், மெனெக்கெடணுமே… கல்யாணத்துக்கு சமைப்பது…, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சமைப்பதெல்லாம், சும்மா மெனெக்கெட்டா செஞ்சிரலாம் என்பது கிடையாது மேகலா…. ஈடுபாடு இருக்கணும்… நாம் சமைப்பது, கடைசி இலை வரைக்கும், நிறைவாக இருக்கணும்னு நினைக்கிற அக்கறை…, இதெல்லாம் இருக்கணும். எல்லக் கலைகளுமே, கடவுளோட அருள் பெற்றவைதான் மேகலா… சரி…, உனக்குப் பிடித்த ஓவியரைப் பற்றிச் சொல்லேன்….
மேகலா : கிருஷ்ணா…, எனக்கு ‘கோபுலு’ வரையும் கோட்டு ஓவியம்…, ‘சில்பி’ வரையும் பென்சில் கோட்டு ஓவியத்திலேயே நிகழ்வுக் காட்சிகளை வரைவது ரொம்பப் பிடிக்கும். கோபுலு, ஒரு feeling-ஐ, expression-ஐ வெளிப்படுத்துவதற்காக, ஒரு சின்னக் கோடு, முகத்தில் வரைந்து, அந்த feeling-ஐ உணர்த்தி விடுவார் கிருஷ்ணா… ‘துப்பறியும் சாம்பு’ கதைகளில், சாம்புவை வரையும் போது, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி, புருவத்தைத் தூக்கிய பார்வை என்ற முகத்தில், ஒரு சின்ன கோடு வரைந்து…, அது அதிர்ச்சியா…, அப்பாவித்தனமா…, என்று காட்டி விடுவார்…. எனக்கு, ‘கோபுலு’, ‘சில்பி’ ரொம்பப் பிடிக்கும். நான் college-ல் படிக்கும் போது, ‘குமுதம்’, ‘விகடனில்’ வரும் கதைகளுக்கு ஓவியம் வரைவது, பெரும்பாலும், ‘ஜெ’ எனப்படும் ‘ஜெயராஜ்’ தான் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஏன்! ரொம்ப நுணுக்கமாய் வரைவாரோ….
மேகலா : அவருடைய ஓவியம்…, youthful-ஆ இருக்கும் கிருஷ்ணா… Heroine-க்கு அவர் வரையும் hairstyle, அப்போதைய college students மத்தியில் ரொம்ப trending கிருஷ்ணா… நானும், hair-ஐ பின்னாமல்.., rubber band போட்டு முடிப்பேன்… உச்சியில், scarf கட்டிச் செல்லுவேன்… இப்படி, ஜெயராஜ் மாஸ்டர், ‘youth’-களுக்கு, fashion creator ஆக இருந்திருக்கிறார்…
கிருஷ்ணர் : ஒரு ஓவியர் வரைந்ததைப் பார்த்து, hairstyle பண்ணிக்குவியா… தமாஷ்தான் மேகலா… புதுப் புது விஷயம் வெளியே வருதே…
மேகலா : கிருஷ்ணா…, உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா… நான் இளங்கலை படிக்கும் போது, ‘மாயா சித்ராலயா’ என்ற ஓவிய institute-ல் சேர்ந்து, தபால் மூலம், ஓவியம் வரையக் கற்றுக் கொண்டேன் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : என்னது…, ஓவியம் வரையக் கற்றுக் கொண்டாயா… இது, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கிறாயோ… என்னடா party…, இப்படி ஓவியத்தைப் பத்தி இவ்வளவு ரசிச்சி பேசுறாளே என்று யோசிச்சேன்… உனக்கு drawing மேல interest உண்டா…
மேகலா : Crazy-யான ரசனை கிருஷ்ணா… அதனால்தான், institute-ல சேர்ந்து கத்துக்கிட்டேன். அவங்க பாடங்களை அனுப்பி வைப்பாங்க. நான் அதன் நுணுக்கங்களைப் புரிஞ்சிக்கிட்டு, வரைந்து அனுப்புவேன். Post பண்ண, எங்க அப்பாட்டதான் கொடுத்து விடுவேன் கிருஷ்ணா… ஒரு முறை, முதியவரை படம் வரைந்து அனுப்பச் சொல்லிக் கேட்டார்கள்… எங்க ‘ஐயாமை’யை, model ஆக உட்கார வைத்து…, காதில் அணிந்திருந்த ‘தண்டட்டி’ முதற்கொண்டு வரைந்து, எங்க அப்பாவிடம் காட்டி அனுப்பியிருந்தேன்… அப்பாவும் பாராட்டினார்… மாஸ்டரும் பாராட்டினார் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! Very good….
(தொடரும்)
Comments
Post a Comment