Posts

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 7

கிருஷ்ணர்  : நீ எந்த உலகத்தில் இருக்கிறாய் மேகலா… கண்டுபிடித்தது நேற்றைய விஞ்ஞானிதான்… Satellite-ஐ launch பண்ணியது இன்றைய காலத்தில்தானே…. விஞ்ஞானிகளின் சிந்திக்கும் திறன் எப்பவும் ஒரே மாதிரிதான். அதனால்தான், புராண காலத்திலிருந்தே புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இருந்தாலும்…, சாதனங்களும், சாதனைகளும் படைப்பதற்கு, காலங்களும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டாமா… ஏவுகலத்தை விண்ணில் தவழ விட்டது நேற்றைய விஞ்ஞானி என்றாலும், அது மிதக்க விடப்பட்டது…, இந்த 21-ம் நூற்றாண்டில்தானே…. அன்றிலிருந்து technology-யோட வளர்ச்சி அசுரத்தனமானது என்பதை நீ ஒத்துக் கொள்கிறாயா, இல்லையா…. 2G யில் ஆரம்பித்து, 3G, 4G…., இப்ப என்ன 5G-யும் வந்து விட்டதா….  விஞ்னானம் அசுரத்தனமாக வளர்வதற்கு இன்றைய காலம் தான் சாதகமாக உள்ளது….  உண்டா…, இல்லையா…. நேற்றைய தலைமுறையினர், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து நாம் பிறந்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கிறதா, இல்லையா…. பொய் சொல்லாமல் சொல்லு…. மேகலா  : நீயும் ரொம்ப technical-ஆகத்தான் பேசுற கிருஷ்ணா…. இந்த technology இல்லாமல், நாங்கெல்லாம் வாழலியா கிருஷ்ணா…. கிருஷ்ணர...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 6

மேகலா   : தெரியும் கிருஷ்ணா…. பி. டி. உஷா என்னும் தங்கமகளைத் தெரியாதவர் இந்த இந்தியாவிலேயே கிடையாதுல கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இந்தத் தங்கமகளின் கால்கள் மான் மாதிரி வேகம் காட்டுவது என்று கண்டுபிடித்தது யார்…. அவருக்கு முறையாகப் பயிற்சி கொடுத்தால், உலக அளவில் ஓட்டப் பந்தயத்தில் சிகரம் தொடுவார் என்று கணித்தது யார்….  அவராகப் பயிற்சி எடுத்திருந்தால், தங்கமகளாக முடியுமா…. மேகலா  : நீ சொல்றது correct கிருஷ்ணா…. அவருடைய coach O. M. நம்பியாரின் தீவிரமான coaching-தான், P. T. உஷாவின் வெற்றிக்குக் காரணமாகியது… அந்த ஆண்டு அவருக்கு சிறந்த பயிற்சியாளருக்கான ‘துரோணாச்சாரியார்’ அவார்டும் கிடைத்தது…. இந்த வீராங்கனைக்கு மட்டுமல்ல கிருஷ்ணா…  ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் அவரவர் திறமைகளை வெளிக்கொணர்வது அவங்களோட coach தான் என்பதில் சந்தேகமே கிடையாது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : நான் சொன்னது சரியாப் போச்சா…. அந்தக் காலம், இந்தக் காலம், எந்தக் காலமானாலும் மாணவர்களின் திறமை மீது அசாத்திய நம்பிக்கையும்…., அதை வெளிக்கொணர்வதில் தீவிர முனைப்பும் கொண்டவர் தான் ஆசிரியர்…. இதில் விதிவிலக்குகள் ...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 5

மேகலா   : விசுவாமித்திரர், வசிஷ்டர் இருவரும் ராமர் மீது கொண்ட அக்கறையை, ராமாயணம் படிக்கும் பொழுதெல்லாம் படித்து வியந்து போவேன் கிருஷ்ணா… ராமரின் திறமைகளையெல்லாம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவரே விசுவாமித்திரர் என்றுதான் சொல்லுவேன்…. இன்னும் சொல்லப் போனால், ராமருக்கு சீதையை மணமுடித்துக் கொடுப்பதற்காக, மிதிலை மன்னன் ஜனகரிடம் அழைத்துச் சென்றதே விசுவாமித்திரர் தானே கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அது மட்டுமல்ல மேகலா….. அற்புதமான சிவதனுசுவை ராமரிடம் எடுத்துக் காட்டச் சொல்லி, ராமரின் வில்திறமையை உலகுக்குக் காட்டிய பெருமை அனைத்தும் விசுவாமித்திரரையே சாரும்…. தன்னுடைய மாணவன் மீது அவருக்கிருந்த நம்பிக்கை எவ்வளவு திடமானது! ராமரின் விருப்பத்தையும், தசரதரின் விருப்பத்தையும் கேட்காமலேயே ராமருக்கும் சீதைக்கும் மணம் பேசி முடித்த பின்னரே, தசரதருக்குச் செய்தி சொல்லப்பட்டது. இதெல்லாம் ராமரின் அவதார நோக்கம் அறிந்த விசுவாமித்திரரின் மேன்மையான செயல்கள்…. மேகலா  :  ராமர் என்ற மாணவன்…, அவதார புருஷன் என்றாலும், ஆசிரியர் மீது அவருக்கிருந்த மதிப்பு, மரியாதை, அவர் காட்டிய பணிவு இவையெல்லாம் நாம்...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 4

மேகலா   : கடலளவு ஞானத்தைக் கொடுக்கும் technology தலைமுறையினரை, ஒன்பதாம் வாய்ப்பாடு சொல்லச் சொல்லு கிருஷ்ணா…. அந்தக் காலங்களில், school-க்குப் போனவுடனேயே, கடவுள் வாழ்த்து பாடி முடிந்ததும், மூன்றாம் வாய்ப்பாடிலிருந்து ஒன்பதாம் வாய்ப்பாடு வரை சொல்லியாக வேண்டும்… தினந்தோறும் சொல்லுவதால், கணக்குப் பாடத்தில் வாய்ப்பாடை மறக்காமல் உபயோகப்படுத்த முடியும்… அந்தக் காலங்களில் கணக்கு exam-க்கு, 20 மார்க்குக்கு மனக்கணக்கு exam ஒன்று நடக்கும். அந்தக் கணக்கு செய்வதற்கு இந்த வாய்ப்பாடு practice-தான் நமக்கு கை கொடுக்கும்.   இன்று கடைக்குப் போய் சாமான் வாங்கினால், bill-ஐ சரி பார்க்க, calculator-ஐத்தான் இன்றைய தலைமுறையினர் தேடுகிறார்கள்…..   இன்னும், என் மாமனார், அப்பா காலங்களில் 1/16, 1/8 வாய்ப்பாடுகளை மனப்பாடமாகச் சொல்லுவார்கள். அதனால், மனதிலேயே அத்தனை கணக்கு வழக்குகளையும் அவர்களால் எளிதாக சரி பார்க்க முடிந்தது. இது ஞாபக சக்தி திறனையும் வளர்த்தது.   இன்று எது எடுத்தாலும், pen drive-ல் ஏற்றிக் கொள்வது…., அல்லது phone-ல் ஏற்றிக் கொள்வது…., ஞாபக சக்திக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் சம்ப...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 3

மேகலா  : உறவுகளின் அருமையே தெரியாதவர்கள்…. உலக மக்களோடு தொடர்பு கொள்கிறார்கள்…..!   ‘Phone-ஏ உலகம்’ என்று மணிக்கணக்கில் அதனோடேயே மல்லுக்கட்டுவது மட்டும் சரி என்கிறாயா….  அது மட்டுமல்ல கிருஷ்ணா…, பிள்ளைகள் வெளியில் சென்று விளையாடுவது என்பதே கிடையாது. அந்தக் காலங்களில், சின்னப் பிள்ளைங்க ஓடிப் பிடித்து விளையாடுதல், ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு, கண்ணாமூச்சி விளையாட்டு என்று வீட்டிற்கு வெளியே விளையாடச் செல்வதும், விளையாடும் போது, முகமெல்லாம் வியர்த்தும், உடம்பெல்லாம் அழுக்கேறிப் போவதும், சகஜமான ஒன்று… இன்று சின்னப்புள்ளைகளுக்கு வியர்ப்பது என்பதே கிடையாது…..   கல்லிலும், மண்ணிலும் புரண்டு விளையாடுவதை, ‘சின்னப் பிள்ளைகளே வேண்டாம்’, அம்மாமர்களே அனுமதிப்பது கிடையாது.   எப்பவும், video games விளையாடணும்…. இல்லையா…., cartoon படம் பார்க்கணும்…., அப்பத்தான் சாப்பாடே சாப்பிடுவார்கள்…. நீ என்னதான் சொல்லு கிருஷ்ணா…   சின்னப் பிள்ளைகள் உலகம் கூட, அந்தக் காலம் தான் பொற்காலம்…. கிருஷ்ணர்  : ஏன் இப்பவும், பிள்ளைகள் ground-க்குப் போய் கிரிக்கெட் விளையாடுவதில்லையா… அப்பார்ட...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 2

மேகலா   : ஒரு வகையில் அது உண்மைதானே கிருஷ்ணா…. கூப்பிடு தூர இடத்திற்கு நடந்து செல்வது எப்படி….? வாகனத்தில் செல்வது எப்படி….? Doctors மெனக்கெட்டு, தினமும் 1/2 மணி நேரம் walking போங்க… என்று இன்றைக்கு சொல்லப்படாத மனுஷங்களே கிடையாது.   நாம் நடப்பதற்கு doctors advice பண்ண வேண்டியிருக்கு…. கிருஷ்ணர்  : அன்றைக்கு, தூரம் காரணமாக 1 வாரம் இழுத்தடிக்கும் வேலையை இன்றைக்கு ரெண்டே நாளில் முடிச்சிருவாங்கல்ல. மனுஷங்களுக்கு time consume ஆகுதுல…  பணப் புழக்கம் அதிகரிக்கும் வித்தையைத் தெரிந்து கொண்டானல்லவா… அப்போ…., வேகமாகச் செல்லுதல் என்பது முக்கியம் அல்லவா…. மேகலா  : வேகம்…, வேகம்…, என்று பேசுபவர்கள், ஆரோக்கியத்தைப் பற்றியே யோசிப்பதேயில்லையே கிருஷ்ணா…. Walking மட்டுமல்ல கிருஷ்ணா… அந்தக் காலத்துல தானியத்தை powder பண்ணுவதற்கு உரலில் இடிப்பாங்க… அதனால், தோள்பட்டை, கைகள் இவைகளுக்கு exercise இருந்தது…, உண்ட சோறும் செரித்தது. இன்று உடனே mixie-யில் போட்டு powder பண்ணி, பலகாரம் செய்து சாப்பிடுவதால், உடம்பின் பாகங்களுக்கு exercise-ம் இல்லை…, extra சாப்பிடுவதால்…, fat-ம் சேர்கிறது. ...

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 1

கிருஷ்ணர்   : என்ன மேகலா…. உன் சத்தத்தையே கேட்க முடியவில்லையே…. நிறுத்தாமல் பேசுவியே… என்ன, தீபாவளி busy-யா…. தீபாவளி முடிஞ்சும் 1 வாரம் ஆயிருச்சே…. முருகனின் சூரசம்ஹாரம் கூட முடிந்து…., இன்று முருகனுக்கு திருக்கல்யாணம் கூட கோயிலில் முடிந்திருக்கும்… உன்னை ஆளையே காணோமே….. ஊர் நிலவரம் எதுவும் தெரியவில்லை…. என்ன…., ஒரு மாதிரி tired ஆகத் தெரிகிறாய்…. மேகலா  : கிருஷ்ணா… என் மீது உனக்கு எவ்வளவு அக்கறை கிருஷ்ணா… தீபாவளி முடிந்து கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போனது கிருஷ்ணா…. வெள்ளிகிழமை, குலதெய்வம் கோயிலுக்குப் போகணுமின்னு ஹரி சொன்னதால்…. டாக்டரிடம் சென்று, treatment எடுத்து சரியாகி விட்டேன். வெள்ளிகிழமை, கருக்குவேல் அய்யனார் கோயிலுக்குச் சென்றிருந்தேன். நேற்று, சூரங்குத்து பார்க்க, மடவார்வளாகம் கோயிலுக்குச் சென்றிருந்தேன் கிருஷ்ணா…. இதோ, இன்று பழையபடி உடம்பு சீராகி விட்டது…. எனக்கும், உன்னுடன் பேசி ரொம்ப நாள் ஆனது போல் இருந்ததால், diary-யைத் தூக்கி விட்டேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : எல்லாம் சரியாகி விடும் மேகலா….. இதோ, நீ பேசப் பேச, உன் குரலில் உற்சாகம் தெறிக்க ஆரம்பிக்கிறது… மனசு...