Posts

வாகனங்கள் பலவிதம் - பகுதி 8

  கிருஷ்ணர்   : நாங்கள் Niagara Falls இருக்கும் Buffalo நகருக்கு train-ல் சென்ற அனுபவம் பற்றிக் கேட்டாயல்லவா? நாங்கள் train-ல் போன அந்தப் பயணமே ரொம்ப சுவாரஸ்யமானது…… இங்கெல்லாம் train-ல் seat No.-லாம் தருகிறார்கள் அல்லவா…. ஆனால், நாங்கள் சென்ற train-ல் seat No.-லாம் கிடையாது… மேகலா  : Oh! Unreserved-ஆ….? கிருஷ்ணர்  : என்ன…, unreserved-ஆ என்று அசால்ட்டா கேக்குற… நாங்க railway station-க்குப் போனோம்ல… எங்கள் ticket-ஐக் காண்பித்து, luggage எல்லாவற்றையும் check பண்ணி, train-ல் ஏற்றி விட்டார்கள்.. மேகலா  : கையோடு நீங்கள் எடுத்துச் செல்லவில்லையா….? கிருஷ்ணர்  : No…… Flight-ல் முதலில் luggage-ல் tag கட்டி, எடுத்துச் செல்வார்கள்-ல, அது மாதிரி இங்கயும், station-ல் வைத்தே luggage-ல் tag கட்டி கொண்டு செல்லப்பட்டது. பரபரப்பான அந்த station-ல் எங்கள் train-க்கான waiting room-ல் நாங்கள் காத்திருந்தோம். அப்போ, ஒரு lady, ‘T.T.R’ மாதிரி, அங்கு வந்து, எங்களுக்கான ‘boarding pass’-ஐ, announce பண்ணினார்கள். மேகலா  : Boarding pass-ஐ, announce பண்ணினார்களா…..? கிருஷ்ணர்  ...

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 102

மேகலா   : சஞ்சயனிடம், துரியோதனன் மேலும் சில வார்த்தைகளைப் பேசினான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். என்ன பேசினான் என்று இப்போது பார்க்கலாம். ‘இந்த யுத்தத்தில் உயிர் தப்பிப் பிழைத்திருக்கிற வீரர்கள் அனைவரிடமும்,  துரியோதனன், பீமனால் யுத்த விதிமுறைகளை மீறி தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டான் என்று நீ எடுத்துச் சொல்ல வேண்டும்.  கர்ணன், பீஷ்மர், துரோணர், பூரிசிரவஸ் ஆகியோரையெல்லாம் குரூரமான முறைகளால் கொலை செய்த பாண்டவர்கள், என்னையும் நிந்திக்கத் தக்க முறையிலேயே வீழ்த்தினார்கள் என்று நீ எல்லோரிடமும் கூறுவாயாக! யுத்த சாஸ்திரத்தை அறிந்த எவன் ஏற்கப் போகிறான், பீமனுடைய செயலை? ‘சஞ்சயா! நீ சென்று என் தாயிடமும், தந்தையிடமும், துரியோதனன் யுத்த பூமியில் அநியாயமான முறையில் வீழ்த்தப்பட்டானே தவிர, வெல்லப்படவில்லை என்ற செய்தியைத் தெரிவிக்க வேண்டும். ‘சஞ்சயா! எடுத்த காரியத்தை முடிக்கிற கிருதவர்மாவுக்கும், புண்ணியாத்மா கிருபருக்கும், பெரும் பாக்கியம் பெற்ற அஸ்வத்தாமாவுக்கும் நான் சொன்னதாக ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். பாண்டவர்களை நம்ப வேண்டாம்.  யுத்த தர்மம் முழுவதையும் மீறி நடந்து...

வாகனங்கள் பலவிதம் - பகுதி 7

  மேகலா   : கிருஷ்ணா! Sorry கிருஷ்ணா….. கிருஷ்ண ர் : எதுக்கு sorry….! என்ன ஒரு மாதிரி முழிக்கிற….? ஏதாவது தப்பு…. கிப்பு…. இல்லையே, அது மாதிரி ஒண்ணும் நடக்கலயே…. மேகலா  : நீண்ட…. belated happy birthday, கிருஷ்ணா….. நேத்தே சொல்லியிருக்கணும்…. சொல்லலை… இன்று கட்டுரையை எழுத உட்கார்ந்ததும் சொல்லியிருக்கணும்…. என்ன மன்னிச்சுக்கோ கிருஷ்ணா… கிருஷ்ணர்  : Happy birthday சொல்லலயா…. என்ன உளர்ற…  நேற்று முறுக்கு சுட்டு, லட்டு செய்து, பால், வெண்ணெய், தயிர் எல்லாம் எடுத்து வைத்து, என்னையும் தவழ விட்டு, வாயில் வெண்ணெய் தடவி, குதூகலப்பட்டு; என் முன்னே உட்கார்ந்து கதையும் சொன்னயே…. இது என் பிறந்த நாளுக்காகத்தானே….. மேகலா  : அது வேறு…., கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம். நான், note book எடுத்து, பேனாவால் பேசினால் தான் உன்னுடன் பேசுவதாகவும், உனக்கு வாழ்த்து சொன்னதாகவும் அர்த்தம். நேற்று ஜெயந்தி பூஜை முடிந்த பின்பு, பிரசாதம் சாப்பிட்டு, serial பார்த்து, அப்படியே படுத்து விட்டேன். நான் book-ம் தூக்கல…., birthday wishes-ம் சொல்லல….. அதனாலதான்…. கிருஷ்ணர்  : முட்டாள்…. முட்டாள்….....

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 101

  தளபதி அஸ்வத்தாமா மேகலா  : திருதராஷ்டிர மன்னனின் அரண்மனையை அடைந்த கிருஷ்ணர், அங்கே இருந்த வியாசரையும், காந்தாரியையும், திருதராஷ்டிரரையும் நமஸ்கரித்து, திருதராஷ்டிரரின் கைகளைப் பிடித்து அழுது, பிறகு பேசலுற்றார். ‘அரசே! நடந்தது அனைத்தையும் நீர் அறிவீர். இன்னும் நடக்கப் போவதையும் நீர் அறிவீர். பாண்டவர்கள் உங்கள் மனதுக்கு இதமானதையே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். க்ஷத்திரிய குலத்திற்கு எந்த நாசமும் வந்து விடக் கூடாது என்று பெரும் முயற்சி எடுத்தார்கள் என்பதை நீரும் அறிவீர். ‘அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு பகுதி ராஜ்ஜியத்தை வைத்துக் கொண்டு அமைதியாக வாழ அவர்களை அனுமதித்திருக்கலாம். அதை விடுத்து,  உமது மகனால் சூதாட்டத்திற்கு அழைக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, காட்டிற்கும் விரட்டப்பட்டார்கள்.  அதன் பிறகு, வனத்திலும் நிம்மதியின்றி துன்பங்களை அனுபவித்தார்கள். தலைமறைவு வாழ்வு முடிந்த பிறகாவது, அவர்களுக்கான ராஜ்ஜியத்தை அளித்திருக்கலாம். நானே நேரில் வந்து, ஐந்து கிராமங்களையாவது தந்து விடுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.  ஆனால், நீரோ உம்முடைய மகன் ச...

வாகனங்கள் பலவிதம் - பகுதி 6

  கிருஷ்ணர்   : சரி….! இந்த ‘கார்’ – இதைப் ப்ற்றிய உன்னுடைய அனுபவங்களைச் சொல்லு மேகலா…. மேகலா  : கிருஷ்ணா! இப்போ….. நம்ம நாட்டுல car கம்பெனிகள் எத்தனை இருக்கு தெரியுமா கிருஷ்ணா! ஒவ்வொரு கம்பெனியும், தன்னுடைய படைப்புகளாக, ஒவ்வொரு வருஷமும் புதுசு, புதுசா நிறைய கார்களை தயாரித்துக் கொண்டே இருக்கின்றன. கிருஷ்ணர்  : என்னென்ன கார் கம்பெனிகள் இருக்கின்றன மேகலா? மேகலா  : மாருதி, TATA, ஹோண்டா, ஹூண்டாய், மஹேந்திரா, SKODA என்று ஏகப்பட்ட கார் கம்பெனிகள் இருக்கின்றன….. இந்த மாருதி கம்பெனியின் car models, 800, Alto, Wagon R, Swift, Desire, Baleno என்று ஒவ்வொரு வருடமும் புதுப்புது வாகனங்களை release பண்றாங்க…. ஒவ்வொன்றும் ஒரு rate….  ஒவ்வொரு rate-க்கும், advanced வசதிகள் என்று சொகுசுகளும் மக்களைக் கவரும் விதமாகத்தான் இருக்கும்.  எத்தனை வசதிகள் செய்து தரப்பட்டாலும், மக்கள் உட்கார்ந்து செல்வது என்பது, front seat-ல், driver + 1 seat, பின்னாடி 2 seats அவ்வளவுதான் உட்கார முடியும்….. அப்படி உட்காரும்படிக்குத்தான்,  seats-ம் வடிவமைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணா…..! 20 லட்ச ...

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 100

  மேகலா   : காந்தாரியின் குரோத உணர்வைக் குறைக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி, யுதிஷ்டிரர், கிருஷ்ணரிடம் மேலும் என்ன கூறினார் என்று இப்போது பார்ப்போம். ‘கிருஷ்ணரே! ஜனார்த்தனரே! எவராலும் அடைய முடியாத வெற்றி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.   உம்முடைய உதவி இல்லாமல், துரியோதனன் சேனை என்ற சமுத்திரத்தை எங்களால் கடந்திருக்க முடியாது.   எங்களுக்காக இந்த யுத்தத்தில், எவ்வளவோ அடிகளையும் தாங்கிக் கொண்டு, இந்த மாபெரும் வெற்றியையும் கிடைக்க உதவி செய்துள்ளீர். அந்த வெற்றி வீணாகப் போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நீரே. ‘கிருஷ்ணரே! தன் மகன் கொல்லப்பட்ட விதத்தை நினைத்து, காந்தாரி மிகவும் கோபம் கொண்டிருப்பாள். உங்கள் ஒருவரால் தான் அவளுடைய மனதை சமாதானப்படுத்த முடியும்.  காந்தாரி, சிறந்த புண்ணியவதி; பெரும் தவங்களைப் புரிந்தவள். அவள் பார்வை ஒன்று போதும்; எங்களையெல்லாம், எரித்து சாம்பலாக்கி விட.  எங்களுக்கு, அவளைப் பார்ப்பதற்கும் கூட சக்தியில்லை. எங்கள் நன்மையை விரும்புகின்ற நீர், முதலில் சென்று, காந்தாரியிடம் பேசி, அவளை சமாதானப் படுத்தி, அவள் மனதில் எரியும் கோபத் தீயை அணைத...

வாகனங்கள் பலவிதம் - பகுதி 5

  மேகலா   : இரு சக்கர வாகனங்கள் சிலவற்றின் பெயர் கேட்டிருந்தாயல்லவா கிருஷ்ணா? கிருஷ்ணா! ‘லேம்ரட்டா’ (Lambretta) என்று சொல்லப்படும் ஒரு scooter தான் எனக்குத் தெரிஞ்சி ‘அரதப்பழசு’. நான் பார்த்த வரையில், ‘லேம்ரட்டா’ scooter உயரமாகவும், pillion-ல் உட்காருபவர்களுக்கு கொஞ்சம் அசௌகர்யமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய கல்யாணம் நடந்த வருடத்தில், ‘Bajaj scooter’ வந்து விட்டது. இது ஓட்டுபவர்களுக்கும், பின்னாடி அமர்ந்து செல்பவர்களுக்கும் சௌகர்யமாக இருக்கும். அப்பல்லாம், key வைத்து start பண்ண முடியாது. Scooter-னாலும் சரி, motor bike-னாலும் சரி, key வைத்து open பண்ணி, வலது பக்கம் starter-ஐ உதைத்து, start பண்ணினால் தான், வண்டி, move ஆகும்.   கொஞ்சம் old ஆன வண்டியை start பண்ணுவதற்கு உதைச்சு, உதைச்சு ‘ஒரு கால்’ நொண்டியடிக்கிற அளவுக்கெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணும் வண்டியத்தான் நான் நெறய பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா! கிருஷ்ணர்  : Oh! நீ scooter-ஐ உதைச்சு ‘start’ பண்ணியிருக்கியா, மேகலா? மேகலா  : ஐயோ… கிருஷ்ணா…. எத்தனை வாட்டி உதைச்சிருக்கேன்…. எங்காவது, அவசரமாகக் கிளம்பு...