திருக்குறளில் வாழ்வியல் - பாகம்4
மேகலா : எனக்கு மகாபாரதத்தில் ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது கிருஷ்ணா…. அர்ஜுனனை, பரமசிவனாரிடமிருந்து, பாசுபதா அஸ்திரத்தை வரமாகப் பெற்று வா என்று கிருஷ்ணர் பணிக்கிறார். பரமசிவனாரிடமிருந்து ஒரு அஸ்திரத்தைப் பெற வேண்டும் என்பது சாதாரண task இல்லை…. செயற்கரிய இந்தச் செயலைச் செய்வதற்கு அர்ஜுனன் காட்டிற்குச் சென்று தவம் செய்யப் புறப்படுகிறான்…. மனசார பரமசிவனாரை வேண்டி, நமச்சிவாய மந்திரத்தை ஓதுகிறான். அந்தச் சமயத்தில் மனசு கண்டபடி அலை மோதினால், எப்படி இறையனாரின் காதில் நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். தன் ஆசைகளை…, கோபத்தைக் கட்டுப்படுத்தி, நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்கிறான். வீரத்தில் சிறந்த அர்ஜுனனின் தவத்தை மெச்சி, பரமசிவனார், வேட்டுவராக இறங்கி வந்து, அர்ஜுனனின் கவனத்தை திசை திருப்ப, காட்டுப்பன்றியை அனுப்புகிறார். தவம் கலைந்த அர்ஜுனன், பன்றியை விரட்ட அம்பெய்துகிறான்… வேட்டுவனான பரமசிவனாரும், பன்றியை நோக்கி அம்பை விட, இருவருக்கும் மோதல் வரும்படி ஒரு நாடகம் நடத்துகிறார். இருவரும், பன்றி தனக்கானது என்று சொல்ல, மற்போர் புரிகின்றனர். சந்தடி சாக்கில், இறையனார், அர்ஜுனனின் தோள்களைக் கட்டிப் பிடிக்கிறார...