Posts

அரசியல் அதகளம் - பகுதி 4

கிருஷ்ணர்   : ‘குவார்ட்டரா….’, இது ஒரு வகையான லஞ்சம் தானே….. மேகலா  : எல்லாக் கட்சிக்காரங்களுக்கும் இது பொதுவான விதி; Opposite கட்சி செஞ்சால், இது லஞ்சம்…! சமயத்தில், சில தலைவர்களுக்கு, தானாகக் கூட்டம் சேர்வதும் உண்டு….. அதுவும், மக்கள், ‘எப்படா ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்று தவிக்கும் போது, ‘இவர் வந்தால் நமக்கு நல்லது நடக்கும்’ என்று நம்பும் ஒரு தலைவர், மக்களைச் சந்திக்க வரும் போது, மக்கள் கூட்டம், கடல் அலையெனத் திரண்டு, நாளை நடக்கப் போகும் வெற்றியை இன்றே கட்டியங்கூறுவார்கள். உடனே, இவர்களும், தங்கள் கூட்டத்திற்கும், மக்கள் அலையெனத் திரள வேண்டும் என்று ஆசைப்பட்டு,  ‘அலையெனத் திரண்டு வாரீர்; ஆதரவைத் தாரீர்’ என்று முழங்குவார்கள். வராவிட்டால் என்ன செய்வது என்று முன்யோசனையாக, வெளியூரிலிருந்து லாரி மூலம் ஆட்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.  இப்போ, இந்த நடைமுறை ரொம்ப முன்னேறியுள்ளது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன முன்னேற்றம்…? மேகலா  : கூட்டத்தில் இருப்பவர்களில் ஒருவர் எழுந்து என்ன கேள்வி கேட்கணும், அதற்கு எப்படி பதில் சொல்லணும்…., தலைவருடன் யார் நலம் விசாரித்து பே...

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 128

மேகலா  : மகாபாரதம் முழுவதுமாக வாசித்துக் கொண்டு வரும் பொழுது, ஸ்ரீ கிருஷ்ணரின் வாக்காக, ‘கீதை’ என்னும் வேத மொழியைப் படிக்கும் பொழுது, ‘முக்குணங்களினால் தான் செயல்கள் நடைபெறுகின்றன. இந்த செயல்களினால் தான் உலகம் இயங்குகிறது. இந்த முக்குணங்களும் என்னால் படைக்கப்பட்டனவையே என்றாலும், இந்த முக்குணங்களினால் ஏற்படும் செயல்களுக்கு நான் பொறுப்பாளி கிடையாது’ என்ற வாசகத்தை வாசிக்கும் போது புரிகிறது.   கடவுளே எல்லாவற்றையும் கொடுத்து விட்டால், மனிதனின் பொறுமை, திறமை, முயற்சி, முன்னேறுதல், மேன்மையுறுதல் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்று உணர்ந்து கொண்டேன்.  கடவுள், நம்முள் ஆத்மாவாகக் குடியிருந்து நம்மை இயக்குகிறார் என்று உணருகிறேன் கிருஷ்ணா. இந்த உண்மை தெரிந்த பின், கிருஷ்ணரின், பாண்டவர்களுக்குச் செய்யும் உதவிகள் அனைத்திலும், பாண்டவர்களின் கிருஷ்ணர் மீது கொண்ட பக்தி தெரிகிறது. துன்பம் நேரும் போது, தெய்வத்தைச் சரணடையும் தன்மை தெரிகிறது.   தர்மத்தின் பக்கமே தெய்வம் துணை நிற்கும் என்பது புரிகிறது. திரௌபதியை, சபா மண்டபத்திற்கு துச்சாசனன் இழுத்து வரும் போது, உறவினன...

அரசியல் அதகளம் - பகுதி 3

மேகலா   : ‘போஸ்டர் கலாச்சாரம்’. விடிஞ்சி எழுந்து school-க்கு, college-க்குக் கிளம்பிப் போகும் போது, பாலம், பெரிய சுவர், குட்டிச் சுவர் என்று ஒரு இடம் பாக்கியில்லாமல், தலைவர்கள் படத்தையும், கட்சியின் சின்னத்தையும் ஒட்டிட்டுப் போயிருப்பார்கள்.   சாயந்திரம் வீடு திரும்பும் போது பார்த்தால், poster முழுக்க சாணி அடித்து கலக்கியிருப்பார்கள் கிருஷ்ணா!   ‘மக்களின் மனம் கவர்ந்தவர்’, ‘நாட்டின் பாதுகாவலர்’ சாணியில் குளிப்பாட்டப்பட்டிருப்பார்கள்….. கிருஷ்ணர்  : ஐயோ….! பரவாயில்லை மேகலா….. அந்தந்த காலங்களில், மனுஷங்க அவங்களோட எரிச்சல எந்த வழியிலாவது வெளிக்காட்டிக் கொண்டே தான் இருக்காங்க….. நீ சொன்ன ’cartoon கலாச்சாரம்’…… சில பத்திரிகைகளில் வெளியிடும் cartoon-ஐப் பார்ப்பதற்காகவே election time-ல, பத்திரிகைகளின் circulation அதிகரிக்கும் இல்லையா….. இப்ப வருகிற ‘மீம்ஸ்’-ல், drawing திறமை தேவையில்லை அல்லவா…… மேகலா  : என்ன கிருஷ்ணா…., இப்படிச் சொல்லிட்ட….!  மேடைப் பேச்சை ஓட விட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி comedy clippings-ஐப் போட்டு, சமயத்தில், உளறுபவர் முகத்தில், வடிவேலு முகத்த...

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 127

மேகலா   : அடுத்து வந்த உத்தராயணத்தில் தன்னை வணங்கி நின்ற தருமபுத்திரனைப் பார்த்து, ‘நான் இந்த அம்புப் படுக்கையில் படுத்து இன்றோடு 58 தினங்கள் ஆகின்றன. புண்ணிய காலம் இப்போது வந்திருக்கிறது. நான் உயிர் பிரியும் நேரம் வந்து விட்டது’ என்று கூறினார். பின் திருதராஷ்டிரனை அழைத்து, ‘நீ பெற்ற பிள்ளைகளை நினைத்து வருந்தாதே. பெரியோர்களிடம் பக்தி செலுத்தும் தருமபுத்திரர் உன் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்பான். உனக்கு ஒரு குறையும் இருக்காது’ என்று கூறினார். அதன் பிறகு, கிருஷ்ணரைப் பார்த்து, பீஷ்மர், ‘எக்காலத்திலும் உம்மிடம் பக்தி செலுத்துகிற என்னைக் காப்பாற்றும்! எனக்கு விடை கொடும்! என் தேகத்தை நான் விடப் போகிறேன். எனக்கு நற்கதி கிட்டுமாறு செய்யும்’ என்று கேட்டுக் கொண்டார். கிருஷ்ணர், ‘பீஷ்மரே! அரசர்களுக்கெல்லாம் அரசரே! உமக்கு நான் அனுமதி கொடுக்கிறேன். நீர் முன் போலவே வசுக்களைச் சென்றடைவீர். தந்தையிடம் நீர் வைத்த பக்தியின் காரணமாக, எமன் உமக்குச் சேவகனாக இருந்து உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றான்’ என்று கூறினார். இதன் பிறகு, பீஷ்மர் மனதை தியானத்தில் நிறுத்தினார்.  ஒவ்வொரு அங்கமாக அ...

அரசியல் அதகளம் - பகுதி 2

மேகலா   : கிருஷ்ணா! நீ என்னவோ…. election அலப்பறைகளைச் சொல்லு….ணு சொல்லிட்ட…. election வந்துட்டா, இங்க நடக்கிறதெல்லாம் அலப்பறை மட்டும் தான் கிருஷ்ணா…. முன்னெல்லாம் கட்சி பிரச்சாரம் பண்ணுவதென்றால், மேடைப் பேச்சு மட்டும் தான கிருஷ்ணா… தலைவர்கள் பேச்சு என்றாலும், கட்சிக்காரங்க பேச்சு என்றாலும், மறுநாள், newspaper-ல் தான் வரும்….   இந்தக் காமெடி, வாக்குறுதி, பரப்புரை இதெல்லாம், பொதுமக்கள் newspaper படித்து தான் தெரிந்து கொள்ள முடியும்..  அதற்குள், பேசிய பேச்சின் சூடு ஆறிப் போயிருக்கும்! அன்றைக்கு, newspaper வாசிப்பவர்கள் என்பது 40% மக்கள் தான் இருப்பார்கள். குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு அரசியல்வாதிகளின் பேச்சு என்பது தெரியாததாகவே இருந்து விடும். ஆனால், இன்று, twitter என்று ஒரு website உள்ளது. மேடையில் பேச நினைப்பதை மட்டுமல்ல, மனதில் நினைக்கும் எந்த விஷயத்தையும், அரசியல் விமர்சனம்; எதிர்க்கட்சிக்கு பதில் சொல்வது என்று எந்த விஷயமாக இருந்தாலும், உடனுக்குடன் twitter-ல் போட்டு விடுகிறார்கள். facebook-ல் account வைத்திருப்பவர்கள், facebook-ல் share பண்ணுகிறார்கள். இவர்கள் ‘ட்வீட்’ பண...

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 126

மேகலா   : பெண்களின் தர்மத்தைப் பற்றிப் பார்வதி பேசலுற்றாள். ‘தந்தை, தாயால் மணமுடிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், தானாக விரும்பி ஒருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்ணானாலும் சரி, திருமணமான பெண் எந்த ஒரு விதத்திலும் கணவனுக்குப் பிடிக்காததைச் செய்யக் கூடாது. கணவனின் விருப்பப்படி நடந்து கொண்டு, அவனுக்கு உதவியாக இருப்பதுதான் பெண்களின் தர்மம். ஆண்கள், தவம் முதலிய உடலை வருத்துகிற செயல்களினால் அடைகிற புண்ணியங்களையெல்லாம் பெண்ணானவள், கணவனைத் தெய்வமாக மதித்து நடப்பதால், மிகவும் எளிதில் அடைவார்கள். இதற்கு மாறாக,  கோபம், பொறாமை, பொருளாசை கொண்டு இருப்பவர்கள், மரணமடைந்த பின் நரகத்திற்குச் செல்வார்கள்’. இவ்வாறு பெண்களின் தர்மத்தை எடுத்துரைத்த பிறகு, அங்கு கூடியிருந்த ரிஷிகள், மகேஸ்வரரைப் பார்த்து, விஷ்ணுவின் மகிமையை அவரிடமிருந்து கேட்க விரும்புவதாகச் சொல்ல, மகேஸ்வரர், விஷ்ணுவின் பெருமைகளை எடுத்துக் கூறத் தொடங்கினார். ‘ஹரி எனப்படும் விஷ்ணு, பிரம்மாவிற்கும் மேம்பட்டவர்; கிருஷ்ணரும் அவரே. பெரும் சக்தியையும், மகிமையையும் உடையவர்; எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படுகிறவர். இந்த விஷ்ணுவ...

அரசியல் அதகளம் - பகுதி 1

  அரசியல் அதகளம் – பகுதி 1 மேகலா  : கடவுளே…, கடவுளே…, கடவுளே…, எங்க தமிழ்நாட்ட காப்பாத்துங்க கடவுளே…. கிருஷ்ணர்  : என்ன…., இது…. நம்மள யாரோ கூப்பிடற மாதிரி இருக்கே… இந்தக் குரல் கூட…, கேட்ட குரல் மாதிரி… அட…ட…டா…. என்ன மேகலா…., தனியா இங்க உக்காந்து, தமிழ்நாட்டக் காப்பாத்தச் சொல்லி, கடவுள் கிட்ட மனுப் போட்டுகிட்டு இருக்க…. மேகலா  : உனக்கென்ன கிருஷ்ணா…. நீ எங்கள ஆட்டுவிக்கிறவன்; நாங்க அவஸ்தைப்படறவங்க…. எங்க தனிப்பட்ட பிரச்னைணா…., கடவுள் கிட்ட அழுது புரண்டு, ஒப்பாரி வச்சுனாலும், கேட்டு வாங்கி சமாளிச்சிருவோம். தமிழ்நாட்டு தலையெழுத்த மாத்தக் கூடிய election பிரச்னைணா, என்ன பண்றது…. அதான்,,, இப்பவே கடவுள் கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கேன்… கிருஷ்ணர்  : சரி…. election தான் வரப் போகுதுல; அரசியல் பார்வை தெளிவா இருக்கும் நீ எதுக்கு இவ்வளவு புலம்பற…. தமிழ்நாட்டுக்கு தலைமை வகிக்க யாருக்கு தகுதி இருக்கு என்று நீ நினைக்கிறாயோ…, அவங்களுக்கு ஓட்டு போட்டு select பண்ண வேண்டியதுதானே…. மேகலா  : கிருஷ்ணா! என்ன சொல்ற நீ…?  நான் ஒருத்தி ஓட்டு போட்டா, தமிழ்நாட்டு தலைமையை தீர்மான...