அரசியல் அதகளம் - பகுதி 4
கிருஷ்ணர் : ‘குவார்ட்டரா….’, இது ஒரு வகையான லஞ்சம் தானே….. மேகலா : எல்லாக் கட்சிக்காரங்களுக்கும் இது பொதுவான விதி; Opposite கட்சி செஞ்சால், இது லஞ்சம்…! சமயத்தில், சில தலைவர்களுக்கு, தானாகக் கூட்டம் சேர்வதும் உண்டு….. அதுவும், மக்கள், ‘எப்படா ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்று தவிக்கும் போது, ‘இவர் வந்தால் நமக்கு நல்லது நடக்கும்’ என்று நம்பும் ஒரு தலைவர், மக்களைச் சந்திக்க வரும் போது, மக்கள் கூட்டம், கடல் அலையெனத் திரண்டு, நாளை நடக்கப் போகும் வெற்றியை இன்றே கட்டியங்கூறுவார்கள். உடனே, இவர்களும், தங்கள் கூட்டத்திற்கும், மக்கள் அலையெனத் திரள வேண்டும் என்று ஆசைப்பட்டு, ‘அலையெனத் திரண்டு வாரீர்; ஆதரவைத் தாரீர்’ என்று முழங்குவார்கள். வராவிட்டால் என்ன செய்வது என்று முன்யோசனையாக, வெளியூரிலிருந்து லாரி மூலம் ஆட்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இப்போ, இந்த நடைமுறை ரொம்ப முன்னேறியுள்ளது கிருஷ்ணா…. கிருஷ்ணர் : என்ன முன்னேற்றம்…? மேகலா : கூட்டத்தில் இருப்பவர்களில் ஒருவர் எழுந்து என்ன கேள்வி கேட்கணும், அதற்கு எப்படி பதில் சொல்லணும்…., தலைவருடன் யார் நலம் விசாரித்து பே...